t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

1 April 2026

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கவனத்திற்கு!

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கவனத்திற்கு!

புதிய நிதியாண்டு (2026-2027) இன்று ஏப்ரல் 1 முதல் தொடங்கிவிட்டது. வருமான வரித்துறை (Income Tax) விதிகள் தற்போது மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன!

நீங்கள் கையில் 'Cash' ஆகப் பணம் கொடுத்தாலோ, வாங்கினாலோ 100% அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 15 முக்கிய ரொக்கப் பரிவர்த்தனைகள் (No Cash Rules):

❌ போலி வாடகை ரசீதுகள் (Fake HRA) கொடுத்தால் என்ன ஆகும்?
❌ குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை (College Fees) Cash-ஆகச் செலுத்தலாமா?
❌ கிரெடிட் கார்டு பில் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களில் உள்ள IT விதிகள் என்ன?
❌ வங்கியில் ஒரு வருடத்தில் எவ்வளவு Deposit & Withdraw செய்யலாம்?
❌ AIS மற்றும் TIS டிராக்கிங் என்றால் என்ன?

ஐடி (IT) நோட்டீஸ் மற்றும் துறைரீதியான சிக்கல்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள, 


1..தனிப்பட்ட கடன்கள்: ₹20,000-க்கு மேல் ரொக்கம் கூடாது
சக ஆசிரியர்களிடமோ, உறவினர்களிடமோ அல்லது வேறு நபர்களிடமோ ரூ. 20,000-க்கு மேல் ரொக்கமாகக் கடன் வாங்கவோ அல்லது வாங்கிய கடனை ரொக்கமாகத் திருப்பிச் செலுத்தவோ கூடாது. (Sec 269SS & 269T).

மீறினால், எவ்வளவு தொகை ரொக்கமாகப் பரிமாறப்பட்டதோ அதே அளவு 100% அபராதம் விதிக்கப்படும்.

🏢 2. ஆசிரியர் கூட்டுறவுச் சங்கங்கள் (Teachers Society/Thrift)
பெரும்பாலான ஆசிரியர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தச் சங்கங்களில் இருந்து ரூ. 20,000-க்கு மேல் கடனை ரொக்கமாகப் பெறுவதோ அல்லது திரும்பச் செலுத்துவதோ கூடாது. இதுவும் வருமான வரித்துறையின் கண்காணிப்புக்கு உட்பட்டதே!

💸 3. ₹2 லட்சத்திற்கு மேல் எந்தவொரு ரொக்கப் பரிவர்த்தனையும் கூடாது
நிலம், நகை வாங்குதல், மருத்துவமனை செலவுகள் அல்லது சுபநிகழ்ச்சி என எந்தவொரு நிகழ்வுக்கும் ஒரு நாளில் ஒரு நபரிடமிருந்து ரூ. 2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாகப் பெறவோ, கொடுக்கவோ கூடாது. (Sec 269ST). மீறினால் 100% அபராதம் உறுதி.

🎓 4. குழந்தைகளின் கல்லூரி / கல்விக் கட்டணம் (SFT Tracking)
உங்கள் குழந்தைகளின் உயர் கல்விக்காக (Engineering/Medical) கல்லூரிகளில் ரூ. 1 லட்சத்திற்கு மேல் ரொக்கமாகக் கட்டணம் செலுத்த வேண்டாம். கல்வி நிறுவனங்கள் தாங்கள் பெறும் பெரிய ரொக்கத் தொகைகளை SFT மூலமாக வருமான வரித்துறைக்கு நேரடியாகத் தெரிவித்து விடுவார்கள்.

🏦 5. வங்கியில் பணம் செலுத்துவதற்கான வரம்பு (Cash Deposit Limits)
சேமிப்புக் கணக்கு: ஒரு நிதியாண்டில் ரூ. 10 லட்சத்திற்கு மேல் ரொக்கமாகப் பணம் செலுத்தினால் (Cash Deposit), அது தானாகவே வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும்.
Fixed Deposit (FD) / Post Office: ரொக்கமாக ரூ. 10 லட்சத்திற்கு மேல் FD அல்லது அஞ்சலகத் திட்டங்களில் முதலீடு செய்தாலும் IT கண்காணிப்பிற்கு உள்ளாகும்

🏧 6. வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கான வரம்பு (Cash Withdrawal)
வங்கியில் இருந்து அதிகப்படியான ரொக்கப் பணம் எடுப்பதைத் தவிர்க்கவும் (Sec 194N):

கடந்த 3 ஆண்டுகளாக ITR தாக்கல் செய்யாதவர் என்றால், ஒரு நிதியாண்டில் ரூ. 20 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக எடுத்தால் 2% TDS பிடிக்கப்படும்.
சரியாக ITR தாக்கல் செய்பவராக இருந்தால், ரூ. 1 கோடிக்கு மேல் எடுத்தால் 2% TDS பிடிக்கப்படும்.

💳 7. கிரெடிட் கார்டு பில் செலுத்துதல்
ஒரு நிதியாண்டில் உங்களின் கிரெடிட் கார்டு பில்லுக்காக ரூ. 1 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக (Cash) வங்கியில் செலுத்தினால் அது வருமான வரித்துறையின் AIS பதிவேட்டில் வந்துவிடும். பில்களை Netbanking/UPI மூலமே செலுத்தவும்.

🏥 8. வரி விலக்கு கோரும் முதலீடுகள் (80G & 80D)
நன்கொடை (Donations - 80G): அறக்கட்டளைகளுக்கு ரூ. 2,000-க்கு மேல் ரொக்கமாக நன்கொடை அளித்தால், வருமான வரியில் விலக்கு கிடைக்காது.
மருத்துவக் காப்பீடு (Health Insurance - 80D): காப்பீட்டுப் பிரீமியத்தை ரொக்கமாகச் செலுத்தினால் வரி விலக்கு கோர முடியாது.
📊 9. சொத்து மற்றும் Mutual Funds (AIS கண்காணிப்பு)
AIS (Annual Information Statement) மூலம் உங்களின் பெரிய பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படுகின்றன:

சொத்து (Property): ரூ. 30 லட்சத்திற்கு மேல் அசையாச் சொத்துக்கள் (நிலம்/வீடு) வாங்கினாலோ அல்லது விற்றாலோ பதிவேட்டில் வந்துவிடும்.
பங்குகள் (Shares/Mutual Funds): ஒரு நிதியாண்டில் ரூ. 10 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்தால் கண்காணிப்பிற்குச் செல்லும்.
🚗 10. பழைய வாகனங்கள் (Used Cars) வாங்குதல் / விற்றல்
ஆசிரியர்கள் பழைய கார்களை வாங்கும்போது அல்லது விற்கும்போது ரூ. 2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாகப் பரிமாற்றம் செய்யக்கூடாது. இதுவும் Sec 269ST விதியின் கீழ் 100% அபராதத்திற்கு வழிவகுக்கும்."

🏠 11. போலி வாடகை ரசீதுகள் (Fake HRA Claims) வேண்டாம்!
வருமான வரி விலக்கு பெறுவதற்காக பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் பெயரில் போலி வாடகை ரசீதுகளை (Fake Rent Receipts) சமர்ப்பிப்பதைத் தவிர்க்கவும்.

வாடகையை ரொக்கமாகக் கொடுக்காமல் வங்கிப் பரிமாற்றம் (Bank Transfer) மூலமாகவே வீட்டின் உரிமையாளருக்குச் செலுத்த வேண்டும்.
ஆண்டு வாடகை ரூ. 1 லட்சத்தைத் தாண்டினால் வீட்டின் உரிமையாளரின் PAN எண் கட்டாயம். இதில் முரண்பாடு இருந்தால் IT நோட்டீஸ் உறுதியாக வரும்.

