t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

17 September 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.09.2026

திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:50.இடன் அறிதல்

குறள் எண்:495

குறள்:

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற


பொருள்:

ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும்.

பழமொழி :
Penury pinches all

பசிவந்தால் பத்தும் பறந்து போகும்.


இரண்டொழுக்க பண்புகள் :.

 1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

2. ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும். எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்
பொன்மொழி : 

தொடர்ந்து கற்றுக்கொள்,

ஆய்வு செய்

உருமாறு.!

   - தந்தை பெரியார்

Thought for the Day :

Peace Day: “Choose dialogue over conflict and kindness over hatred.”

பொது அறிவு : 

1. தமிழ்நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகள் எத்தனை?

 39 .

 2. தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் எத்தனை? 

 234 . 

English words :

1. *Resilient** – Tough – தாங்கக்கூடிய

2. **Eloquent** – Articulate – சொற்சிறப்புமிக்க

புவியியலும் சுற்றுசூழலும் :

பேரூராட்சி -
கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறமாக வளர்ந்து வரும் பகுதிகளை நிர்வகிக்கும் உள்ளாட்சி அமைப்பு பேரூராட்சி எனப்படுகிறது.இது கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடைப்பட்ட வளர்ச்சிப் பகுதிகளின் நிர்வாகத்தை மேற்கொள்கிறது.

NMMS :

MAT 

ஒரு கடிகாரத்தில் 8.36.02 பி.ப. இருந்து 8.36.50 பி.ப. வரை கடக்கும்பொழுது நொடி முள் எத்தனை கோணம் சுழன்று இருக்கும்? 

 (1) 294.

 (2) 288.

 (3) 282. 

 (4) 298. 

 விடை: (2) 288

செப்டம்பர் 17

பெரியார் பிறந்த தினம் - சமுக நீதி நாள்


பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈ. வெ. இராமசாமி , ஆங்கில மொழி: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்.இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது.  சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார்.இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை.
நீதிக்கதை

சிறிய விதையின் பெரிய கனவு

ஒரு சிறிய கிராமத்தில் அருள் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு மரங்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.

ஒருநாள் பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது, சாலையோரத்தில் ஒரு சிறிய விதையை கண்டான். அதை எடுத்துக்கொண்டு வீட்டின் முன்புறம் மண்ணில் நட்டான்.

தினமும் காலையில் எழுந்தவுடன் அந்த விதைக்கு கொஞ்சம் தண்ணீர் ஊற்றுவான்.

“நீ பெரிய மரமாக வளர வேண்டும். உன்னிடம் நிறைய பறவைகள் வந்து தங்க வேண்டும்!” என்று ஆசையாகச் சொல்வான்.

சில நாட்கள் கடந்தன. 🌱

மண்ணிலிருந்து ஒரு சிறிய தளிர் வெளியே வந்தது.

அருள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.

ஆனால் ஒரு நாள் பலத்த காற்று வீசியது. அந்தச் சிறிய தளிர் வளைந்து கீழே விழுந்தது.

அருள் கவலைப்பட்டான். “இனி இது வளராது போலிருக்கிறதே!” என்று நினைத்தான்.

அவனுடைய தாத்தா அருகில் வந்து,

“அருளே, விழுந்துவிடுவது தோல்வி அல்ல; மீண்டும் எழாமல் இருப்பதுதான் தோல்வி” என்றார்.

அருள் தளிருக்கு ஒரு சிறிய குச்சியை ஆதரவாக வைத்து, அதைச் சுற்றி வேலி அமைத்தான். தொடர்ந்து தண்ணீர் ஊற்றினான்.

மாதங்கள் சென்றன...

அந்தச் சிறிய தளிர் பெரிய மரமாக வளர்ந்தது. 🌳

ஒருநாள் அதன் கிளைகளில் பறவைகள் கூடு கட்டின. அதன் நிழலில் கிராமத்து குழந்தைகள் விளையாடத் தொடங்கினர்.

அருள் மரத்தைப் பார்த்து சிரித்தான்.

அப்போது தாத்தா சொன்னார்:

“ஒரு சிறிய முயற்சி, தொடர்ந்து செய்யப்படும்போது, ஒருநாள் பெரிய மாற்றமாக மாறும்.”

அருள் அந்த நாளிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு மரக்கன்றை நட்டான்.

🌟 நீதிக்கதை:

சிறியதாகத் தொடங்கினாலும், விடாமுயற்சியுடன் செயல்பட்டால் பெரிய சாதனையை உருவாக்கலாம்.

இன்றைய செய்திகள்

17.09.2026

🗒️தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் 19 ம் தேதி கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

🗒️இமயமலையில் 18,300 அடி உயர 'பராங் லா' கணவாயை கடந்த நம் இந்திய தேசிய மாணவர் படை மாணவிகள்.

🗒️இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் 
93-29 என்ற வாக்குகள் கணக்கில் மசோதா நிறைவேற்றம்.

விளையாட்டுச் செய்திகள்

🏀ஆசிய போட்டிக்கு இந்திய அணி தயாராக ரூ.702 கோடி செலவு  என விளையாட்டு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

🏀அதிவேகமான சேசிங்... ஆப்கானிஸ்தானுக்கு எதிராக புதிய சாதனை படைத்த இந்தியா.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி  2-0 என கைப்பற்றியது.

Today's Headlines


🗒️ A special camp for fingerprint registration will be held on the 19th at all ration shops in Tamil Nadu.

