கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வை ஜுன் மாதம் நடத்தவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கொரோனா அச்சம் அதிகமாக இருக்கும் போது மாணவர்களை எப்படி பள்ளிக்கு அழைத்து தேர்வு எழுத கூறமுடியும் என சமூக ஆர்வலர்கள் கூறி வரும் நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒரே தேர்வை ஒத்திவைக்க முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.முகம்மது பசிம் என்ற பத்தாம் வகுப்பு மாணவர், “ஜுன் 1ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கொரானா பாதிப்பு சிறிய அளவில் இருக்கும் போதே கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்ட அரசு கடந்த சில நாட்களாக சராசரியாக ஒரு நாளைக்கு 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கின்றனர் இந்த தொற்றினால் பாதிப்பும் அச்சமும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக மாணவர்களின் மனநிலை பாதிக்கபட்டுள்ளது. இந்த நிலையில் அவசர அவசரமாக தேர்வுகளை நடத்துவது என்பது என்னைப்போன்ற மாணவர்களுக்கு அச்சமாக உள்ளது.
இதுல தான் சாதனை படைப்பீங்களா? தமிழக அரசை விமர்சிக்கும் கமல்மேலும் கொரோனா அச்சம் காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்ற மாணவர்கள், ஊரடங்குக்கு முன்பாகவே ஊர்களுக்கு சென்றவர்கள் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் தவிக்கின்றனர். மே 31 வரை ரயில் சேவையும் இல்லாததால் மாணவர்களின் நிலைமை கேள்விக்குறியே. இதை கருத்தில் கொண்டு தமிழக அரசை ஜுன் 1 ம் தேதி நடக்கும் பத்தாம் வகுப்பு தேர்வுகளை தள்ளிவைக்க மறு பரிசீலனை செய்ய வலியுறித்தி கடிதம் எழுதியுள்ளேன்” என்று கூறினார். சைக்கிளில் சென்று மாண்புமிகு முதலமைச்சருக்கு மனு கொடுப்பதாக இருந்தது. கொரானா தொற்று காரணமாகவும் 144 உத்தரவு அமலில் இருப்பதாலும் காவல்துறை கேட்டு கொண்டதால் சைக்கிளில் செல்வதைத் தவிர்த்து தபால் நிலையம் சென்று தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார்.மோடியிடம் இந்த கேள்விக்கு பதில் இருக்கா ? திருமா காட்டம்!என்னைப்போன்ற பல்லாயிரக் கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தையும் நலனையும் கருத்தில் கொண்டு எனக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி என்றும் மாணவர் முகமது பசிம் கூறியுள்ளார்.
Source: Samayam