08.04.2021 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பலன் கிடைக்கவில்லை எனில் இரவு நேர கொரோனா ஊரடங்கு (Night Curfew) மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!!
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில்
கொண்டும், பொதுமக்களின் நலன் கருதியும் தமிழ்நாடு அரசு, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் 30.4.2021 நள்ளிரவு 12 மணி வரை சில
தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளது. நோய்த் தொற்றை கட்டுப்படுத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கு 10.04.2021 முதல்
முற்றிலுமாக தடைவிதித்தும், ஒரு சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன்
அனுமதி அளித்தும் அரசு 8.4.2021 அன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த முயற்சியில் பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேரத்தில்
கொரோனா ஊரடங்கு (Curfew) மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க
நேரிடும்.
தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த கொரோனா தொற்று
இரண்டாவது அலையை சமாளிக்க, அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும்,
பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது என தமிழக அரசு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.