. -->

Now Online

FLASH NEWS


Thursday 9 September 2021

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

பொது போக்குவரத்தினை அவசியத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள். 

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனா 3வது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் சிறப்புக் குழு அறிக்கை அளித்துள்ளது.

3வது அலை உருவாவதை தடுக்க பொதுமக்கள் பண்டிகைகளை தங்களது இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும்.

பொதுமக்கள் அதிகமாகக் கூடும் திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அக்டோபர் 31 வரை தடை நீட்டிப்பு.

கொரோனாவை தடுக்கும் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி 3வது அலை தமிழ்நாட்டில் ஏற்படாத வண்ணம் தடுக்க உதவ வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் பள்ளிகள் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.