2-ம் பருவத்திற்குரிய 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை பெற அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
உகந்த நிலையில் உள்ள அனைத்து பாடப்புத்தகங்களையும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் பெற அறிவுறுத்தியுள்ளது.
மீண்டும் பயன்படுத்தும் வகையிலுள்ள புத்தகங்களை பெற்று புத்தக வங்கியில் பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