📄 12. Form 16-ஐ மட்டும் நம்பி ITR தாக்கல் செய்யக் கூடாது!
பள்ளியிலிருந்து வழங்கப்படும் படிவம்-16 (Form 16) உங்கள் சம்பள விவரங்களை மட்டுமே கொண்டிருக்கும். ஆனால், நீங்கள் வங்கி சேமிப்புக் கணக்கு வட்டி (Savings Interest) மற்றும் FD வட்டி ஆகியவற்றையும் உங்கள் ITR-ல் கணக்கில் காட்ட வேண்டும்.

இவற்றை மறைத்துவிட்டு Form 16-ஐ மட்டும் வைத்து ITR தாக்கல் செய்தால், "Defective Return" நோட்டீஸ் அனுப்பப்படும்.

✍️ 13. விடைத்தாள் திருத்தும் பணி & இதர வருமானங்கள்
பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி (Paper Valuation), தேர்தல் பணி அல்லது வேறு ஏதேனும் பகுதிநேர வேலைகள் மூலம் கிடைக்கும் மதிப்பூதியம் (Remuneration) முழுவதும் வரிக்கு உட்பட்டதே.

இந்தத் தொகைகள் அரசுத் துறைகள் மூலமாகவே உங்கள் கணக்கிற்கு வருவதால், இவை நேரடியாக AIS-ல் பதிவாகிவிடும். எனவே, ITR-ல் 'Other Income' பிரிவில் இதைக் காட்டத் தவறாதீர்கள்.

✈️ 14. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணங்கள் (Foreign Tours)
விடுமுறை நாட்களில் வெளிநாட்டுச் சுற்றுலா (Foreign Tour Packages) செல்பவர்கள், அதற்கான கட்டணத்தை ரொக்கமாக (Cash) செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவுகள் ரூ. 1 லட்சத்தைத் தாண்டினால், TCS (Tax Collected at Source) விதிகளின்படி அது வருமான வரித்துறையின் நேரடிக் கண்காணிப்பிற்குச் சென்றுவிடும்.

🪪 15. PAN, ஆதார் மற்றும் SR-ல் பெயர் முரண்பாடு (Name Mismatch)
உங்கள் PAN கார்டு, ஆதார் கார்டு மற்றும் பணிப்பதிவேடு (Service Register - SR) ஆகிய மூன்றிலும் உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதி ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

இதில் எழுத்துப் பிழைகளோ (Spelling mistakes) அல்லது Initial மாறுபாடுகளோ இருந்தால், உங்களுக்கு வர வேண்டிய வருமான வரி ரீஃபண்ட் (ITR Refund) கிடைக்காமல் முடங்கிவிடும்

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.04.2026



திருக்குறள்: 

குறள் 914: 

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் 
ஆயும் அறிவி னவர் 

உரை: 

பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார்.

பழமொழி :
Many hands make light work. 

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது நடை, உடை மற்றும் ஒழுக்கத்தின் மூலம் நான் ஒரு மதிப்பு மிகு மாணவன் என்பதை மற்றவர்க்கு உணர்த்துவேன். 

2. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் மரியாதை மற்றும் கீழ் படிதல் உடன் நடந்து கொள்வேன்.

பொன்மொழி : 

தற்பெருமை எங்கு முடிகிறதோ அங்கு தான் ஆனந்தம் பிறக்கிறது -தங்கரசால்

பொது அறிவு : 

01. பாபநாசம் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது? 

தாமிரபரணி_ Thamirabarani River

English words :

Analyze – to examine in detail to understand or interpret.

Crisis – a time of intense difficulty or danger.

தமிழ் இலக்கணம்: 

பதற்றம், பதட்டம் எது சரி?

பதறு என்ற சொல்லில் இருந்து தான் 

பதறி, பதறிய, பதற்றம் என்ற சொற்கள் பிறந்தது. 

எனவே பதற்றம் என்பதே சரி.

எழுதும் போது பதற்றம் என்றே எழுத வேண்டும் 


மதன் பதற்றத்தோடு பரீட்சை எழுத வந்தான்.

அறிவியல் களஞ்சியம் :

ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறையும் அமாவாசை மற்றும் பௌர்ணமி மாறி மாறி வரும். அதனால் மாதத்தில் ஒரு முறையாவது அமாவாசையும் பௌர்ணமியும் வந்துவிடும். 1865ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மட்டும் தான் பௌர்ணமியே வராத மாதம்.


ஏப்ரல் 01

வாங்கரி மாத்தாய் அவர்களின் பிறந்தநாள்



வாங்கரி மாத்தாய் (Wangari Maathai, ஏப்ரல் 1, 1940 - செப்டம்பர் 25, 2011) கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார். 1991 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்றார். 2004ஆம் ஆண்டு பேண்தகு வளர்ச்சி, அமைதிப் பணிகளுக்காக அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார். இவர் காடுகளைக்காக்க பசுமை பட்டை இயக்கம் (Green Belt Movement) என்ற ஒன்றைத்துவக்கினார்.   ஆப்பிரிக்க நாட்டுப் பெண்கள் போல் அல்லாமல் கல்வியில் சிறந்து விளங்கினார்.இளங்கலை முதுகலைப் படிப்புகளை அமெரிக்காவில் முடித்தார்.1971 இல் கென்யாவிலேயே முதல் டாக்டர் பட்டம் பெ ற்றபெண்மணி இவரே. நைரோபிப் பல்கலைக் கழகத்தில் முதல் பெண் பேராசிரியர் என்னும் மதிப்பையும் பெற்றார்.
1977இல் தம் பேராசிரியப் பணியைத் துறந்தார்.அந்த ஆண்டில் உலகச் சுற்றுச் சூழல் நாள் அன்று (சூன் 5) தம் வீட்டின் தோட்டத்தில் ஒன்பது செடிகளை நட்டு மரங்களை வளர்க்கும் பணியில் ஈடுபட்டார்.இவ்வாறு பசுமைப் பட்டை இயக்கம் என்பதைத் தொடங்கினார்.ஆப்பிரிக்கக் காடுகளை மீண்டும் உருவாக்குவதும் காடுகள் அழிப்பினால் ஏற்பட்ட மக்களின் வறுமையை ஒழிப்பதும் இவ்வியக்கத்தின் நோக்கங்கள் ஆகும்.30 ஆண்டுகளில் மூன்று கோடி மரங்களை வளர்க்க ஏழைப் பெண்களைத் திரட்டினார்.இவற்றோடு மக்கள் கல்வி,குடும்பக் கட்டுப்பாடு ஊட்டச் சத்து ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றிலும் பசுமை பட்டை அமைப்பு ஈடுபட்டது.1980 களில் பெண்களுக்கான தேசியக் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.பின்னர் சனநாயக ஆதரவு இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக ஆனார்.நைரோபில் இருந்த ஒரே பூங்காவான உகூரு என்னும் பூங்காவை அழித்து 62 அடுக்குகள் கொண்ட பெரிய கட்டடத்தைக் கட்ட அரசு முனைந்தபோது மாத்தாய் போராட்டம் நடத்தியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.பல்வேறு சமூக முன்னேற்றங்களுக்கான போராட்டங்களில் இவர் ஈடுபட்டதால் மீண்டும் மீண்டும் சிறைப்படுத்தப் பட்டார்.கண்ணீர் புகைக்குண்டு, தடியடி இவரைப் பதம் பார்த்தன.இவருடைய இடைவிடா போராட்டங்களினால் உலகம் இவரைத் திரும்பிப் பார்த்தது. இவருடைய சுற்றுச்சூழல் சேவையைக் கணக்கில் கொண்டு அவரின் சேவையைப் போற்றும் வகையில் நோபல் அமைதிப் பரிசு மாத்தாய்க்கு வழங்கப்பட்டது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு மூலம் வளர்ச்சியும் சனநாயகமும் பேணப்படு கின்றன என்று கருதி மாதாய்க்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் என்னும் பெருமையும் அவருக்கு உண்டு.
நீதிக்கதை

 யார் வள்ளல்?



