. -->

Now Online

FLASH NEWS


Friday 9 April 2021

கொரோன பாதிக்கப்பட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியை பலி


கொரோன பாதிக்கப்பட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியை பலியாகியுள்ளார்....

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சாலை புதூரை சேர்ந்த உமா மகேஸ்வரி வயது 50 இவர் பெரிய செம்மாண்டம் பாளையம்தொடக்கப்பள்ளியில்தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

தேர்தல் சம்பந்தமாக பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் உடல்நிலை குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ....

சிகிச்சையில் அவருக்கு கொரோன தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது .....

மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் ....

அவருடன் இருந்த அவரது கணவருக்கும் கொரோன பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கும் கொரோன இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ....