. -->

Now Online

FLASH NEWS


Sunday 17 November 2019

பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக ஆசிரியர் கைது




ராசிபுரம் அருகே கொங்கலம்மன் கோவில் அரசுப்பள்ளி மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக ஆசிரியர் சுரேஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த  ஒடுவன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(37). இவர் கொங்கலம்மன் கோவில் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் 49-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
);
மாணவிகளிடம் ஆசிரியர் சுரேஷ் ஆபாசமாக பேசுவதாக அம்மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இது குறித்து மாணவிகள், ' நிர்வாண சிலைகளின் படத்தை காட்டியதுடன், உடல் உறுப்புகள் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் தொடர்ந்து  கூறுவார். அத்துடன்  ஆபாசமாக சில வார்த்தைகள் கூறுவார்' என குற்றஞ்சாட்டினர்.

மாணவிகளின் உடலை தொட்டு பேசுவதுடன், வாடி போடி என்று அழைத்ததாகவும் தெரிகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள், அவர் செய்த பாலியல் தொந்தரவுகளை கடிதமாக எழுதி வட்டார கல்வி அலுவரிடம் கொடுத்திருந்தனர். இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் விசாரணை மேற்கொண்டு கணித ஆசிரியர் சுரேஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்று மாணவிகளின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் ஆசிரியர் சுரேஷை போலீசார் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.