முன்னொரு காலத்தில் பொதிகை மலையை மாறன் என்ற அரசன் ஆண்டு வந்தான். வாரி வழங்கும் வள்ளலாக இருந்த அவன் புகழ் எங்கும் பரவியது. மற்றொரு நாட்டின் மன்னனான குணசீலன் என்ற மன்னன் மாறனைப் பற்றி கேள்விப்பட்டான். சிறிய பகுதியை ஆளும் மாறனுக்கு இவ்வளவு நற்பெயரா? நான் அவனைவிட வாரி வழங்கி பேரும் புகழும் பெற வேண்டும் என்று நினைத்தான். அதனால் தன்னுடைய பிறந்த நாளன்று மக்களுக்கு பரிசுகளை வாரி வழங்கப் போவதாக அறிவித்தான். மன்னனின் பிறந்த நாள் வந்தது. பரிசு பெறுவதற்காக நிறைய பேர் அரண்மனை முன்பாக கூடினர். அங்கிருந்த மேடையில் நின்றபடி ஒவ்வொருவருக்கும் பரிசு வழங்கிக் கொண்டிருந்தான் மன்னன். 



அப்போது தெற்கு வாயில் வழியாக மூதாட்டி ஒருவர் வந்தார். அவன் முன் கை நீட்டினாள். அவனும் பரிசு தந்து அனுப்பினான். சிறிது நேரம் சென்றது. மேற்கு வாயில் வழியாகவும் அதே மூதாட்டி வந்தாள். அவன் முன் கையை நீட்டினாள். மீண்டும் பரிசு பெற அவர் வந்திருக்கிறார் என்பதை அவன் தெரிந்து கொண்டான். அவருக்குப் பரிசு தந்து அனுப்பினான். மூன்றாம் முறையாக அந்த மூதாட்டி வடக்கு வாயில் வழியாக வந்தாள். கையை நீட்டினாள். இந்த மூதாட்டி திரும்பவும் வந்திருக்கிறாளே என்று முகத்தைச் சுளித்துக் கொண்டான். பரிசு கொடுக்க விரும்பமில்லாமல் வெறுப்புடன் அந்த மூதாட்டிக்கு பரிசு தந்து அனுப்பினான்.



திரும்பத் திரும்பத் தான் வருவதை அரசர் தெரிந்து கொண்டார். அதனால்தான் வெறுப்பைக் காட்டுகிறார் என்பது அவளுக்குப் புரிந்தது. இருந்தும் அவள் நான்காம் முறையாகக் கிழக்கு வீதி வழியாக வந்தாள். அரசனின் முன் கையை நீட்டினாள். அவளைப் பார்த்ததும் அவனால் கோபத்தை அடக்க முடியவில்லை. மூதாட்டியே! நீ எத்தனை முறைதான் பரிசு பெற்றுச் செல்வாய்? என்னை ஏமாளி என்று நினைத்துக் கொண்டாயா? உனக்குப் பரிசு ஏதும் தர மாட்டேன் என்று அவளை விரட்டினான்.



அங்கிருந்து செல்லாத அவள், அரசே! உங்களைப் போலவே பொதிகை மலை அரசர் மாறனும் பிறந்தநாள் பரிசு வழங்கினார். அவரிடம் நான் திரும்பத் திரும்பப் பதினாறு முறை சென்று கையை நீட்டினேன். என்னைத் தெரிந்ததாகவே அவர் காட்டிக் கொள்ளவில்லை. ஒவ்வொரு முறையும் சிரித்த முகத்துடன் பரிசு தந்து அனுப்பினார். ஆனால், நீங்களோ நான் மூன்றாவது முறை வந்தபோதே கோபத்தைக் காட்டினீர்கள். நான்காவது முறை இல்லை என்றே விரட்டுகிறீர்கள் என்றாள். இதைக் கேட்ட அவன் தன்னால் மாறனைப் போல வள்ளலாக முடியாது என்பதை அறிந்து கொண்டான்.



நீதி :

தானம் செய்வதற்கு நல்ல மனம் வேண்டும்.

இன்றைய செய்திகள்

01.04.2026

⭐சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் தேநீர், சிற்றுண்டி, சாப்பாடு போன்ற அன்றாட உணவுப் பொருட்களின் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது.

⭐ இந்தியாவில் LPG க்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
எல்பிஜி சிலிண்டருக்கு மாற்றாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 பெட்ரோல் பங்கில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

⭐ஏமனின் ஹூத்தி தீவிரவாதிகள் கடலுக்கு அடியில் உள்ள தகவல் தொடர்பு கேபிள்களைத் தகர்ப்போம் என்று அச்சுறுத்துவதால் உலக நாடுகள் கலக்கமடைந்து ள்ளன. 

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஷிம்கென்ட் கஜகஸ்தான் செஸ் தொடரில் இந்தியாவின் பிரனவ் சாம்பியன் ஆனார்.

🏀 ஐபிஎல் 2026 தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

Today's Headlines

⭐ In cities including Chennai, the prices of daily food items such as tea, snacks, and meals in restaurants and tea shops have increased significantly.

⭐ There is a shortage of LPG in India. As an alternative to LPG cylinders, the central government has announced that kerosene will be sold at two petrol bunks in each district.

⭐ Global nations are concerned as the Houthis in Yemen have threatened to damage undersea communication cables.

 SPORTS NEWS 

🏀 In the Shymkent, Kazakhstan chess tournament, India’s Pranav emerged as the champion.

🏀 In the third league match of the Indian Premier League 2026, Rajasthan Royals defeated Chennai Super Kings by 8 wickets.


30 March 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.03.2026


திருக்குறள்: 

குறள் 912: 

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் 
நயன்தூக்கி நள்ளா விடல் 

உரை: 

கிடைக்க கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்.

பழமொழி :
Measure thrice before you cut once.   

ஒரு செயலை செய்யும் முன் பலமுறை சிந்திக்கவும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது நடை, உடை மற்றும் ஒழுக்கத்தின் மூலம் நான் ஒரு மதிப்பு மிகு மாணவன் என்பதை மற்றவர்க்கு உணர்த்துவேன். 

2. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் மரியாதை மற்றும் கீழ் படிதல் உடன் நடந்து கொள்வேன்.

பொன்மொழி : 

மனிதர்களின் முழு திறமையின் வெளிப்பாடே உண்மையான கல்வி

   மகாத்மா காந்தி அடிகள்

பொது அறிவு : 

01. காந்திஜியின் 125 வது பிறந்தநாளை ஒட்டி இந்தியா உருவாக்கிய மிக உயர்ந்த விருதின் பெயர் என்ன?

காந்தி அமைதி பரிசு

Gandhi Peace Prize.  

02. விண்கலங்கள் அதிக முறை சென்று ஆராய்ச்சி செய்த முதல் வால் நட்சத்திரம் எது?

 ஹாலி வால் நட்சத்திரம்

Halley's Comet 

English words :

Attentive- taking heed. உன்னிப்பாகக் கவனித்தல்

exotic - unusual or interesting

வழக்கத்திற்கு மாறாக இருக்கிற. விசித்திரமான.

தமிழ் இலக்கணம்: 

கற்போம் தமிழ் 

கருப்பு, கறுப்பு எது சரி?

