நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக மாணவர்களிடம் வசூல் செய்த தொகையை ஆசிரியர்கள் திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும் பொதுத்தேர்வு ரத்துக்காக எதிர்கட்சிகள் யாரும் போராடவில்லை என்றும், மாணவர்களின் நலன் கருதியே தற்போது பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.