t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

13 August 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -13.08.2026



திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:48.வலியறிதல்

குறள் எண்:471

குறள்:

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

பொருள்:

செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

பழமொழி :
Look before you leap.

ஆழம் தெரியாமல் காலை விடாதே.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. இருளால் இருளை நீக்க முடியாது. ஒளி மட்டுமே அதை செய்யும். வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது. அன்பால் மட்டுமே அதை செய்ய முடியும் .

 2. பெரியோர் தனது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள். எனவே பெரியோரது அனுபவத்தை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

மழை வானத்தின் பரிசு; அதைச் சேமிப்பது நம் பொறுப்பு.

Thought for the Day :

The sound of rain is the music of nature.

பொது அறிவு : 

1 . ஈ.வெ.ராமசாமி அவர்களை "பெரியார் " என்றழைத்தவர்கள் யார்? 

 அன்னை மீனாம்பாள் சிவராஜ் மற்றும் நீலாம்பிகை அம்மையார். 

2. ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு" பெரியார்" என்ற பட்டம் எதற்காக வழங்கப்பட்டது ? 

பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டதால் 1938, நவம்பர் 13- ல் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் வழங்கப்பட்டது.

English words :

Creative – Thinks in new ways, படைப்பாற்றலுள்ளவர்.

 Courageous – Faces difficulties bravely, துணிச்சலானவர்.                   

புவியியலும் சுற்றுசூழலும் :

கிராம நிர்வாகம்
மக்களின் தேவைகளை விரைவாக அறிந்து தீர்வு காண உதவுகிறது.
ஜனநாயகத்தில் மக்களின் நேரடி பங்கேற்பை ஊக்குவிக்கிறது.
கிராம வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு அடித்தளமாக விளங்குகிறது

NMMS :

MAT 

ஒரு குறிப்பிட்ட குறியீட்டு மொழியில் 'Kit Mit Fit' என்பதை 'Some good films' எனவும், .'Zit Rit Kit' என்பதை ' Some real stories' எனவும், 'Sil Fit Rit' என்பதை 'Many good stories' எஎவும் கொண்டால் 'real' என்பதை எந்தக் குறியயீட்டால் குறிக்கலாம்? 

 (1) Zit.

 (2) Sil.

 (3) Rit.

 (4)Kit. 

 விடை: (1) Zit

ஆகஸ்ட் 13

பிடல் காஸ்ட்ரோ அவர்களின் பிறந்தநாள் 

பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz, (எசுப்பானியம்: [fiˈðel ˈkastro], ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கியூபாவை சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.கூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.

பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள்

பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள் (International Lefthanders Day) என்பது இடது கை பழக்கம் உள்ளவர்களின் தனித்துவம் மற்றும் வேறுபாடுகளைக் கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13 அன்று அனுசரிக்கப்படும் பன்னாட்டு தினமாகும். 1976 முதல் "பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனத்தின்" நிறுவனர் ஆர். கேம்ப்பெல் என்பவரால் கொண்டாடப்பட்டது.
நீதிக்கதை

 தனிமை வேண்டாம் – ஒற்றுமையே பலம்

ஒரு சிறிய கிராமத்தில் அருண், கார்த்திக்,ஹரிஷ் என்ற மூன்று நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுடன் பள்ளியில் படிக்கும் மாணவன் ரவி மிகவும் அமைதியானவன். அவன் அதிகமாக யாரிடமும் பேசமாட்டான்.

ஒருநாள் பள்ளியில் ஆசிரியர் மாணவர்களை குழுக்களாகப் பிரித்து ஒரு அறிவியல் மாதிரி செய்யச்சொன்னார். ரவியை எந்தக் குழுவிலும் சேர்க்காமல் சில மாணவர்கள், “அவன் அமைதியாக இருக்கிறான்; நம்முடன் சேர்ந்து வேலை செய்ய மாட்டான்” என்று கூறினர்.

அதைப் பார்த்த அருணுக்கு வருத்தமாக இருந்தது. அவன் ரவியிடம் சென்று, “நீ எங்களுடன் சேர்ந்து இந்த மாதிரியை ச் செய்யலாம். உனக்கும் நல்ல யோசனைகள் இருக்கலாம்!” என்றான்.

ரவி முதலில் தயங்கினான். பின்னர் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்யத்தொடங்கினான். ஆச்சரியமாக, மாதிரியை எப்படி அழகாக அமைக்கலாம் என்பதற்கான சிறந்த யோசனையை ரவிதான் கூறினான். அனை வரும் சேர்ந்து உழைத்து, அந்தக் குழு பள்ளியில் முதல் பரிசைப் பெற்றது. ஆசிரியர் அவர்களை ப் பாராட்டி, “ஒருவரை அவர் அமைதியாக இருப்பதற்காகவோ, வித்தியாசமாக இருப்பதற்காகவோ தனியாக ஒதுக்கக்கூடாது. ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு சிறப்பு திறமை இருக்கும். அதை அறிய வாய்ப்பு கொடுத்தால்தான் அது வெளிப்படும்” என்றார்.

அன்று முதல் மாணவர்கள் யாரையும் தனியாக ஒதுக்காமல், அனைவரையும் தங்களுடன் சேர்த்துக்கொள்ளத் தொடங்கினர்.