இடையின ர கரமா வல்லின ற கரமா? 

இது அநேகருக்கு குழப்பத்தை உண்டாக்கும் ஒரு வார்த்தை. 

ஆனால் இரண்டுமே சரி தான். 

எப்படி என்று பார்ப்போம்.



நிலையான நிறத்தை குறிக்கும் போது கருப்பு என்று எழுத வேண்டும் 

எ.கா - காகம் கருப்பு

கருப்பு குயில்

தாரின் நிறம் கருப்பு. 



மாறும் நிறம் வரும் போது கறுப்பு என்று எழுத வேண்டும்.



வெள்ளி கறுத்து விட்டது

மேகம் கறுத்து வருகிறது.

வெள்ளி, மேகம் இரண்டின் நிறமும் வேறு வேறு ஆனால் வெள்ளி கறுப்பாக மாறும்


மேகம் நிறமும் கறுப்பு அல்ல அது மழை வரும் போது மாறும்.

அறிவியல் களஞ்சியம் :

"சுத்தமான தண்ணீரில் அவ்வளவாக மின்சாரம்பாயாது, காரணம் சுத்தமான நீரில் தாதுக்கள் (Impurities and Minerals) இல்லாதிருப்பதால் மின்சாரம் பாய்வதில்லை.

மார்ச் 30

வின்செண்ட் வான்கா  அவர்களின் பிறந்தநாள் 


வின்சென்ட் வில்லியம் வான் கோ அல்லது வின்செண்ட் வான்கா (இடச்சு: [ˈvɪnsɛnt ˈʋɪləm vɑn ˈɣɔx]); (Vincent Van Gogh, மார்ச் 30, 1853 - சூலை 29|, 1890) ஒரு டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர். இவரது ஓவியங்களில் சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும். ஒரு தசாப்தத்தில் 860 எண்ணெய் ஓவியங்கள் உட்பட, வெறும் 2,100 கலைப்படைப்புகளை உருவாக்கியவர். பிரான்சில் வாழ்ந்த கடைசி இரண்டு ஆண்டுகளில் அவர் இறந்துவிட்டார். வறுமை மனநோய் போன்றவற்றால் துன்புற்று அவரது வாழ்வு 37 வயதில் தற்கொலையில் முடிந்தது..

இவரது பெரும்பாலான ஓவியங்கள் இவரது வாணாளின் கடைசி இரு ஆண்டுகளில் வரையப்பட்டவையே. இவர் உயிருடன் இருந்த காலத்தில் இவரின் கலையை யாரும் மதிக்கவில்லை. தான் வாழ்ந்த காலத்தில் இவரால் தனது ஓவியங்களுள் ஒன்றை மட்டுமெ விற்க முடிந்தது. இன்றோ நவீன ஓவியத்தின் செல்வாக்கு வாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார். வான்கா 30 வயது வரை எந்த ஓவியமும் வரைந்ததில்லை.
நீதிக்கதை

 அழகிய ரோஜா செடியும் அற்புத கள்ளிச் செடியும்

அது ஒரு வசந்த காலம். பூங்காவில் எண்ணற்ற மரம் செடி கொடிகள் இருந்தன. அதில் ஒரு ரோஜாச் செடியும், கள்ளிச்செடியும், சவுக்கு மரமும் அருகருகே இருந்தன. வசந்த கால காலை நேரம். அந்த ரோஜாச்செடி அழகாகப் பூத்திருந்தது. அதைக் கடந்து சென்ற அனைவரும் ஒரு நொடி நின்று பார்த்து சென்றனர். அந்தச் சவுக்கு மரம் ரோஜாச் செடியிடம் நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய். பூங்காவிற்கு வரும் அனைவரும் உன்னைப் பார்த்து மகிழ்ந்து செல்கின்றனர் என்றது. ரோஜாச் செடி வெட்கத்தில் நாணி அதன் இதழ்கள் மேலும் சிவந்தன. கர்வமும் தலைக்கு ஏற தொடங்கியது.

அருகே இருந்த கள்ளிச்செடியை பார்த்து இவ்வளவு கோரமான தோற்றத்தைக் கொண்ட நீ என்னருகே இருப்பது எனக்கு அவமானமாக உள்ளது என்று கூறி தள்ளிப்போக முயன்றது. ஆனால் ரோஜா செடியால் தள்ளிப்போக முடியவில்லை. இவ்வாறு தினசரி அந்த கள்ளிச்செடியை குறை கூறிக்கொண்டே இருந்தது ரோஜா செடி. ஆனால் இதற்கு அந்த கள்ளிச்செடி எந்த முக சுளிப்பும் கோவமும் படாமல் இருந்தது.

நாட்கள் ஓடின. கோடைக்காலம் சுட்டெரிக்க தொடங்கியது. கோடைக்காலத்தில் வெட்பத்தினால் பூங்காவில் பார்வையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தண்ணீர் பற்றாக்குறையும் வந்தது. பூங்கா நிறுவனத்தினரால் ஒழுங்காகத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க முடியவில்லை. ரோஜா செடியும் வாட தொடங்கியது. ஆனால் கள்ளிச்செடி எப்போதும் போல இருந்தது. குருவிகள் பல வந்து கள்ளிச்செடி மீது அமர்ந்து அதைக் கொற்றி நீர் குடித்தன. இதைக்கண்ட ரோஜா செடி சவுக்கு மரத்திடம் குருவிகள் கொற்றுவதால் கள்ளிச்செடிக்கு வலிக்காத என்று கேட்டது. 

சவுக்கு மரமோ கள்ளிச்செடிக்கு வலிக்கத் தான் செய்யும் இருந்தாலும் அதைத் தாங்கி கொண்டு தாகத்தில் தவிக்கும் குருவிகளுக்கு தண்ணீர் கொடுப்பது தனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறது. நீயும் கேட்டுப்பார். கள்ளிச்செடி சம்மதித்தால் குருவிகளின் உதவியினால் உனக்குத் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறியது. கேட்க முகமில்லாமல் ஆனால் உயிர் வாழ நீர் இல்லாததால் அந்த ரோஜா செடி. கள்ளிச்செடியிடம் நீர் கேட்டது. கள்ளிச்செடியும் குருவியின் உதவியால் ரோஜா செடிக்கு நீர் கொடுத்து உதவியது. 

நீதி:

தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிடக்கூடாது என ரோஜா செடி புரிந்துகொண்டது.

இன்றைய செய்திகள்

30.03.2026

⭐ வணிக சிலிண்டர்களின் விநியோகத்தை மாநிலங்களுக்கு 70% ஆக உயர்த்துவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

⭐தற்போது ஒமைக்ரான் வகையைச் சேர்ந்த BA.3.2 எனப்படும் 'சிக்காடா' கொரோனா வைரஸ் ஐரோப்பா & அமெரிக்காவில் வேகமாகப் பரவி வருகிறது.

⭐பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை ஏற்றத்தை தடுக்கும் நோக்கில் எண்ணெய் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கலால் வரியை இந்திய அரசு குறைத்துள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி, கடந்த 13 சீசன்களாக முதல் போட்டியில் வெற்றி பெற முடியாமல் தவித்து வருகிறது. மொத்தம் 18 சீசன்களில் 14 முறை தொடக்க ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளது.

🏀பாகிஸ்தான் வீரருடன் இணைந்து ஆடப் போகும் அஸ்வின். அமெரிக்காவின் MLC டி20 தொடரில் பங்கேற்க ஒப்பந்தம்.

Today's Headlines

*TODAY’S HEADLINES* 

⭐ The Government of India has announced that the distribution of commercial LPG cylinders to states will be increased to 70%.

