t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

10 July 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.07.2026


திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:45 பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:447

குறள்:

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.

பொருள்:

கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.

பழமொழி :
As you sow, so You Reap

வினை விதைத்தவன் விதை அறுப்பான்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1.போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால், எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

 2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.

பொன்மொழி : 

தன்னம்பிக்கை இருந்தால் தடைகள் கூட படிக்கட்டுகளாக மாறும்.

Thought for the Day :

Your attitude determines your direction.

பொது அறிவு : 

1.கிரிக்கெட் விளையாட்டில் "God of cricket" என அழைக்கப்படும் வீரர் யார்? 

சச்சின் டென்டுல்கர். 

2. கிரிக்கெட் வீரர் சச்சின் டென்டுல்கர் அவர்களின் சுயசரிதையின் பெயர் என்ன? 

"Playing it my way."

English words :

Locate – Find, கண்டறி.

Modify – Change, மாற்றியமை

புவியியலும் சுற்றுசூழலும் :

நாட்டை நேசிப்பது அதன் சட்டங்களை மதிப்பதிலிருந்து தொடங்குகிறது."சமத்துவம் ஒரு நல்ல சமுதாயத்தின் அடையாளம்.

NMMS :

MAT 

விடுபட்ட உறுப்பைக் கண்டுபிடி. 




(1) 42. 

(2) 33. 

(3) 44. 

(4)36. 

விடை: (3) 44

ஜூலை 10

சீகன் பால்க் அவர்களின் பிறந்தநாள்

சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg, ஜூலை 10, 1682 - பிப்ரவரி 23, 1719) என்பவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவர். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் பைபிள் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது. முதன் முதல் இந்தியாவில் அச்சகத்தை ஆரம்பித்தவர். முதன் முதல் இந்தியாவில் காகித ஆலையை ஆரம்பித்தவர். முதன் முதல் தமிழ் நாள்காட்டியை அச்சிட்டு வெளியிட்டவர். முதன் முதல் தமிழ் உரைநடையை அறிமுகப்படுத்தியவர். முதன் முதல் பெண்கள் பள்ளியை ஆரம்பித்தவர்.முதன் முதல் ஏழை பிள்ளைகளுக்கு காப்பகத்தை துவங்கியவர். முதன் முதல் பெண்களுக்கு தையல் கூடம் ஆரம்பித்தவர். முதன் முதல் மதிய உணவு வழங்குவதை துவங்கியவர். முதன் முதல் பள்ளி பிள்ளைகளுக்கு பாடநூலை அச்சிட்டவர்.  முதன் முதல் தமிழ் புரோட்டஸ்டன்ட் ஆலயத்தை கட்டினவர். முதன் முதல் பல் சமய உரையாடலை துவங்கினவர்.முதன் முதல் தமிழ் அகராதியை உருவாக்கினவர். முதன் முதல் தென்னிந்திய கடவுள்களின் வரலாற்றை எழுதியவர்.
நீதிக்கதை

 "நெகிழிப் பாடம்"

ஒரு  கிராமத்தில் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் வழியில், ஒரு மாடு சாலையோரத்தில் கிடந்த நெகிழிப் பையைத் தின்றுகொண்டிருப்பதைப் பார்த்தார்கள். அதை கண்டதும் அவர்கள் மிகவும் வருந்தினர்.

அன்று பள்ளியில் ஆசிரியர் நெகிழியின் தீமைகளைப் பற்றி விளக்கினார். "நெகிழி மண்ணில் எளிதில் மக்காது. அதை விலங்குகள் தின்றால் அவற்றின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். மேலும், நெகிழி சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும்," என்றார்.

அதை கேட்ட மாணவர்கள், அடுத்த நாள் முதல் நெகிழியைத் தவிர்ப்பது, துணிப்பையை மட்டுமே பயன்படுத்துவது என முடிவு எடுத்தனர். தங்கள் நண்பர்களுக்கும் துணிப்பைகளைப் பயன்படுத்தச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் 

சில மாதங்களில் அந்தக் கிராமத்தில் நெகிழிப் பயன்பாடு மிகவும் குறைந்தது. தெருக்களும் தூய்மையாக இருந்தன. விலங்குகளும் பாதுகாப்பாக வாழத் தொடங்கின.

நீதி:

நெகிழியைத் தவிர்ப்போம்; இயற்கையையும் உயிரினங்களையும் காப்போம்.

