ஆதார் - பான் இணைப்புக்கான கால அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி கணக்கு தாக்கல் செய்வதற்கு 3 மாத கால அவகாசம் நீட்டிப்பு என்றும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
பிற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் ஏதும் விதிக்கப்படாது
வங்கி சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்க வேண்டும் என்பதில் விலக்கு எனவும் கூறியுள்ளார்.