. -->

Now Online

FLASH NEWS


Wednesday 5 February 2020

"பொதுத்தேர்வை ரத்து செய்ய எதிர்கட்சிகள் போராடவில்லை" - செங்கோட்டையன் விளக்கம்

எதிர்கட்சிகளின் போராட்டத்தால் 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாகச் சொல்வது தவறான செய்தி என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட தொடக்க வேளாண்மை கடன் வங்கிக் கட்டடத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக மாணவர்களிடம் வசூல் செய்த தொகையை ஆசிரியர்கள் திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.


மேலும் பொதுத்தேர்வு ரத்துக்காக எதிர்கட்சிகள் யாரும் போராடவில்லை என்றும், மாணவர்களின் நலன் கருதியே தற்போது பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.