t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

12 February 2025




திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம்:மானம்

குறள் எண்:967

ஒட்டார்பின் சென்றுஒருவன் வாழ்தலின் அந்நிலையே
 கெட்டான் எனப்படுதல் நன்று.

பொருள்:
பகைவர் பின் சென்று வாழ்வதை விட மானத்துடன் தன்னிலையிலிருந்து இறப்பது மேல்.

பழமொழி :
No honest man ever repented of his honesty .

 மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை.

இரண்டொழுக்க பண்புகள் :   

* ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தனித்திறமை இருக்கும். யாருடைய திறமையையும் குறைவாக எண்ணமாட்டேன். ‌ 

*தேர்வுகள் மூலம் எனது கற்றலை மதிப்பிட முடியும். எனவே தைரியமாக தேர்வுகளை எழுதுவேன்.

பொன்மொழி:

போலியான நண்பனாக இருப்பதைவிட

வெளிப்படையான எதிரியாக இரு

------ தந்தை பெரியார்.

பொது அறிவு : 

 1. திருக்குறளில் இடம்பெற்றுள்ள ஒரே விதை_________ 

விடை : குன்றிமணி.    

 2. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் யார்?

 விடை : ராகேஷ் ஷர்மா
English words & meanings :

Road - சாலை

Rock. - பாறை

வேளாண்மையும் வாழ்வும் : 

 நீர்வளங்களை திறம்பட நிர்வகிப்பது ஒரு நிலைத்த தன்மை மற்றும் நீருக்கான பாதுகாப்பு இலக்குகளை அடையவும், நீர் மற்றும் பணத்தை மிச்சப்படுத்தவும் உதவும்.

பிப்ரவரி 12

டார்வின் நாள் - darwin day

டார்வின் நாள் (Darwin Day) என்பது ஒவ்வோர் ஆண்டும் பெப்ரவரி 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 1809 ஆம் ஆண்டில் பரிணாமத் தத்துவத்தை உலகுக்கு அளித்த சார்ல்ஸ் டார்வின் பிறந்தார். அறிவியலையும் அறிவியலை மேம்படுத்தவும் உதவிய டார்வினின் பணிகளை இந்நாளில் நினைவு கூaருகிறார்கள்.
நீதிக்கதை

 கொக்கும்‌ மீனும்‌ 



ஒரு மடைவாயில்‌ கொக்கு ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த மடையில்‌ வந்து கொண்‌டிருந்த ஒரு கொழுத்த மீன்‌ கொக்கைப்‌ பார்த்தவுடன்‌ பயந்து நின்று விட்டது. 

 மீனின்‌ தாய்‌, அதனிடம்‌ கூறிய சொற்கள்‌ அதற்கு நினைவுக்கு வந்தன. “கொக்குகள்‌ நிற்கும்‌ இடத்தைக்‌ கண்டால்‌ அங்கே போகாதே, அவை மீன்களைப்‌ பிடித்துத்‌ தின்றுவிடும்‌?” என்று அது கூறியிருந்தது. எனவேதான்‌ அந்தக்‌ கொழுத்த மீன்‌ கொக்கைக்‌ கண்டவுடன்‌ பயந்து நின்று விட்டது. 

ஆனால்‌, அதைக்காட்டிலும்‌ சிறிய மீன்களெல்‌லாம்‌ சிறிதும்‌ அச்சமில்லாமல்‌ மடைவாய்‌ வழியாகச்‌ சென்று கொண்டிருந்தன. கொக்கு நிற்பதைப்‌ பற்றி அவை கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ஒன்றன்‌ பின்‌ ஒன்றாக மீன்கள்‌ தன்னைக்‌ கடந்து செல்வதை அந்த கொழுத்த மீன்‌ பார்த்துக்கொண்டிருந்தது.  

