. -->

Now Online

FLASH NEWS


Monday 29 June 2020

கீழே கிடந்த மாஸ்க்கால் 5 பேருக்கு கொரோனா!! எச்சரிக்கை பதிவு


(பழைய புகைப்படம்)


வேலூர் மாவட்டம் காட்பாடி சிவராஜ் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 65 வயது ஆண், 60 வயதான அவரது மனைவி, 20, 19 வயது மகன்கள், 15 வயது மகள் ஆகியோருக்கு கடந்த 22ல் கொரோனா உறுதியானது. வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களுக்கு தொற்று பரவியது குறித்து சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தினர். இதில் காட்பாடி ஓடப்பிள்ளையார் கோவில் தெருவில் 20 வயதான வாலிபர் முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக போலீசார் ரோந்து வந்துள்ளனர். அபராதம் விதிப்பர் என போலீசாருக்கு பயந்த வாலிபர் அங்கு கீழே கிடந்த முகக்கவசத்தை எடுத்து பயன்படுத்தி உள்ளார். ‍வீட்டிற்கு சென்ற ‍ அவரால் வீட்டிலிருந்த அவரது பெற்றோர், தம்பி, தங்கைக்கும் கொரோனா தொற்று பரவியது என்ற விபரம் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.