⭐ A new Omicron variant called BA.3.2, nicknamed “Cicada,” is reportedly spreading rapidly in Europe and the United States.

⭐ To control the rising prices of petrol, diesel, and other fuels, the Government of India has reduced the excise duty imposed on oil companies.

 *SPORTS NEWS* 

🏀 The Mumbai team, which has won the championship 5 times, has been struggling to win its opening match for the past 13 seasons. Out of 18 seasons, it has lost the first match 14 times.

🏀 Ravichandran Ashwin is set to play alongside a Pakistani player, having signed up to participate in the USA’s Major League Cricket (MLC) T20 tournament.


27 March 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.03.2026

திருக்குறள்: 

குறள் 844: 

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை 
உடையம்யாம் என்னும் செருக்கு. 

விளக்க உரை: 

புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.

பழமொழி :
A guilty conscience pricks. 

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1.போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.

2.என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.

பொன்மொழி : 

சேமிப்பு இல்லை என்றால் உழைப்பும் வீணே.

பொது அறிவு : 

01.இந்தியாவின் அணுசக்தி திட்டத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?


டாக்டர்.ஹோமி ஜஹாங்கீர் பாபா  -Dr.Homi J. Bhabha

02.இந்தியாவில் நவீன வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் (பசுமைப் புரட்சி) சிற்பி என்று அழைக்கப்படுபவர்யார்?

டாக்டர். மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் 
Dr.M.S. Swaminathan.
English words :

Doodle – Drawing absent-mindedly

Scratch – Rough, quick writing

தமிழ் இலக்கணம்: 

அறிவோம் தமிழ் 

இன்று ஐவகை நிலங்களில் ஆடவர் எவ்வாறு அழைக்கப் படுகின்றனர் என்று காண்போம்

மருதம் - கடையர் 

நெய்தல் - பரதர்

பாலை- எயினர்

முல்லை- இடையர் 


குறிஞ்சி - வேடுவர்

அறிவியல் களஞ்சியம் :

மேகத்தின் எடை சுமார் 10 லட்சம் பவுண்டுகள் (million pounds) வரை இருக்கலாம். 

மார்ச் 27

உலக நாடக அரங்க நாள்  
உலக நாடக அரங்க நாள் (World Theatre Day) ஆண்டுதோறும் மார்ச் 27 ஆம் நாளன்று பன்னாட்டு அரங்க நிறுவனத்தினால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலக நாடக அரங்க நாள் உலக நாடக அரங்க நிறுவனத்தினால் 1961 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு இந்நிறுவனத்தின் மையங்களிலும், பன்னாட்டு நாடக அரங்க சமூகங்களினாலும் கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வை ஒட்டி பல்வேறு தேசிய, பன்னாட்டு நாடக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்நாளின் முக்கிய நிகழ்வாக, உலக மட்டத்தில் புகழ் பெற்ற ஒரு நாடகக் கலைஞர் ஒருவர் இந்நாளின் முக்கியத்துவம் குறித்த தனது பிரதிபலிப்புகளையும், உலக கலாச்சார அமைதி பற்றியும் செய்தி ஒன்றை விடுப்பார். இவ்வாறான முதலாவது செய்தியை 1962 ஆம் ஆண்டில் பிரான்சிய எழுத்தாளரும், நாடகக் கலைஞருமான சான் காக்டோ விடுத்தார்.



யூரி அலெக்சியேவிச் ககாரின் அவர்களின் நினைவு நாள்


யூரி அலெக்சியேவிச் ககாரின் (Yuri Alekseyevich Gagarin, உருசியம்: 9 மார்ச் 1934 – 27 மார்ச் 1968) உருசிய விண்வெளி வீரர் ஆவார். விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.

நீதிக்கதை

 அழகிய ரோஜா செடியும் அற்புத கள்ளிச் செடியும்

அது ஒரு வசந்த காலம். பூங்காவில் எண்ணற்ற மரம் செடி கொடிகள் இருந்தன. அதில் ஒரு ரோஜாச் செடியும், கள்ளிச்செடியும், சவுக்கு மரமும் அருகருகே இருந்தன. வசந்த கால காலை நேரம். அந்த ரோஜாச்செடி அழகாகப் பூத்திருந்தது. அதைக் கடந்து சென்ற அனைவரும் ஒரு நொடி நின்று பார்த்து சென்றனர். அந்தச் சவுக்கு மரம் ரோஜாச் செடியிடம் நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய். பூங்காவிற்கு வரும் அனைவரும் உன்னைப் பார்த்து மகிழ்ந்து செல்கின்றனர் என்றது. ரோஜாச் செடி வெட்கத்தில் நாணி அதன் இதழ்கள் மேலும் சிவந்தன. கர்வமும் தலைக்கு ஏற தொடங்கியது.

அருகே இருந்த கள்ளிச்செடியை பார்த்து இவ்வளவு கோரமான தோற்றத்தைக் கொண்ட நீ என்னருகே இருப்பது எனக்கு அவமானமாக உள்ளது என்று கூறி தள்ளிப்போக முயன்றது. ஆனால் ரோஜா செடியால் தள்ளிப்போக முடியவில்லை. இவ்வாறு தினசரி அந்த கள்ளிச்செடியை குறை கூறிக்கொண்டே இருந்தது ரோஜா செடி. ஆனால் இதற்கு அந்த கள்ளிச்செடி எந்த முக சுளிப்பும் கோவமும் படாமல் இருந்தது.

நாட்கள் ஓடின. கோடைக்காலம் சுட்டெரிக்க தொடங்கியது. கோடைக்காலத்தில் வெட்பத்தினால் பூங்காவில் பார்வையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தண்ணீர் பற்றாக்குறையும் வந்தது. பூங்கா நிறுவனத்தினரால் ஒழுங்காகத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க முடியவில்லை. ரோஜா செடியும் வாட தொடங்கியது. ஆனால் கள்ளிச்செடி எப்போதும் போல இருந்தது. குருவிகள் பல வந்து கள்ளிச்செடி மீது அமர்ந்து அதைக் கொற்றி நீர் குடித்தன. இதைக்கண்ட ரோஜா செடி சவுக்கு மரத்திடம் குருவிகள் கொற்றுவதால் கள்ளிச்செடிக்கு வலிக்காத என்று கேட்டது. 

சவுக்கு மரமோ கள்ளிச்செடிக்கு வலிக்கத் தான் செய்யும் இருந்தாலும் அதைத் தாங்கி கொண்டு தாகத்தில் தவிக்கும் குருவிகளுக்கு தண்ணீர் கொடுப்பது தனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறது. நீயும் கேட்டுப்பார். கள்ளிச்செடி சம்மதித்தால் குருவிகளின் உதவியினால் உனக்குத் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறியது. கேட்க முகமில்லாமல் ஆனால் உயிர் வாழ நீர் இல்லாததால் அந்த ரோஜா செடி. கள்ளிச்செடியிடம் நீர் கேட்டது. கள்ளிச்செடியும் குருவியின் உதவியால் ரோஜா செடிக்கு நீர் கொடுத்து உதவியது. 

நீதி:

தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிடக்கூடாது என ரோஜா செடி புரிந்துகொண்டது.

இன்றைய செய்திகள்

27.03.2026


⭐தமிழகத்தில் ஏப்.1 முதல் அமலாகிறது 60 சுங்கச்சாவடிகளில் 5% வரை கட்டணம் உயர்வு

⭐தமிழகத்தில் தேர்தல் பறக்கும்படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் நடவடிக்கையில் இதுவரை ரூ.34.64 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 

⭐ புதுச்சேரியில் வழிப்பறி செய்யும் நோக்கில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கிய முகமூடி கும்பலை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக புதியவர்கள் களமிறங்குவார்கள் என அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

🏀 'டி-20' அரங்கில் கேப்டனாக 2 அல்லது அதற்கு மேல் சதம் விளாசியவர்கள் பட்டியலில் ரோகித், சமாரி, மெக் லானிங் உள்ளிட்டோருடன் இணைந்தார் அமேலியா கெர்.

