. -->

Now Online

FLASH NEWS


Monday 14 June 2021

தமிழ்நாட்டில் 39 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் மேலும் 39 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு: ம

மனிதஉரிமை ஆணைய செயலாளராக விஜயகார்த்திகேயன் நியமனம்.

 பதிவுத்துறை ஐ.ஜியாக இருந்த சங்கர் காதி கைவினைப்பொருள் ஆணைய சி.இ.ஓ.வாக நியமனம்.

 நாமக்கல் முன்னாள் ஆட்சியர் மேக்ராஜ் நகராட்சி நிர்வாகத்துறை இணை செயலாளராக நியமனம். 


கோ-ஆப்டெக்ஸ் இயக்குநராக டி.பி.ராஜேஷ், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை இணைச்செயலாளராக எஸ்.பழனிசாமி, அறிவியல் நகர துணைத்தலைவராக மலர்விழி நியமனம்.

 எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநராக ஹரிஹரன், நிதித்துறை இணை செயலாளராக அருண் சுந்தர் தயாளன், பட்டுப்புழு வளர்ச்சி இயக்குநராக சாந்தி நியமனம். 

உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை இணைச் செயலாளராக ஜான் லூயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். (செங்கல்பட்டு ஆட்சியர்)

விஜயகார்த்திகேயன் மாநில மனித உரிமை ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். (திருப்பூர் ஆட்சியர்)

சாந்தா நில நிர்வாக கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். (திருவாரூர் ஆட்சியர்)

வணிக வரித் துறை இணை ஆணையராக கற்பகம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக சுந்தரவள்ளியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விஜயலட்சுமி மீன்வளம், பால் வளத் துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். (திண்டுக்கல் ஆட்சியர்) 

நாமக்கல் ஆட்சியராக இருந்த மேகராஜ் நகராட்சி நிர்வாக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் உள்பட 39 ஐஏஎஸ் அதிகாரிகள் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.