நீதி:

யாரையும் தனிமைப்படுத்தவோ, ஒதுக்கவோ கூடாது. ஒவ்வொருவருக்கும் தனித்திறமை உண்டு; அன்பும் ஒற்றுமையும் அந்தத் திறமையை வெளிக்கொண்டு வரும்.

இன்றைய செய்திகள்

13.08.2026

🗒️ சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் வார இறுதி நாட்கள் என்பதால் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in மூலம் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 

🗒️இந்தியாவில் 22,000-க்கும் அதிகமான காட்டு யானைகள் உள்ளன மேலும் ஆசிய காட்டு யானைகளின் தாயகம் இந்தியா என்று பிரதமர் மோடி பெருமிதம்.

🗒️அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி ஆகிய மாநிலங்கள், ஆகஸ்ட் 15ஆம் நாளை “இந்திய சுதந்திர நாள்” என்று பிரகடனம் செய்துள்ளன. இந்தியா-அமெரிக்கா இடையிலான நீண்டகால நட்புறவை அங்கீகரிக்கும் வகையில் இந்த அறிவிப்புகள் வெளியிடப் பட்டுள்ளன.

 *விளையாட்டுச் செய்திகள்*

🏀மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி நேற்றுத்  தொடங்கப்பட்டது.

Today's Headlines

🗒️ Due to Independence Day celebrations and the weekend, the Tamil Nadu State Transport Corporation has advised passengers to book their bus tickets in advance through www.tnstc.in to avoid crowds.

🗒️ India has more than 22,000 wild elephants. Prime Minister Modi proudly said that India is home to Asian wild elephants.

🗒️ The U.S. states of New York and New Jersey have proclaimed August 15 as "Indian Independence Day" to recognize the long-standing friendship between India and the USA.

🏀 Sports News

🏀 An international surfing competition began yesterday in Mamallapuram.


12 August 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -12.08.2026


திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை

குறள் எண்:470

குறள்:

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.  

பொருள்:

தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
 
பழமொழி :
Live with in your means.

வரவுக் கேற்ற செலவு செய்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. இருளால் இருளை நீக்க முடியாது. ஒளி மட்டுமே அதை செய்யும். வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது. அன்பால் மட்டுமே அதை செய்ய முடியும் .

 2. பெரியோர் தனது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள். எனவே பெரியோரது அனுபவத்தை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

மழையை நேசிப்பவன் இயற்கையை நேசிப்பவன்.

Thought for the Day :

Where rain falls, life flourishes.

பொது அறிவு : 

1. தந்தை பெரியாரின் இயர்பெயர் என்ன?

 ஈ. வெ.ராமசாமி. 

2. பெரியாரை "தந்தை பெரியார் " என்றழைத்தவர் யார்? 

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். 

English words :

Disciplined – Follows rules and routines, ஒழுக்கமானவர்.


Resourceful – Finds smart solutions, திறமையாக தீர்வு காண்பவர்

புவியியலும் சுற்றுசூழலும் :

இந்தியாவிற்கு சொந்தமான இரண்டு முக்கிய தீவுக்கூட்டங்கள்:

1. அந்தமான்–நிக்கோபார் தீவுகள் – வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளன.

2. இலட்சத்தீவுகள் – அரபிக்கடலில் அமைந்துள்ளன.

NMMS :

MAT 

ஒரு குறிப்பிட்ட குறியீட்டு மொழியில் 'TOMB' என்பதை '3568' மற்றும் 'GOAL' என்பதை '1572' என குறிப்பிட்டால் 'BOAT' என்பதை எவ்வாறு குறிப்பர்? 

 (1) 8357. 

 (2) 8573. 

 (3) 5378.

 (4) 3758. 

 விடை: (2) 8573

ஆகஸ்ட் 12

விக்ரம் சாராபாய் அவர்களின் பிறந்தநாள்


விக்ரம் அம்பாலால் சாராபாய் (Vikram Ambalal Sarabhai, ஆகஸ்ட் 12, 1919 – டிசம்பர் 30, 1971)என்பவர் இந்திய இயற்பியலாளர் ஆவார். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார். 1969 ஆம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார். இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமாக இருந்தார். SITE எனப்படும் ‘செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சியில் பயிற்றுவிக்கும் முயற்சி’ மூலம் 2,4000 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச்செல்ல உதவினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (ISRO) விரிவாக்கினார்.

உலக யானைகள் நாள்




உலக யானைகள் நாள் (World Elephant Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 12 ல் கொண்டாடப்படுகிறது.இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும்.முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.,12ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது.


தேசிய நூலக தினம். 




ஆகஸ்ட் 12 - இன்று தேசிய நூலக தினம். சிறப்பு மிக்க இந்த நாள் கொண்டாடப்படுவதற்குக் காரணமானவர், தமிழகத்தை சேர்ந்த சீர்காழி ராமாமிருதம் ரங்கநாதன்.  இந்திய நூலகத்துறைக்கு ஆர்.ரங்கநாதன் வழங்கிய அற்புதம்தான், 'கோலன் பகுப்புமுறை.' நூல்களைப் பொருள்வாரியாகப் பிரித்து அடுக்குவதற்கான அறிவியல்பூர்வமான அணுகுமுறையே 'கோலன் பகுப்புமுறை' எனப்படுகிறது. இந்தப் பகுப்பு முறை இவரால் ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்டதாகும். இது நூலகத்துறையைச் சார்ந்த பல மேல்நாட்டு அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் உள்ள நூலகங்களும் இந்த கோலன் பகுப்புமுறையைத்தான் பயன்படுத்துகின்றன. நூலகவியலுக்கு இவர் செய்த பங்களிப்புக்காக 1957-ம் ஆண்டு, இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து சிறப்பித்தது. இவரது பிறந்த தினத்தைத்தான் 'தேசிய நூலக தின'மாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நாளில் சிறந்த நூலகர்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகிறது. 'இந்திய நூலகத் தந்தை' என்று போற்றப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதனை, இந்த நாளில் நினைவுகூர்வோம்
நீதிக்கதை

