*தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும்
பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் கோரிக்கை
. * கொரோனா தடுப்பு பணிக்கு சிறப்பு நிதியாக மத்திய அரசு ரூ.2,000 கோடி வழங்க வேண்டும்
* ஜிஎஸ்டி நிலுவைத் தொகையும் மத்திய அரசு வழங்க வேண்டும்
* மருத்துவ உபகரணங்கள் வாங்க உடனடியாக ரூ.1000 கோடி வழங்க வேண்டும்
* நெல் கொள்முதலுக்காக, மானியத்தொகை ரூ.1,321 கோடியை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும்.
* தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் 2-வது தவணையை உடனடியாக வழங்க வேண்டும்.
* வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான செலவையும் ஈடுகட்ட நிதி ஒதுக்க வேண்டும்
* மின்துறைக்கு ஈடுபட்டுள்ள சுமையை குறைக்க உடனடியாக நிவாரணத் தொகுப்பை அறிவிக்க வேண்டும்
*நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியில் 50 சதவீதத்தை விடுவிக்க வேண்டும்
* சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கான நிதியை ரூ.1.25 லட்சம் கோடியாக அதிகரிக்க வேண்டும்
* ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுவோருக்கு ரொக்கமாக ஊதியம் வழங்க வேண்டும்
* குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொருள் வழங்க, கூடுதல் தானியம் வழங்க வேண்டும்
* சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மே 31-ம் தேதி வரை சென்னைக்கு ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம்
* விமான சேவைகளையும் மே 31-ம் தேதி வரை தொடங்க கூடாது * தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்போர் விகிதம் 3.67 சதவீதமாக உள்ளது
* மொத்த கொரோனா நோயாளிகளில் 27 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.
* தற்போது 59,610 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.