. -->

Now Online

FLASH NEWS


Saturday 16 October 2021

கிட்னியில் கல் வராமல் தடுக்க சில வழி முறைகள்



மனித உடலில் வயிற்றின் மேல்பகுதியில் முதுகுப்புறமாக அவரை விதை வடிவில் 2 சிறுநீரகங்கள் உள்ளன. இந்த சிறுநீரகங்களின் முக்கிய பணியே ரத்தத்தை சுத்திகரிப்பது தான் . பொதுவாக 20 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு ரத்தத்தில் ஆக்சலேட் உப்பு அதிகமாக காணப்படும் .

இந்த வயதினருக்கு டெஸ்டோஸ்டிரான் சுரப்பு அதிகமாக இருக்கும் . எனவே இந்த வயதுடைய ஆண்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன .



சிறுநீரக கற்கள் பல வகையாக பிரிக்கப் படுகின்றன.


அவை, கால்சியம் பாஸ்பேட், சிஸ்டின் , கால்சியம் ஆக்ஸலேட் , யூரிக் அமிலம் போன்றவையாகும். இவற்றுள் கால்சியம் ஆக்ஸலேட் மனிதர்களிடையில் பொதுவாக காணப்படும் வகையாகும். ஆகவே, இதற்கு முன், நீங்கள் சிறுநீரக கற்களால் அவதி பட்டவரா? அல்லது தற்போது, உங்களுக்கு இருக்கும் சிறுநீரக தொடர்பான வேறு உபாதைகள் சிறுநீரக கற்களை உருவாக்கும் என்ற எண்ணம் கொண்டவரா?

சிறுநீரக கற்களால் ஏற்படும் வலி தாங்க முடியாத அளவுக்கு இருக்கும். ஆனால், சிறுநீரக கற்களை நீக்க அல்லது வெளியேற்ற, சரிசெய்ய நவீன சிகிச்சைகள் உள்ளன.

சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரின் நிறம் மஞ்சளாக இருந்தால் நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு போதவில்லை என்று அர்த்தம். எனவே, தண்ணீர் நிறத்தில் சிறுநீர் போகும் அளவுக்கு தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

இதோடு முக்கியமாக சிறுநீரை வெகுநேரம் அடக்கி வைக்கக்கூடாது, இப்படி செய்வதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும்.

சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் வயிற்றின் மேல்பகுதியில் முதுகுபுறமாக கடுமையான வலி உண்டாகும். சிறுநீர் கழிக்கும்போது சிலருக்கு கடுமையான எரிச்சல் மற்றும் வலி இருக்கும். சில சமயங்களில் ரத்தம் கலந்து வரலாம்.

சிறுநீரகத்தில் கற்கள் இருக்கிறதா என்பதை பரிசோதனை மூலமாகவும், எக்ஸ்ரே மூலமாகவும் உறுதிப்படுத்தலாம். பொதுவாக சிறுநீரில் சிட்ரேட்டின் அளவு 600 மில்லி கிராம் இருக்க வேண்டும்.

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி இருந்தால் சிட்ரேட்டின் அளவு குறைவாக இருக்கும். எனவே, சிட்ரேட் அதிகம் உள்ள எலுமிச்சை சாறு, ஆரஞ்சு பழச்சாற்றை அதிகம் பருகினால் கற்கள் வளர்ச்சி அடைவதை தடுத்து விடலாம்.

பொதுவாக 90 சதவீத கற்கள் சிறுநீர் வழியாக தானாகவே வெளியேறிவிடும். 6 மில்லி மீட்டர் தடிமனுக்கு அதிகமான பெரிய கற்கள் தான் வெளியேறாது. அத்தகைய கற்களை அதிர்வலை மூலமாக சிறு சிறு துகள்களாக உடைத்து வெளியேற்றிவிடலாம். இதில் வெளியேறாவிட்டால் மட்டுமே அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்ற வேண்டும்.

சிறுநீரக கற்களால் அவதி படுவோர், திரவ பொருட்களை அதிகம் பருகுவது முக்கியம். ஆனால், அதில் காபின் கலந்திருப்பது தீமையை விளைவிக்கும். ஒரு நாளில் 2 கப் காபி, டீ மற்றும் குளிர்பானங்களுக்கு மேல் பருகக் கூடாது. அதன் அளவு 250-500 மிலி வரை இருக்கலாம். அதிக அளவு காபின் பருகுவது, சிறுநீரகத்தை சீரழிக்கும். மேலும் நீங்கள் நீர்சத்தை இழக்க நேரும்.

கால்சியம் ஆக்சலேடால் உங்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாகியுள்ளது என்றால், நிச்சயமாக ஆக்ஸலேட் அதிகம் கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். டீ, காபி, பீட் ரூட், ஸ்குவாஷ், சர்க்கரை வள்ளி கிழங்கு, பசலை கீரை, தக்காளி சூப், கேனில் அடைக்கப்பட்ட பழங்கள், சாலட், ஸ்ட்ராபெர்ரி, போன்றவை இவ்வகை உணவுகளாகும். இது தவிர, சாக்லெட், டோபு , நட்ஸ் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.