சிவகங்கையில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது ஆசிரியை உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு.
சிவகங்கை அருகே உள்ள கோமாளி பட்டி ஊராட்சி பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் பாரதி. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் இரண்டாவது பிரசவத்திற்காக சிவகங்கை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று பாரதிக்கு பிரசவத்தின் போது குழந்தை பிறந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்,
ஆசிரியை பாரதியின் இறப்பு செய்தியைக் கேட்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரது மரணத்திற்கு மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சையே காரணம் எனக் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மருத்துவமனை வளாகமே பரபரப்பாக காணப்பட்டது. மருத்துவமனை ஊழியர்கள் ஆசிரியரின் உறவினர்களிடம் பேச முயற்சித்தனர்.