அதிகப்படியான டென்ஷன் உள்ள இன்றைய காலக்கட்டத்தில் உள்ள தவிர்க்க முடியாக பிரச்சனைகளால் நரை முடி பலரை பாதிக்க செய்துள்ளது. நரை முடியை முற்றிலும் ஒழிக்க கறிவேப்பிலையை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டாலே போதுமானது. ஆனால் இதை செய்வதில் நம்மில் பலருக்கு பிடிக்காத காரியம். சரி வந்த நரை முடியை எப்படி போக்குவது என்று பார்ப்போம்.
தலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்கு முன்பே எண்ணெய் வைப்பதால்தான் பலருக்கு செம்மட்டை நிறத்தில் முடி வளர்கிறது. இதற்கு மற்றொரு தீர்வு, வெந்தையத்தை இரவே ஊற விட்ட, காலையில் அதனை மைய அரைத்து அந்த விழுதை தலை முடிவேர்களில் பேக் போல போட்டு, காய்வதற்குள் சியக்காய் கொண்டு அலசவும்.
வாரம் ஒரு முறை ஒரு கின்னத்தில் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சம அளவில் தேவையானவற்றை எடுத்து லேசாக சூடு செய்து, தலை முடியில் தேய்க்கவும். சிறிது நேரம் கழித்து தலைமுடியின் வேர்ப்பகுதிகளில் கைகளால் சிறு சிறு வட்ட சுழல் முறையில் மசாஜ் கொடுக்க வேண்டும். அரை மணி நேரத்தில் எண்ணெய் போக முடியை சியக்காய் கொண்டு அல்லது ஹெர்பல் ஷாம்பூவை தண்ணீரில் கலந்தோ உபயோகிக்கவும்.
நெல்லிகாயை சிறு சிறு துண்டுகளாக்கவும், அதனுடன் புதினா, கறிவேப்பிலை. இவை மூன்றையும் தனித்தனியாக காட்டன் துணியில் கட்டி சூரிய வெளிச்சம் அதிகம் படாமல் இருக்கும் இடத்தில் கட்டி தொங்க விடுங்கள்.
மூன்று நாட்களில் கொற கொறப்பாக காய்ந்ததும், அனைத்தையும் தண்ணீர் விடமால் பவுடராக அரைக்கவும். இந்த பவுடரை வாரம் ஒரு முறை, தலையில் பேக் போல போட்டு. காய்வதற்குள் அலசவும். இந்த பேக்கை தண்ணீர் கலந்த எலுமிச்சை சாறு, பீட்ரூட் சாறு, புளித்த தயிர், தேன், சுத்தமான டீ டிகாஷன் என முடிக்கு உகந்த எதனுடனும் கலந்து உபயோகிக்கலாம். இதன் மூலம் உங்கள் முடி வலுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். நரை முடி வருவதற்கு முன்பு செய்ய இது தான் சூப்பர் டிப்ஸ்.
நரை பிரச்சனை இருந்தால் அதற்கான சிறப்பு பேக் வீட்டிலேயே தயாரிக்கலாம்.
மருதாணி இலை பொடி இரண்டு கப் (காயவைத்து பொடித்துக் கொள்ளவும்), டீ டிகாஷன் தேவையான அளவு, எலுமிச்சை சாறு 1 பழம், முட்டையின் வெள்ளை கரு 1, காபி பொடி 2 மேசைக்கரண்டி, பீட்ரூட் சாறு 1 கப். ஒரு இரும்பு பாத்திரத்தில் மருதாணி இலை பொடியுடன், டீ டிகாஷன் சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கலக்கவும். அதில் காபி பவுடர் சேர்த்து ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைக்கவும். மறுநாள் முட்டை, எலுமிச்சை சாறு மற்றும்
பீட்ரூட் சாறு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு தலையில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து குளிக்கலாம்.
செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை, முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை கலந்து மிக்சியில் அரைத்து, தயிர் சிறிது சேர்த்து கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து குளித்தால், தலைமுடி பளபளப்பாக இருக்கும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், முடி கொட்டுவது குறையும். மருதாணியை திக்காக அரைத்து அதில் வாழைப்பழத்தை சேர்த்து முடியில் தடவி வந்தால் முடி பளபளப்பாகும். மருதாணியுடன் செம்பருத்தி இலை சேர்த்து அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து, தலையில் பேக் போல போட்டு காய்ந்ததும் குளித்தால் முடி கருப்பாக இருக்கும்.