Today's Headlines

⭐ In Tamil Nadu, toll fees at 60 toll plazas will be increased by up to 5% starting from April 1st.

⭐ In Tamil Nadu, flying squads and surveillance teams for election monitoring have seized ₹34.64 crore in cash so far.

⭐ In Puducherry, police have arrested a masked gang that was hiding with dangerous weapons, intending to commit robbery.

 SPORTS NEWS 

🏀 Chennai Super Kings captain Ruturaj Gaikwad has stated that new players will open the innings for the team.

🏀 In T20 cricket, Amelia Kerr has joined the list of captains who have scored two or more centuries, alongside Rohit Sharma, Sophie Devine, and Meg Lanning.


26 March 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.03.2026

திருக்குறள்: 

குறள் 843: 

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை 
செறுவார்க்கும் செய்தல் அரிது. 

விளக்க உரை: 

அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.

பழமொழி :
A contended mind is a continual feet. 

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

இரண்டொழுக்க பண்புகள் :.

1.போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.

2.என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.

பொன்மொழி : 

நீங்கள் ஒருவருக்கு நன்மை செய்தால், அது உங்களுக்கே நன்மை செய்தது போன்றது. ஒருவருக்கு தீமை செய்தால் , அது உங்களுக்கே தீமையாகும் - அல்குர்ஆன்

பொது அறிவு : 

01.விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் யார்?


ராகேஷ் சர்மா -Rakesh Sharma

02.காந்தி அமைதிப் பரிசு பெற்ற முதல் இந்திய அமைப்பு எது?

 ராமகிருஷ்ணா மிஷன் -
Ramakrishna Mission
English words :

Debate – Discussion between candidates

Secret Ballot – Voting privately

தமிழ் இலக்கணம்: 

அறிவோம் தமிழ் 

இல்லை, அல்ல, அன்று 

இந்த மூன்று வார்த்தைகளும் ஒரே பொருள் தருவது போல் தோன்றினாலும் அப்படி அல்ல. இவைகளை நாம் பயன்படுத்தும் இடம் வேறு படும்.

இல்லை என்பது ஒரு பொருள் அல்லது நபர் இல்லாததைக் குறிக்கும். 

1. என்னிடம் பணம் இல்லை 

2. என் தகப்பனார் இங்கு இல்லை 

அல்ல என்பது "ஒன்று வேறு ஒன்றாக இல்லை என்று சொல்ல" 

1. இது என் புத்தகம் அல்ல

அன்று என்பதும் மேலே குறிப்பிட்ட அதே பொருள் தான் தரும் ஆனால் இது உயர்ந்த இலக்கிய நடை ஆக பயன்படுத்தப் படும்

1. இது உண்மை அன்று


2. இது நன்மை அன்று

அறிவியல் களஞ்சியம் :

ஆக்டோபஸின் இரத்தம் நீல நிறத்திலும், அதற்கு மூன்று இதயங்களும் உள்ளன.

மார்ச் 26

லூடுவிக் வான் பேத்தோவன் அவர்களின் நினைவுநாள் 

லூடுவிக் வான் பேத்தோவன் (Ludwig van Beethoven, /ˈlʊdvɪɡ væn ˈbeɪˌtoʊvən/ (About this soundகேட்க); 1770 - மார்ச் 26, 1827)[1] அவர்கள் செருமனியைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மேற்கத்திய செவ்விசை இயற்றுநர் ஆவார். இவர் செருமனியில் உள்ள பான் என்னும் நகரில் பிறந்தார். பியானோ கருவிக்காகவும் பிற இசைக் கருவிகளுக்காகவும் சேர்ந்திசை நிகழ்வுகளுக்காகவும் பல செவ்விசை ஆக்கங்கள் செய்துள்ளார். மேற்கத்திய கலை இலக்கியத்தில் மரபார்ந்த மற்றும் காதல்சார் காலகட்டங்களுக்கு இடையில் ஒரு முக்கியமான இசைக் கலைஞராக இவர் கருதப்பட்டார். அனைத்து இசையமைப்பாளர்களிடமும் மிக பிரபலமான மற்றும் செல்வாக்கு மிகுந்த ஒரு நபராகவும் அறியப்பட்டார். இவர் ஒரு சிறந்த பியானோ வாசிக்கும் கலைஞரும், வயலின் வாசிக்கும் கலைஞரும் ஆவார். இவர் ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் இருந்தார். இவருடைய சிம்ஃபனி என்னும் ஒத்தினி இசையில் ஐந்தாவதும் ஒன்பதாவதும் ஒரு வயலின் இசைவடிவம், 32 பியானோ தனியிசை வடிவங்கள், 16 நரம்பிசை வடிவங்கள் மிகவும் புகழ் பெற்றவையாகும். சுமார் 1801 ஆம் ஆண்டு வாக்கில் இவருக்கு சிறுகச் சிறுக காது செவிடாகத் தொடங்கியது. 1817ல் இவர் முற்றுமாய் செவிடாகிவிட்டார். எனினும் இவர் இக்காலத்தே மிகவும் சிறந்த இசை ஆக்கங்களைச் செய்துள்ளார்.
நீதிக்கதை

 நரி சொன்னப் பொய்

ஒரு நாள் காலையில் சேவலானது மரத்தின் மீது அமர்ந்து பலமுறைக் கூவிக் கொண்டே இருந்தது. சேவல் கூவும் சத்தத்தைக் கேட்ட நரி சேவல் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது. நரியோ மிகுந்தப் பசியுடன் இருந்ததால் அந்த சேவலை பிடித்து சாப்பிட ஆசை ஏற்பட்டது. ஆனால் சேவலோ மரத்தின் மீது இருந்ததால் நரியால் மரத்தில் ஏறிப்பிடிக்க முடியவில்லை. 

சேவலைப் பார்த்து, சகோதரனே!, வணக்கம். உனக்கு ஒரு நல்ல செய்தி. இனி பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. நீ கொஞ்சம் கீழே வந்தால் இதை பற்றித் தெளிவாக பேசுவோம் என்றது. நரியின் தந்திரப் பேச்சைச் சேவல் புரிந்து கொண்டு தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது. 

அதைக் கண்ட நரி, என்ன சகோதரா!, எதையோ அடிக்கடி எட்டிப் பார்க்கிறாயே. அங்கே என்ன இருக்கிறது? என்று கேட்டது. அதற்குச் சேவல், அங்கே சில வேட்டை நாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள் தானா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றது. வேட்டை நாய்கள் என்றதும் நரி வேகவேகமாக சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன் என்று கூறி கிளம்பியது. 

சேவல், அருமை சகோதரா, போகாதே, நான் இப்பொழுதே கீழே இறங்கி வருகிறேன். ஏன் நாய்களைக் கண்டு பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய், எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று கேட்டது சேவல். அதற்கு நரி அந்த ஒப்பந்தத்தைப் பற்றி நிறைய பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஒருவேளை அந்த நாய்களுக்குத் தெரியாமல் இருந்தால், என் நிலைமை என்னவாகும்? அதனால் நான் போகிறேன் என்று சொல்லிவிட்டு நரி ஒரே ஓட்டமாக ஓடி காட்டுக்குள் மறைந்தது. சேவல் யாரை ஏமாற்றப் பார்த்தாய், உன்னுடைய கெட்டிக்காரத் தனமானப் பொய்கள் என்னிடம் பலிக்காது என்று கூறி சிரித்தது. 

