. -->

Now Online

FLASH NEWS


Friday 23 July 2021

நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்கும் திட்டமில்லை - மத்திய அரசு திட்டவட்டம்


கொரோனா 3வது அலை அச்சுறுத்தலால் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்கும் திட்டமில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய காதாரத்துறை இணை அமைச்சர் பிரவீன் பாரதி, எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
திட்டமிட்டபடி செப்டம்பர் 12 ஆம் தேதி உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் நீட் தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் கலை மற்றும் அறிவியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக மாநில அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் பிரவீன் பாரதி குறிப்பிட்டார்.