. -->

Now Online

FLASH NEWS


Thursday 19 March 2020

தலைஒட்டிப் பிறந்த இரட்டையருக்கு தனித்தனி தேர்வு அறைகள் ஒதுக்கீடு


தலைஒட்டிப் பிறந்த இரட்டையர்களுக்கு தனித்தனி தேர்வு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது பெற்றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஹைதராபாத்தில் தலைஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் வீணா - வாணி. இவர்கள் இன்று எஸ்எஸ்சி பொதுத் தேர்வை எழுதினர்.
ஹைதராபாத்தில் மதுரா நகரில் உள்ள தேர்வு மையத்துக்கு வந்த இவர்கள் இருவருக்கும், வெவ்வேறு இடங்களில் தேர்வெழுத இடம் ஒதுக்கப்பட்டிருந்ததால், இருவருமே அதிர்ச்சி அடைந்தனர்.


பிறகு அவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஒன்றாக அமர்ந்து மொழித்தாள் தேர்வை எழுதினர். ஹைதராபாத்தில் உள்ள பிரதீபா உயர்நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய இருவரும், பிறகு ஆம்புலன்ஸ் மூலம் புறப்பட்டுச் சென்றனர்.