ஜூன் 3 பள்ளிகள் திறக்கும் நாளன்றே மாணவ-மாணவியருக்கு பாடபுத்தகங்களும், பேருந்து பயண அட்டைகளும் வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கவேண்டும், பள்ளி வளாகம் தூய்மையானதாகவும் தயார் நிலையிலும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.