🗒️ Indian National Cadet Corps (NCC) girl students crossed the 18,300-feet-high Parang La Pass in the Himalayas.

🗒️ The India–New Zealand Free Trade Agreement Bill was passed in the New Zealand Parliament with 93 votes in favour and 29 against.

🏀 Sports News

🏀 The Sports Ministry has said that ₹702 crore will be spent to prepare the Indian team for the Asian Games.

🏀 Fastest chase: India created a new record against Afghanistan.
India won the T20 series against Afghanistan 2–0.


இன்று (17.09.2026) காலை 11 மணிக்கு சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்க உத்தரவு

இன்று (17.09.2026) காலை 11 மணிக்கு சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்க உத்தரவு!

16 September 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.09.2026







திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:50.இடன் அறிதல்

குறள் எண்:494

குறள்:

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.

பொருள்:

தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.

பழமொழி :
One lie makes many.

ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்.

இரண்டொழுக்க பண்புகள் :.

 1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

2. ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும். எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்
பொன்மொழி : 

“இன்றே ஒரு திறமையை கற்றுக் கொள்; நாளை அது உன் அடையாளமாக மாறும்.” 🌟

Thought for the Day :

Ozone Day: “Heal the ozone, protect our home.”

பொது அறிவு : 

1. தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகள் எத்தனை? 

316 ஊராட்சிகள். 

2. தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் எத்தனை? 

388 ஊராட்சி ஒன்றியங்கள்.  

English words :

Ambiguous – Unclear – தெளிவற்ற


Meticulous – Careful – நுணுக்கமான

புவியியலும் சுற்றுசூழலும் :

காவிரி – தமிழ்நாட்டின் மிக முக்கியமான ஆறுகளில் ஒன்று; காவிரி டெல்டா பகுதி தமிழகத்தின் முக்கிய வேளாண் பகுதியாகும். வேளாண்மைக்காக
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கல்லணை காவிரி ஆற்றின் குறுக்கே சோழ மன்னன் கரிகால சோழனால் கட்டப்பட்டது.கல்லணை கட்டப்பட்ட காலம் பொதுவாக கி.பி. 2ஆம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது.

NMMS :

MAT 

அக்டோபர் 14 ன் 5 நாள்களுக்கு முன்னர் சனிக்கிழமை எனில் , அந்த மாதத்தின் கடைசி திங்கட்கிழமை எந்த தேதியில் வரும்? 

 (1) அக்டோபர் 25.

 (2) அக்டோபர் 26. 

 (3) அக்டோபர் 24. 

 (4) அக்டோபர் 27. 

 விடை: (1) அக்டோபர் 25

செப்டம்பர் 16

அனைத்துலக ஓசோன் படலப் பாதுகாப்பு நாள் (International Day for the Preservation of the Ozone Layer) 

அனைத்துலக ஓசோன் படலப் பாதுகாப்பு நாள் (International Day for the Preservation of the Ozone Layer) ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. சூரியனின் புறஊதாக் கதிர்வீச்சு ஏற்படுத்தும் மோசமான பாதிப்புகளில் இருந்து பூமிப் பந்தில் வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பது ஓசோன் படலம் ஆகும். இதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்கான அனைத்துலக நாளாகக் இத்தேதியை தேர்வு செய்து அறிவித்தது.

ஒமர் முக்தார் அவர்களின் நினைவுநாள்





ஒமர் முக்தார் (Omar Mukhtar, 1858 - செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர்.  1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைபற்றியது. அது முதல் இத்தாலி சுமார் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத முக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார்.

கி. ராஜநாராயணன் அவர்களின் பிறந்த நாள்







கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (16 செப்டம்பர் 1922 – 17 மே 2021),கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். ரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, 98 வயதான கி.ரா. தனது இறுதி காலத்தில் புதுச்சேரியில் வாழ்ந்தார். 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது.
நீதிக்கதை

 🐦 வன்சிகாவின் அன்பு

ஒரு அழகான கிராமத்தில் வன்சிகா என்ற சிறுமி தன் தாயாருடன் வசித்து வந்தாள். அந்தக் கிராமம் முழுவதும் பலா மரங்கள், தென்னை மரங்கள், மாமரங்கள் என பசுமையாகக் காட்சியளித்தது. மஞ்சிகாவின் வீட்டைச் சுற்றிலும் பலவிதமான பறவைகளும் சிறிய விலங்குகளும் வசித்து வந்தன.

வன்சிகாவிற்கு பறவைகள் என்றால் மிகவும் பிடிக்கும். தினமும் காலையில் வீட்டின் வாசலில் சிறிது அரிசியும் தண்ணீரும் வைத்து, “நீங்களும் சாப்பிடுங்கள்” என்று அன்புடன் கூறுவாள்.

ஒருநாள் வன்சிகாவின் உறவினர்கள் அனைவரும் அவளுடைய வீட்டிற்கு வந்திருந்தனர். அவர்கள் வீட்டின் பின்புறம் இருந்த பலா மரத்தின் கீழ் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறிய குருவி காயமடைந்த நிலையில் தரையில் விழுந்திருந்ததை வன்சிகா பார்த்தாள்.

“அம்மா! பாவம் இந்தக் குருவிக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு உதவி செய்வோம்!” என்று வன்சிகா கவலையுடன் கூறினாள்.

தாயார் உடனே அவளுடன் சென்று குருவியை மெதுவாக எடுத்தார். அருகில் இருந்த கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

சில நாட்கள் வன்சிகா அந்தக் குருவிக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து அன்புடன் கவனித்தாள்.

