. -->

Now Online

FLASH NEWS


Sunday 19 January 2020

புதிய டி.இ.ஓ.,க்களுக்கு மதுரையில் நிர்வாக பயிற்சி

பள்ளிக்கல்வித்துறையில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக இருந்தவர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், தமிழகம் முழுவதும், 57 பேர் புதியதாக மாவட்ட கல்வி அலுவலர்களாக பொறுப்பேற்றனர். 

இவர்களுக்கு, நிர்வாகம் மற்றும் திட்டம் சார்ந்த பயிற்சி மதுரை பில்லர் மையத்தில் வரும், 24 மற்றும், 25ல் வழங்கப்பட உள்ளது. பயிற்சி அளிக்கும் கருத்தாளர்கள், கல்வி அலுவலர்கள் குறிப்பிட்ட நாளில் தவறாது பங்கேற்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் ஒருவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நான்கு பேர் பங்கேற்க உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.