 பெரியவர்களின் பலம்

ஒரு சிறிய கிராமத்தில் ஹரிஹரன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு எப்போதும் தன்னுடை ய வயதுதான் பெரிய பலம் என்ற எண்ணம் இருந்தது.

ஒருநாள் பள்ளியில் ஆசிரியர், “வயதானவர்களிடம் இருக்கும் அனுபவமும் அறிவும் அவர்களுடைய மிகப்பெரிய பலம்” என்று கூறினார்.

அதைக் கேட்டஹரிஹரன் சிரித்துக்கொண்டே , “நாங்கள் இளையவர்கள். எங்களிடம் அதிக உடல் சக்தி இருக்கிறது. பெரியவர்களால் எங்களைப்போல வேகமாக ஓடவோ, வேலை செய்யவோ முடியாது!” என்றான்.

அன்று மாலை ஹரிஹரனும் அவனுடைய நண்பர்களும் காட்டுப்பாதையில் விளையாடச் சென்றனர். சிறிது நேரத்தில் மழை பெய்து, பாதை முழுவதும் சேறும் சகதியுமாக மாறியது. அவர்கள் எந்த வழியில் வீடு திரும்புவது என்று தெரியாமல் குழம்பினர்.

அப்போது அருகில் இருந்த ஒரு வயதான தாத்தா அவர்களைப் பார்த்தார்.

“இந்தப் பாதையில் செல்லாதீர்கள். மழைக்காலத்தில் அந்த வழியில் தண்ணீர் அதிகமாக வரும். என்னுடன் வாருங்கள்; பாதுகாப்பான பாதை எனக்குத் தெரியும்,” என்றார். ஹரிஹரனும் நண்பர்களும் தாத்தாவுடன் சென்றனர். தாத்தா பல ஆண்டுகளாக அந்தப் பகுதியை அறிந்தவர் என்பதால், எந்த இடம் ஆபத்தானது, எந்தப் பாதை பாதுகாப்பானது என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார்.

சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் பத்திரமாக வீடு திரும்பினர். ஹரிஹரன் தாத்தாவிடம், “தாத்தா, உங்களிடம் இளையவர்களைப் போல உடல் பலம் இல்லாவிட்டாலும், உங்களுடைய அனுபவமும் அறிவும் எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது என்பதை இன்று புரிந்துகொண்டேன்,” என்றான்.

தாத்தா சிரித்தபடி, “ஒவ்வொரு வயதிற்கும் ஒரு தனிப்பட்ட பலம் உண்டு. இளையவர்களிடம் வேகமும் உற்சாகமும் இருக்கும்; வயதானவர்களிடம் அனுபவமும் பொறுமையும் இருக்கும். இரண்டும் இணைந்தால் எந்தச் சிரமத்தையும் சமாளிக்க முடியும்,” என்றார்.

🌟 நீதி:

இளையவர்களின் சக்தியையும், வயதானவர்களின் அனுபவத்தையும் மதித்து ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

இன்றைய செய்திகள்

12.08.2026

🗒️பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் என்.ஆனந்த் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.

🗒️தமிழகத்துக்கு தினமும் ஒரு டிம்சி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.

🗒️மியான்மர் முன்னாள் பெண் தலைவர் ஆங் சான் சூகி விடுதலை கோரிக்கையை நிராகரித்தது மியான்மர் அரசு.

 *விளையாட்டுச் செய்திகள்* 

🏀 உலக ஜூனியர் தடகளம்:
ஆஸ்திரேலிய வீராங்கனை இசோபெல் லூயிசன் ரோ  தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

Today's Headlines

🗒️ A review meeting was held under the leadership of Minister N. Anand about monsoon preparedness measures.

🗒️ The Cauvery Water Regulation Committee has recommended releasing one TMC of water every day to Tamil Nadu.

🗒️ The Myanmar government rejected the request to release former woman leader Aung San Suu Kyi.

🏀 Sports News

🗒️ World Junior Athletics:
Australian athlete Isobel Louison Rowe won the gold medal.


11 August 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -11.08.2026






திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை

குறள் எண்:469

குறள்:

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.

பொருள்:

அவரவரது இயல்புகளைத் தெரிந்து கொண்டு, அவரவர்க்குத் தகுந்தபடி செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் கூடக் குற்றம் உண்டாகிவிடும்.

பழமொழி :
Live not to eat, but eat to live

உண்பதற்காக வாழாதே, வாழ்வதற்காக உண்

இரண்டொழுக்க பண்புகள் :.

1. இருளால் இருளை நீக்க முடியாது. ஒளி மட்டுமே அதை செய்யும். வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது. அன்பால் மட்டுமே அதை செய்ய முடியும் .

 2. பெரியோர் தனது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள். எனவே பெரியோரது அனுபவத்தை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

ஒவ்வொரு மழைத்துளியும் நாளைய வாழ்வின் விதை.