ஒருநாள் குருவி முழுமையாகக் குணமடைந்தது. வன்சிகா அதைத் திறந்த வெளியில் கொண்டு சென்று பறக்க விட்டாள்.

அது வானத்தில் சிறகடித்துப் பறந்ததைப் பார்த்த வன்சிகா மிகவும் மகிழ்ந்தாள்.

அப்போது அவளுடைய தாயார் கூறினார்:

“வன்சிகா, மனிதர்களுக்கு மட்டும் உயிர் முக்கியமல்ல. பறவைகள், விலங்குகள் என எல்லா உயிர்களுக்கும் வலியும் பசியும் பயமும் மகிழ்ச்சியும் உண்டு. அவற்றிடம் அன்பாக நடந்து கொள்வது நம்முடைய கடமை .”

அருகில் இருந்த உறவினர்களும் வன்சிகாவின் செயலைப் பாராட்டினர்.“இனிமேல் நாங்களும் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவும் தண்ணீரும் கொடுத்து அன்பாகப் பார்த்துக் கொள்கிறோம்,” என்று கூறினர்.

அன்றிலிருந்து அந்தக் குடும்பத்தினர் அனைவரும் தங்கள் வீட்டைச் சுற்றியுள்ள உயிரினங்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்கி, அவற்றைத் துன்புறுத்தாமல் அன்புடன் பாதுகாத்தனர்.

🌷 நீதி:

மனிதர்களைப் போலவே அனைத்து உயிரினங்களுக்கும் உயிரும் உணர்வுகளும் உள்ளன. எனவே பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட எல்லா உயிர்களிடத்திலும் அன்பும் இரக்கமும் காட்டி, அவற்றை பாதுகாக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

16.09.2026

🗒️முதல் - அமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.15,300 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து
மாநிலத்தில் 10,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் .

🗒️ரூ.2 ஆயிரம் வரையிலான யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்று மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

🗒️மலேசியாவில் கடற்படை பயிற்சி - ஐஎன்எஸ் மைசூர் கப்பல் பங்கேற்கிறது.

விளையாட்டுச் செய்திகள் 

🏀 உலக டென்னிஸ் தரவரிசை: ரைபகினா முதலிடம்
ரைபகினா அரைஇறுதியை எட்டிய போதே 'நம்பர் ஒன்' இடத்தை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Headlines

🗒️ Investment agreements worth ₹15,300 crore were signed in the presence of Chief Minister Vijay.
More than 10,000 job opportunities will be created in the state.

🗒️ The Union Finance Ministry has ordered that no charges should be collected for UPI transactions up to ₹2,000.

🗒️ Naval exercise in Malaysia:
The Indian Navy ship INS Mysore is participating in the exercise.

🏀 Sports News

🗒️ World Tennis Rankings: Rybakina reaches No. 1. Rybakina secured the No. 1 position after reaching the semi-finals.


15 September 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.09.2026


திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:50.இடன் அறிதல்

குறள் எண்:493

குறள்:

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.

பொருள்:

பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்.

பழமொழி :
One doth the act, another hath the blow.

பாவம் ஒரு பக்கம் ; பழி ஒரு பக்கம்.

இரண்டொழுக்க பண்புகள் :.

 1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

2. ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும். எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்
பொன்மொழி : 

“திறமைக்கு வாய்ப்பு கிடைக்க காத்திருக்காதே; உன் முயற்சியால் வாய்ப்பை உருவாக்கு.”

Thought for the Day :

Democracy Day: “Respect every voice, uphold every responsibility.”

பொது அறிவு : 

1. தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் எத்தனை? 

 25 மாநகராட்சிகள். 

 2. தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் எத்தனை? 

 137 நகராட்சிகள்.  

English words :

1. Subtle – Not easily noticed, நுட்பமான.


2. Versed – Well-informed or skilled, நன்கு அறிந்தவர் / திறமைமிக்கவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு ஆறுகள் மிக முக்கியமானவை.
முக்கிய ஆறுகள்:
காவிரி
தென்பெண்ணை
பாலாறு
வைகை
தாமிரபரணி
பவானி
அமராவதி
நொய்யல்
கொள்ளிடம்

NMMS :

MAT 

ஒரு குறிப்பிட்ட குறியீட்டில் 85+14=18, 96+27=24 என குறிப்பிட்டால் 14+27ன் மதிப்பு என்ன? 

 (1) 14. 

 (2) 27.

(3) 20. 

 (4) 26.

 விடை: (1) 14

செப்டம்பர் 14

அனைத்துலக சனநாயக நாள் 

அனைத்துலக சனநாயக நாள் செப்டெம்பர் 15 அன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. நவம்பர் 8, 2007 இல் நடந்த ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபைக் கூட்டத்தில் இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சனநாயகத்தினை ஊக்குவிக்கும் முகமாகவும் அபிவிருத்தி செய்யவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தை கொடுக்கும் முகமாக ஐநா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இப்பொதுத் தீர்மானத்தை 192 உறுப்பு நாடுகள் அனுமதித்துள்ளன.
நீதிக்கதை

ஆவியில் வேகவைத்த உணவின் சிறப்பு

நீதிக்கதை

ஒரு சிறிய ஊரில் ஜகதீஷ் மற்றும் மோனிகா என்ற அண்ணன், தங்கை வாழ்ந்து வந்தனர். அவர்களுடைய அம்மா தினமும் வீட்டில் சுவை யான உணவுகளைச் சமைத்து கொடுப்பார். ஆனால் ஜகதீஷுக்கும் மோனிகாவுக்கும் எண்ணெயில் பொரித்த உணவுகள், பாக்கெட் தின்பண்டங்கள் போன்றவற்றின் மீதுதான் அதிக விருப்பம்.

