. -->

Now Online

FLASH NEWS


Thursday 7 January 2021

அரசுப்பணி - வெ. இறையன்பு, ஐ.ஏ.எஸ்



ஒவ்வொரு பணியிலும்
ஒரு உயிர் உள்ளது;
ஒவ்வொரு கோப்பிலும்
ஒரு தாயின் கண்ணீரோ
ஒரு விதவையின் சோகமோ
அடங்கி இருப்பதால்
அது கனக்கிறது;


அலுவலகம் வருகிற
ஒவ்வொரு விண்ணப்பத்திலும்
இதயத்தைச் செலுத்தும்போது
அலுவலகம் ஆனந்தமயமாகிறது;
ஒவ்வொரு கையொப்பத்தோடும்
நமது ஆன்மாவும் ஐக்கியமாகிறது;
அலுவலகம் முடிந்ததும்
அலுப்புடன் வராமல்

திருப்தியுடன் திரும்புகிற
நம்மை நள்ளிரவு வரை
இசையும் கவிதையும்
இறுகத் தழுவும்.

வெ. இறையன்பு, ஐ.ஏ.எஸ்