District to District Transfer counselling State seniority list Click Here to Download
FLASH NEWS

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
Sunday, 28 May 2023
கிராமங்களுக்கும் வந்துவிட்டது கூகுள் மேப்பின் ஸ்ட்ரீட் வியூ!
பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தெரியாத ஊருக்கு செல்ல வேண்டுமெனில் முன் தயாரிப்புகள் அவசியம்.
ஆனால் இன்று தெரியாத நாட்டுக்கு கூட டென்ஷன் இல்லாமல் சென்று இறங்கி ஊர் சுற்றலாம்.
கூகுள் மேப் துணை இருக்கும். அதனை தெளிவாக பயன்படுத்தத் தெரிந்தவர்கள் பிரச்னையில் சிக்கமாட்டார்கள்.
கூகுள் மேப், தனது வரைபட சேவையினை குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது.
அந்த வகையில் வந்தது தான் ஸ்ட்ரீட் வியூ அம்சம்.
இதன் மூலம் பயனர்கள், பயணிக்கத் திட்டமிடும் பகுதிகளை 360 டிகிரி பார்வையில் ஆராயலாம்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் 2016ல் இந்த வீதிக் காட்சி தடை செய்யப்பட்டது.
வீதிக்காட்சியில் இருக்கும் பேனோரமிக் புகைப்படத்தில் தனிநபர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றதால், இது தனியுரிமை மீறல் என்ற குற்றச்சாட்டு எழுந்து தடை விழுந்தது.
6 ஆண்டுகளுக்கு பின் இவ்வசதிக்கு கடந்த ஆண்டு மீண்டும் அனுமதி கிடைத்தது. இந்தியாவில் இந்த ஸ்ட்ரீட் வியூ எனும் வீதி காட்சிகளை முதலில் பெங்களூரில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது.
ஜெனிசிஸ் இன்டர்நேஷனல் மற்றும் டெக் மஹிந்திராவுடன் இணைந்து ஸ்ட்ரீட் வியூவை கொண்டு வந்துள்ளனர்.
தற்போதைய புகைப்படங்களில் தனிநபர்களின் முகங்கள், அடையாளங்கள் மறைக்கப்பட்டு அவர்களின் பிரைவசி பாதுகாக்கப்படுகிறது.
தற்போது முக்கிய நகரங்கள், கிராமங்களின் ஒவ்வொரு தெருக்களும் 360 டிகிரி கேமராக்கள் மூலம் படமெடுக்கப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளன. இந்த வசதி பெரும்பாலான இந்திய நகரங்களிலும், கிராமங்களிலும் கிடைக்கிறது.
ஸ்ட்ரீட் வியூ வசதி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐபோன்கள் இரண்டிலும் கூகுள் மேப்ஸ் ஆப் மூலமாகவும், கூகுள் மேப்ஸ் இணையதளத்திலும் வேலை செய்யும்.
பயனர்கள் இந்தியாவின் அடையாளச் சின்னங்கள், இயற்கை அதிசயங்கள், அருங்காட்சியகங்கள், அரங்கங்கள், உணவகங்கள், முக்கிய வீதிகள் போன்றவற்றை 360 டிகிரி கோணத்தில் அனுபவிக்க முடியும்.
கூகுள் மேப் ஆப்பை திறந்து அதில் லேயர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்தால் மேப் டீடெய்ல் என்பதில் ஸ்ட்ரீட் வியூ என்று இருக்கும். அதனை தேர்ந்தெடுத்து வீதிக் காட்சிகளை காணலாம்.
Saturday, 27 May 2023
அரசுப்பள்ளி துப்புரவு பணி தனியாரிடம் ஒப்படைப்பு
உள்ளாட்சி துறை ஒத்துழைப்பு இல்லாததால்,
அரசு பள்ளிகளின் துப்புரவு பணிகளை, தனியாரிடம் ஒப்படைக்க பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், 38 ஆயிரம் அரசு பள்ளிகளில்,
துப்புரவு உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மாவட்ட அளவில் உள்ளாட்சி துறையால் செய்யப்படுகின்றன. அதாவது, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் நிதி வழங்கப்பட்டு, இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால், பெரும்பாலான நாட்களில், அரசு பள்ளிகளின் வளாகங்கள் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை.
அதனால், பல நேரங்களில்
ஆசிரியைகள், அலுவலக
பணியாளர்கள் வளாகங்களை சுத்தம்
செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர்.
சில நேரங்களில், மாணவ
- மாணவியரும் அப்பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.
இந்நிலையில்
அனைத்து அரசு பள்ளிகளிலும், துப்புரவு மற்றும்
கழிப்பறை பராமரிப்பு
பணிகளை, தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதற்கான செலவுகளை
பள்ளிக் கல்வித்
துறை ஏற்க உள்ளதாக,
அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
கலந்தாய்வு சார்ந்த தகவல்
முன்னுரிமை மற்றும் காலிப் பணியிடம் சரிபார்ப்பு பணி உள்ளதால் 29.05.2023 திங்கட்கிழமை அன்று நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு 30.05.2023 செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது. தங்கள் பள்ளியில் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த பட்டதாரி ஆசிரியர்கள் 30.05.2023 செவ்வாய்க்கிழமை முற்பகல் 9:30 மணிக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய தகவல் வழங்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு மாணவர் சேர்க்கை 5-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான 2 ஆண்டு இடைநிலை
ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு
மாணவர்சேர்க்கை நடைபெற
உள்ளது. இந்தப்படிப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் அடுத்த மாதம் (ஜூன்) 5-ந்தேதி முதல் 15ந்தேதி வரை
https://scert.tnschools.gov.in
என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
அவ்வாறு விண்ணப்பிக்க
இயலாத நிலையில் இருப்பவர்கள் தங்கள் இருப்பிடத்துக்கு
அருகில் உள்ள ஏதேனும்
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பான
மேலும் விவரங்களுக்கு
https://scert.tnschools.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
Friday, 26 May 2023
2022-2023 CPS ACCOUNT SLIP - DIRECT DOWNLOAD LINK ATTACHED
அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் 5,45,297 தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2022-2023ம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத்திட்டக் கணக்குத் தாட்கள் தொகுக்கப்பட்டு அரசுத் தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அத்துறையின் ‘’cps.tn.gov.in/public’’ என்ற இணையதள முகவரியில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Wednesday, 24 May 2023
அனைத்து மாவட்ட பட்டதாரி ஆசிரியர்களின் இடமாறுதலுக்கான முன்னுரிமை எண், மாவட்ட வாரியாக வெளியீடு
அனைத்து மாவட்ட பட்டதாரி ஆசிரியர்களின் இடமாறுதலுக்கான முன்னுரிமை எண், மாவட்ட வாரியாக வெளியீடு!
Excel Sheet with Filter Option!!
Subscribe to:
Posts (Atom)