இன்றைய செய்திகள்

10.07.2026

🗒️பள்ளிக்கல்வியின் முக்கிய குறியீடுகளில் தேசிய சராசரியை விட சிறந்து விளங்கும் தமிழ்நாடு - மத்திய அரசின் அறிக்கையில் தகவல்.

🗒️ "செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செயலி உருவாக்கம்" எனும் பயிற்சி வகுப்புகள் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில்  சென்னையில், நடைபெறவுள்ளது.

🗒️ஏலத்திற்கு வரும் டைனோசர் எலும்புக்கூடு; ரூ.250 கோடிக்கு ஏலம் போக வாய்ப்பு.  கேரி கஸ் லிககிங்கை கவுரவிக்கும் விதமாக டைனோசருக்கு அவரின் பெயரே “கஸ் டி-ரெக்ஸ்” எனப் பெயரிடப்பட்டது.

 விளையாட்டுச் செய்திகள்

🏀உலகக் கோப்பை கால்பந்து காலிறுதி: பிரான்ஸ்-மொராக்கோ நாளை மோதல். அர்ஜென்டினா, முன்னாள் சாம்பியன்களான பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து உள்பட 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

🏀விம்பிள்டன் டென்னிஸ்: ஸ்வரேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

Today's Headlines

🗒️ Tamil Nadu outperforms the national average in key school education indicators, according to a report by the Central Government.

🗒️ A training programme on "App Development Using Artificial Intelligence" will be conducted in Chennai by the Entrepreneurship Development and Innovation Institute (EDII).

🗒️ Dinosaur skeleton to go up for auction; expected to fetch ₹250 crore.
The dinosaur has been named "Gus T-Rex" in honour of Gary Gus Lickking.

Sports News

🏀 FIFA World Cup Quarter-finals: France will face Morocco tomorrow.
Argentina, former champions France, Spain, England, and four other teams have advanced to the quarter-finals.

🏀 Wimbledon Tennis: Alexander Zverev advances to the semi-finals.


9 July 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.07.2026


திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:45 பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:446

குறள்:

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.

பொருள்:

தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.  

பழமொழி :
As rare as hen's teeth.

அத்தி பூத்தார் போல.

இரண்டொழுக்க பண்புகள் :.

1.போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால், எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

 2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.

பொன்மொழி : 

அறிவு வளர வளர பணிவும் வளர வேண்டும்.

Thought for the Day :

Small steps taken every day lead to great achievements.

பொது அறிவு : 

1.உலகில் அதிகமாக விளையும் காய்கறி எது? 

உருளைக்கிழங்கு. 

2. மனித உடலின் மிகவும் நீளமான தசை எது? 

நாக்கு.

English words :

Justify – Defend, நியாயப்படுத்து.

Knock – Strike, தட்டு.

புவியியலும் சுற்றுசூழலும் :

உள்ளாட்சி அமைப்புகள் மூன்றாக பிரிக்கப் பட்டுள்ளது.

1. கிராம பஞ்சாயத்து

2. நகராட்சி

3. மாநகராட்சி

NMMS :

MAT 

பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி 

(1) வட்டம் 

(2) இணைகரம் 

(3) சாய்சதுரம் 

(4) சரிவகம் 

விடை: (1) வட்டம்
ஜூலை 09

9 ஜூலை 1875 - இந்தியாவின் முதல் பங்குச் சந்தையான மும்பை பங்குச் சந்தை இந்த நாளில் நிறுவப்பட்டது.
நீதிக்கதை

  "விக்னேஷின் ஒரு நாள்"

ஒரு நகரத்தில் விக்னேஷ் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு எப்போதும் கைபேசி, தொலைக்காட்சி, வீடியோ விளையாட்டுகள்தான் பிடிக்கும். பள்ளி முடிந்ததும் வீட்டிற்குள் சென்று கதவை மூடிக்கொண்டு அவற்றிலேயே நேரத்தை கழிப்பான்.


ஒருநாள் பள்ளி விடுமுறை . பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்தனர். வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்த போது மின்சாரம் தடைப்பட்டது. 


