டில்லியில் பிப்ரவரி 5 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
கரோனா தொற்று காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. மாநிலங்களின் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தில்லியில் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 5ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவித்தார்.
கரோனா தொற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.