மீன்‌ சிறிது நேரம் நின்று கவனித்தது.பின்பு, "இந்தக்‌ கொக்கு ஏமாளிக்‌ கொக்கு போலிருக்கிறது" இத்தனை 

மீன்களை தின்னவில்லை. சின்ன சின்ன மீனெல்லாம்‌ அந்தக்‌ கொக்குக்குப்‌ பயப்படாமல்‌ போகும்‌ போது நான்‌ ஏன்‌ பயப்படவேண்டும்‌” என்று நினைத்துக்‌ கொண்டு அதுவும்‌ புறப்பட்டது. 

மடைவாயை அந்தக்‌ கொழுத்த மீன் நெருங்கியது. . அதே சமயம்‌ கொக்கு அதைப்‌ பிடித்தது. அந்தக்‌ கொக்கு, 

மறுபடியும்‌ கொழுத்த மீன்‌ எப்போது வரும்‌ என்று எதிர்பார்த்துக்‌ கொண்டு மடைவாயின்‌ கரையில்‌ நின்று கொண்டிருந்தது. 

கருத்துரை :-- ஓடுகிற மீனையெல்லாம்‌ ஓட விட்டு விட்டுப்‌ பொருத்தமான மீன்‌ வரும்போது சட்டென்று கொத்தித்‌ தின்னும் கொக்கு.அடக்கமாக உள்ளவர்கள்‌ கொக்குப்‌போல்‌ தகுந்த காலத்தை எதிர்பார்த்துக்‌ காத்திருப்பவர்களே.அவர்களை ஏமாளிகள்‌ என்று எண்ணிவிடக்‌ கூடாது.

இன்றைய செய்திகள்

12.02.2025

* ‘பிங்க்’ ஆட்டோ திட்டத்தில் திறன் மேம்பாட்டு கழகம் மூலம் சென்னையில் 250 பெண் ஓட்டுநர்களுக்கு பயிற்சி.

* பச்சிளம் குழந்தைகள் மரணத்தைத் தடுப்பதில் தமிழகம் முதன்மை மாநிலம்: மத்திய அரசு தகவல்.

* பெங்களூருவில் 80-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் ஏரோ இந்தியா விமான கண்காட்சி தொடக்கம்.

* மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

* ஆசிய கலப்பு அணி பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியது.

* ஐ.சி.சி-யின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதை வென்றார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜோமல் வாரிக்கன்.

Today's Headlines

* 250 women drivers trained in ‘Pink’ auto industry through Skill Development Corporation in Chennai.

* Tamil Nadu leads state in preventing infant deaths: Central government information.

* Aero India Air Show begins in Bengaluru with participation of over 80 countries.

* US President Donald Trump has ordered the renaming of the Gulf of Mexico as the Gulf of America.

* The Asian Mixed Team Badminton Championship began yesterday.

* West Indies player Jomal Warrick won the ICC Player of the Month award for January.
Covai women ICT_போதிமரம்


11 February 2025

Retirment Date -க்கும் Increment Date -க்கும் இடையில் காலாண்டு (மூன்று மாதம்) இருப்பின் ஓர் ஊதிய உயர்வு வழங்க அனுமதிக்கும் அரசாணை





குழுக்களில் அந்த அரசாணை எண் 148 P & AR Department, Dated: 31.10.2018 தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது...

உண்மையான விளக்கம்...


இதற்கு அரசுக் கடிதம் 784/ FR P & AR Dept Dated 04.09.2019* இல் சரியான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது....

அதாவது....

ஓய்வு பெற இருக்கும் ஒருவர் கடைசி ஆண்டில் பதவி உயர்வு பெற்றார் எனில்...

ஓராண்டு நிறைவு செய்வதற்கு முன் ஓய்வு / இறப்பு நிகழ்ந்தாலும் அந்த காலாண்டிற்கு முதல் நாளில் ஓர் ஊதிய உயர்வு வழங்கலாம்...

 எடுத்துக்காட்டாக...

ஒருவர் 14/06/2024 இல் பதவி உயர்வு பெறுகிறார்...

13/06/2025 இல் தான் பதவி உயர்வு பெற்று ஓராண்டு நிறைவு பெறுகிறது...

ஆனால் அவரின் பணி ஓய்வு 30/04/2025...