ஒருநாள் காலை அம்மா இட்லி, இடியாப்பம் மற்றும் ஆவியில் வேகவைத்த காய்கறிகளைத் தயாரித்தார்.

“அம்மா, தினமும் இட்லி, இடியாப்பமா? எங்களுக்கு பூரியும், வடையும் வேண்டும்!” என்று ஜகதீஷ் கேட்டான்.

“ஆமாம் அம்மா, எண்ணெயில் பொரித்த உணவுதான் ரொம்ப சுவையாக இருக்கும்!” என்று மோனிகாவும் சொன்னாள். அப்போது அப்பா சிரித்துக்கொண்டே , “குழந்தைகளே , சுவை மட்டும் பார்த்து உணவைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. உடலுக்கு எது நல்லது என்பதையும் பார்க்க வேண்டும்,” என்றார்.

அவர் தொடர்ந்து, “ஆவியில் வேகவைத்த உணவுகளுக்கு அதிக எண்ணெய் தேவையில்லை . இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை , ஆவியில் வேகவைத்த காய்கறிகள் போன்றவை எளிமையான முறையில் தயாரிக்கப்படுகின்றன.  வீட்டில் தயாரித்த சத்தான உணவுகளை விரும்பி சாப்பிடுவது நல்ல பழக்கம்,” என்று விளக்கினார்.

அம்மா அன்று ஜகதீஷுக்கும் மோனிகாவுக்கும் வண்ணமயமான காய்கறிகளுடன் ஆவியில் வேகவைத்த கொழுக்கட்டை செய்து கொடுத்தார்.

இருவரும் சுவைத்துப் பார்த்துவிட்டு, “அம்மா! இது ரொம்ப சுவையாக இருக்கிறது. இனிமேல் ஆவியில் வேகவைத்த உணவுகளையும் விரும்பிச் சாப்பிடுவோம்!” என்றனர்.

அதன்பிறகு, அவர்கள் வீடில் வாரத்தின் பல நாட்களில் இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை , வேகவைத்த காய்கறிகள் போன்ற உணவுகள் இடம்பெறத் தொடங்கின.

நீதி:

சுவையான உணவு மட்டுமல்ல; உடலுக்கு ஏற்ற சத்தான உணவையும் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். ஆவியில் வேகவைத்த உணவுகள் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் ஒரு நல்ல பகுதியாக இருக்கலாம். 

இன்றைய செய்திகள்

15.09.2026

🗒️செயற்கை நுண்ணறிவு அனைத்து துறைகளிலும் உலகை ஆட்டிப் படைக்கிறது’ - ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

🗒️ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் நாட்டின் முதல் டி.ஆர்.ஐ. ஆலை அமைக்க மத்திய அரசு திட்டம்.

🗒️தமிழகம் மற்றும் புதுச்சேரி இடைத்தேர்தலில்
மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேல்  உள்ளவர்கள் தபால் ஓட்டுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

🏀ஆசிய ஜூனியர் பேட்மிண்டன்: தன்வி சாம்பியன் பட்டம் வென்றார்

🏀ஜப்பான் பாரா பேட்மிண்டன்: பிரமோத் பகத்துக்கு இரட்டை பதக்கம் இந்தியாவின் பிரமோத் பகத், சக நாட்டவரான யு.குமாரை தோற்கடித்து சாதனை.

🏀உலகக்கோப்பை வில்வித்தையில் தங்கம் வென்று வரலாறு படைத்த தீரஜ்.

Today's Headlines

🗒️ “Artificial Intelligence is ruling the world in all fields,” said High Court Judge Anand Venkatesh.

🗒️ The Central Government plans to set up the country’s first DRI plant that will run using hydrogen fuel.

🗒️ In the Tamil Nadu and Puducherry by-elections, the Election Commission has allowed persons with disabilities and people above 85 years of age to vote by postal ballot.

🏀 Sports News

🏀 Asian Junior Badminton: Tanvi won the championship title.

🏀 Japan Para-Badminton: Pramod Bhagat won two medals. He defeated fellow Indian U. Kumar and created a record.

🏀 Dheeraj made history by winning gold in the World Archery Championship.


11 September 2026

`கணினிப் படிப்புக்கு இங்கு முக்கியத்துவமே கொடுப்பதில்லை'- ஆசிரியர்கள் குமுறலும் அமைச்சர் விளக்கமும்!


தமிழ்நாட்டில் மட்டும்தான் கணினி அறிவியல் பாடமானது ஒதுக்கப்பட்ட பாடமாக இருக்கிறது” என கொந்தளிக்கிறார்கள் கணினி பட்டதாரி ஆசிரியர்கள். தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்காக மத்திய அரசானது கணினி அறிவியல் பாடத்திற்கு நிதி ஒதுக்கியும், தமிழக அரசு அதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை எனக் குற்றம்சாட்டுகிறார்கள்.

