அனைத்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும் 'ஸ்மார்ட் கார்டு' விரைவில் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
413 வட்டாரக்கல்வி அலுவலகங்களுக்கும் ஸ்மார்ட் கார்டுகளை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெறுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. வட்டாரக்கல்வி அலுவலகங்களுக்கு ஸ்மார்ட் கார்டு கிடைக்கப்பெற்ற உடன் அடுத்த 24 மணி நேரத்தில் மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.