Thought for the Day :

Rain teaches us that even the darkest clouds bring life.

பொது அறிவு : 

1. காந்திஜி அவர்களை" மகாத்மா" என்றழைத்தவர் யார்? 

இரபீந்திரநாத் தாகூர். 

2. சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களை "இரும்பு மனிதர் " என்றழைத்தவர் யார்? 

மகாத்மா காந்தி.

English words :

Confident – Believes in oneself, தன்னம்பிக்கையுள்ளவர். 

 Optimistic – Always sees the positive, நம்பிக்கையுள்ளவர்

புவியியலும் சுற்றுசூழலும் :


இந்தியா ஆசியாவின் தென்பகுதியில் அமைந்துள்ளது.
வடக்கில் இமயமலை, தெற்கில் இந்தியப் பெருங்கடல்.
இந்தியாவின் மொத்த பரப்பளவு – 32,87,263 சதுர கிலோமீட்டர்.
உலகின் 7-வது மிகப்பெரிய நாடு.
பரப்பளவில் ஆசியாவில் 3-வது இடம் (ரஷ்யா, சீனாவிற்கு அடுத்து).

NMMS :

MAT 

ஒரு சங்கேத மொழியில் "WHO" என்பதை "16" எனவும், "HOW" என்பதை "0" எனவும் குறிக்கப்பட்டால் "WHY" என்பதன் குறியீடு________________________ 

 (1) 70. 

 (2) 5. 

 (3) 6.

 (4) 56. 

 விடை: (3) 6   

நீதிக்கதை

 🌳 உதவும் கரங்கள்

ஒரு பெரிய காட்டில் பல விலங்குகள் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. அந்தக் காட்டில் ஒரு சிறிய அணிலும் வாழ்ந்து வந்தது. அது மிகவும் சுறுசுறுப்பானதும், அன்பானதுமாக இருந்தது. யாருக்காவது உதவி தேவைப்பட்டால், தன்னால் முடிந்த அளவு உதவி செய்வது அதன் வழக்கம்.

ஒருநாள் அணில் உணவு தேடி காட்டுக்குள் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஒரு சிறிய முயல் ஒரு பள்ளத்தில் தவறி விழுந்திருப்பதைப் பார்த்தது. முயல் மேலே வர முடியாமல் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தது.

அணில் உடனே அருகில் கிடந்த ஒரு நீண்ட கொடியை எடுத்துக்கொண்டு பள்ளத்திற்குள் இறக்கியது. முயல் அந்தக் கொடியைப் பிடித்துக் கொண்டது. பின்னர் அணில் அருகில் இருந்த மானையும் குருவியையும் அழைத்து வந்தது. அனைவரும் சேர்ந்து கொடியை இழுத்து முயலைப் பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.

முயல் மிகவும் மகிழ்ச்சியடைந்தது. தன்னுடைய சிறிய உதவிக்காக அணிலுக்கு நன்றி கூறியது.

சில நாட்களுக்குப் பிறகு அணில் ஒரு மரக்கிளையில் இருந்து கீழே விழுந்து அதன் காலில் காயம் ஏற்பட்டது. அப்போது அதற்கு உதவியது அந்த முயல்தான். முயல் மற்ற விலங்குகளை அழைத்து வந்து அணிலுக்கு தேவையான உதவிகளைச் செய்தது.

அப்போது அணில், தான் பிறருக்கு செய்த உதவி தன்னிடமே திரும்பி வந்ததை நினைத்து மகிழ்ந்தது. அந்த நாளிலிருந்து காட்டில் வாழ்ந்த அனைத்து விலங்குகளும் ஒருவருக்கொருவர் உதவி செய்து அன்புடன் வாழத் தொடங்கின.

🌟 நீதி:

“மற்றவர்களுக்கு உதவி செய்யும் நல்ல மனம், ஒருநாள் நமக்கும் உதவியாகத் திரும்பி வரும்.”

இன்றைய செய்திகள்

11.08.2026

🗒️அரசு விழாக்களில் முதலிடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது என்ற தீர்மானத்தை ஆதரித்த அனைவருக்கும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நன்றி கூறினார்.

🗒️இந்தியாவில் உள்ள ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 891 ஆக உயர்ந்துள்ளது என மத்திய மந்திரி தகவல்.

🗒️கொலம்பியாவில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.4 ஆக நிலநடுக்கம் பதிவு ஆகியுள்ளது.

 *விளையாட்டுச் செய்திகள்*

🏀3வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானுக்கு 207 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது   அயர்லாந்து  .

Today's Headlines

🗒️ Chief Minister Joseph Vijay thanked everyone who supported the decision to sing the Tamil Thai Vazhthu first at government functions.

🗒️ The Union Minister has informed that the number of Asiatic lions in India has increased to 891.

🗒️ A powerful earthquake struck Colombia, measuring 7.4 on the Richter scale.

Sports News

🏀 3rd ODI: Ireland set a target of 207 runs for Afghanistan.


10 August 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026


திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை

குறள் எண்:468

குறள்:

 ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.   

பொருள்:

ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்.  

பழமொழி :
Like priest : like people.

அன்பர் எப்படியோ , தொண்டரும் அப்படியே.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. இருளால் இருளை நீக்க முடியாது. ஒளி மட்டுமே அதை செய்யும். வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது. அன்பால் மட்டுமே அதை செய்ய முடியும் .