இது தொடர்பாக கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க மாநிலத் தலைவர் குமரேசனிடம் பேசினோம்:

“இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கணினி பாடமானது முக்கியமானது என மத்தியக் கல்வி அமைச்சகம் ஆய்வு செய்து ‘சமக்ர சிக்ஷா’ (Samagra Shiksha) என்ற திட்டத்தைக் கடந்த 2018-2019-ஆம் ஆண்டு கொண்டு வந்தது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணினி அறிவை வளர்க்கவும், தகவல் தொடர்புத் துறை பற்றி பள்ளி வயது முதலே தெரிந்துகொள்ளச் செய்யவுமே இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இதை மற்ற மாநிலங்கள் அனைத்தும் தங்களது பள்ளிகளில் நடைமுறைப்படுத்திவிட்டன. குறிப்பாக, பக்கத்து மாநிலமான கேரளாவில் கணினி அறிவியலை 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை ஆறாவது பாடமாகக் கட்டாயமாக்கியிருக்கிறார்கள்.

ஆனால், தமிழக அரசானது இதில் இதுவரை எந்த ஆர்வமும் காட்டவில்லை. 2021 முதல் தற்போது வரை கணினி அறிவியலுக்காக மத்திய அரசானது தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ₹400 கோடிக்கும் மேல் ஒதுக்கியும், அதைச் சம்பந்தப்பட்ட பாடத்திற்குப் பயன்படுத்தவில்லை. இல்லம் தேடி கல்வியில் பள்ளிப் படிப்பைக் கூட சரியாக முடிக்காமல் தற்காலிகமாகப் பணியில் சேர்ந்தவர்களுக்கும், பள்ளிக் கல்வித் துறையில் தரவுப் பதிவு (Data Entry) செய்பவர்களுக்கும் கடந்த திமுக அரசு ஆட்சியில் இருந்தபோது அந்த நிதியைப் பயன்படுத்தியது.

👉குமரேசன்:

மத்திய அரசு கணினி அறிவியலுக்காக ஒதுக்கிய இந்த நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என உத்தரவும் வந்தது. நீதிமன்ற உத்தரவு வந்த பிறகும் அரசே இதை முறைப்படுத்தி கணினிப் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை.

தற்போது மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி ஆய்வகங்கள் செய்முறைத் தேர்வின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமே பயன்படுகின்றனவே தவிர, முழுமையாகக் கணினியைப் பற்றி மாணவர்கள் தெரிந்துகொள்வதில்லை. மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தலைதூக்கியிருக்கும் இந்தக் காலத்தில், கணினியை எப்படிப் பயன்படுத்துவது என்ற சாதாரண விஷயம்கூட கிராமப்புற மாணவர்களுக்குத் தெரியவில்லை.

கல்வியில் தமிழகம்தான் முன்னிலை எனப் பெருமைகொள்ளும் அரசானது இந்த விஷயத்தில் மட்டும் பின்தங்கியே நிற்கிறது. எனவே, மற்ற பாடங்களைத் தனிப் பாடமாகப் கற்பிப்பது போல கணினி அறிவியலையும் சேர்ப்பதோடு, அதற்கான தகுதியான ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும்” என்றார் கோரிக்கையாக.

இது குறித்து ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் பால் ஜெயகுமாரிடம் கேட்டோம்:

“பள்ளிப் பருவத்தில் நாம் படிக்கும் எந்த ஒரு படிப்பும் எதிர்காலத்தில் நமக்கு உதவத்தான் போகிறது; அது கணினிப் படிப்பிற்கும் பொருந்தும். மேல்நிலைப் பள்ளிகளில் குறிப்பாகக் கணினி அறிவியலைப் பாடமாக எடுத்துப் படிக்கும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும்தான் கணினியைப் படிக்க வேண்டும் என்ற தற்போதைய நடைமுறை முற்றிலும் முரணானது. இதில் தமிழ் வழிக் கல்வியை அடிப்படையாகக் கொண்டு படிக்கும் ஏழை மாணவர்களே அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ மாணவர்களுக்கு 6-ஆம் வகுப்பு படிக்கும் போதே கணினியை ஒரு பாடமாக வைத்து, அதைப் பற்றிய புரிதலைச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

👉பால் ஜெயகுமார்:
ஆனால், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அது எட்டாக்கனியாக இருக்கிறது. இதற்காகத்தான் மத்திய அரசு ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தைக் கொண்டு வந்தது. கிராமப்புற ஏழை மாணவர்கள் கணினி அறிவியலில் மேம்படுவதோடு, பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரிகளில் சிறந்து விளங்க கணினி ஒரு அடிப்படைக் கருவியாக இருக்கும் என்பதால் தான் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.

இன்றைய தலைமுறைப் பிள்ளைகள் கைப்பேசியிலும் சமூக ஊடகங்களிலும் மூழ்கியிருந்தாலும், அடிப்படையான கணினி விஷயங்கள் தெரியாததால் வேலைக்குச் செல்லும்போது பெரும் சிரமங்களைச் சந்திக்கிறார்கள். எனவே, அரசானது கணினி அறிவியலை ஊக்குவிக்க மத்திய அரசின் இத்தகைய திட்டங்களை அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் செயல்படுத்தித் தர வேண்டும்” என்றார் ஆதங்கத்துடன்.

