. -->

Now Online

FLASH NEWS


Friday 14 June 2019

ஆசிரியர்கள் இடமாறுதல்; கண்டித்து போராட்டம்

ஆசிரியர்கள் இடமாறுதல் செய்யப்பட்டதை கண்டித்து, பிற ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கரூர், வி.வி.ஜி., நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 1 - 5ம் வகுப்பு வரை, 147 மாணவர்களுக்கு, ஐந்து ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வந்தனர். கடந்த, ஜனவரியில் இரண்டு ஆசிரியர்கள் அங்கன்வாடி மையத்திற்கு மாற்றப்பட்டனர். இதனால், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டன. மாற்றப்பட்ட ஆசிரியர்களை, மீண்டும் அதே பள்ளியில் பணியில் அமர்த்த வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில், கரூர் வட்டார கல்வி அலுவலக ஏ.இ.இ.ஓ., அலுவலகத்தில், நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன், தலைமையாசிரியர் குழந்தை அரசு உள்பட பலர் பங்கேற்றனர்.