உலக பெண் குழந்தைகள் தினமான இன்று, தமிழகத்தில் பெண் குழந்தைகள் மீதான சமூகத்தின் பார்வையை அறிய வேண்டியது அவசியம்.
பெண் குழந்தைகளைக் கள்ளிப்பால் கொடுத்துக் கொல்லும் கொடிய வழக்கம் தடுக்கப்பட்டு விட்டாலும், பெண் குழந்தைகளைக் காப்பாற்ற சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டிய நிலை இன்னும் இருக்கவே செய்கிறது.
என் சக பெண்களை நல்ல தோழியர்களாகக் கொள்வேன்.
என் சக தோழியர்களைக் கண்ணியமாக நடத்துவேன்.
என் தாய்க்கும், சகோதரிக்கும் கொடுக்கும் அனைத்து மரியாதைகளையும் பெண்களுக்குக் கொடுப்பேன்.
எந்தச் சூழலிலும் கண்ணியக் குறைவாக பெண்களிடம் நடந்து கொள்ள மாட்டேன்.
பெண்களுக்கு எதிரான எந்தவிதமான வன்முறையிலும் ஒருக்காலும் ஈடுபடமாட்டேன்.
பெண்களை நுகர்வுப் பொருளாக நடத்த மாட்டேன்.
பெண்களின் உணர்வுகளை மதிப்பேன்.
பெண்மையைப் போற்றுவேன்.
மானுடத்திற்கான சமத்துவத்தைக் கடைப்பிடிப்பேன்.
தாய் மண்ணே வணக்கம் .