👉ராஜ்மோகன்:


பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் இது குறித்து விளக்கம் கேட்டோம்:

”கல்வியை ஊக்குவிப்பதும் புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவதும்தான் தற்போதைய அரசின் பிரதான குறிக்கோள். கணினி அறிவியல் பாடத்திற்காக மத்திய அரசானது நிதியைப் போதுமான அளவு வழங்கவில்லை. வழங்கப்பட்ட நிதியை இதற்கு முந்தைய அரசு தற்காலிகப் பணியாளர்களுக்கும் ஆய்வகப் பராமரிப்பிற்கும்தான் பயன்படுத்தியது. தற்போதைய ஆண்டிற்கான நிதியைக் கல்வித் துறை சார்பில் கோரியிருக்கிறோம். ஆனால், அந்த நிதி இன்னும் எங்களுக்கு வரவில்லை. எனவே, மத்திய அரசு வழங்கும் நிதியைத் தவறாகப் பயன்படுத்தாமல் நிச்சயமாகச் சம்பந்தப்பட்ட கணினிப் பாடத்திற்கே பயன்படுத்துவோம்” என்றார்.


வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் , 
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.09.2026

திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:50.இடன் அறிதல்

குறள் எண்:492

குறள்:

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும். 

பொருள்:

வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும்.

பழமொழி :
Once bitten, twice shy.

சூடுபட்ட பூனை அடுப்பண்டை சேராது.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் எனது தனித்திறமையை வெளிப்படுத்துவேன். 

2. என்னுடன் போட்டியிடும் மாணவர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்தி ஊக்குவிப்பேன்.

பொன்மொழி : 

“இளைஞர்களின் உழைப்பும் திறமையும் இணைந்தால், நாட்டின் வளர்ச்சி வேகம் பெறும்.”

Thought for the Day :

Engineers’ Day: “Innovate today to build a better tomorrow.”

பொது அறிவு : 

1. தென்னாட்டின் ஜான்சி ராணி என்றழைக்கப்படுபவர் யார்? 

அஞ்சலை அம்மாள். 

2. தென்னாட்டின் பகத்சிங் என்றழைக்கப்படுபவர் யார் ? 

வாஞ்சிநாதன்

English words :

1. Lucid – Easy to understand, எளிதில் புரியக்கூடிய.


2. Proficient – Highly skilled, திறமைமிக்கவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

இதற்காக கிராம மக்கள் தங்கள் சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார். மக்கள் பெரிய தொழிற்சாலைகளை மட்டும் சாராமல், சிறு மற்றும் குடிசைத் தொழில்களை வளர்க்க வேண்டும் என்றார்.கதர் மற்றும் கைத்தறி
கதர் நூற்பு, நெசவு போன்ற கிராமக் கைத்தொழில்களை ஊக்குவித்தார். இதன் மூலம் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கருதினார்.

NMMS :

SAT 

இந்தியாவின் மிகப்பெரிய தேசிய அருங்காட்சியகம் அமைந்துள்ள இடம் _____

(1) சென்னை

(2) டெல்லி 

(3) மும்பை

(4) கொல்கத்தா

விடை:  (2) டெல்லி

செப்டம்பர் 11

மகாகவி பாரதியின் நினைவுநாள்

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.

பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார்.பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். இவரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார். இவர் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.
நீதிக்கதை

 நேரம் தவறாமை

ஒரு அழகான காட்டில் அணில், முயல், குரங்கு ஆகிய மூன்று நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஆந்தை ஆசிரியராக இருந்தார்.

ஒருநாள், மறுநாள் காலை காட்டில் ஒரு முக்கியமான அறிவுப் போட்டி நடைபெறும் என்று ஆந்தை ஆசிரியர் அறிவித்தார். போட்டி காலை 8 மணிக்குத் தொடங்கும் என்றும், அனைவரும் 7:45 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்றும் கூறினார்.

அணில் அன்று இரவே தனது புத்தகங்களையும் தேவையான பொருட்களையும் தயார் செய்து வைத்தது. காலையில் சீக்கிரமாக எழுந்து, நேரத்திற்கு முன்பே போட்டி நடைபெறும் இடத்திற்குச் சென்றது.

முயலும் சரியான நேரத்தில் வந்தது. ஆனால் குரங்கு, “இன்னும் நிறைய நேரம் இருக்கிறது” என்று நினைத்து விளையாடிக் கொண்டிருந்தது. நேரம் சென்றதே தெரியாமல் போனது.

குரங்கு அவசரமாக ஓடி வந்தபோது போட்டி தொடங்கிவிட்டது. அதனால் முதல் சுற்றில் கலந்துகொள்ள முடியவில்லை.

போட்டி முடிந்ததும், ஆந்தை ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார்:

“நேரத்தை மதிப்பவன் தனது வாழ்க்கையையும் மதிக்கிறான். கடந்துபோன நேரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியாது. எனவே, ஒவ்வொரு செயலையும் சரியான நேரத்தில் செய்வது மிகவும் முக்கியம்.”

அப்போது குரங்கு தனது தவறை உணர்ந்தது. இனிமேல் எந்த வேலையையும் தாமதப்படுத்தாமல், நேரத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தது.

🌟 நீதி:

“நேரம் பொன்னைவிட மதிப்புமிக்கது; நேரத்தை மதிப்பவன் வாழ்க்கையில் முன்னேறுவான்.”

 மாணவர்களுக்கான நினைவுச் சொல்:

“இன்று செய்ய வேண்டியதை நாளைக்கு தள்ளாதே; நேரம் தவறாமல் செய்!”

இன்றைய செய்திகள்

11.09.2026

🗒️சென்னை மாநகராட்சியில் பள்ளிக்குச் செல்லாத மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் மூலம்
263 குழந்தைகள் தொழிற்பயிற்சி நிலையத்திலும், பள்ளியிலும்  சேர்க்கப்பட்டுளனர்.

