t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

18 September 2026

TNSED Schools App New Version: 0.4.5Updated on 17-09-2026

TNSED Schools App New Version: 0.4.5

Updated on 17-09-2026

தற்போது TNSED Schools  App-ல் புதிய Update வெளியாகியுள்ளது.

 Schemes bug fixes and enhancement added



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.09.2026


திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:50.இடன் அறிதல்

குறள் எண்:496

குறள்:

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.   

பொருள்:

வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.

பழமொழி :
Perseverance kills the game 

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

இரண்டொழுக்க பண்புகள் :.

 1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

2. ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும். எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்
பொன்மொழி : 

“அன்பாகப் பேசும் வார்த்தைகள் ஒருவரின் நாளையே மாற்றிவிடும். கல்வி என்பது வாழ்க்கையையே மாற்றும்”

Thought for the Day :

Alzheimer’s Day: “Remember the person, not just the memory.”

பொது அறிவு : 

1. தமிழ்நாட்டில் உள்ள டவுன் பஞ்சாயத்துகள் எத்தனை?

 490 .

2. தமிழ்நாட்டில் உள்ள கிராம பஞ்சாயத்துகள் எத்தனை? 

12,525.

English words :

1. Pragmatic** – Practical – நடைமுறைசார்ந்த

2.**Candid** – Frank – வெளிப்படையான

புவியியலும் சுற்றுசூழலும் :

இது பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குகிறது. உள்ளூர் வளர்ச்சிப் பணிகளைத் திட்டமிட்டு செயல்படுத்துகிறது. பேரூராட்சியில் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களிலிருந்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

NMMS :

MAT 

தென்மேற்கு' வடக்காகவும், 'கிழக்கு' தென்மேற்காகவும் மற்றும் அனைத்து திசைகளும் இதே முறையில் மாற்றம் பெற்றால் வடக்கு என்னவாக மாறும்?

 (1) வடகிழக்கு 

 (2) வடமேற்கு 

 (3) தென்மேற்கு

 (4) தென்கிழக்கு 

 விடை: (4) தென்கிழக்கு

செப்டம்பர் 18

உலக தண்ணீர் கண்காணிப்பு தினம்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18-ஆம் தேதி உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இப்போது உலகில்  நீருக்கான  நெருக்கடி மற்றும்  நீர் பற்றாக்குறை, மாசுபாடுகளால் மனிதர்களுக்கு நெருக்கடிகளும் உருவாகியுள்ள சூழலில் உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் என்பதும் மிக அவசியான ஒரு நாளாக மாறியுள்ளது.
நீதிக்கதை

பொறுமையே பெரும் பலம்

கோவையில் ஒரு சிறிய வீட்டில் ரவி, அவரது மனைவி லதா, மகள் நிவ்யா, மகன் நிரஞ்சன் ஆகியோர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். நிவ்யா மிகவும் திறமையான பெண். ஆனால், அவளுக்கு ஒரு சிறிய குறை இருந்தது. எந்த விஷயம் நடந்தாலும் உடனே கோபப்பட்டு, அவசரமாக முடிவு எடுக்கும் பழக்கம் அவளுக்கு இருந்தது.

ஒருநாள் மாலை, லதா சமையலறையில் இருந்தபோது வீட்டில் வைத்திருந்த ஒரு முக்கியமான பொருள் காணாமல் போனது. அதைத் தேடியபோது, நிவ்யாவின் அறையில்தான் கடைசியாக பார்த்ததாக நினைவுக்கு வந்தது.

“நிவ்யா, நீ எடுத்தாயா?” என்று லதா கேட்டார்.

“நான் எடுக்கவே இல்லை! என்னை ஏன் எப்போதும் சந்தேகப்படுகிறீர்கள்?” என்று நிவ்யா கோபமாகக் கூறினாள்.

அவளது கோபத்தைப் பார்த்த ரவி, “நிவ்யா, முதலில் அமைதியாக இரு. நாம் பொறுமையாகத் தேடிப் பார்ப்போம். அவசரப்பட்டு அம்மாவை எதிர்த்து பேசக்கூடாது,” என்றார்.

ஆனால் காவியா கேட்காமல் அறைக்குள் சென்று மிக வேகமாக கதவைச் சாத்திக்கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து நிரஞ்சன் பள்ளிப் பையை எடுத்துக்கொண்டு வந்தான். அப்போது அந்தப் பொருள் அவன் பள்ளிப் பைக்குள் தவறுதலாக இருப்பது தெரியவந்தது. 