 வேறு வழியில்லாமல் வீட்டிற்கு அருகிலிருந்த பூங்காவிற்குச் சென்றான். அங்கே வண்ணத்துப்பூச்சிகள் மலர்களைச் சுற்றிப் பறப்பதையும், தேனீக்கள் தேன் சேகரிப்பதையும், மரக்கிளைகளில் பறவைகள் இனிமையாகக் கீச்சிடுவதையும் பார்த்தான். 


மெல்லிய காற்று அவன் முகத்தைத் தழுவியது. அருகிலிருந்த குளத்தில் தாமரை மலர்கள் மலர்ந்திருந்தன. அந்த அழகைக் கண்டு விக்னேஷின் மனம் மகிழ்ச்சியால் நிரம்பியது.


அப்போது அங்கு நடை பயிற்சி செய்து கொண்டிருந்த கவுன்சிலர் அண்ணன்,, "என்ன தம்பி, இயற்கையை ரசிக்கிறாயா? நல்லா இருக்கா ?” என்று கேட்டார். “ஆமாம் அண்ணா. இவை எல்லாம் பார்க்க ரொம்ப அழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு” என்றான். 


அந்த அண்ணன்,“ஆமாம் தம்பி, இயற்கையை ரசிக்கக் கற்றுக்கொண்டால் மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். இந்த அழகை எந்தத் திரையும் தர முடியாது,. உனக்கு ஓய்வு நேரங்களை இயற்கையோடு செலவிட்டுப் பார். இன்னும் மகிழ்ச்சியடைவாய் " என்றார்.


அந்த நாளிலிருந்து விக்னேஷ் தினமும் சிறிது நேரமாவது வெளியில் சென்று மரங்கள், மலர்கள், பறவைகள், சூரிய உதயம், மாலைச் சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை ரசிக்கத் தொடங்கினான்.


 இதனால் அவன் மனமும் அமைதியாகி, படிப்பிலும் நல்ல முன்னேற்றம் காண ஆரம்பித்தான்.


நீதி: 

இயற்கையை ரசித்து வாழ்வது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் தரும். 🌿🌸

இன்றைய செய்திகள்

09.07.2026

🗒️முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு செட்டிநாடு குழுமம் ரூ.3 கோடி நன்கொடை. செட்டிநாடு குழுமம் தனது பல்துறை வணிகங்கள் மூலம் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களித்து வருகிறது.

🗒️34 கோடி சந்தாதாரர்களுக்கு 15-ந்தேதிக்குள் 8.25 சதவீத பி.எப். வட்டி வந்து சேரும்: மத்திய மந்திரி அறிவிப்பு.

🗒️சீனாவில் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி - தொடரும் தீவிர மீட்புப் பணிகள்.

 விளையாட்டுச் செய்திகள்

🏀திட்டங்களை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வெற்றி பெற்றோம் என இந்தியாவிற்கு எதிரான 3வது T20  போட்டியின் வெற்றிக்குப் பிறகு  இங்கிலாந்து கேப்டன் பெருமிதம். 

Today's Headlines

🗒️ Chettinad Group Donates ₹3 Crore to the Chief Minister's Public Relief Fund
The Chettinad Group has donated ₹3 crore to the Chief Minister's Public Relief Fund. Through its diverse business ventures, the group continues to contribute to India's development.

🗒️ 8.25% EPF Interest to Be Credited to 340 Million Subscribers by July 15: Union Minister. The Union Minister announced that the 8.25% Employees' Provident Fund (EPF) interest will be credited to the accounts of 340 million subscribers by July 15.

🗒️ 20 Killed in Severe Floods and Landslides in China; Rescue Operations Continue
At least 20 people have died after severe floods and landslides struck China. Intensive rescue operations are still underway.

Sports News

🏀 England's captain expressed pride after the victory in the third T20 match against India, stating that they had executed their plans excellently and succeeded.


8 July 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.07.2026


திருக்குறள்: 

பால் :  பொருட்பால்          

 இயல் : அரசியல்   

அதிகாரம்:45    பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:445

குறள்: 

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.  

பொருள்:
 
தகுதியான வழிகளை ஆராய்ந்து சொல்பவரையே கண்ணாகக் கொண்டு உலகம் நடத்தலால், மன்னவன், அவரை ஆராய்ந்து தன் சுற்றமாக்கிக் கொள்ளல் வேண்டும்.

பழமொழி :
Art is long and life is short

கல்வி கரையில் கற்பவர் நாள் சில.

இரண்டொழுக்க பண்புகள் :.

1.போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால், எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

 2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.