🗒️தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இங்கிலாந்து பயணம்  எனத் தமிழக அரசு விளக்கம்.

🗒️வளைகுடா போர் எதிரொலியால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரை தாண்டிவிட்டது. ஆகவே இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலைகள் உயரும் அபாயம் உள்ளது.

🗒️பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது. மாநாட்டில் பங்கேற்க உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகைத்தர உள்ளனர்.

விளையாட்டுச் செய்திகள்

🏀ஸ்குவாஷ் வீரர் - வீராங்கனைகளுக்கு தமிழக அரசு சார்பில்  சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று பாராட்டு நடந்தது. விழாவில் நிதியுதவி , சான்றிதழ் ஆகியவற்றை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்.

Today's Headlines

🗒️ In the Chennai Corporation, a special camp was held for children with disabilities who were not attending school. Through this camp, 263 children were admitted to vocational training centres and schools.

🗒️ The Tamil Nadu Government said that Chief Minister Joseph Vijay is travelling to the United Kingdom to attract more industrial investments.

🗒️ Due to the impact of the Gulf War, the price of crude oil has again crossed 100 dollars per barrel. So, petrol and diesel prices may increase in India.

🗒️ The BRICS Summit is going to be held in Delhi. World leaders are expected to visit India to participate in the summit.

🏀 Sports News

🏀 A felicitation ceremony was held yesterday at Nehru Stadium, Chennai, for Tamil Nadu squash players. At the event, Minister Aadhav Arjuna presented financial assistance and certificates to the players.


10 September 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.09.2026


திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:50.இடன் அறிதல்

குறள் எண்:491

குறள்:

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.  


பொருள்:

பகைவரை வளைத்து வெல்லும் இடத்தைக் காணும் முன் எந்தச் செயலையும் தொடங்க வேண்டாம்.பகைவரை அற்பர் என்று இகழவும் வேண்டாம்.

பழமொழி :
Old is gold.

பழமையே சிறந்தது.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் எனது தனித்திறமையை வெளிப்படுத்துவேன். 

2. என்னுடன் போட்டியிடும் மாணவர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்தி ஊக்குவிப்பேன்.

பொன்மொழி : 

“கைத்தொழில் கற்ற இளைஞன், தன் கைகளால் தன் எதிர்காலத்தை வடிவமைக்கிறான்.”

Thought for the Day :

You can learn from yesterday and prepare for tomorrow, but don’t forget to actually live today.

பொது அறிவு : 

1. தென்னாட்டின் திலகர் என்றழைக்கப்படுபவர் யார்? 

வ. உ .சிதம்பரனார். 

2. தென்னாட்டின் சாக்ரடீஸ் என்றழைக்கப்படுபவர் யார்? 

பெரியார்.

English words :

1. Feasible – Possible to do, செய்யக்கூடியது.


2. Impartial – Fair to everyone, பாரபட்சமற்றவர்

புவியியலும் சுற்றுசூழலும் :

காந்தியடிகளின் கிராம சுயாட்சி (Gram Swaraj) என்பது வெறும் அரசியல் சுதந்திரம் மட்டும் அல்ல. 

ஒவ்வொரு கிராமமும்:

தன்னிறைவு + உள்ளூர் வேலைவாய்ப்பு + உள்ளூர் உற்பத்தி + மக்களின் பங்கேற்பு + சுயநிர்வாகம் என்ற அடிப்படையில் வளர வேண்டும் என்பதாகும்.

NMMS :

SAT 

மனிதக் கண்ணால் __________________ மில்லியன் நிறங்களை வேறுபடுத்திக் காண இயலும். 

(1) 12-24.

 (2) 10-20. 

(3) 1-10. 

(4) 10-12. 

விடை: (4) 10-12.

நீதிக்கதை

 பிடிவாதத்தின் விலை


ஒரு சிறிய ஊரில் மித்ரா என்ற பெண் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்தாள். அவள் புத்திசாலியும் திறமையானவளும்தான். 


ஆனால் அவளிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது—தனக்குப் பிடித்ததுதான் சரி என்று நினைப்பது.

பெற்றோர் ஏதாவது அறிவுரை கூறினால்,

“எனக்குத் தெரியும்! நீங்கள் எப்போதும் என்னையே குறை சொல்கிறீர்கள்!” என்று கோபமாகப் பேசுவாள்.


ஒருநாள் மித்ரா தனது நண்பர்களுடன் வெளியே செல்ல முடிவு செய்தாள். அன்று மாலை வீட்டிற்கு சீக்கிரம் வரும்படி அவளுடைய அம்மா கூறினார்.

“மித்ரா, இன்று மழை வரப்போகிறது. சீக்கிரமாக வீட்டிற்கு வந்துவிடு. தாமதமாக வெளியே இருக்க வேண்டாம்,” என்றார் அம்மா.


ஆனால் மித்ரா, “எனக்கு ஒன்றும் ஆகாது. நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். நீங்கள் தேவையில்லாமல் அறிவுரை சொல்லாதீர்கள்!” என்று கோபமாகப் பேசிவிட்டு சென்றாள்.


மாலை நேரம் ஆனது. வானம் இருண்டு, பலத்த மழை பெய்யத் தொடங்கியது. ஆனால் மித்ரா இன்னும் வீடு திரும்பவில்லை.