அன்று காலை அவசரமாகப் பொருட்களை எடுத்தபோது, அவன் தெரியாமல் அதைத் தனது பையில் வைத்திருந்தான்.

இதைக் கண்ட நிவ்யா மிகவும் வருத்தப்பட்டாள்.

“அப்பா, இந்தப் பொருள் நிரஞ்சனையின் பையில்தான் இருந்திருக்கிறது. என்னிடம் இல்லை என்பதை நான் அம்மாவிடம் பொறுமையாக சொல்லி இருக்க வேண்டும். உடனே கோபப்பட்டதால் அம்மாவையும் உங்களையும் வருத்திவிட்டேன்,” என்று கூறினாள்.

ரவி சிரித்துக்கொண்டே, “வாழ்க்கையில் சில நேரங்களில் நாம் நினைப்பது தவறாக இருக்கலாம். ஒரு பிரச்சினை வந்தவுடன் கோபப்படாமல், சிறிது நேரம் அமைதியாக இருந்து சிந்தித்தால் உண்மை நமக்குத் தெரியும். பொறுமை இருந்தால் பல பிரச்சினைகளை எளிதாகத் தீர்க்கலாம்,” என்றார்.

அன்று முதல் நிவ்யா எந்த விஷயம் நடந்தாலும் உடனே கோபப்படாமல், முதலில் அமைதியாக யோசித்து பின்னர் செயல்படத் தொடங்கினாள்.

நீதி:

எந்த சூழ்நிலையிலும் அவசரப்படாமல் பொறுமையுடன் சிந்தித்து செயல்பட்டால், பல பிரச்சினைகளைத் தவிர்த்து நல்ல முடிவை அடையலாம். 

இன்றைய செய்திகள்

18.09.2026

🗒️சென்னை துறைமுகத்தில் புதிய சாதனை; ஒரே நாளில் 14,778 டன் இரும்புக் கட்டிகள் ஏற்றுமதி
‘எம்.வி. சுப்ரா மோனார்க்' என்ற சரக்கு கப்பல் ஏற்றிச் சென்றது.

🗒️யூரியா இறக்குமதி செலவு 57 சதவீதம் சரிவு: மத்திய அரசுக்கு உர மானிய சுமை குறையும் என ஒன்றிய அரசுத் தகவல்

🗒️நிலவில் புதிய பெரிய பள்ளம்; அறிந்திராத ஆச்சரியங்களும் அதிசயங்களும்... நாசா விண்கலத்தின் அரிய கண்டுபிடிப்புகள் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

🏀3வது டி20 போட்டி: ருத்ர தாண்டவமாடிய அபிஷேக் சர்மா -30 பந்தில் சதமடித்து சாதனை.

Today's Headlines

🗒️ New record at Chennai Port: 14,778 tonnes of iron billets were exported in a single day. The cargo ship ‘MV Supra Monarch’ carried them.

🗒️ Urea import cost falls by 57%: The Central Government said that the lower import cost will reduce the government’s burden of providing fertilizer subsidies.

🗒️ A new large crater found on the Moon: NASA has reported rare discoveries from its spacecraft, revealing many unknown surprises and wonders on the Moon.

🏀 Sports News

🏀 3rd T20 match: Abhishek Sharma played a brilliant innings and created a record by scoring a century in just 30 balls.


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.09.2026


திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:50.இடன் அறிதல்

குறள் எண்:496

குறள்:

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.   

பொருள்:

வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.

பழமொழி :
Perseverance kills the game 

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

இரண்டொழுக்க பண்புகள் :.

 1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

2. ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும். எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்
பொன்மொழி : 

“அன்பாகப் பேசும் வார்த்தைகள் ஒருவரின் நாளையே மாற்றிவிடும். கல்வி என்பது வாழ்க்கையையே மாற்றும்”

Thought for the Day :

Alzheimer’s Day: “Remember the person, not just the memory.”

பொது அறிவு : 

1. தமிழ்நாட்டில் உள்ள டவுன் பஞ்சாயத்துகள் எத்தனை?

 490 .

2. தமிழ்நாட்டில் உள்ள கிராம பஞ்சாயத்துகள் எத்தனை? 

12,525.

English words :

1. Pragmatic** – Practical – நடைமுறைசார்ந்த

2.**Candid** – Frank – வெளிப்படையான

புவியியலும் சுற்றுசூழலும் :

இது பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குகிறது. உள்ளூர் வளர்ச்சிப் பணிகளைத் திட்டமிட்டு செயல்படுத்துகிறது. பேரூராட்சியில் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களிலிருந்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

NMMS :

MAT 

தென்மேற்கு' வடக்காகவும், 'கிழக்கு' தென்மேற்காகவும் மற்றும் அனைத்து திசைகளும் இதே முறையில் மாற்றம் பெற்றால் வடக்கு என்னவாக மாறும்?

