t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

14 May 2026

களஞ்சியம் Kalanjiyam App New Update-1.23.2 Date 14.5.2026

களஞ்சியம் Kalanjiyam App New Update-1.23.2 Date 14.5.2026

What's New

Notification List Enhancement Minor Bug Fixes

App Update செய்ய Direct link Click Here

8 May 2026

+ 2 RESULT உடனடியாக பார்க்க வேண்டுமா?

+ 2 RESULT உடனடியாக பார்க்க CLICK HERE

+1 ARREAR RESULT பார்க்க CLICK HERE

28 April 2026

3வது குழந்தை பிறப்பு மற்றும் அதைத் தொடர்ந்த குழந்தை பிறப்புகளுக்கும் 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு அனுமதித்தல் - DSE செயல்முறைகள்!!இணைப்பு: அரசாணை, அரசுக் கடிதம் மற்றும் நீதிமன்ற ஆணை

3வது குழந்தை பிறப்பு மற்றும் அதைத் தொடர்ந்த குழந்தை பிறப்புகளுக்கும் 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு அனுமதித்தல் - DSE செயல்முறைகள்!!
இணைப்பு: அரசாணை, அரசுக் கடிதம் மற்றும் நீதிமன்ற ஆணை.

14 April 2026

தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் மறக்காமல் எடுத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள் விபரம்

1. மாற்று உடைகள்
( தேவையானவை )
2. தேங்காய் எண்ணெய்
3. பவுடர், சீப்பு , பொட்டு, ப்ரஷ் , பேஸ்ட்
4. மாத்திரைகள் , இன்ஹேலர்கள்
5. விக்ஸ், தலைவலி தைலம்
6. பிஸ்கட் பாக்கெட்
7. இரண்டு ஸ்கெட்ச்
8. Buds - 2 - ( மை வைக்க )
9. டார்ச் லைட்
10. பெட்ஷீட் / துண்டு
11. மூக்கு கண்ணாடி (தேவை உள்ளவர்கள்)
12. பேனா சிவப்பு & நீலம்
13. Ex. box & Table fan ( வாகனத்தில் செல்பவர்கள் ) ( Booth ல போதிய fan வசதி இருக்காது )
14. தேவையான குடிநீர் ( வேறு குடிநீர் ஒத்துக் கொள்ளாது என்பவர்கள் )
15. EDC - படிவம் original. (ஒட்டு போட)
கல்விச்சுடர்

16. Voter ID / ஆதார் Card.
17. 1 முதல் 500 வரை எண்கள் கொண்ட பேப்பர் - 2 ( P1 க்கு மட்டும் )
18. முந்திரி , பாதாம் பருப்பு + திராட்சை, கடலை மிட்டாய் / நொறுக்கு தீனி
19. Cell phone + Headphone + Charger
20. flask ( தேவை உள்ளவர்கள்)
21. கண் கண்ணாடி
22. இருசக்கர வாகன ஓட்டிகள் பெட்ரோல் டேங்க் ஃபுல் செய்து வரவும்
23. சானிடைசர்
24. கொசுவர்த்தி கம்போர்ட் வத்தி தீப்பெட்டி
25. தண்ணீர் பாட்டில்
மற்ற பொருட்கள் தங்களுக்கு தேவைகள் இருந்தால் எடுத்து செல்லவும்.

தேர்தல் பணிக்கு செல்லப்போகிறீர்களா?கண்டிப்பாக உங்களுக்கு பயன்படும்

தேர்தல் பணிக்கு செல்லப்போகிறீர்களா?
கண்டிப்பாக உங்களுக்கு பயன்படும்

Thanks To
G.Venkatesan HM
Amirthapuram, Thiruvallur

13 April 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.04.2026


திருக்குறள்: 

குறள் 470: 

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு 
கொள்ளாத கொள்ளா துலகு 

விளக்க உரை: 

தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

பழமொழி :
Experience is the best teacher. 

அனுபவமே சிறந்த ஆசான்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. படிப்பும் உழைப்பும் தான் மனித சமுதாயம் உயர ஒரே வழி.

2. எனவே படிப்பை எப்போதும் கைவிடமாட்டேன்.

பொன்மொழி : 

வணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிப்போம் - கோல்ட்ரிஜ்

பொது அறிவு : 

01.இந்தியாவில் மிளகு அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் எது?


கர்நாடகா- Karnataka

02. இந்தியாவையும் சீனாவையும் பிரிக்கும் எல்லைக்கோட்டின் பெயர் என்ன?

மெக்மஹோன் கோடு -
The McMahon Line
English words :

Resilience – Ability to recover from difficulties

Perseverance – Continued effort despite challenges

தமிழ் இலக்கணம்: 

பிறமொழிச் சொற்கள் தொடர் 

1. நபர் - அரபி

2. ஜாஸ்தி - உருது 

3. ரூபாய் - இந்துஸ்தானி 

4. துட்டு - டச்சு 

5. பீரோ - பிரெஞ்சு

அறிவியல் களஞ்சியம் :

பூமி மணிக்கு 1,000 மைல் வேகத்தில் சுழல்கிறது, ஆனால் அது விண்வெளியில் நம்பமுடியாத அளவிற்கு மணிக்கு 67,000 மைல் வேகத்தில் பயணிக்கிறது.