ஓராண்டு நிறைவிற்குள் அவர் ஓய்வு பெற்றார்...

இருப்பினும் June month
1/4 quarter இல் வருகிறது...
எனவே அவருக்கு அந்த காலாண்டின் முதல் நாள் 01/04/2025 இல் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கலாம் ....
இது தான் அரசாணை மற்றும் அதன் விளக்கம்...

விளக்கக் கடிதத்தில் எடுத்துக்காட்டுடன் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

குழுக்களில் வலம் வருவது போல...

மே மாதம் ஒருவர் ஓய்வு..
அவருக்கு வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு 1/7 எனில் 
ஓய்வு பெறும் ஆண்டில் 1/7 அன்று ஓர் ஆண்டு ஊதிய உயர்வு வழங்க இயலாது .....

இந்த இடத்தில் மற்றொரு அரசாணையினை கவனிக்க...

அரசாணை எண் 311, நிதித் துறை நாள்: 31/12/2014...

இது என்னவெனில் வயது முதிர்வு காரணமாக ஒய்வு பெறுகிறார்கள்..
 ஓய்வு பெற்றதற்கு அடுத்த நாள் அன்னாரின் ஆண்டு ஊதிய உயர்வு நாள் எனில்...

அவர் ஓய்விற்கு பிறகு " ஓய்வூதியப் பலன்களை " பெறும் நோக்கில் அவருக்கு ஓர் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கலாம்...

அதாவது
 31 மார்ச் 2024 இல் ஓய்வு...
அவரின் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு நாள் 1/4 எனில் அவருக்கு retirement benefits க்கு 01/04/2024 இல் ஓர் ஊதிய உயர்வு வழங்கலாம் ..
அதே போல்
30/06/2024 ஓய்வு - 1/7 regular increment எனில்
30/09/2024 ஓய்வு - 1/10 regular increment எனில்
31/12/2024 ஓய்வு - 1/1
Regular increment எனில்
 Retirement benefits க்கு அந்த ஓர் ஊதிய உயர்வு வழங்கலாம்...

அரசாணைகள் & விளக்கக் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.. 

Mr.K.Selvakumar
Head Master
Madurai

10 February 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.02.2025


 

திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம்: மானம்

குறள் எண்:966.       

புகழ்இன்றால்; புத்தேள்நாட்டு உய்யாதால்; என்மற்று
 இகழ்வார்பின் சென்று நிலை?

பொருள்:
அவமதிப்பார் பின், மானம் விட்டு நிற்பதால் என்ன பயன்? புகழும் வாராது; மறுமையில் விண்ணுலகும் கிட்டாது.

பழமொழி :
The finest lawn soonest stains.

 காய்ந்த மரமே கல்லடி படும்

இரண்டொழுக்க பண்புகள் :   

* ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தனித்திறமை இருக்கும். யாருடைய திறமையையும் குறைவாக எண்ணமாட்டேன். ‌ 

*தேர்வுகள் மூலம் எனது கற்றலை மதிப்பிட முடியும். எனவே தைரியமாக தேர்வுகளை எழுதுவேன்.

பொன்மொழி : 

தேவையற்ற பொருட்களை வாங்கும் வழக்கம் தேவையான பொருட்களை விற்கும் நிலைக்கு கொண்டு வந்துவிடும்.




--------பொருளாதார நிபுணர்

பொது அறிவு : 

1. இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி 2024____________ 

விடை: திரு. டி. ஒய். சந்திரசூட்.   

2. இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் 2024____________ 

விடை: திரு. சக்தி காந்ததாஸ்

English words & meanings :

 
Riverbank. - ஆற்றங்கரை

 Road. - சாலை
நீதிக்கதை

 பேராசை மனநிம்மதியைக் கெடுக்கும் 





ஓர் ஊரில் விறகு வெட்டி ஒருவன் இருந்தான். நாள்தோறும் அவன் காட்டுக்குச் சென்று விறகு வெட்டி, அவற்றை மக்களிடம் விற்று, அதனால் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வந்தான். இதில் அவனுக்குத் குறைந்த வருமானமே கிடைத்தது. என்றாலும், மனநிம்மதியோடு வாழ்ந்து வந்தான். 