 (1) வடகிழக்கு 

 (2) வடமேற்கு 

 (3) தென்மேற்கு

 (4) தென்கிழக்கு 

 விடை: (4) தென்கிழக்கு

செப்டம்பர் 18

உலக தண்ணீர் கண்காணிப்பு தினம்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18-ஆம் தேதி உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இப்போது உலகில்  நீருக்கான  நெருக்கடி மற்றும்  நீர் பற்றாக்குறை, மாசுபாடுகளால் மனிதர்களுக்கு நெருக்கடிகளும் உருவாகியுள்ள சூழலில் உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் என்பதும் மிக அவசியான ஒரு நாளாக மாறியுள்ளது.
நீதிக்கதை

பொறுமையே பெரும் பலம்

கோவையில் ஒரு சிறிய வீட்டில் ரவி, அவரது மனைவி லதா, மகள் நிவ்யா, மகன் நிரஞ்சன் ஆகியோர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். நிவ்யா மிகவும் திறமையான பெண். ஆனால், அவளுக்கு ஒரு சிறிய குறை இருந்தது. எந்த விஷயம் நடந்தாலும் உடனே கோபப்பட்டு, அவசரமாக முடிவு எடுக்கும் பழக்கம் அவளுக்கு இருந்தது.

ஒருநாள் மாலை, லதா சமையலறையில் இருந்தபோது வீட்டில் வைத்திருந்த ஒரு முக்கியமான பொருள் காணாமல் போனது. அதைத் தேடியபோது, நிவ்யாவின் அறையில்தான் கடைசியாக பார்த்ததாக நினைவுக்கு வந்தது.

“நிவ்யா, நீ எடுத்தாயா?” என்று லதா கேட்டார்.

“நான் எடுக்கவே இல்லை! என்னை ஏன் எப்போதும் சந்தேகப்படுகிறீர்கள்?” என்று நிவ்யா கோபமாகக் கூறினாள்.

அவளது கோபத்தைப் பார்த்த ரவி, “நிவ்யா, முதலில் அமைதியாக இரு. நாம் பொறுமையாகத் தேடிப் பார்ப்போம். அவசரப்பட்டு அம்மாவை எதிர்த்து பேசக்கூடாது,” என்றார்.

ஆனால் காவியா கேட்காமல் அறைக்குள் சென்று மிக வேகமாக கதவைச் சாத்திக்கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து நிரஞ்சன் பள்ளிப் பையை எடுத்துக்கொண்டு வந்தான். அப்போது அந்தப் பொருள் அவன் பள்ளிப் பைக்குள் தவறுதலாக இருப்பது தெரியவந்தது. 

அன்று காலை அவசரமாகப் பொருட்களை எடுத்தபோது, அவன் தெரியாமல் அதைத் தனது பையில் வைத்திருந்தான்.

இதைக் கண்ட நிவ்யா மிகவும் வருத்தப்பட்டாள்.

“அப்பா, இந்தப் பொருள் நிரஞ்சனையின் பையில்தான் இருந்திருக்கிறது. என்னிடம் இல்லை என்பதை நான் அம்மாவிடம் பொறுமையாக சொல்லி இருக்க வேண்டும். உடனே கோபப்பட்டதால் அம்மாவையும் உங்களையும் வருத்திவிட்டேன்,” என்று கூறினாள்.

ரவி சிரித்துக்கொண்டே, “வாழ்க்கையில் சில நேரங்களில் நாம் நினைப்பது தவறாக இருக்கலாம். ஒரு பிரச்சினை வந்தவுடன் கோபப்படாமல், சிறிது நேரம் அமைதியாக இருந்து சிந்தித்தால் உண்மை நமக்குத் தெரியும். பொறுமை இருந்தால் பல பிரச்சினைகளை எளிதாகத் தீர்க்கலாம்,” என்றார்.

அன்று முதல் நிவ்யா எந்த விஷயம் நடந்தாலும் உடனே கோபப்படாமல், முதலில் அமைதியாக யோசித்து பின்னர் செயல்படத் தொடங்கினாள்.

நீதி:

எந்த சூழ்நிலையிலும் அவசரப்படாமல் பொறுமையுடன் சிந்தித்து செயல்பட்டால், பல பிரச்சினைகளைத் தவிர்த்து நல்ல முடிவை அடையலாம். 

