வடகிழக்கு பருவமழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, புழல் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களுக்கு வரும் நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் அதிக அளவில் இருப்பதினால்
பாதுகாப்பு நிலை கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (20.11.2021) சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகள் தவிர மற்ற அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (20.11.2021) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.