. -->

Now Online

FLASH NEWS


Friday 2 April 2021

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு நாளை 3-ம் கட்ட பயற்சி


தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு நாளை 3-ம் கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.
வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.  வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வாக்குச்சாவடிகளில் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக பயிற்சி  2 கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
சனிக்கிழமை அன்று 3-ம் கட்ட பயிற்சி நடக்கிறது.  பயிற்சியின் போது தபால் ஓட்டுகள் முழுமையாக வினியோகம் செய்யப்படுமென அதிகாரிகள் கூறியுள்ளனர்.