இன்றைய செய்திகள்

18.09.2026

🗒️சென்னை துறைமுகத்தில் புதிய சாதனை; ஒரே நாளில் 14,778 டன் இரும்புக் கட்டிகள் ஏற்றுமதி
‘எம்.வி. சுப்ரா மோனார்க்' என்ற சரக்கு கப்பல் ஏற்றிச் சென்றது.

🗒️யூரியா இறக்குமதி செலவு 57 சதவீதம் சரிவு: மத்திய அரசுக்கு உர மானிய சுமை குறையும் என ஒன்றிய அரசுத் தகவல்

🗒️நிலவில் புதிய பெரிய பள்ளம்; அறிந்திராத ஆச்சரியங்களும் அதிசயங்களும்... நாசா விண்கலத்தின் அரிய கண்டுபிடிப்புகள் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

🏀3வது டி20 போட்டி: ருத்ர தாண்டவமாடிய அபிஷேக் சர்மா -30 பந்தில் சதமடித்து சாதனை.

Today's Headlines

🗒️ New record at Chennai Port: 14,778 tonnes of iron billets were exported in a single day. The cargo ship ‘MV Supra Monarch’ carried them.

🗒️ Urea import cost falls by 57%: The Central Government said that the lower import cost will reduce the government’s burden of providing fertilizer subsidies.

🗒️ A new large crater found on the Moon: NASA has reported rare discoveries from its spacecraft, revealing many unknown surprises and wonders on the Moon.

🏀 Sports News

🏀 3rd T20 match: Abhishek Sharma played a brilliant innings and created a record by scoring a century in just 30 balls.


17 September 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.09.2026

திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:50.இடன் அறிதல்

குறள் எண்:495

குறள்:

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற


பொருள்:

ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும்.

பழமொழி :
Penury pinches all

பசிவந்தால் பத்தும் பறந்து போகும்.


இரண்டொழுக்க பண்புகள் :.

 1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

2. ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும். எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்
பொன்மொழி : 

தொடர்ந்து கற்றுக்கொள்,

ஆய்வு செய்

உருமாறு.!

   - தந்தை பெரியார்

Thought for the Day :

Peace Day: “Choose dialogue over conflict and kindness over hatred.”

பொது அறிவு : 

1. தமிழ்நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகள் எத்தனை?

 39 .

 2. தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் எத்தனை? 

 234 . 

English words :

1. *Resilient** – Tough – தாங்கக்கூடிய

2. **Eloquent** – Articulate – சொற்சிறப்புமிக்க

புவியியலும் சுற்றுசூழலும் :

பேரூராட்சி -
கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறமாக வளர்ந்து வரும் பகுதிகளை நிர்வகிக்கும் உள்ளாட்சி அமைப்பு பேரூராட்சி எனப்படுகிறது.இது கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடைப்பட்ட வளர்ச்சிப் பகுதிகளின் நிர்வாகத்தை மேற்கொள்கிறது.

NMMS :

MAT 

ஒரு கடிகாரத்தில் 8.36.02 பி.ப. இருந்து 8.36.50 பி.ப. வரை கடக்கும்பொழுது நொடி முள் எத்தனை கோணம் சுழன்று இருக்கும்? 

 (1) 294.

 (2) 288.

 (3) 282. 

 (4) 298. 

 விடை: (2) 288

செப்டம்பர் 17

பெரியார் பிறந்த தினம் - சமுக நீதி நாள்


பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈ. வெ. இராமசாமி , ஆங்கில மொழி: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்.இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது.  சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார்.இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை.
நீதிக்கதை

சிறிய விதையின் பெரிய கனவு

ஒரு சிறிய கிராமத்தில் அருள் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு மரங்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.

ஒருநாள் பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது, சாலையோரத்தில் ஒரு சிறிய விதையை கண்டான். அதை எடுத்துக்கொண்டு வீட்டின் முன்புறம் மண்ணில் நட்டான்.

தினமும் காலையில் எழுந்தவுடன் அந்த விதைக்கு கொஞ்சம் தண்ணீர் ஊற்றுவான்.

“நீ பெரிய மரமாக வளர வேண்டும். உன்னிடம் நிறைய பறவைகள் வந்து தங்க வேண்டும்!” என்று ஆசையாகச் சொல்வான்.

சில நாட்கள் கடந்தன. 🌱

மண்ணிலிருந்து ஒரு சிறிய தளிர் வெளியே வந்தது.

அருள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.

