. -->

Now Online

FLASH NEWS


Friday 8 January 2021

முதலமைச்சர் வீட்டின் முன் ஆசிரியர்கள் திடீர் தர்ணா போராட்டம்

கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வில் தேர்வானவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டின் முன்பு இன்று காலை முதல் மனு அளிக்க காத்திருந்தனர். 
இந்த நிலையில் முதலமைச்சர் பழனிசாமி சென்னை புறப்பட்டதால் மனுவை அளிக்க அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறி திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியர்கள் சிலர் முதல்வர் புறப்படும் முன்பே கோரிக்கை மனுவை அளித்துவிட்டதாக தெரிவித்ததால் ஆசிரியர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 
இதனை தொடர்ந்து அப்பகுதியில் குவிந்த போலீசார் ஆசியர்களிடம் நீண்ட நேரமாக பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.