. -->

Now Online

FLASH NEWS


Saturday 21 March 2020

புதுவையில் நாளை முதல் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு அமல்


உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரசால் இந்தியாவில் 4 பேர் பலியாகினர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் எண்ணிக்கை 298 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்கும் வகையில் புதுச்சேரியில் நாளை முதல் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.