ஆனால் ஒரு நாள் பலத்த காற்று வீசியது. அந்தச் சிறிய தளிர் வளைந்து கீழே விழுந்தது.

அருள் கவலைப்பட்டான். “இனி இது வளராது போலிருக்கிறதே!” என்று நினைத்தான்.

அவனுடைய தாத்தா அருகில் வந்து,

“அருளே, விழுந்துவிடுவது தோல்வி அல்ல; மீண்டும் எழாமல் இருப்பதுதான் தோல்வி” என்றார்.

அருள் தளிருக்கு ஒரு சிறிய குச்சியை ஆதரவாக வைத்து, அதைச் சுற்றி வேலி அமைத்தான். தொடர்ந்து தண்ணீர் ஊற்றினான்.

மாதங்கள் சென்றன...

அந்தச் சிறிய தளிர் பெரிய மரமாக வளர்ந்தது. 🌳

ஒருநாள் அதன் கிளைகளில் பறவைகள் கூடு கட்டின. அதன் நிழலில் கிராமத்து குழந்தைகள் விளையாடத் தொடங்கினர்.

அருள் மரத்தைப் பார்த்து சிரித்தான்.

அப்போது தாத்தா சொன்னார்:

“ஒரு சிறிய முயற்சி, தொடர்ந்து செய்யப்படும்போது, ஒருநாள் பெரிய மாற்றமாக மாறும்.”

அருள் அந்த நாளிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு மரக்கன்றை நட்டான்.

🌟 நீதிக்கதை:

சிறியதாகத் தொடங்கினாலும், விடாமுயற்சியுடன் செயல்பட்டால் பெரிய சாதனையை உருவாக்கலாம்.

இன்றைய செய்திகள்

17.09.2026

🗒️தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் 19 ம் தேதி கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

🗒️இமயமலையில் 18,300 அடி உயர 'பராங் லா' கணவாயை கடந்த நம் இந்திய தேசிய மாணவர் படை மாணவிகள்.

🗒️இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் 
93-29 என்ற வாக்குகள் கணக்கில் மசோதா நிறைவேற்றம்.

விளையாட்டுச் செய்திகள்

🏀ஆசிய போட்டிக்கு இந்திய அணி தயாராக ரூ.702 கோடி செலவு  என விளையாட்டு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

🏀அதிவேகமான சேசிங்... ஆப்கானிஸ்தானுக்கு எதிராக புதிய சாதனை படைத்த இந்தியா.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி  2-0 என கைப்பற்றியது.

Today's Headlines


🗒️ A special camp for fingerprint registration will be held on the 19th at all ration shops in Tamil Nadu.

🗒️ Indian National Cadet Corps (NCC) girl students crossed the 18,300-feet-high Parang La Pass in the Himalayas.

🗒️ The India–New Zealand Free Trade Agreement Bill was passed in the New Zealand Parliament with 93 votes in favour and 29 against.

🏀 Sports News

🏀 The Sports Ministry has said that ₹702 crore will be spent to prepare the Indian team for the Asian Games.

🏀 Fastest chase: India created a new record against Afghanistan.
India won the T20 series against Afghanistan 2–0.


இன்று (17.09.2026) காலை 11 மணிக்கு சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்க உத்தரவு

இன்று (17.09.2026) காலை 11 மணிக்கு சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்க உத்தரவு!

16 September 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.09.2026







திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:50.இடன் அறிதல்

குறள் எண்:494

குறள்:

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.

பொருள்:

தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.

பழமொழி :
One lie makes many.

ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்.

இரண்டொழுக்க பண்புகள் :.

 1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

2. ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும். எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்
பொன்மொழி : 

“இன்றே ஒரு திறமையை கற்றுக் கொள்; நாளை அது உன் அடையாளமாக மாறும்.” 🌟

Thought for the Day :

Ozone Day: “Heal the ozone, protect our home.”

பொது அறிவு : 

1. தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகள் எத்தனை? 

316 ஊராட்சிகள். 

2. தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் எத்தனை? 

388 ஊராட்சி ஒன்றியங்கள்.  

English words :

Ambiguous – Unclear – தெளிவற்ற


Meticulous – Careful – நுணுக்கமான

புவியியலும் சுற்றுசூழலும் :

காவிரி – தமிழ்நாட்டின் மிக முக்கியமான ஆறுகளில் ஒன்று; காவிரி டெல்டா பகுதி தமிழகத்தின் முக்கிய வேளாண் பகுதியாகும். வேளாண்மைக்காக
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கல்லணை காவிரி ஆற்றின் குறுக்கே சோழ மன்னன் கரிகால சோழனால் கட்டப்பட்டது.கல்லணை கட்டப்பட்ட காலம் பொதுவாக கி.பி. 2ஆம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது.