நீதி :

புத்திசாலிகளை யாரும் சீக்கிரத்தில் ஏமாற்ற முடியாது.

இன்றைய செய்திகள்

26.03.2026

⭐ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்; 8 மணி நேரத்திற்கு முன் டிக்கெட் ரத்து செய்தால் ரீபண்ட் இல்லை: புதிய விதிமுறை அமலாகிறது

⭐ கொலம்பியாவில் ராணுவத்தின் C-130 ஹெர்குலிஸ் ரக விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுந்துள்ளது. இதில் 66 பேர் வரை பலியாகி உள்ளனர். 70 பேர் காயமடைந்துள்ளனர்

⭐போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஈரான் முறைப்படி ஒப்புதல் கொடுத்துள்ளது

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀5வது டி20: நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா
 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-2 என வென்றது.

Today's Headlines

⭐ Shocking news for train passengers: No refund will be given if tickets are cancelled within 8 hours before departure — new rule comes into effect.

⭐ In Colombia, a military C-130 Hercules aircraft has crashed and broken apart. Around 66 people have died, and 70 others have been injured.

⭐ Iran has officially agreed to hold talks with the United States to bring an end to the war.

🏀 Sports News

🏀 5th T20: South Africa defeated New Zealand and won the series.
They won by 33 runs and secured the series 3–2


25 March 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.03.2026

திருக்குறள்: 

குறள் 842: 

அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும் 
இல்லை பெறுவான் தவம்.  

விளக்க உரை: 

அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.

பழமொழி :
Grasp all lose all. 

பேராசை பெரு நஷ்டம்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1.போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.

2.என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.

பொன்மொழி : 

முடியும் என்று நம்பினால் வாய்ப்புகளை காண்பீர்கள்.

முடியாது என்று நினைத்தால்  தடைகளே கண்களுக்கு தெரியும்.

பொது அறிவு : 

01.தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூல் எது?

தம்பிரான் வணக்கம் -

Thambiran Vanakkam

02.உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகம் எங்குள்ளது?

இந்தியா- சென்னை உயர் நீதிமன்ற வளாகம் 

India- Chennai high court complex

English words :

Canvassing – Asking people for votes

Rally – Public meeting to support a candidate

தமிழ் இலக்கணம்: 

கற்போம் தமிழ் 

நேற்று காற்று வீசும் திசையின் அடிப்படையில் காற்றின் பெயர்கள் பார்த்தோம். இன்று வேக அடிப்படையில் அதன் பெயர்கள் பார்ப்போம்

0 - 6 கிமீ வேகம் மென்காற்று 

6 - 11 கிமீ வேகம் 

இளந் தென்றல்

11 - 19 தென்றல்

20 - 29 கிமீ வேகம் 

புழுதிக் காற்று 

30 - 39 கிமீ வேகம் 

ஆடிக் காற்று 

40 - 100 கிமீ வேகம் 

கடும் காற்று 


101 கிமீ மேல் புயல் காற்று

அறிவியல் களஞ்சியம் :

கரப்பான் பூச்சி தலை துண்டிக்கப்பட்டாலும் ஒரு வாரம் வரை உயிர்வாழும்.

மார்ச் 25

வில்லியம் கோல்கேட் அவர்களின் நினைவுநாள்

வில்லியம் கோல்கேட் (William Damian "Will" Colgate: ஜனவரி 25, 1783 – மார்ச்சு 25, 1857) இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த தொழிலதிபர்; அமெரிக்காவைச் சேர்ந்த கோல்கேட் என்ற (தற்போது இது புராக்டர் அன்ட் கேம்பல்) பற்பசைத் தயாரிப்பு நிறுவனத்தை 1806-ல் தொடங்கியவர்.
நீதிக்கதை

 இரண்டு நண்பர்கள்

ராமுவும் மாரியும் நண்பர்கள். அவர்கள் இருவருக்கும், தாய், தந்தையர் மற்றும் சுற்றார் கிடையாது. இது போதாதென்று ராமுவுக்குக் கண் தெரியாது. அதேபோல் மாரியால் நடக்க முடியாது. அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து, கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர்.



ஒரு நாள் அவர்களுக்குச் சிறிது தொலைவில் உள்ள மற்றொரு ஊரில் நடக்கும் திருவிழா பற்றித் தெரிய வந்தது. இருவருக்கும் அங்கே போக மிகுந்த ஆசை. அந்த ஊருக்குச் செல்ல மிகுந்த தொலைவு நடக்க வேண்டும். மாரி சலிப்புடன் சொன்னான்” “என்னாலோ நடக்க முடியாது, உன்னாலோ பார்க்க முடியாது. இந்த லட்சணத்தில் நமக்கு ஏன் இந்த ஆசை?”



ராமு சிறிது நேரம் தீவிரமாக யோசித்து விட்டுச் சொன்னான்: “நண்பா! யோசித்துப் பார். உன்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால் கூர்மையாகப் பார்க்க முடியும். என்னால் பார்க்கத்தான் முடியாது. ஆனால் வெகுதூரம் நடக்க முடியும். நீ என் தோள் மேல் ஏறிக் கொள். எனக்கு வழியைச் சொல்லிக் கொண்டே வா. நாம் இருவரும் திருவிழாவிற்குச் சென்று வர முடியும்”

ராமுவும் மாரியும் திருவிழாவிற்குச் சென்று வந்தார்கள்!!

1. நம் பலங்கள் எவை என்பதை எப்பொழுதும் உணர்ந்திருப்பது அவசியம். அவற்றைத் தகுந்த சமயத்தில் உபயோகிக்கத் தெரிய வேண்டியதும் அவசியம்.

2. ஏன் நம்மால் ஒரு காரியத்தை சாதிக்க முடியாது என்று யோசிப்பதை விட, எப்படி சாதிக்க முடியும் என்று யோசிப்பது அதிகப் பயன் தரும்.

3. அடுத்தவர் பலங்கள் நமக்குப் பயன் தர வேண்டுமானால், அவர்களுக்குத் தேவையான நமது பலங்களின் பயன்களை அவர்களுக்கு அளித்து உதவத் தயங்கக்கூடாது.

4. முயன்றால் முடியாதது எதுவுமில்லை.

இன்றைய செய்திகள்

25.03.2026

⭐கோடை விடுமுறையில் பள்ளி குழந்தைகள் ஜப்பானிய மொழியை கற்பதற்கு வாய்ப்பு: இந்திய - ஜப்பான் தொழில் வர்த்தக சபை ஏற்பாடு

⭐ இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க, தற்போது வீடுகளுக்கு வழங்கப்படும் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரின் அளவை 10 கிலோவாக குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் பரிந்துரைத்துள்ளன.

⭐ஈரான் மீதான போர் 5நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ரீயூனியன் விழா  கோலாகலமாக நடை பெற்றது. மைதானத்தில் ஏராளமான சென்னை ரசிகர்கள் உற்சாகத்துடன் நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.

Today's Headlines 

⭐ School children get an opportunity to learn Japanese during the summer holidays: Organized by the Indo-Japan Chamber of Commerce.

⭐ To address the cooking gas shortage in India, oil companies have suggested reducing the size of domestic LPG cylinders from 14.2 kg to 10 kg.

⭐ U.S. President Donald Trump has announced a 5-day pause in the war against Iran.

 *SPORTS NEWS* 

🏀 The Chennai Super Kings (CSK) reunion event was held grandly at the Chepauk Stadium in Chennai. A large number of CSK fans enthusiastically attended and enjoyed the celebration.