ஒருநாள் அவன் வழக்கம் போல் காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருக்கும்போது ஓர் அரசமரத்தின் பக்கமிருந்து, “உனக்கு ஏழு ஜாடி தங்கம் வேண்டுமா?” என்று குரல் கேட்டது.



விறகுவெட்டி அந்த மரத்தின் அருகில் சென்றான். “நான் இந்த மரத்தில் வசிக்கும் அரக்கன். இந்த அரசமரத்தின் கீழே ஏழு ஜாடி நிறைய தங்கம் இருக்கிறது. உனக்குத் தேவையானால் தோண்டி எடுத்துக்கொள்” என்றது அந்தக் குரல். 





விறகு வெட்டி, “ஏழு ஜாடி தங்கம்” என்றதும் மிகவும் மகிழ்ந்தான். அவசர அவசரமாக அந்த மரத்தின் கீழே பள்ளம் தோண்டினான். அரக்கன் சொன்னது போலவே, பூமிக்குள் ஏழு ஜாடிகள் இருந்தன. விறகு வெட்டி எல்லா ஜாடிகளையும் திறந்து பார்த்தான். அவற்றின் உள்ளே தங்கம் இருந்தது. 



ஆனால், ஒரே ஒரு ஜாடியில் மட்டும் பாதியளவுதான் தங்கம் இருந்தது. “பாதிதானே குறைகிறது… இதை எப்படியும் நாம் நிரப்பி விடலாம்” என்று எண்ணி, ஏழு ஜாடிகளையும் தனது வீட்டுக்குக் கொண்டு வந்தான் விறகு வெட்டி. வீட்டுக்கு வந்ததும், ஏற்கெனவே தன்னிடமிருந்த தங்க நகைகளைப் பாதியளவு இருந்த ஜாடியில் போட்டான். பிறகு ஜாடி நிறையத் தங்கம் சேர்க்க வேண்டும் என்பதற்காக முன்பை விடக் கடினமாக உழைத்துப் பணம் சம்பாதித்தான். அதனைத் தங்கமாக்கி அந்தச் ஜாடிக்குள் போட்டான். 



அவன் எவ்வளவு தங்கத்தைச் ஜாடியில் போட்டாலும் ஜாடி நிரம்பவே இல்லை. விறகு வெட்டியும் விடவில்லை, எப்படியாவது அந்த ஜாடி நிரம்பத் தங்கத்தைச் சேர்த்துவிட வேண்டும் என்று இரவு பகலாக உழைத்தான். இதனால் அவன் நிம்மதி போயிற்று, தூக்கம் போயிற்று. உணவு உண்ணவும் மறந்தான்.



 இறுதியில் அவன் துரும்பாக இளைத்து விட்டான். இவ்வாறே தொடர்ந்து செய்து வந்தான். ஒருநாள் அவன் நண்பன் ஒருவனைப் பார்த்தான். அவன் விறகு வெட்டியின் நிலைமையைப் பார்த்து பரிதாபப்பட்டான். அவனுடைய நிலைமைக்குக் காரணம் என்னவென்று கேட்டான். விறகு வெட்டி நடந்த கதை அனைத்தையும் கூறினான். 



அதற்கு அவன், தங்கத்திற்கு ஆசைப்பட்டு உன் மனநிம்மதியைக் கெடுத்துக் கொண்டயே என்றான்.” அப்படியானால் நான் இப்பொழுது என்ன செய்வது? என்று கேட்டான் விறகு வெட்டி. இந்த ஜாடிகளை எடுத்துச் சென்று முன்பிருந்த இடத்திலேயே புதைத்து விட்டு, “பேராசையைத் தூண்டி விட்டு மன நிம்மதியைக் கெடுக்கும் உன் ஏழு ஜாடி தங்கத்தை நீயே வைத்துக்கொள்” என்று அரக்கனிடம் கூறிவிட்டு வந்துவிடு என்றான், விறகு வெட்டியின் நண்பன். 



