தேனியைச் சேர்ந்த பத்து வயது சிறுவன் ஜஸ்வந்த் நேற்று அதிகாலை 4 மணிக்கு இலங்கை தலைமன்னார் அருகே உள்ள உருமலை பகுதியில் இருந்து கடலில் நீந்தத் தொடங்கி, காலை சுமார் 9 மணியளவில் சர்வதேச கடல் எல்லையை கடந்து, பிற்பகல் சரியாக 2.30 மணிக்கு நம் இந்திய தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையை வந்தடைந்து சாதனை புரிந்தார்.
கடலில் நீந்தி சாதனைபடைத்த ஜஸ்வந்த் என்ற பத்து வயதுசிறுவனுக்கு இராமநாதபுரம்மாவட்டம் கடலாடிவட்டத்தில்உள்ள கடுகுசந்தை அரசுஉயர்நிலைப்பள்ளியில் பணியாற்றும் தலைமையாசிரியர்,ஆசிரிய-ஆசிரியைபெருமக்கள், அலுவலக உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.