. -->

Now Online

FLASH NEWS


Wednesday 6 November 2019

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு கீ ஆன்சரில் தவறான விடைகளுக்கு கருணை மதிப்பெண் கோரி மனு: ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கான கீஆன்சரில் தவறான விடைகளுக்கு கருணை மதிப்பெண் கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த மணிமாறன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பொருளாதாரத்தில் எம்பில், எம்எட் முடித்துள்ளேன். மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற தகுதி உண்டு. இந்நிலையில், அரசு மேனிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வாணையத்தால் கடந்த ஜூன் 12ல் வெளியானது. இதில், பொருளாதாரத்தில் 211 காலியிடங்கள் இருந்தது. செப். 27ல் ஆன்லைன் தேர்வு நடந்தது. அக். 26ல் முடிவுகள் வெளியானது. நான், 68 மதிப்பெண் பெற்றேன். ஆனால், 10 நாட்களுக்கு பிறகு கீ ஆன்சர் வெளியிடப்பட்டது.