விறகு வெட்டியும் மறுநாள் தன் நண்பன் கூறியபடியே ஏழு ஜாடிகளையும் எடுத்துச் சென்று அரச மரத்தடியில் புதைத்து விட்டு நண்பன் தன்னிடம் கூறியபடியே அரக்கனிடம் கூறிவிட்டு தன் வீட்டிற்கு வந்தான். அதற்கு பிறகு விறகு வெட்டியின் பேராசை முழுவதும் தணிந்திருந்தது. அவன் மனநிம்மதியுடன் வாழ்ந்தான்.



நீதி: ஏதாவதொரு பொருளின் மீது நாம் பேராசை பட்டால் நமது மனநிம்மதிதான் கெடும். எனவே, ஆசையை அளவோடு வைத்துக்கொண்டு வாழப் பழக வேண்டும்.

இன்றைய செய்திகள்

10.02.2025

* மதுரை அருகே மலைச்சரிவில் 800 ஆண்டுகள் தொன்மையான, பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

* வரும் கல்வியாண்டில் 35.12 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* ககன்யான் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் சிஇ20 என்ற கிரையோஜெனிக் இன்ஜின் பரிசோதனையை மகேந்திரிகிரியில் உள்ள பரிசோதனை மையத்தில் இஸ்ரோ வெற்றிகரமாக மேற்கொண்டது.

* ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி வெற்றி பெற்றது சென்னையின் எப்.சி அணி.

* தேசிய விளையாட்டுப் போட்டி: போல்வால்ட் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை பவித்ரா.

Today's Headlines

* 800 years old, inscriptions have been discovered at the hill station near Madurai from the period of Pandiyar.

* Transport officials have said that the bus pass will be taken to 35.12 lakh students in the coming academic year.

* ISRO successfully carried out the CE20 Cyogenic engine test used for the Gayanan project at the test center in Mahendirigiri.

* ISL Football: East Bengal beat the FC team in Chennai.

* National Games: Pavithra won gold in Bolwald.

Covai women ICT_போதிமரம்


9 February 2025

தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளராக சந்திர மோகன் அவர்கள் நியமனம்.

38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் திருமதி.மதுமதி அவர்கள் மாற்றம். சுற்றுலா & பண்பாட்டு துறையின் செயலாளர் மருத்துவர் திரு.சந்திர மோகன் அவர்கள் நியமனம்.

புதிய கல்வித்துறை செயலாளர் திரு.பி.சந்திரமோகன். IAS





கோவை, தேனி மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த ரஞ்சித் சிங் தேனி மாவட்ட ஆட்சியராகவும், கோவை மாவட்ட ஆட்சியராக பவன்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஜெ.ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹூ, வினீத், ஆபிரகாம், ஆல்பி ஜான் வர்கீஸ், பிரபாகர், சத்யபிரதா சாகு உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


7 February 2025

Kalanjiyam Mobile App New Update Direct Link Available! Version 1.21.0 DOWNLOAD LINK ATTACHED

Kalanjiyam Mobile App New Update Direct Link Available!

Version 1.21.0

Updated on 06/02/2025


What's New?

1. GPF Validation and date Formates are updated.
2. CPS Notes year updated.
3. Last 10 Recent Activity enabled for Employee.



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.02.2025




திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: மானம்

குறள் எண்:965

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
 குன்றி அனைய செயின்.

பொருள்:
ஒரு குண்டுமணியளவு இழிவான செயலை செய்தாலும், மலை போன்ற பெருமையுடையவரும் தாழ்வர்.

பழமொழி :
தன் வினை தன்னைச் சுடும்.   

His own actions will burn him.

இரண்டொழுக்க பண்புகள் :   

 * எனது பாடங்களோடு ஒழுக்கம், நற்பண்பு, வாழ்வியல் கலைகளும் கற்றுக் கொள்ள முயற்சி எடுப்பேன்.