NMMS :

MAT 

அக்டோபர் 14 ன் 5 நாள்களுக்கு முன்னர் சனிக்கிழமை எனில் , அந்த மாதத்தின் கடைசி திங்கட்கிழமை எந்த தேதியில் வரும்? 

 (1) அக்டோபர் 25.

 (2) அக்டோபர் 26. 

 (3) அக்டோபர் 24. 

 (4) அக்டோபர் 27. 

 விடை: (1) அக்டோபர் 25

செப்டம்பர் 16

அனைத்துலக ஓசோன் படலப் பாதுகாப்பு நாள் (International Day for the Preservation of the Ozone Layer) 

அனைத்துலக ஓசோன் படலப் பாதுகாப்பு நாள் (International Day for the Preservation of the Ozone Layer) ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. சூரியனின் புறஊதாக் கதிர்வீச்சு ஏற்படுத்தும் மோசமான பாதிப்புகளில் இருந்து பூமிப் பந்தில் வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பது ஓசோன் படலம் ஆகும். இதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்கான அனைத்துலக நாளாகக் இத்தேதியை தேர்வு செய்து அறிவித்தது.

ஒமர் முக்தார் அவர்களின் நினைவுநாள்





ஒமர் முக்தார் (Omar Mukhtar, 1858 - செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர்.  1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைபற்றியது. அது முதல் இத்தாலி சுமார் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத முக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார்.

கி. ராஜநாராயணன் அவர்களின் பிறந்த நாள்







கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (16 செப்டம்பர் 1922 – 17 மே 2021),கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். ரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, 98 வயதான கி.ரா. தனது இறுதி காலத்தில் புதுச்சேரியில் வாழ்ந்தார். 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது.
நீதிக்கதை

 🐦 வன்சிகாவின் அன்பு

ஒரு அழகான கிராமத்தில் வன்சிகா என்ற சிறுமி தன் தாயாருடன் வசித்து வந்தாள். அந்தக் கிராமம் முழுவதும் பலா மரங்கள், தென்னை மரங்கள், மாமரங்கள் என பசுமையாகக் காட்சியளித்தது. மஞ்சிகாவின் வீட்டைச் சுற்றிலும் பலவிதமான பறவைகளும் சிறிய விலங்குகளும் வசித்து வந்தன.

வன்சிகாவிற்கு பறவைகள் என்றால் மிகவும் பிடிக்கும். தினமும் காலையில் வீட்டின் வாசலில் சிறிது அரிசியும் தண்ணீரும் வைத்து, “நீங்களும் சாப்பிடுங்கள்” என்று அன்புடன் கூறுவாள்.

ஒருநாள் வன்சிகாவின் உறவினர்கள் அனைவரும் அவளுடைய வீட்டிற்கு வந்திருந்தனர். அவர்கள் வீட்டின் பின்புறம் இருந்த பலா மரத்தின் கீழ் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறிய குருவி காயமடைந்த நிலையில் தரையில் விழுந்திருந்ததை வன்சிகா பார்த்தாள்.

“அம்மா! பாவம் இந்தக் குருவிக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு உதவி செய்வோம்!” என்று வன்சிகா கவலையுடன் கூறினாள்.

தாயார் உடனே அவளுடன் சென்று குருவியை மெதுவாக எடுத்தார். அருகில் இருந்த கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

சில நாட்கள் வன்சிகா அந்தக் குருவிக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து அன்புடன் கவனித்தாள்.

ஒருநாள் குருவி முழுமையாகக் குணமடைந்தது. வன்சிகா அதைத் திறந்த வெளியில் கொண்டு சென்று பறக்க விட்டாள்.

அது வானத்தில் சிறகடித்துப் பறந்ததைப் பார்த்த வன்சிகா மிகவும் மகிழ்ந்தாள்.

அப்போது அவளுடைய தாயார் கூறினார்:

“வன்சிகா, மனிதர்களுக்கு மட்டும் உயிர் முக்கியமல்ல. பறவைகள், விலங்குகள் என எல்லா உயிர்களுக்கும் வலியும் பசியும் பயமும் மகிழ்ச்சியும் உண்டு. அவற்றிடம் அன்பாக நடந்து கொள்வது நம்முடைய கடமை .”