பொன்மொழி : 

பொறுமை கசப்பானது; அதன் பலன் இனிமையானது.

Thought for the Day :

Dream big, work hard, stay humble.

பொது அறிவு : 

1. நோபல் பரிசு எப்போதும் எந்த நாளில் வழங்கப்படுகிறது? 

டிசம்பர் 10.  

2. சர்வதே மனித உரிமைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 

 டிசம்பர் 10.

English words :

Generate – Produce, உருவாக்கு.

Illustrate – Explain, விளக்கிக் காட்டு.

புவியியலும் சுற்றுசூழலும் :

உலகின் மிகப் பெரிய நாடு – ரஷ்யா. இது 11 நேர மண்டலங்களைக் கொண்டுள்ளது. 

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு – இந்தியா

NMMS :

MAT 

வேறுப்பட்டதை கண்டுபிடி.




விடை: (2)

ஜூலை 08

செளரவ் கங்குலி அவர்களின் பிறந்தநாள்

சௌரவ் சந்திதாஸ் கங்குலி (Sourav Chandidas Ganguly; ஒலிப்புⓘ; பிறப்பு: சூலை 8, 1972) தாதா என அன்பாக அழைக்கப்படுகிறார். அதற்கு வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்பது அர்த்தமாகும். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரும் அணித்தலைவரும் ஆவார். தற்போது இவர் வங்காளத் துடுப்பாட்ட அவையின் தலைவராக உள்ளார்.[1] சர்வதேச துடுப்பாட்ட அரங்கில் மிகச் சிறந்த அணித் தலைவராகவும் மட்டையாளராகவும் விளங்கினார்.வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர் எனவே இவர் காட் ஆஃப் தெ ஆஃப் சைட் (வலது புறத்தின் கடவுள்) என அழைக்கப்படுகிறார்.
நீதிக்கதை

"நல்ல வார்த்தையின் சக்தி"

ஒரு பரபரப்பான கடை வீதியில் ரவி என்ற இளைஞன் பழக்கடை வைத்திருந்தான். அவன் எப்போதும், "இன்று வியாபாரம் எப்படி நடக்குமோ?,சரியாக இருக்காது", "யாரும் வாங்க வருகிற மாதிரி தெரியலையே. இன்றைய பழம் எல்லாம் விற்காமல் அழுகி விடுமோ?" என்று எதிர்மறையாகப் பேசிக்கொண்டே இருப்பான்.

அதே வீதியில் மீனா என்ற பெண் பூக்கடை வைத்திருந்தாள். அவள் எப்போதும், "இன்று நல்ல நாள்!", "எல்லாம் நன்றாக நடக்கும்!", "வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் வருவார்கள்!" என்று நேர்மறையான வார்த்தைகளையே பேசுவாள்.

ஒருநாள் இருவரின் கடைக்கும் ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்கள் வந்தனர். ரவி முகம் சுளித்து, சற்று சலிப்புடன் , "என்ன வேண்டும்?" என்று கேட்டான். வாடிக்கையாளர்களும் விரைவாக வாங்கிவிட்டு சென்றனர்.

மீனா மட்டும் புன்னகையுடன், "வணக்கம்! உங்களுக்கு என்ன பூ வேண்டும்? இன்று உங்கள் நாள் இனிமையாக அமையட்டும்!" என்று அன்பாகப் பேசினாள். வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்து, மீண்டும் மீண்டும் அவள் கடைக்கே வரத் தொடங்கினர்.

சில நாட்களுக்குப் பிறகு ரவி, "என் கடைக்கு ஏன் வாடிக்கையாளர்கள் குறைகிறார்கள்?" என்று கேட்டான்.

மீனா புன்னகையுடன், "நாம் பேசும் நல்ல வார்த்தைகளும், நேர்மறை எண்ணங்களும் மக்களின் மனதில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் உருவாக்கும். அதுவே வெற்றிக்கான முதல் படி," என்றாள்.

அன்று முதல் ரவியும் நேர்மறையாகப் பேசத் தொடங்கினான். சிறிது காலத்தில் அவன் கடையிலும் வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர்.

நீதி: 

நேர்மறை கருத்துகளும் நல்ல வார்த்தைகளும் நம்பிக்கையை வளர்த்து, வெற்றிக்கான பாதையைத் திறக்கும்.