* சிறு வயதில் இரு சக்கர விரைவு வாகனங்கள் ஓட்டக்கூடாது போன்ற அரசாங்க கட்டுப்பாடுகளை நிச்சயம் கடைபிடிப்பேன்.

பொன்மொழி :

எல்லாம் தெரியும் என்று குழப்பத்தோடு இருக்காதே எதுவும் தெரியாது என்று தெளிவோடு இரு..

----- விவேகானந்தர்

பொது அறிவு : 

1.கப்பல்களில் சரியான நேரத்தை கணக்கிட பயன்படும் கருவி எது ?


 குரோனோ மீட்டர்(Chronometer)

2. குறைந்த அளவு மின்னோட்டத்தை அளக்கப் பயன்படும் கருவி எது?

  கால்வனோ மீட்டர்(Galvanometer)
English words & meanings :

 River. - ஆறு 
 
Riverbank. - ஆற்றங்கரை

வேளாண்மையும் வாழ்வும் : 

 விவசாயத்தில், குறிப்பாக, நீர் மேலாண்மை மிகவும் நன்கு திட்டமிடப்பட வேண்டும், குறிப்பாக நீர்ப்பாசனத்தின் அடிப்படையில்.

பிப்ரவரி 07

தேவநேயப் பாவாணர் அவர்களின் பிறந்தநாள்


தேவநேயப் பாவாணர் (Devaneya Pavanar; 7 பிப்பிரவரி 1902 – 15 சனவரி 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவரது ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக, பெருஞ்சித்திரனாரால் "மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்" என்று அழைக்கப்பட்டார்.
நீதிக்கதை

 மின்மினி பூச்சியும்,காகமும் 



முன்பொரு காலத்தில் காட்டில் மின்மினி பூச்சி ஒன்று வாழ்ந்து வந்தது. அது அங்கும் இங்கும் சந்தோஷமாக ஆடி பாடிக் சுற்றிக் கொண்டே இருந்தது. ஒரு நாள் காகம் ஒன்று அந்த மின்மினி பூச்சி வருவதை பார்த்துக் கொண்டு இருந்தது. அந்த மின்மினிப்பூச்சி அருகில் வந்தவுடன் தன் வாயை திறந்து அதை சாப்பிட தினமும் முயற்சி செய்தது.

அந்தக் காகத்திடமிருந்து மின்மினி பூச்சி தப்பிக்க, அந்த காகத்திடம் சொன்னது, “நண்பா! நான் சொல்வதை ஒரு நிமிடம் கேள்” என்றது. அந்த

காகமும், “என்னசொல்லு” என்றது. 

அதற்கு அந்த மின்மினி பூச்சி சொன்னது, “என்னை மட்டும் உண்பதால் உன்னுடைய பசி எவ்வாறு அடங்கும் என்னை போல் நிறைய பூச்சிகள் இருக்கும் இடத்தை உனக்கு காட்டுகிறேன் என்னுடன் வா” என்றது. 

பேராசை பிடித்த காகம் மின்மினி பூச்சியிடம், “சரி நான் உன்னுடன் வருகிறேன் என்னை அழைத்துக் கொண்டு செல்” என்றது. அந்த மின்மினிப்பூச்சி காகத்தை ஒரு இடத்திற்கு கூட்டிக் கொண்டு சென்றது. 

அங்கு எரிந்து கொண்டிருந்த தீயில் இருந்து சில நெருப்பு பொறிகள் வெளியே வந்து கொண்டு இருந்தது. அந்த நெருப்பு பொறிகளை மின்மினி பூச்சி, காகத்திடம் காட்டி சொன்னது, “இங்கு பார்த்தாயா என்னை போல் எவ்வளவு மின்மினிப்பூச்சிகள் பறந்து கொண்டு இருக்கின்றன”. பேராசை பிடித்த காகம் எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த நெருப்பு பொறிகளை போய் சாப்பிட ஆரம்பித்தது. 

அந்த நெருப்புப் பொறிகளை சாப்பிட்ட காகத்தின் வாய் உடனே எரிய ஆரம்பித்து விட்டது. உடனே அந்த காகம் சொன்னது, “இது என்ன பூச்சி ? இதை சாப்பிட்டால் இப்படி வாய் எரிகிறதே, எனக்கு இந்த பூச்சி எதுவும் வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து பறந்து சென்றது.