 2. பெரியோர் தனது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள். எனவே பெரியோரது அனுபவத்தை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

உலகை மாற்ற நீங்கள் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி  -நெல்சன் மண்டேலா

Thought for the Day :

Hard work today brings success tomorrow.

பொது அறிவு : 

1. மனித உடலில் உள்ள இரத்தத்தின் pH மதிப்பு என்ன? 

7.35-7.45. 

2. தூய மழை நீரின் pH மதிப்பு என்ன? 

5.6

English words :

1. Ambitious – Has strong goals, இலட்சியமுள்ளவர்.


2. Adaptable – Adjusts to change, மாற்றங்களுக்கு ஏற்ப மாறுபவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :


இந்திய துணைக்கண்டத்தின் முக்கியத்துவம்
வளமான விவசாய நிலங்கள்.
பல்வேறு காலநிலைகள் மற்றும் இயற்கை வளங்கள்.
உலகின் பழமையான நாகரிகங்கள் வளர்ந்த பகுதி.
பல மொழிகள், பண்பாடுகள் மற்றும் மதங்கள் இணைந்து வாழும் நிலம்.

NMMS :

MAT 

ஆப்பிள் "தக்காளி " எனவும், தக்காளி "சோப்" எனவும், சோப் "தேன்" எனவும், தேன் "மை" எனவும் அழைக்கப்பட்டால் பின்வருவனவற்றுள் குளிப்பதற்கு பயன்படுத்துவது எது?

 (1) தேன் 

 (2) தக்காளி

 (3) சோப்பு

 (4) மை 

 விடை: (1) தேன்

ஆகஸ்ட் 10

மணாலி கல்லாட் வைணு பாப்பு (Manali Kallat Vainu Bappu, ஆகஸ்ட் 10, 1927 - ஆகஸ்ட் 19, 1982) நிசாமையா வானாய்வகத்தில் பணிபுரிந்து வந்த ஒரு அனுபவம்-வாய்ந்த வானியலாளரான சுனன்னா பாப்புவின் மகன் ஆவார். தமிழ்நாட்டின் காவலூரில் அமைக்கப்பட்டுள்ள வைணு பாப்பு வானாய்வகத்தை நிறுவுவதற்கு முக்கியக் காரணமாவார்.


வைணு பாப்பு


நீதிக்கதை

 விட்டுக்கொடுப்பதே வெற்றியின் வழி

ஒரு சிறிய குடும்பத்தில் அப்பா, அம்மா, மகன் அருண், மகள் காவ்யா ஆகியோர் வசித்து வந்தனர்.

ஒரு நாள் மாலை , அப்பா வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது, குழந்தைகள் இருவருக்கும் பிடித்தமான ஒரு பெரிய கேக் வாங்கி வந்தார்.

“இதை இருவரும் சமமாகப் பிரித்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு அப்பா வெளியே சென்றார்.

அருணுக்கும் காவ்யாவுக்கும் கேக்கின் பெரிய துண்டு வேண்டும் என்று ஆசை . இருவரும் ஒரே துண்டை எடுத்துக்கொள்ள முயன்றதால், சிறிய சண்டை ஏற்பட்டது.

அதைப் பார்த்த அம்மா,

“நீங்கள் இருவரும் விட்டுக்கொடுத்தால் இந்தப் பிரச்சினை உடனே தீர்ந்துவிடும்”என்றார். ஆனால் இருவரும் கேட்கவில்லை .

சிறிது நேரம் கழித்து, காவ்யா யோசித்தாள். “நான் கொஞ்சம் விட்டுக்கொடுத்தால் என்ன? என் தம்பியும் சந்தோஷமாக இருப்பானே !” என்று நினைத்து, பெரிய துண்டை அருணிடம் கொடுத்தாள். அதைப் பார்த்த அருணுக்கு மனதில் ஒரு மாற்றம் ஏற்பட்டது.

“நீ எனக்காக விட்டுக்கொடுத்தாய். எனக்கும் உனக்காக விட்டுக்கொடுக்கத் தெரியும்” என்று கூறி, அந்தப் பெரிய துண்டை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை காவ்யாவிடம் கொடுத்தான்.

இருவரும் சேர்ந்து கேக்கை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

அதைப் பார்த்த அம்மா சிரித்துக்கொண்டே ,

“விட்டுக்கொடுப்பதால் நாம் எதையும் இழப்பதில்லை . மாறாக, அன்பையும் மகிழ்ச்சியையும் பெறுகிறோம்” என்றார். அன்று முதல் அருணும் காவ்யாவும் சிறிய விஷயங்களுக்காக சண்டையிடாமல், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழத் தொடங்கினர்.

அவர்களின் வீடு எப்போதும் சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக மாறியது.

நீதி:

விட்டுக்கொடுப்பது தோல்வி அல்ல; அது உறவுகளை வலுப்படுத்தும் வெற்றியின் அடையாளம்.

இன்றைய செய்திகள்

10.08.2026

🗒️கபினி அணையில் நீர்மட்டம் உயர்வு காரணமாக தமிழகத்திற்கு  காவிரி நீர்திறப்பு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

🗒️மக்களுக்கு சேவை செய்வதில்  முதலிடம் பிடித்த புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ணக்கொடி விருதை மத்திய மந்திரி அமித்ஷா வழங்கினார்.