அருகில் இருந்த உறவினர்களும் வன்சிகாவின் செயலைப் பாராட்டினர்.“இனிமேல் நாங்களும் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவும் தண்ணீரும் கொடுத்து அன்பாகப் பார்த்துக் கொள்கிறோம்,” என்று கூறினர்.

அன்றிலிருந்து அந்தக் குடும்பத்தினர் அனைவரும் தங்கள் வீட்டைச் சுற்றியுள்ள உயிரினங்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்கி, அவற்றைத் துன்புறுத்தாமல் அன்புடன் பாதுகாத்தனர்.

🌷 நீதி:

மனிதர்களைப் போலவே அனைத்து உயிரினங்களுக்கும் உயிரும் உணர்வுகளும் உள்ளன. எனவே பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட எல்லா உயிர்களிடத்திலும் அன்பும் இரக்கமும் காட்டி, அவற்றை பாதுகாக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

16.09.2026

🗒️முதல் - அமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.15,300 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து
மாநிலத்தில் 10,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் .

🗒️ரூ.2 ஆயிரம் வரையிலான யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்று மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

🗒️மலேசியாவில் கடற்படை பயிற்சி - ஐஎன்எஸ் மைசூர் கப்பல் பங்கேற்கிறது.

விளையாட்டுச் செய்திகள் 

🏀 உலக டென்னிஸ் தரவரிசை: ரைபகினா முதலிடம்
ரைபகினா அரைஇறுதியை எட்டிய போதே 'நம்பர் ஒன்' இடத்தை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Headlines

🗒️ Investment agreements worth ₹15,300 crore were signed in the presence of Chief Minister Vijay.
More than 10,000 job opportunities will be created in the state.

🗒️ The Union Finance Ministry has ordered that no charges should be collected for UPI transactions up to ₹2,000.

🗒️ Naval exercise in Malaysia:
The Indian Navy ship INS Mysore is participating in the exercise.

🏀 Sports News

🗒️ World Tennis Rankings: Rybakina reaches No. 1. Rybakina secured the No. 1 position after reaching the semi-finals.


15 September 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.09.2026


திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:50.இடன் அறிதல்

குறள் எண்:493

குறள்:

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.

பொருள்:

பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்.

பழமொழி :
One doth the act, another hath the blow.

பாவம் ஒரு பக்கம் ; பழி ஒரு பக்கம்.

இரண்டொழுக்க பண்புகள் :.

 1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

2. ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும். எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்
பொன்மொழி : 

“திறமைக்கு வாய்ப்பு கிடைக்க காத்திருக்காதே; உன் முயற்சியால் வாய்ப்பை உருவாக்கு.”

Thought for the Day :

Democracy Day: “Respect every voice, uphold every responsibility.”

பொது அறிவு : 

1. தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் எத்தனை? 

 25 மாநகராட்சிகள். 

 2. தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் எத்தனை? 

 137 நகராட்சிகள்.  

English words :

1. Subtle – Not easily noticed, நுட்பமான.


2. Versed – Well-informed or skilled, நன்கு அறிந்தவர் / திறமைமிக்கவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு ஆறுகள் மிக முக்கியமானவை.
முக்கிய ஆறுகள்:
காவிரி
தென்பெண்ணை
பாலாறு
வைகை
தாமிரபரணி
பவானி
அமராவதி
நொய்யல்
கொள்ளிடம்

NMMS :

MAT 

ஒரு குறிப்பிட்ட குறியீட்டில் 85+14=18, 96+27=24 என குறிப்பிட்டால் 14+27ன் மதிப்பு என்ன? 

 (1) 14. 

 (2) 27.

(3) 20. 

 (4) 26.

 விடை: (1) 14

செப்டம்பர் 14

அனைத்துலக சனநாயக நாள் 

அனைத்துலக சனநாயக நாள் செப்டெம்பர் 15 அன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. நவம்பர் 8, 2007 இல் நடந்த ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபைக் கூட்டத்தில் இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சனநாயகத்தினை ஊக்குவிக்கும் முகமாகவும் அபிவிருத்தி செய்யவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தை கொடுக்கும் முகமாக ஐநா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இப்பொதுத் தீர்மானத்தை 192 உறுப்பு நாடுகள் அனுமதித்துள்ளன.
நீதிக்கதை

ஆவியில் வேகவைத்த உணவின் சிறப்பு

நீதிக்கதை

ஒரு சிறிய ஊரில் ஜகதீஷ் மற்றும் மோனிகா என்ற அண்ணன், தங்கை வாழ்ந்து வந்தனர். அவர்களுடைய அம்மா தினமும் வீட்டில் சுவை யான உணவுகளைச் சமைத்து கொடுப்பார். ஆனால் ஜகதீஷுக்கும் மோனிகாவுக்கும் எண்ணெயில் பொரித்த உணவுகள், பாக்கெட் தின்பண்டங்கள் போன்றவற்றின் மீதுதான் அதிக விருப்பம்.

