தர்மபுரி மாவட்டத்தில், ஆசிரியர் பணி நிரவல், பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு வரும், 8ல் துவங்கி, 15 வரை நடக்கிறது என, சி.இ.ஓ., ராமசாமி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி வருவாய் மாவட்டத்தில் உள்ள, அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றி வரும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான, 2019-20 கல்வியாண்டிற்கான பணி நிரவல், பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு வரும், 8ல் துவங்கி, 15 வரை நடக்கிறது. இவை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அட்டவணைப்படி, தர்மபுரி சி.இ.ஓ., அலுவலக கூட்டரங்கில் நடக்கிறது. எனவே, மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள அனைத்து ஆசிரியர்களும் மாறுதல் விண்ணப்ப நகல் ஒன்றுடன், அந்தந்த நாட்களில் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
தொடக்கக்கல்வித்துறை மாறுதல்: இதேபோல், தர்மபுரி வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் மாறுதல், பதவி உயர்வு, பஞ்., யூனியன் நடுநிலைப்பள்ளி, துவக்கப்பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான பணி நிரவல், பொது மாறுதல் போன்றவை வரும், 8ல் துவங்கி, 15 வரை நடக்கிறது. இந்த கலந்தாய்வு, இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடக்கும். விண்ணப்பித்துள்ளவர்கள் அந்தந்த நாட்களில் பங்கேற்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
FLASH NEWS
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||