24 March 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.03.2026




திருக்குறள்: 

குறள் 238: 

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் 
எச்சம் பெறாஅ விடின்.          

விளக்க உரை: 

தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.

பழமொழி :
Even a trash becomes worthy in a dexterous hand . 

வல்லவர் கை பட்டால் உதவா குப்பையும் உயர் மதிப்படையும் 

இரண்டொழுக்க பண்புகள் :.

1.போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.

2.என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.

பொன்மொழி : 

ஒரு முள் குத்திய அனுபவம், காடளவு எச்சரிக்கைக்குச் சமம்.

பொது அறிவு : 

01.சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) எங்கு அமைந்துள்ளது?

 நெதர்லாந்து -ஹேக் நகர் (Netherland -Hague) 

02. தமிழின் முதல் காப்பியம் எது?

 சிலப்பதிகாரம்-Silappatikaram

English words :

Campaign – Activities to win votes

Manifesto – Promises made by a party

தமிழ் இலக்கணம்: 

காற்றுக்கு பொருளோடு வைக்கப் பட்டுள்ள பெயர்கள் குறித்து இன்று பார்ப்போம்

தெற்கில் இருந்து வீசும் இதமான காற்று - தென்றல்

வடக்கிலிருந்து வீசும் குளிர்ந்த காற்று - வாடை

கிழக்கிலிருந்து வீசும் காற்று - கொண்டல் 

மேற்கிலிருந்து வீசும் காற்று - கச்சான்/மேலைக் காற்று 


      தொடரும் நாளை

அறிவியல் களஞ்சியம் :

தட்டான் பூச்சிகளுக்கு (Grasshoppers) அவற்றின் வயிற்றுப் பகுதியில் காதுகள் உள்ளன.

மார்ச் 24

உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day)

உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day), மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டில், 8.6 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டனர், 1.3 மில்லியன் மக்கள் இந்நோயால் இறந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த, அல்லது நடுத்தர வருமானங் கொண்ட நாடுகளைச் சேர்ந்தோர் ஆவர்
நீதிக்கதை

 அழுக்கு சட்டை

புத்தக மூட்டையுடன் பள்ளிக்குக் கிளம்பிய அப்பு அம்மாவுக்கு டாட்டா சொல்லிக் கொண்டு புறப்பட்டான். “ஏண்டா இன்னைக்கு குளிச்சியா” என்றாள் அப்புவின் அம்மா.

“நேரமாச்சும்மா, நாளைக்கு குளிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஓடினான். அப்பு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். அப்புவின் அம்மாவிற்குப் பெருமையாக இருந்தது.

அடுத்த நாள் வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் அப்புவிடம்தான் வந்தார். “ஏன் அழுக்கு சட்டையை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். துவைத்துப் போடக்கூடாதா?” என்று ரகசியமாக அவனிடம் கேட்டார்.

“மறந்திட்டேன் சார்” சமாதானம் சொன்னான் அப்பு. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கிய அப்பு ஏனோ தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை. பல நாட்கள் அப்பு பல் விளக்காமலேகூட பள்ளிக்குப் போயிருக்கிறான்.

அப்போது பையன்கள் இவனிடம் கேட்டால், “யானை பல் விளக்குகிறதா” என்று கிண்டலாகப் பதில் சொல்வான். அப்புவின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை கூறியும் அவன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவே இல்லை.

அவன் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருந்தது. ஆனால் பையன்கள் இவனை “அழுக்குமாமா” என்று அழைத்தனர். அரையாண்டுத் தேர்வு வந்தது. அப்பு விழுந்து விழுந்து படித்தான். முதல் மார்க்கை வேறு யாரும் தட்டி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

“டேய் குளிச்சிட்டுப் போய் படிடா” இது அப்புவின் அம்மா. “குளிக்கிற நேரத்துல ஒரு பாடம் படிக்கலாம்மா” என்பான் அப்பு. பரிட்சைக்கு இன்னும் இரண்டு நாள் இருந்தது. அப்போது அப்புவுக்கு திடீரென்று பல்வலி வந்தது. வலியோடு பள்ளிக்கூடம் சென்றான்.

மாலை வீட்டிற்கு வருவதற்குள் அவன் முகத்தில் தாடைப்பகுதி பெரியதாக வீங்கிவிட்டது. விண் விண் என்று வலித்தது. உடம்பு அனலாக கொதித்தது. அப்புவின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமாக ஏதோ செய்தார்கள். எதுவும் சரிப்படவில்லை.

விடிந்தால் அரையாண்டுத் தேர்வு. அப்பு புலம்பிக் கொண்டே இருந்தான். அவனால் வலியைத் தாங்க முடியவில்லை. ஆசிரியர் அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.

அடுத்த நாள் மதுரையில் அப்புவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. “பல்வலிக்கு காரணமாக இருந்த சொத்தைப் பல்லை உடனடியாக எடுக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து” என்றார் டாக்டர்.

அப்பு அரையாண்டுத் தேர்வுக்கு போகமுடியவில்லையே என்று அழுது கொண்டிருந்தான். “தினந்தோறும் பற்களை சுத்தம் செய்தால் இப்படிப்பட்ட பிரச்சினையெல்லாம் வரவே வராது” என்றார் டாக்டர்.

அப்பு ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தான். அரையாண்டுத் தேர்வு முடிந்து அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்தது. அன்று வகுப்பில் ரேங்க் கார்டு கொடுக்கப்பட்டது. “முதல் மார்க் ரங்கராஜன்” என்று ஆசிரியர் பெயரைப் படித்தபோது அப்பு தேம்பி அழுதான்.

ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார். “சுவற்றை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும்” என்றார். அப்பு மௌனமாக இருந்தான்.

அடுத்தநாள் அவன் பள்ளிக்கு “பளிச்” என்று வந்தான்.

“அழுக்குமாமா இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாண்டா” என்று ஒருவன் சொல்ல பையன்கள் “கொல்” லென்று சிரித்தனர்.

அப்புவுக்கும் சிரிப்பு வந்தது.

இன்றைய செய்திகள்

24.03.2026

⭐ ஈரானில் உள்ள பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அவர்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை அனுப்பி வருகிறது. "இந்தியாவின் கருணையையும் மனிதநேயத்தையும் ஒருபோதும் மறக்க மாட்டோம் என ஈரான் கூறியுள்ளது.

⭐அமெரிக்க - ஈரான் போரில் ஈரான் மிக பெரிய அளவில் சேதத்தை சந்தித்துள்ளது.
இந்த போரால் 5 ஆயிரத்திற்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர்.

⭐வளைகுடா நாடுகள் குடிநீருக்கு 90% கடல் நீரை தான் நம்பியிருக்கின்றன. கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டால் பல நாடுகளில் குடிநீர் பஞ்சம் ஏற்படும்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀நியூசிலாந்துக்கு எதிரான 4வது 'டி-20' போட்டியில் தென் ஆப்ரிக்க அணி, 19 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

🏀 இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள்
மோதும் கிரிக்கெட் டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ)அறிவித்துள்ளது.

Today's Headlines

⭐ In a situation where several lakh people in Iran are affected, India has been continuously sending aid. Iran has stated, We will never forget India’s compassion and humanity.

⭐ In the US–Iran war, Iran has suffered massive damage. More than 5,000 people have lost their lives due to this conflict.

⭐ Gulf countries depend on seawater for about 90% of their drinking water. If desalination plants are attacked, many countries could face severe drinking water shortages.

 *SPORTS NEWS* 

🏀 In the 4th T 20 match against New Zealand, South Africa won by 19 runs.

🏀 Cricket Australia (C A) has announced that the Test series between India and Australia will begin in January next year.


JOIN KALVICHUDAR CHANNEL