ஏப்ரல் 13

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்தநாள்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
நீதிக்கதை

 கரடியும் இரண்டு வழிப்போக்கர்களும்

ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் ராமு, மற்றொருவன் சோமு. இருவரும் இணை பிரியாத நண்பர்கள்.

ஒரு நாள் இருவரும் தேன் எடுப்பதற்காக காட்டுக்குப் பகுதிக்குச் சென்றனர். செல்லும் வழியில் ராமு சோமுவிடம், “நீ எதைபற்றியும் பயப்டாமல் என்னுடன் வா.

என்னைப் போன்ற நண்பனைக் காண முடியாது. என்ன துன்பம் வந்தாலும் நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்று கூறினான்.

காட்டிலுள்ள பறவைகள், மரங்கள், காட்டு விலங்குகள் போன்றவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருவரும் நடந்து சென்றார்கள்.

அப்போது கரடி ஒன்று உறுமும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அவர்கள் செல்லும் வழியிலேயே, அந்த கரடி திடீரென வந்து கொண்டிருந்தது.

கரடியைக் கண்டதும் இருவரும் பயத்தில் ஓடத் தொடங்கினார்கள். கரடியும் அவர்களைத் துரத்தியது.

ஓடத் தொடங்கிய சில வினாடிகளில் மரம் ஒன்று இருப்பதை ராமு கண்டான். உடனடியாக அந்த மரத்தில் ராமு ஏறி விட்டான்.

சோமுவுக்கோ மரத்தில் ஏறத் தெரியாது என்று அறிந்திருந்தும் மரத்தில் ஏற முடியாதவனைக் கீழே விட்டு விட்டுத் தன்னை மட்டும் காத்துக்கொள்ள சுய நலத்துடன் ராமு நடந்து கொண்டான்.

சோமுவுக்கு மரம் ஏறத் தெரியாததால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான். கவலையுடன் எப்படி கரடியிடமிருந்து தப்புவது என்று அவசரமாக யோசித்தான்.

இறந்தவன் போல் நடித்தால் கரடி தன்னைக் கொல்லாது என்று ஒரு யோசனை தோன்ற, பின்னர் நிலத்தில் விழுந்து மூச்சை அடக்கிக் கொண்டு இறந்தவனைபோல் படுத்துக் கொண்டான்.

அப்பொழுது கரடியும் அங்கு வந்து சேர்ந்தது. படுத்திருந்தவனை உண்பதற்காக அருகில் வந்த கரடி கீழே விழுந்து கிடந்தவன் காதருகே சென்று நுகர்ந்து பார்த்தது.

கரடி சோமுவை முகர்ந்து பார்த்ததை, மேலேயிருந்து பார்த்த ராமு, கரடி சோமுவிடம் ஏதோ சொல்கிறது என்று தவறுதலாக புரிந்து கொண்டான். பிறகு அவன் இறந்தவன் என்று முடிவு செய்து அங்கிருந்து நகர்ந்து போய் விட்டது.

கரடி செல்வதை மரத்தின் மேலிருந்து பார்த்த ராமு, கீழே இறங்கி வந்து சோமுவை எழுப்பினான். “கரடி சென்று விட்டது இனி எழும்பு நாம் தப்பி விட்டோம்” என்று ராமு கூறினான்.

சோமுவும் எழுந்து தன் யோசனை வெற்றியடைந்ததை எண்ணி நிம்மதியடைந்தான்.

கீழே படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்தான்.

ராமு சோமுவிடம், “கரடி உன் காதில் என்ன இரகசியம் சொன்னது?” என்று கேட்டான்.

அதற்குப் சோமு, “ஆபத்தில் உதவாத நண்பனை என்றுமே நம்பக் கூடாது! என்று சொல்லிவிட்டுப் போனது” என்றான்.

இப்பதிலால், ராமு தன் சுயநலப் புத்தியை எண்ணி நொந்து கொண்டான். சோமுவோ இனி மேல் எங்கள் நட்பு நீடிக்க வேண்டாம் என்று கூறிக்கொண்டு கொண்டு தனியே நடந்து சென்றான்.

நீதி: ஆபத்தில் உதவாதது நட்பல்ல.

இன்றைய செய்திகள்

13.04.2026

⭐ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை

⭐டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் நடைபெறும் பெரும் மோசடிகளை தடுக்க RBI ஒரு புதிய திட்டத்தை பரிசீலித்து வருகிறது. 

⭐ மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை  பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்குகிறது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் மிரள வைத்துள்ளார்.

Today's Headlines

⭐ Summer holidays for students from Classes 1 to 9 will begin on April 17 onwards.

⭐ The RBI is considering a new scheme to prevent large-scale fraud in digital transactions.

⭐ Peace talks between the United States and Iran will begin in Islamabad, the capital of Pakistan, to reduce war tensions in the Middle East.

 SPORTS NEWS 

🏀 In the 2026 IPL series, 15-year-old Vaibhav Suryavanshi, playing for Rajasthan Royals, has stunned the entire cricket world with his explosive performance.



9 April 2026

2025-26ஆம் கல்வியாண்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவித்தல் மற்றும் 2026-27ஆம் கல்வியாண்டு பள்ளிகள் தொடங்குதல் அறிவிப்பு வெளியீடு

2025-26ஆம் கல்வியாண்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவித்தல் மற்றும் 2026-27ஆம் கல்வியாண்டு பள்ளிகள் தொடங்குதல் அறிவிப்பு வெளியீடு - 09.04.2026

JOIN KALVICHUDAR CHANNEL