இன்றைய செய்திகள்

08.07.2026

🗒️ஹிட்டாச்சி ஒப்பந்தம்: 
ரூ.1,000 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஹிட்டாச்சி (Hitachi) நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

🗒️கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் மீனாட்சி பகுதியில்  ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்ததுடன், கோழிக்கோடு–வயநாடு இரட்டை சுரங்கப்பாதை திட்ட பணியாளர்களை தேடும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

🗒️பிரதமர் மோடிக்கு இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

 *விளையாட்டுச் செய்திகள்*

🏀2-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி.

🏀விராட் கோலியுடன் கிரிக்கெட் விளையாட ஆசை என விம்பிள்டன் சாம்பியன் நோவக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

Today's Headlines

🗒️ Hitachi Agreement:
The Tamil Nadu Government has signed a Memorandum of Understanding (MoU) with Hitachi to invest ₹1,000 crore, creating 1,000 employment opportunities.

🗒️ One person died in a sudden landslide in the Meenatchi area of ​​Kerala's Wayanad district, and intensive search and rescue operations are underway for workers involved in the Kozhikode-Wayanad twin tunnel project.

🗒️ Prime Minister Narendra Modi has been conferred Indonesia's highest civilian award.

Sports News

🏀 2nd ODI:
Sri Lanka defeated India in the second One Day International match.

🏀 Djokovic's Wish:
Novak Djokovic, the Wimbledon champion, said he would like to play cricket with Virat Kohli.


7 July 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.07.2026






திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:45 பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:444

குறள்:

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை

பொருள்:

அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்.

பழமொழி :
Appearance is deceitful.

உருவத்தை கண்டு ஏமாறாதே.

இரண்டொழுக்க பண்புகள் :.

1.போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால், எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

 2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.

பொன்மொழி : 

நம்பிக்கையுடன் தொடங்கும் ஒவ்வொரு செயலும் வெற்றியை நோக்கிச் செல்லும்.

Thought for the Day :

Discipline is the bridge between goals and achievement.

பொது அறிவு : 

1. தமிழ்நாடு மாநிலம் உருவாகும் போது எத்தனை மாவட்டங்கள் இருந்தன? 

13 மாவட்டங்கள்

2. மூளையை தூண்டி நினைவுத்தின் அதிகரிக்க வைக்கும் உணவு எது? 

வால்நட்.

English words :

Require – Need, தேவைப்படு.

Conclude – Finish, முடி

புவியியலும் சுற்றுசூழலும் :

உலகின் மிகப் பெரிய கண்டமாக – ஆசியா திகழ்கிறது.
உலகின் சிறிய கண்டம் மற்றும் நாடாக விளங்குவது – ஆஸ்திரேலியா ஆகும்

NMMS :

MAT 

பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி

 (1) PLAY. 

(2) WRITE. 

(3) THINK. 

(4) WALK.

 விடை: (3) THINK

ஜூலை 07

மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni), சுருக்கமாக எம் எஸ் தோனி என்று (பிறப்பு: சூலை 7, 1981) அறியப்படும் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சர்வதேசத் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வரையிட்ட நிறைவுப் போட்டிகளுக்கும், 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக இருந்தார். இவரின் தலைமையில் 2007 ஐசிசி உலக இருபது20 2007-08 பொதுநலவய போட்டித் தொடர், 2010 மற்றும் 2016 ஆசியக் கோப்பை, 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை மற்றும் 2013 ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணம் ஆகிய கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. நடுவரிசை மட்டையாளரும் இலக்குக் கவனிப்பாளருமான இவர் ஒநாப போட்டிகளில் 10,000க்கும் மேற்பட்ட ஓட்டங்களை எடுத்துள்ளார். இவர் ஒரு நாள் பன்னாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆட்டத்தினை முடித்துவைக்கும் திறன் கொண்டவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.மேலும் அவர் சிறந்த அணித்தலைவராகவும் கருதப்படுகிறார்.
நீதிக்கதை

 நீதிக்கதை: 

"ஆரோக்கியமே உண்மையான செல்வம்"


ஒரு ஊரில் கார்த்திக், பிரியா மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் சஞ்ஜய், வந்தனா ஆகியோர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.


