. -->

Now Online

FLASH NEWS


Wednesday 22 May 2019

அங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் வழக்கு தள்ளுபடி-  தீர்ப்பு விபரம் !!


எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தடை கோரிய மனுவைத் ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமித்து 6 மாத காலப்பயிற்சி வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. அங்கன்வாடிகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்து அரசின் கொள்கை முடிவெடுக்க உயர்நீதிமன்றம் தெரிவித்தது.



அங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்பாக நமது சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு எண் WP NO-1091/2019 வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று வழக்கின் தீர்ப்பு வாசிக்கப்பட்டது அதில் நாம் தொடுத்த வழக்கு மற்றும் நம்முடன் இணைந்த அனைத்து வழக்குகளையும் நமக்கு எதிராக தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள்.

இதுகுறித்து நமது சார்பாக அடுத்த கட்ட சட்டபூர்வமான வேறு என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தகவல் பகிர்வு

2009&TET போராட்டக் குழு