நீதி : உடல் பலத்தை விட மனப்பலமே பெரிது.

இன்றைய செய்திகள்

07.02.2025

* முழு கொள்ளளவை எட்டிய பார்சன்ஸ் வேலி அணை: கோடையில் உதகை நகருக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது.

* பருவகால நோய்கள் அனைத்து காலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகளை எப்போதும் இருப்பில் வைத்திருக்க தமிழக பொது சுகாதாரத்துறை நடவடிக்கை.

* வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் பணிகள் 79% நிறைவு என மத்திய அமைச்சர் தகவல்.

* சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய ஜோடிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்.

* முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தி இந்தியா வெற்றி.

Today's Headlines

* Parsons Valley Dam reaches full capacity: Ooty city will not face water shortage in summer.

* Tamil Nadu Public Health Department takes steps to keep necessary medicines in stock at primary health centres as seasonal diseases continue to affect the country at all times.

* Union Minister informs that the work of constructing a fence on the Bangladesh border is 79% completed 

* Chennai Open Tennis: Indian pairs advanced to the quarterfinals.

* First ODI cricket match: India easily defeated England.

Covai women ICT_போதிமரம்


6 February 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.02.2025




திருக்குறள்: 

பால்:பொருட்பால்             

அதிகாரம்: மானம்

குறள் எண்:964

தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை.

பொருள்:
நற்குடிமக்கள் உயர்ந்த பண்பிலிருந்து இறங்கிய விடத்து தலையிலிருந்து உதிர்ந்த மயிரினைப் போல் இகழப்படுவர்.

பழமொழி :
தன் பலம் கண்டு அம்பலம் ஏற வேண்டும். 

  Having ascertained your own ability , display it in the assembly.

இரண்டொழுக்க பண்புகள் :   

 * எனது பாடங்களோடு ஒழுக்கம், நற்பண்பு, வாழ்வியல் கலைகளும் கற்றுக் கொள்ள முயற்சி எடுப்பேன்.

* சிறு வயதில் இரு சக்கர விரைவு வாகனங்கள் ஓட்டக்கூடாது போன்ற அரசாங்க கட்டுப்பாடுகளை நிச்சயம் கடைபிடிப்பேன்.

பொன்மொழி :

தீமை செய்வதற்கும் மட்டும் பயப்படு.

வேறு எந்த பயமும் உனக்கு வேண்டாம்

------விவேகானந்தர்

பொது அறிவு : 

1. சைக்கிளில் அலுவலகம் செல்வதற்கு எந்த நாட்டில் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது?

 விடை : நெதர்லாந்து.  

2. வாழை மரத்தின் ஆயுட்காலம் என்ன?

 விடை :25 ஆண்டுகள்

English words & meanings :

 Path.   -    பாதை
 
Pond.     -    குளம்
வேளாண்மையும் வாழ்வும் : 

 இன்று உலக மக்கள் தொகையில் 40% மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிப்ரவரி 06

பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை நாள் (FGM), ஆண்டுதோறும் பிப்ரவரி 6 அன்று அனுசரிக்கப்படுகிறது, இது முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்தவும் இந்த தீங்கு விளைவிக்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.



நீதிக்கதை

 நன்றி மறவாத புலி 



நெடு நாட்களுக்கு முன்பு அந்த காட்டில் இந்தப் புலி வசித்து வந்தது. ஒரு நாள் அது உறுமிக் கொண்டே நடந்து சென்றது. உறுமிக் கொண்டே செல்லும்போது, அது முள்ளின் மீது கால் வைத்தது, முள் குத்தியதில் வலியால் மிகவும் துடித்தது.



