*தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடன், கட்டுப்பாடுகளுடனும் அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது
*பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசாணை நிறுத்திவைப்பு
*திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு 100 பேர் வரை அனுமதி
* புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கு தடை தொடரும்
*உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி
*உணவகங்களில் பார்சல் சேவைக்கு இரவு 10 மணி வரை அனுமதி
*திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க தடை நீடிக்கிறது
*கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களுக்கான தடை தொடரும்
*அரசியல், பொழுது போக்கு நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை நீட்டிப்பு