*இன்று புதிதாக 669 பேர் உள்பட மொத்தமாக 7204 பேர் பாதிப்பு
*சென்னையில் மட்டும் 509 பேர்
*இன்று 135 பேர் உள்பட மொத்தம் 1959 பேர் குணமடைந்துள்ளனர்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,535இல் இருந்து 7,204ஆக அதிகரித்துள்ளது. கொரொனாவுக்கு மேலும் 3 பேர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 47ஆக அதிகரித்துள்ளது.