நேரம் செல்லச் செல்ல அவளுடைய பெற்றோரின் கவலை அதிகரித்தது. அம்மா மீண்டும் மீண்டும் வாசலுக்கு வந்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்பா மித்ராவின் நண்பர்களுக்கு தொலைபேசி செய்து அவள் எங்கே இருக்கிறாள் என்று விசாரித்தார். 


மழையையும் பொருட்படுத்தாமல், அப்பா அவளைத் தேடி அருகிலுள்ள தெருக்களுக்குச் சென்றார். அம்மா வீட்டில் இருந்து அவள் பாதுகாப்பாக வர வேண்டும் என்று கவலையுடன் காத்திருந்தார்.


“காலையில் என்னிடம் கோபமாகப் பேசினாலும் பரவாயில்லை... என் மகள் பாதுகாப்பாக வீட்டிற்கு வந்தால் போதும்,” என்று அம்மா கண்ணீருடன் கூறினார்.


சிறிது நேரத்திற்குப் பிறகு, மித்ரா தனது நண்பரின் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்தது. அவள் வீட்டிற்கு வந்தபோது, வாசலில் கவலையுடன் காத்திருந்த பெற்றோரைப் பார்த்தாள்.

அவள் அவர்களிடம் எதுவும் பேச முடியாமல் அமைதியாக நின்றாள்.


அம்மா கோபப்படாமல், “நீ பாதுகாப்பாக வந்துவிட்டாயே, அதுதான் எங்களுக்கு முக்கியம்,” என்று மட்டும் கூறினார்.

அந்த வார்த்தைகள் மித்ராவின் மனதைத் தொட்டன.


“நான் அவர்களிடம் கோபமாகப் பேசினேன். அவர்களுடைய அறிவுரையை மதிக்கவில்லை. ஆனால் நான் தாமதமானதும், அவர்கள் கோபத்தைப் பற்றி நினைக்காமல் என்னுடைய பாதுகாப்பைப் பற்றித்தான் கவலைப்பட்டிருக்கிறார்கள்,” என்று அவள் எண்ணினாள்.


அப்போது பாட்டி மித்ராவிடம் மெதுவாகக் கூறினார்:

“கண்ணே, பெற்றோர் சொல்வதெல்லாம் கட்டளை அல்ல; பல நேரங்களில் அவர்கள் அனுபவத்தில் கற்றுக்கொண்ட பாதுகாப்பான வழி. கருத்து வேறுபாடு இருந்தால் அமைதியாகச் சொல்லலாம். ஆனால் அவர்களை எதிர்த்து, காயப்படுத்தும் வார்த்தைகளில் பேசுவது நல்லதல்ல.

உனக்காக வாழும் மனிதர்களின் வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் அக்கறையைப் புரிந்துகொள்ள வேண்டும். பிடிவாதம் நம்மை உயர்த்தாது; அன்பானவர்களின் மனதை மட்டுமே காயப்படுத்தும்.”


மித்ராவின் கண்களில் கண்ணீர் வந்தது.

“பாட்டி, இனிமேல் எனக்குப் பிடித்ததை மட்டும் நினைக்காமல், அம்மா அப்பாவின் அக்கறையையும் புரிந்துகொள்வேன். அவர்களுடன் கருத்து வேறுபாடு வந்தாலும் மரியாதையாகப் பேசுவேன்,” என்றாள்.


அன்று முதல் மித்ரா தனது பிடிவாதத்தைக் குறைத்து, பெற்றோரிடம் அன்புடனும் மரியாதையுடனும் பேசத் தொடங்கினாள்.


🌸 நீதி:


பெற்றோர்களின் அறிவுரையின் பின்னால் அவர்களின் அன்பும் அக்கறையும் இருக்கும். கருத்து வேறுபாடு இருந்தாலும், பெரியவர்களை எதிர்த்து பேசாமல் மரியாதையுடன் பேசுவதே நல்ல பண்பு.

இன்றைய செய்திகள்

10.09.2026

🗒️தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

🗒️இளம் கலைஞர்களுக்கான மாநில கலைப்
போட்டிகளில்  வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பரிசுகள் வழங்கினார்.

🗒️கடல்சார் ஆய்வில் புதிய மைல்கல்: ‘சாகர் மந்தன்’ ஆய்வுக் கப்பல் செயல்பாட்டை ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங்.
தொடங்கி வைத்தார்.

🗒️விஞ்ஞான உலகை வியப்பில் ஆழ்த்திய அண்டார்டிகா: தற்காலிகமாக 695 பில்லியன் டன் பனி அதிகரித்
துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

🏀பாரா உலக வில்வித்தை: 2 தங்கப் பதக்கம் வென்ற இந்தியா... 

🏀ஹர்விந்தர் சிங்- விஜய் சன்டி அடங்கிய இந்திய அணி 6-2 என்ற கணக்கில் சுலோவக்கியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

Today's Headlines

🗒️ The quarterly examination timetable for government, government-aided, and private schools in Tamil Nadu has been released.

🗒️ Minister Rajmohan distributed prizes to the winners of the State Art Competitions for young artists.

🗒️ New milestone in marine research: Union Minister Jitendra Singh launched the operations of the research vessel ‘Sagar Manthan’.

🗒️ Antarctica surprises the scientific world: Antarctica temporarily gained 695 billion tonnes of ice.

🏀 Sports News

🏀 Para World Archery: India won two gold medals.

🏀 The Indian team comprising Harvinder Singh and Vijay Chandi defeated Slovakia 6–2 to win the gold medal.


JOIN KALVICHUDAR CHANNEL