ஒருநாள் காலை அம்மா இட்லி, இடியாப்பம் மற்றும் ஆவியில் வேகவைத்த காய்கறிகளைத் தயாரித்தார்.

“அம்மா, தினமும் இட்லி, இடியாப்பமா? எங்களுக்கு பூரியும், வடையும் வேண்டும்!” என்று ஜகதீஷ் கேட்டான்.

“ஆமாம் அம்மா, எண்ணெயில் பொரித்த உணவுதான் ரொம்ப சுவையாக இருக்கும்!” என்று மோனிகாவும் சொன்னாள். அப்போது அப்பா சிரித்துக்கொண்டே , “குழந்தைகளே , சுவை மட்டும் பார்த்து உணவைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. உடலுக்கு எது நல்லது என்பதையும் பார்க்க வேண்டும்,” என்றார்.

அவர் தொடர்ந்து, “ஆவியில் வேகவைத்த உணவுகளுக்கு அதிக எண்ணெய் தேவையில்லை . இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை , ஆவியில் வேகவைத்த காய்கறிகள் போன்றவை எளிமையான முறையில் தயாரிக்கப்படுகின்றன.  வீட்டில் தயாரித்த சத்தான உணவுகளை விரும்பி சாப்பிடுவது நல்ல பழக்கம்,” என்று விளக்கினார்.

அம்மா அன்று ஜகதீஷுக்கும் மோனிகாவுக்கும் வண்ணமயமான காய்கறிகளுடன் ஆவியில் வேகவைத்த கொழுக்கட்டை செய்து கொடுத்தார்.

இருவரும் சுவைத்துப் பார்த்துவிட்டு, “அம்மா! இது ரொம்ப சுவையாக இருக்கிறது. இனிமேல் ஆவியில் வேகவைத்த உணவுகளையும் விரும்பிச் சாப்பிடுவோம்!” என்றனர்.

அதன்பிறகு, அவர்கள் வீடில் வாரத்தின் பல நாட்களில் இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை , வேகவைத்த காய்கறிகள் போன்ற உணவுகள் இடம்பெறத் தொடங்கின.

நீதி:

சுவையான உணவு மட்டுமல்ல; உடலுக்கு ஏற்ற சத்தான உணவையும் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். ஆவியில் வேகவைத்த உணவுகள் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் ஒரு நல்ல பகுதியாக இருக்கலாம். 

இன்றைய செய்திகள்

15.09.2026

🗒️செயற்கை நுண்ணறிவு அனைத்து துறைகளிலும் உலகை ஆட்டிப் படைக்கிறது’ - ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

🗒️ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் நாட்டின் முதல் டி.ஆர்.ஐ. ஆலை அமைக்க மத்திய அரசு திட்டம்.

🗒️தமிழகம் மற்றும் புதுச்சேரி இடைத்தேர்தலில்
மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேல்  உள்ளவர்கள் தபால் ஓட்டுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

🏀ஆசிய ஜூனியர் பேட்மிண்டன்: தன்வி சாம்பியன் பட்டம் வென்றார்

🏀ஜப்பான் பாரா பேட்மிண்டன்: பிரமோத் பகத்துக்கு இரட்டை பதக்கம் இந்தியாவின் பிரமோத் பகத், சக நாட்டவரான யு.குமாரை தோற்கடித்து சாதனை.

🏀உலகக்கோப்பை வில்வித்தையில் தங்கம் வென்று வரலாறு படைத்த தீரஜ்.

Today's Headlines

🗒️ “Artificial Intelligence is ruling the world in all fields,” said High Court Judge Anand Venkatesh.

🗒️ The Central Government plans to set up the country’s first DRI plant that will run using hydrogen fuel.

🗒️ In the Tamil Nadu and Puducherry by-elections, the Election Commission has allowed persons with disabilities and people above 85 years of age to vote by postal ballot.

🏀 Sports News

🏀 Asian Junior Badminton: Tanvi won the championship title.

🏀 Japan Para-Badminton: Pramod Bhagat won two medals. He defeated fellow Indian U. Kumar and created a record.

🏀 Dheeraj made history by winning gold in the World Archery Championship.


JOIN KALVICHUDAR CHANNEL