 🗒️இந்தியா மீது 100 சதவீத வரி விதிக்கும் மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப் பட்டது.

 *விளையாட்டுச் செய்திகள்*

🏀கொரிய பேட்மிண்டன் இறுதி போட்டி; இந்திய வீராங்கனை சாம்பியன் பட்டம் சாலிஹா வென்றார்.

🏀உலக ஜூனியர் தடகளம்: 
இந்திய வீரர் ஆஷிஷ் யாதவ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

Today's Headlines

🗒️ Due to the rise in water level at the Kabini Dam, the release of Cauvery water to Tamil Nadu has been increased to 12,000 cubic feet per second (cusecs).

🗒️ Union Minister Amit Shah presented the President’s Colours Award to the Puducherry Police for their excellent service to the people.

🗒️ The US Senate passed a bill to impose a 100% tax on India.

🏀 Sports News

🏀 Korea Badminton Final: Indian player Saleha won the championship title.

🏀 World Junior Athletics: Indian athlete Ashish Yadav won the silver medal.


8 August 2026

கலைத் திருவிழா போட்டிகள் -2026-27

கலைத் திருவிழா போட்டிகள் -2026-27

🌸 குறுவள மையம், வட்டாரம் & மாவட்ட அளவில் போட்டிகள் நடத்துவதற்கு தேவையான அனைத்து படிவங்களும் ஒரே தொகுப்பாக ( Exel & Word File ) வழங்கப்பட்டுள்ளது.

🔅 Attendance 
🔅 Student Registration Format 
🔅 Judge Format 
🔅 Winners Format
🔅 Badges and Token Sheet
🔅 How to Token No.
🔅 EB & Police Station Letter
🔅 CRC level Committee Format
🔅 Teams Format 
🔅 Model Date Schedule
🔅 Judge Model Certificate 
🔅Baamini Font



- அன்புடன்
பெ. அலெக்ஸ் பாண்டியன், BRTE,  சேடபட்டி. மதுரை மாவட்டம்.

7 August 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -07.08.2026


திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை

குறள் எண்:467

குறள்:

 எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

பொருள்:

செய்யத் தகுந்த செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.  

பழமொழி :
Penny wise, pound foolish.

சிறியதை காக்கப் பெரியதை இழக்காதே.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. நான் எனது வாழ்நாளில் யாருக்கும் எவ்விதத்திலும் தீங்கிழைக்க மாட்டேன்.

 2.என்னால் இயன்ற நன்மையை மற்றவர்களுக்குச் செய்வேன்.

பொன்மொழி : 

மழை பொழியும் போது பூமி சிரிக்கிறது.

Thought for the Day :

Save every drop of rain, and you save the future.

பொது அறிவு : 

1. பறவைகள் பற்றி படிக்கும் படிப்பு எது? 

ஆர்னித்தாலஜி. 

2.இந்தியாவின் பறவை மனிதர் என்றழைக்கப்படுபவர் யார்? 

டாக்டர். சலீம் அலி.

English words :

Insightful – Understands deeply, ஆழ்ந்த புரிதல் உடையவர். 

 versatile - Multi -Skilled.பல்திறமைசாலி.

புவியியலும் சுற்றுசூழலும் :

சாலைகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல்

தூய்மை மற்றும் சுகாதாரத்தை பேணுதல்

மரக்கன்றுகள் நடுதல் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்தல்

பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை பராமரித்தல்

அரசு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தல் ஆகும்



NMMS :

SAT 

ஒரு முதிர்ந்த பெண் பட்டுப்பூச்சி சுமார் ________________________ முட்டைகள் இடும் . 

 (1) 600. 

 (2) 500. 

 (3) 5000. 

 (4) 6000. 

 விடை: (2) 500

ஆகஸ்ட் 07

இரவீந்தரநாத் தாகூர் அவர்களின் நினைவுநாள்


இரவீந்தரநாத் தாகூர்



இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore) வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞர் ஆவார். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். இவர் கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார்.  இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரேயாவார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நினைவுநாள்

முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018) இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவி வகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969,1971,1989,1996,2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர்.
கை ரிக்ஷா ஒழிப்புத்திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டம், எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், கலை அறிவியல் கல்லூரிகள் பல பல்கலைக்கழகங்கள் எனப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர்.

இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப் பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அனைத்து சமூகத்திலும் அடித்தட்டு மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளை உறுதி செய்ததனால் மானுட மேம்பாட்டுக் குறியீட்டில் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.

நீர்ப்பாசனம், மின்சாரம், வேளாண்மை, தொழிலாளர் நலன், நிலச் சீர்த்திருத்தம் ஆகிய துறைகளில் மேம்பாட்டுத் திட்டங்களை வளர்த்ததால் தமிழ்நாடு உணவு தானிய உற்பத்தியில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதாலும், தொழில் துறை முதலீடுகளை ஈர்ப்பதற்கு கலைஞரின் ஆட்சிக்காலங்களில் செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தியதாலும் தமிழகம் தொழில் துறையிலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் ஒரு சீரான வளர்ச்சியை பெற்றிருக்கிறது.
நீதிக்கதை

 ராணுவ வீரரின் பார்வையில், தாய்நாட்டுப் பற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதை :

"என் உயிரை விட உயர்ந்தது என் தாய்நாடு"

நான் அரவிந்த். இந்திய ராணுவத்தில் பணியாற்றும் ஒரு வீரன். பல மாதங்களாக என் குடும்பத்தைப் பார்க்காமல், நாட்டின் எல்லையில் காவல் காத்துக் கொண்டிருந்தேன். கடும் பனியிலும், மழையிலும், வெயிலிலும் எங்கள் கடமையை ஒருநாளும் தவறவிடவில்லை .