அது தானாகவே அந்த முள்ளை எடுக்க முயற்சி செய்தது. ஆனால் புலியால் அந்த முள்ளை எடுக்க முடியவில்லை. அது வலி தாங்க முடியாமல் மிகவும் கத்திக் கொண்டிருந்தது. அப்போது அந்த மனிதன் அந்த வழியாக வந்து கொண்டு இருந்தான். அவன் காதில் இந்த சத்தம் விழுந்தது.



“என்ன சத்தம் இது? ஏதோ ஒரு மிருகம் வலியால் துடித்துக் கொண்டிருப்பது போலிருக்கிறதே” என்று அந்த சத்தத்தை  கவனித்துக்கொண்டே புலி இருக்கும் இடத்திற்கு வந்தான்.



அந்தப் புலியை பார்த்து “அடக்கடவுளே! இது ஒரு புலி ஆச்சே..” என்று பயந்தான் இருந்தும் பாவம் பார்த்து அந்த புலிக்கு உதவ மனிதன் முன்வந்தான். மெதுவாக நடந்து அதன் அருகே சென்று அந்த முள்ளை புலியின் காலிலிருந்து எடுத்து விட்டான். புலி நன்றியோடு அந்த மனிதன் முகத்தில் நக்கிக் கொடுத்தது. அந்த மனிதனுக்கு எந்த ஒரு தீங்கும் செய்யாமல் அதன் வழியே சென்றது.



சில நாட்களுக்குப் பிறகு, கொள்ளைக்காரர்கள் அந்த காட்டுக்குள் வந்து விலங்குகளை 

தூரத்தினர். அப்போது காட்டில் உள்ள வனவிலங்குகள் கிராமத்துக்குள் புகுந்தன. அதில் புலி ஒன்றும் இருந்தது.



 மனிதன் ஒருவனைக் கண்ட புலி அந்த மனிதன் மீது பாயத் தயாராக இருந்தது. ஆனால் திடீரென்று நின்றுவிட்டது. அன்றைக்கு புலிக்கு உதவி செய்த அதே மனிதன் தான் அவர். வலிமையான அந்த புலி அந்த மனிதன் அருகே சென்று அவன் முகத்தில் நக்கிக் கொடுத்தது, அவரும் அந்த புலியை அன்புடன் அரவணைத்தார்.



இதைப் பார்த்துக் கொண்டிருந்த  கொள்ளைக்காரர்கள் அவர்கள் தவறை உணர்ந்தார்கள். அன்று முதல் புலியும் அந்த மனிதனும் மிக நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.



நீதி : எந்த நல்ல செயல் செய்தாலும் அதற்கு உரிய பலன் கிடைக்கும்.

இன்றைய செய்திகள்

06.02.2025

* போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன் கூடிய ஓய்வூதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

* பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் உடைந்த நிலையில் தங்கத்தின் சிறு பகுதியும், எலும்புமுனைக் கருவியும் கண்டெடுக்கப்பட்டன.

* சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களில் 104 பேரை ஏற்றி வந்த அமெரிக்க விமானம் இந்தியா வந்தடைந்தது.

* காசாவை ‘கைப்பற்றும்’ ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு சீனா, சவுதி அரேபியா, துருக்கி கடும் எதிர்ப்பு.

* 38-வது தேசிய விளையாட்டு போட்டி:  பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் சதீஷ் கருணாகரன்  தங்கப்பதக்கம் வென்றார்.

* ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகி விருதை இந்தியாவின் தொடக்க வீராங்கனையான கோங்கடி திரிஷா பெற்றுள்ளார்.

Today's Headlines

* Pensions with increased dearness allowance have been credited to the bank accounts of transport pensioners.

* A small piece of broken gold and a bone-pointed tool were found in the ongoing excavations at the Golden Fort.

* A US flight carrying 104 Indians who had illegally immigrated to the US has arrived in India.

* China, Saudi Arabia and Turkey strongly oppose Trump's announcement to 'capture' Gaza.

* 38th National Games: Tamil Nadu's Satish Karunakaran wins gold medal in badminton men's singles.

* India's opening player, Gongadi Trisha, has won the player of the season award in the Junior Women's T20 World Cup.


JOIN KALVICHUDAR CHANNEL