தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றியது பள்ளிக் கல்வித்துறை. முன்னதாக ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெப்பம் காரணமாக ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கோடை வெயில் அதிகமாக உள்ளதால், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்ததால், தேதி மாற்றப்பட்டுள்ளது.

