மாணவர்கள் உடல் நலம் ஆரோக்கியத்துடனும் புத்துணர்வுடன் இருக்க போதுமான அளவில் தண்ணீர் அருந்துவதால் வரும் நன்மைகள் குறித்த அறிவுரைகள் வழங்குதல்- சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்
மாணவர்கள் தினமும் போதுமான அளவு நீர் அருந்துவதை பள்ளி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 8 டம்ளர் தண்ணீர் போதுமானதாக இருக்கலாம். எனவே, காலை, மாலை சிறு இடைவேளை, மதிய உணவு நேரங்களில் மாணவர்கள் தண்ணீர் அருந்த அறிவுரை வழங்கவும், போதுமான அளவு தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் நன்மை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.