. -->

Now Online

FLASH NEWS


Friday 13 December 2019

NMMS 2019 - தேர்வு அறிவித்தப்படி 15.12.2019 ( ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் - தேர்வுத்துறை நேர அட்டவணை வெளியீடு








15.12.2019 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று மாநில அளவிலான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத்திட்டத் தேர்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இத்தேர்வினை 151292 தேர்வர்கள் 534 தேர்வு மையங்களில் எழுதவுள்ளனர்.

தேர்வு இரண்டு கட்டமாக கீழ்கண்டவாறு நடைபெறவுள்ளது.

# மனத்திறன் தேர்வு ( MAT) - காலை 9.30 மணி முதல் 11.00 மணி வரை

# இடைவேலை : காலை 11:00 மணி முதல் 11.30 மணி வரை

# படிப்பறிவுத் தேர்வு ( SAT) - காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை

மாணவர்கள் தேர்வு துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக தேர்வு மையங்களில் இருக்க வேண்டும்.