. -->

Now Online

FLASH NEWS


Tuesday 28 May 2019

பொறியியல் படிப்புகளில் அரியர் இருந்தால் டிகிரி வாங்க ஒரு வாய்ப்பு

மாணவர்களின் நலன் கருதி 2000-ஆம் ஆண்டுக்குப் பின் அரியர் வைத்த முன்னாள் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் வாய்ப்பு வழங்கி உள்ளது. கடந்த 9-ஆம் தேதி அண்ணா பல்கலைகழகத்தின் சிண்டிகேட் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது 2000ஆம் ஆண்டுக்கு பின் பொறியியல் படிப்புகளில் அரியர் இருப்பதால், பட்டம் வாங்க முடியாமல் இருக்கும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத கடைசி வாய்ப்பு வழங்கப்படலாம் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2000ஆம் ஆண்டுக்குப் பின்பு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் 2001ஆம் ஆண்டுக்கு பிறகு அதன் உறுப்பு கல்லூரிகளில் படித்து, டிகிரி முடிக்க முடியாமல் அரியர் வைத்திருப்பவர்கள் வரும் நவம்பர்- டிசம்பரில் நடக்கும் செமஸ்டர் மற்றும் ஏப்ரல்- மே மாதத்தில் நடக்கும் செமஸ்டரில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.