. -->

Now Online

FLASH NEWS


Saturday 17 October 2020

மாணவர்களின் ஜாதி மற்றும் மதத்தை குறிப்பிட கூடாது!

ஆந்திர மாநில அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் வருகை பதிவேட்டில் மாணவர்களின் ஜாதி மற்றும் மதத்தை குறிப்பிடும் வழக்கம் இருந்தது. இந்நிலையில் இனி ஜாதி, மத அடையாளங்களை வருகை பதிவேட்டில் எழுத கூடாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஆண்கள் பெயர் நீல நிற மையிலும், பெண்கள் பெயர் சிவப்பு நிற மையிலும் எழுதப்பட்டது. இதையும் ரத்து செய்து அனைவரும் சமம் என போதிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.