சஞ்ஜய்க்கு தினமும் பள்ளி முடிந்து வரும்போது பர்கர், சிப்ஸ், குளிர்பானம் போன்ற ஜங்க் ஃபுட் சாப்பிடும் பழக்கம் இருந்தது. அம்மா வீட்டில் சத்தான உணவு செய்து வைத்தாலும், "எனக்கு இதுதான் பிடிக்கும்!" என்று கூறி ஜங்க் ஃபுட்டையே விரும்பி சாப்பிடுவான்.


சில நாட்களில் சஞ்ஜய்க்கு அடிக்கடி வயிற்றுவலி, சோர்வு, பல் வலி ஆகியவை ஏற்பட ஆரம்பித்தன. விளையாடவும் முடியவில்லை. மருத்துவரிடம் சென்றபோது, "அதிகமாக ஜங்க் ஃபுட் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கவில்லை. இனிமேல் வீட்டில் சமைக்கும் ஆரோக்கியமான உணவைச் சாப்பிட வேண்டும்," என்று அறிவுரை கூறினார்.


அந்த நாளிலிருந்து சஞ்ஜயும்  குடும்பத்தினரும் சேர்ந்து தினமும் சத்தான உணவுகளை சாப்பிடத் தொடங்கினர். பழங்கள், காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை உணவில் சேர்த்தனர்.


 சில வாரங்களிலேயே சஞ்ஜயின் உடல்நலம் நன்றாகி, மீண்டும் உற்சாகமாக பள்ளிக்கும் விளையாட்டிற்கும் செல்ல ஆரம்பித்தான்.


அப்போது சஞ்ஜய் தனது தங்கையிடம், "சுவைக்காக மட்டும் ஜங்க் ஃபுட் சாப்பிடக் கூடாது. ஆரோக்கியமான உணவுதான் நம்மை வலிமையாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும்," என்று கூறினான்.


நீதி: ஜங்க் ஃபுட்டை அதிகமாகச் சாப்பிடாமல், சத்தான உணவை உண்பதே நல்ல ஆரோக்கியத்திற்கான வழி.


இன்றைய செய்திகள்

07.07.2026

🗒️உணவு பாதுகாப்புச் சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்.

🗒️இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயண திட்டத்தில் முன்னேற்றம் - ‘ககன்யான்’ சோதனை வெற்றி,முன்னதாக
இஸ்ரோ 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சோதனைகள்..
🗒️கோடைக்கால வெப்ப அலை மற்றும் காலநிலை மாற்றத்தின் எதிரொலியாக, தெற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயினால்  30 ஆயிரம் ஏக்கர் மரங்கள் கருகின.

 விளையாட்டுச் செய்திகள்

🏀விம்பிள்டனில் ஜானிக் சின்னர் அசத்தல்... தொடர்ந்து 5-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறி சாதனை.

Today's Headlines

🗒️ Chief Minister Joseph Vijay has written to the Prime Minister urging a reconsideration of the proposed amendments to the Food Safety Act.

🗒️ India's first human spaceflight mission has achieved another milestone as the Gaganyaan test was successful. Earlier, ISRO had conducted more than 8,000 tests for the mission.

🗒️ As a result of summer heatwaves and climate change, 30,000 acres of trees were scorched by severe wildfires in Southern European countries.

Sports News

🏀 At Wimbledon, Jannik Sinner continued his impressive run by reaching the quarterfinals for the fifth consecutive time, setting a remarkable record.


வழக்கமான டெட்டை விட கடினமான வினாக்கள்சிறப்பு தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி

ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழக அரசு மீது ஆசிரியர்கள் குற்றச்சாட்டு தொலைக்காட்சி செய்தி

 ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழக அரசு மீது ஆசிரியர்கள் குற்றச்சாட்டு  தொலைக்காட்சி  செய்தி 



6 July 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.07.2026



திருக்குறள்: 

பால் :  பொருட்பால்          

 இயல் : அரசியல்   

அதிகாரம்:45    பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:443

குறள்: 

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.  

பொருள்:

  பெரியோரையே விரும்பித் தமக்குரிய சுற்றத்தினராகப் பெற்றுக் கொள்ளுதல், பெறுதற்கரிய பேறுகளுள் எல்லாம் அரிதான பெரும்பேறு ஆகும்.

பழமொழி :
After a dinner sleep a while

உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு

இரண்டொழுக்க பண்புகள் :.

1.போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால், எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

 2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.


பொன்மொழி : 

வீழ்வது தோல்வியல்ல; வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி.

