டெல்டா பிளஸ் வகை வைரஸ் வேகமாகப்
பரவும் என்பதற்கு போதுமான தரவுகள்
இல்லை- எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர்
ரன்தீப் குலேரியா
உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வகை வைரஸ்
வேகமாகப் பரவும், அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்தும்
என்பதற்கு போதுமான தரவுகள் இல்லை என எய்ம்ஸ்
மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா
தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
டெல்டா பிளஸ் கொரோனா தொற்று வேகமாக பரவும்
என்பதை உறுதி செய்ய கூடுதல் தரவுகள் தேவை
என்றார்.
மேலும், முகக்கவசம் அணிவது, தனிநபர்
இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா
தடுப்பு முறைகளை மக்கள் தொடர்ந்து தீவிரமாகப்
பின்பற்றினால், அடுத்தடுத்து புதிதாக உருவாகும்
உருமாற்ற வைரஸ்களிடம் இருந்தும் தற்காத்துக்
கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.