ஒருநாள் இரவு, எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான அசைவு தெரிந்தது.

உடனே நானும் என் நண்பர்களும் எச்சரிக்கையுடன் செயல்பட்டோம். எங்கள் விழிப்புணர்வால் நாட்டிற்குள் ஊடுருவ முயன்றவர்களை தடுத்து நிறுத்த முடிந்தது.

அன்று என் தாயின் பிறந்தநாள். அவரிடம் பேச வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் நாட்டின் பாதுகாப்பே என் முதல் கடமை என்பதால், என் ஆசையை ஒதுக்கிவைத்தேன்.

சில நாட்களுக்குப் பிறகு விடுமுறையில் வீட்டிற்குச் சென்றேன். என் தாய் என்னைப் பார்த்து, "மகனே , எங்களை விட இந்த நாட்டை நீ அதிகமாக நேசிக்கிறாய் அல்லவா?" என்று கேட்டார்.

நான் புன்னகையுடன், "அம்மா, நீங்கள் எனக்கு உயிர் கொடுத்தீர்கள். ஆனால் இந்தத் தாய்நாடுதான் அந்த உயிருக்கு அர்த்தம் கொடுத்தது. நாடு பாதுகாப்பாக இருந்தால்தான் நம் குடும்பமும் பாதுகாப்பாக இருக்கும்," என்றேன். என் தாய் பெருமையுடன் என் தோளில் கை வைத்து, "உன்னைப் போன்ற வீரர்கள் இருப்பதால்தான் நாங்கள் அமைதியாக வாழ்கிறோம்," என்றார்.

நீதி:

தாய்நாட்டைப் நேசிப்பதும், அதன் பாதுகாப்பிற்காகத் தன் கடமையை நேர்மையாகச் செய்வதும் ஒவ்வொரு குடிமகனின் உயர்ந்த பொறுப்பாகும்.

இன்றைய செய்திகள்

07.08.2026

🗒️கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

🗒️'AC' பெட்டிகளில், பயணிக்கும் .R.A.C, பயணிகளுக்கும்  போர்வை, கம்பளி வழங்க  ரெயில்வே வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

🗒️11 மீனவர்களுடன் விபத்தில் சிக்கிய இந்திய மீனவ படகு மீட்பு நடவடிக்கையில்  இலங்கை கடற்படையும் இணைந்து செயல்பட்டுள்ளது.
 
 *விளையாட்டுச் செய்திகள்*

🏀கிராண்ட் செஸ் தொடர்: 
நெதர்லாந்து வீரர் ஜோர்டான் வான் பாரஸ்டிடம் உடன் மோதியதில் பிரக்ஞானந்தா முன்னிலையில் உள்ளார்.

Today's Headlines

🗒️ Chief Minister Joseph Vijay has written a letter to the Prime Minister, requesting action to implement the Godavari–Cauvery–Gundar river linking project.

🗒️ The Railway Board has instructed that blankets and bed sheets should also be provided to RAC passengers travelling in AC coaches.

🗒️ The Sri Lankan Navy also joined the rescue operation after an Indian fishing boat carrying 11 fishermen met with an accident.

🏀 Sports News

🗒️ Grand Chess Tournament: Praggnanandhaa is in the lead after his match against Dutch player Jorden van Foreest.


6 August 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -06.08.2026


திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை

குறள் எண்:466

குறள்:

 செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

பொருள்:

ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.

பழமொழி :
Learn ever from an enemy.

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. நான் எனது வாழ்நாளில் யாருக்கும் எவ்விதத்திலும் தீங்கிழைக்க மாட்டேன்.

 2.என்னால் இயன்ற நன்மையை மற்றவர்களுக்குச் செய்வேன்.

பொன்மொழி : 

மழை இல்லையேல் உயிரில்லை; நீர் இல்லையேல் உலகமில்லை.

Thought for the Day :

Rain nourishes the Earth just as kindness nourishes the heart.

பொது அறிவு : 

1. ஒன்பது நிறங்களை கொண்ட பறவை எது? 

இந்தியன் பிட்டா. 

2. மிக நீண்ட தூரம் பறக்கும் பறவை எது? 

ஆர்க்டிக் ஆலா.

English words :

Innovative – Brings new ideas, புதுமையானவர்.

Persistent – Never gives up, விடாமுயற்சியாளர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

கிராம பஞ்சாயத்து கிராமத்தின் அன்றாட நிர்வாகம் மற்றும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்கிறது.
கிராம பஞ்சாயத்தின் பணிகள்

குடிநீர் வசதி ஏற்படுத்துதல்

தெரு விளக்குகளை பராமரித்தல்...

NMMS :

MAT 

ஹைட்ரோஃபோபியா என்றால் ______________________ 

(1) நீரைக் கண்டு பயப்படுவது 

(2) ஒலியைக் கேட்டு பயப்படுவது 

(3) பசியின்மை 

(4) தோல் தடிப்பு 

விடை: (1) நீரைக் கண்டு பயப்படுவது

ஆகஸ்ட் 06

சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming) (ஆகஸ்ட் 6, 1881 – மார்ச் 11, 1955) நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்.

உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக்ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு.

1928 -ஆம் ஆண்டில் நுண்ணுயிர்கள் வளர்க்கப்பட்ட ஒரு தட்டை நோக்கிய போது, லைசோசைம் அதுவரை செய்திராத ஒரு செயலைக் காளான் செய்திருந்ததைத் தற்செயலாகக் கண்டார். கொப்புளங்கள், கட்டிகள், மூக்கு, தொண்டை, தோல் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்களை வரவழைக்கும் ஸ்டாபைலொகாக்கி எனப்படும் கிருமிகளைக் காளான் அழித்திருந்தது. அது மட்டுமல்ல, அந்தக் காளானின் சாரம் வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை என்றும், வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்றும் சோதித்துத் தெரிந்து கொண்டார். காளானில் பரவிய அப்பொருளுக்கு ‘பெனிசிலின்’ எனப் பெயரிட்டார் ஃப்ளெமிங். ஆனால் பெனிசிலினைப் பெரிய அளவில் அப்போது உற்பத்தி செய்ய இயலவில்லை. ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகியோர் அடங்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் குழுவினர் 14 ஆண்டுகள் கழித்து அதைச் சாதித்தனர். பெனிசிலின் ஒவ்வாமை உடையவர்களுக்கு வேறு பாதுகாப்பான நச்சுக்கொல்லி மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும் அக்குழுவினர் வெற்றியடைந்தனர்.
நீதிக்கதை

  "நேர்மையான அணிலும் பொற்கொட்டையும்"

ஒரு பெரிய காட்டில் ஒரு சிறிய அணில் வாழ்ந்து வந்தது. அது எப்போதும் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துகொண்டது.

ஒருநாள் உணவு தேடிச் சென்றபோது, ஒரு மரத்தின் அடியில் பொன்னிறத்தில் ஜொலிக்கும் ஒரு சிறிய பெட்டியைக் கண்டது. அதைத் திறந்து பார்த்தபோது, அதில் பல பொற்கொட்டைகள் இருந்தன.

அப்போது காகம் ஒன்று வந்து,

"இதை யாரும் பார்க்கவில்லை. நீயே வைத்துக்கொள்!" என்றது.

ஆனால் அணில்,

"இது என்னுடையது அல்ல. உரிமையாளரிடம் சேர்ப்பதே சரி." என்றது.

சிறிது நேரத்தில் வயதான ஒரு ஆமை பதற்றத்துடன் வந்தது.

"என் பொற்கொட்டைகள் இருந்த பெட்டியை யாராவது பார்த்தீர்களா?" என்று கேட்டது.

அணில் உடனே அந்தப் பெட்டியை ஆமைக்கு கொடுத்தது.

மிகுந்த மகிழ்ச்சி அடைந்த ஆமை,

"உன் நேர்மை எனக்கு என் பொருளைவிட அதிக மகிழ்ச்சியைத் தந்தது. உன்னைப் போன்றவர்கள் உலகிற்கு ஒரு ஆசீர்வாதம்" என்றது.

அந்த நாளிலிருந்து காட்டில் உள்ள எல்லா விலங்குகளும் அணிலை மதித்து, அதன் நேர்மையைப் பின்பற்றத் தொடங்கின.

நீதி: நேர்மையும் உண்மையும் மனிதனை உயர்த்தும். பிறருடைய பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பது நல்லொழுக்கம்

இன்றைய செய்திகள்

06.08.2026

🗒️முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள்  காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களைப் பாராட்டி ஊக்கத்தொகை 
வழங்கினார்.

🗒️ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட்டின் மேல் பகுதி  நிலவின் மேற்பரப்பில் மோதியதில்  நிலவின் மேற்பரப்பில் சுமார் 60 அடி அகலமும் 12 அடி ஆழமும் கொண்ட பள்ளம் உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

🗒️சீனா தனது சொந்த விண்வெளி நிலையத்தின் ஆய்வகத்தில் நெல் விளைவித்து சாதனை படைத்துள்ளது.

🗒️சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம்  'செக்ரட்டரி பறவை' இனத்தை 'அழிந்து வரும் இனம்' என அறிவித்துள்ள நிலையில் பிரிட்டன் விலங்கியல் பூங்காவில் 5 குஞ்சுகள் பொரித்து சாதனை செய்துள்ளது.

 விளையாட்டுச் செய்திகள்

🏀சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டியை நடத்த  ரூ.10 கோடி நிதியினை தமிழ்நாடு அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்படும், என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

Today's Headlines

🗒️ Chief Minister Joseph Vijay congratulated the Tamil Nadu athletes who won medals in the Commonwealth Games and awarded them cash rewards as encouragement.

🗒️ The upper part of SpaceX’s Falcon 9 rocket is expected to have crashed on the Moon’s surface. It may have created a crater about 60 feet wide and 12 feet deep, according to reports.

🗒️ China has achieved a new milestone by successfully growing rice in the laboratory of its own space station.

🗒️ While the International Union for Conservation of Nature (IUCN) has classified the 'Secretary Bird' as an endangered species, a British zoo has achieved a milestone with the hatching of five chicks.

🏀 Sports News

🏀 Chief Minister Vijay announced that the Tamil Nadu Government will allocate ₹10 crore to conduct the Chennai Open Women’s Tennis Tournament.


JOIN KALVICHUDAR CHANNEL