Thought for the Day :

Success is not final; failure is not fatal. It is the courage to continue that counts.

பொது அறிவு : 

1. சிவகாசி நகரத்தை ""குட்டி ஜப்பான்"" என அழைத்தவர் யார்? 

ஜவஹர்லால் நேரு. 

2. தமிழ்நாட்டில் வற்றாத ஜீவ நதி என்றழைக்கப்படும் ஆறு எது? 

தாமிரபரணி.

English words :

 Construct – Build, கட்டமை

Examine – Inspect, ஆராய்

புவியியலும் சுற்றுசூழலும் :

பூமியில் 7 கண்டங்களும் 5 பெருங்கடல்களும் உள்ளன.உலகின் மிகக் குளிரான கண்டம் – அண்டார்டிகா.

NMMS :

MAT 

பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி. 

 (1) (7,13)

 (2) (13,23)

 (3) (31,37) 

 (4) (81,83) 

 விடை: (4) (81,83)

நீதிக்கதை

நீதி கதை: "திருமண விழாவில் கிடைத்த பாடம்"

ஒரு கிராமத்தில் இம்ரான் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள், அவன் தனது குடும்பத்துடன் உறவினர் திருமணத்திற்கு சென்றான்.

திருமண மண்டபத்தில் வயதான தாத்தா, பாட்டிகள் பலர் நின்றுகொண்டிருந்தனர். ஆனால், இம்ரான் அவர்களைக் கவனிக்காமல், காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்து கைப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த அவனுடைய அக்கா ஹஸ்னா, "இம்ரான், பெரியவர்கள் நிற்கிறார்கள். நாம் எழுந்து அவர்களுக்கு இடம் கொடுப்பது மரியாதை," என்று கூறினாள்.

உடனே இம்ரான் எழுந்து தனது இருக்கையை ஒரு தாத்தாவுக்கு கொடுத்தான். தாத்தா புன்னகையுடன், "நல்ல பழக்கம்தான் மனிதனை உயர்த்தும். நீ நல்ல பிள்ளையாக வளர்வாய்," என்று ஆசீர்வதித்தார்.

அந்த ஆசீர்வாதத்தைக் கேட்ட இம்ரான் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அன்று முதல் எங்கு சென்றாலும் பெரியவர்களை மரியாதையுடன் நடத்தவும், அவர்களுக்கு முதலில் இடம் கொடுக்கவும் பழகினான்.

நீதி:

"பெரியவர்களை மரியாதையுடன் நடத்தினால், அவர்களின் ஆசீர்வாதம் நம் வாழ்க்கையை வளமாக்கும்." 

இன்றைய செய்திகள்

06.07.2026

*_தலைப்புச் செய்திகள்_*

🗒️மின்சார அளவீடு  கணக்கு  எடுக்கும் ஊழியர்களுக்கு செல்போன் வாங்க ரூ.10ஆயிரம் வழங்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு.

🗒️கீழடியை தொடர்ந்து கரிவலம்வந்தநல்லூரில் பூமிக்கு அடியில் கிடைத்த பழந்தமிழர் நகரம்
சுமார் 13 அடி நீளம் 13 அடி அகலம் கொண்ட சதுர வடிவ கிணற்று சுவரை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

🗒️எல்நினோ எச்சரிக்கை: பெங்களூருவில் குடிநீர் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிப்பு.

 *விளையாட்டுச் செய்திகள்*

🏀விம்பிள்டன் டென்னிஸ்: மேடிசன் கீஸ் வெற்றி
அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, சக நாட்டு வீராங்கனையான மேடிசன் கீஸ் உடன் மோதினார் .

Today's Headlines


🗒️ Tamil Nadu Government announces ₹10,000 for electricity meter readers to purchase mobile phones.

🗒️ Ancient Tamil settlement discovered at Karivalamvanthanallur after Keezhadi. Researchers have unearthed a square-shaped well structure measuring approximately 13 feet in length and 13 feet in width, indicating the presence of an ancient Tamil urban settlement beneath the ground.

🗒️ El Niño alert: Restrictions imposed on drinking water usage in Bengaluru.

Sports News

🏀 Wimbledon Tennis: Madison Keys wins. America's Amanda Anisimova faced fellow American Madison Keys, with Madison Keys emerging victorious.


JOIN KALVICHUDAR CHANNEL