. -->

adsense

Now Online

FLASH NEWS


Tuesday, 28 March 2023

அரசு ஊழியர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் இன்று (மார்ச் 28) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் பணிகள் பாதிக்கும் வாய்ப்புள்ளது.


தமிழக அரசு ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டம் ரத்து, அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும். 6 லட்சம் காலியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

பேரூராட்சி, மருத்துவத்துறை உட்பட பல துறைகளில் அவுட்சோர்ஸிங் முறையில் பணியிடம் நிரப்புவதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். கடந்த தேர்தலின் போது தி.மு.க., இவற்றை நிறைவேற்றுவதாக கூறி உறுதியளித்தது. அதன்பின் ஆட்சிக்கு வந்ததும் அவற்றை மறந்துவிட்டதாக ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் சமீபத்திய பட்ஜெட்டிலும் அரசு ஊழியர்களுக்கென எதுவும் சொல்லவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர். இதனால் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்காக இன்று ஒருநாள் மாநில அளவில் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். இதில் 60க்கும் மேற்பட்ட துறைவாரி சங்கங்கள் ஈடுபடுவதால் பணி பாதிக்கும்.

அவர்கள் கூறுகையில், ”தமிழ்நாடு அனைத்து சங்கங்களின் போராட்டக்குழு முடிவின்படி கோரிக்கைகளுக்காக பலகட்ட போராட்டங்களை நடத்தி விட்டோம். முன்பு 12.5 லட்சம் அரசு ஊழியர்கள் இருந்த நிலையில், தற்போது 8 லட்சம் பேர் உள்ளனர். காலிப்பணியிடங்கள் அதிகளவில் உள்ளன. அவற்றை நிரப்புவோம் என தேர்தல் வாக்குறுதியாக கூறினர். ஆனால் ஆட்சிக்கு வந்தபின் 1754 பணியிடங்களே நிரப்பப்பட்டுள்ளன.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வோம் என மாநில பிரதிநிதித்துவ மாநாட்டில் முதல்வர் உறுதியளித்து இருந்தார். அதுவும் நடக்கவில்லை. எனவே இந்த போராட்டம் தவிர்க்க முடியாதது” என்றனர்.

அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் செல்வம் கூறுகையில், ”இன்றைய போராட்டத்தையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் காலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் தீர்வு கிடைக்காவிடில், ஏப்ரல் 19ல் சென்னையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.

பிளஸ் 2 கணித பாடத்தில் சதம் குறைய வாய்ப்பு


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.03.2023



 திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: அழுக்காறாமை

குறள் எண் : 163
அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்.

பொருள் :
அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்

பழமொழி :
There are more ways to the wood than one
ஒரு ஊருக்குப் போகப் பல வழி உண்டு.

இரண்டொழுக்க பண்புகள் :

1. என் வாழ்வில் எப்போதும் நேர்மையான முறையில் காரியங்கள் செய்ய முயல்வேன்.

2. என் நண்பர்கள் நேர்மையற்ற காரியங்கள் செய்ய அழைத்தால் நிச்சயம் துணை போக மாட்டேன்

பொன்மொழி :

உலகிலேயே மிகப் பெரிய சுமையாக விளங்குவது மூட நம்பிக்கைதான்.

பொது அறிவு :

1. எந்த நாள் உலக சுற்றுலா தினமாக கொண்டாடப்படுகிறது ? 

 செப்டம்பர் 7. 

 2. புகையிலை எதிர்ப்பு நாள் எது? 

 மே 31.

English words & meanings :

 kimono - 👘 Japanese dress with wide sleeves and broad sash at the waist. noun. ஜப்பானிய ஆடை. பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :

மீன் வகைகளில் இருந்து வைட்டமின் பி12 அதிக அளவில் பெற முடியும். மத்தி, டூனா, சால்மன் உள்ளிட்ட மீன் வகைகளில் வைட்டமின் பி12 அதிக அளவில் இருக்கிறது.

மேலும் இதிலுள்ள புரதங்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், பாஸ்பரஸ், செலீனியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி3 ஆகிய ஊட்டச்சத்துக்களையும் சேர்த்து பெற முடியும்.

கணினி யுகம்

Alt + Esc

Cycle through items in the order in which they were opened.

Alt + underlined letter

Perform the command for that letter.



மார்ச் 28

மாக்சிம் கார்க்கி  




மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்: Алексе́й Макси́мович Пешко́в; 28 மார்ச் [யூ.நா. 16 மார்ச்] 1868 – 18 சூன் 1936) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி.[1] இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.

எந்நேரமும் குறிப்பேடு வைத்திருப்பார். தனக்குத் தோன்றுவதை அதில் எழுதுவார். 1892-ல் இவரது முதல் சிறுகதையான ‘மகர் சுத்ரா’ (Makar Chudra) வெளிவந்தது. மாக்சிம் கார்க்கி என்ற பெயரில் தொடர்ந்து எழுதிவந்தார். கார்க்கி என்ற சொல்லுக்கு கசப்பு என்பது பொருள்[4]

1898-ல் ‘ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்’ வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் ‘தி லோயர் டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன. இவரது உலகப் புகழ்பெற்ற ‘மதர்’ (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது. 1906ஆம் ஆண்டு டிசம்பரில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் 'ஆப்பிள்டன்' இதழில் தாய் முதற்பகுதியின் முன்பாகமும் 1907ஆம் ஆண்டு தாய் முழுவதும் வெளிவந்தன. இந்நூல் முதலில் வெளிவந்தது அமெரிக்காவில்தான். கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.

பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த தாய் (புதினம்) ’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.



நீதிக்கதை


கடலோரப் பகுதி கிராமமான நல்லூரில் வசித்து வந்த இரத்தினசாமி என்ற எளிய விவசாயிக்கு சொந்தமாக இருந்தது இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே. அவருக்கு மாணிக்கம், முத்து என்ற இரு மகன்கள் இருந்தனர். இருவரும் பள்ளிப் படிப்பை முடித்தனர். 



இரத்தினசாமி தனது வறுமையின் காரணமாக மகன்கள் இருவரையும் அழைத்து, நீங்கள் உங்கள் கல்வியை இத்துடன் முடித்துக் கொண்டு என்னைப்போல் விவசாயத்தில் ஈடுபடுகிறீர்களா? என்று கேட்டார். 



கல்வியில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்த மாணிக்கம், அப்பா, நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து, எனக்கு ஒரு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன் என்றான். இளையவன் முத்து, எனக்கு படிப்பில் நாட்டமில்லை. விவசாயம் செய்யவும் விருப்பமில்லை. நான் வியாபாரம் செய்ய விரும்புகிறேன் என்றான். 



இருவருக்குமே, விவசாயத்தில் நாட்டம் இல்லாததால், இரத்தினசாமி தன் நிலத்தை விற்று, கிடைத்த தொகையை இருவருக்கும் சமமாகப் பங்கிட்டு அளித்தார். மாணிக்கம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து செவ்வனே பயின்று தேறி, நல்லதொரு வேலையில் அமர்ந்தான். முத்து தனக்குக் கிடைத்த தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்து வியாபாரம் தொடங்கினான். 



ஆனால், சில ஆண்டுகளில் வியாபாரத்தில் பெருத்த நட்டம் ஏற்பட்டு முதலீடு செய்த தொகையை முற்றிலும் இழந்து நின்றான். மனமுடைந்து பரிதாபமாக நின்ற முத்துவை நோக்கி மாணிக்கம், தம்பி கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம். நான் பெற்றுள்ள கல்வி எனும் செல்வத்தினால்தான், எனக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய வேலை கிடைத்தது. 



ஒருவன் பெற்றுள்ள கல்வி எனும் செல்வம் காலத்தால் அழியாதது. அதை யாரும் திருடிச் செல்ல முடியாது. அதை யாராலும் சேதமாக்கவும் முடியாது. ஆனால் பணம் அவ்வாறு அல்ல, பணம் எனும் செல்வம் நிலையற்றது என்று கல்வியின் பெருமையை உணர்த்தினார். 



நீதி :


கல்வி யாராலும் அழிக்க முடியாத செல்வம்.

இன்றைய செய்திகள்

28.03. 2023

* 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பாடங்களில் நூற்றுக்கு நூறு (சென்டம்) மதிப்பெண் வாங்கினால் ரூ.10,000 பரிசு உள்ளிட்ட 27 அறிவிப்புகளுடன் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

* கரோனா தொற்று பாதிப்புக்கு பிறகுசர்க்கரை நோய், ஞாபக மறதி,சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளதாக அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

* தமிழகத்தில் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

* டெபுடேஷனில் வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றும் அதிகாரிகள் குறிப்பிட்ட காலத்தை தாண்டியும் அங்கு தங்கியிருந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

* இலங்கை அதிபருடன் இந்திய குழு சந்திப்பு: எரிசக்தித் துறை மேம்பாடு குறித்து கலந்துரையாடல்.

* பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தப்போவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளது உலக நாடுகளிடயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர்: இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி 'சாம்பியன்'.

* உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா வெண்கலம் வென்றார்.

* சென்னையில் ஐ.பி.எஸ். அணிக்கு எதிரான கால்பந்து போட்டி: 3-1 என்ற கோல் கணக்கில் ஐ.ஏ.எஸ். அணி வெற்றி.

Today's Headlines

* Education sector has been given a lot of importance in the Chennai Corporation Budget with 27 announcements including a Rs.10,000 prize for getting a hundred out of 100 (centum) marks in Class 12 general examination subjects.

 * Doctors at Apollo Hospital have said that after the corona virus, problems like diabetes, memory loss and respiratory disorders have increased among the public.

 * Tamil Nadu likely to receive rain at one or two places for 4 days: Chennai Meteorological Department Information.

 * The central government has warned that disciplinary action will be taken against officers who are working abroad on deputation and stay there beyond the specified period.

* Indian delegation meets Sri Lankan President: Discusses energy sector development.

* Russian President Putin's announcement that he will deploy nuclear weapons in Belarus has caused a stir in the world.

* Swiss Open Badminton Series: India's Chadwick-Chirag Shetty pair got 'Championship'

 * World Cup Shooting: India's Shipt Kaur Samra won the bronze.

 * In Chennai Football Match IAS Team won the IPS team won by 3-1.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, 27 March 2023

திடக்கழிவு மேலாண்மை திட்ட வள மீட்பு பூங்கா அமையவுள்ள இடத்தை மாற்ற மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!




திருச்சிராப்பள்ளி திருவரம்பூர் தாலுகா கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி எழில் நகர் குடியிருப்போர் சங்கம், திருச்சி வளர்ச்சி குழுமம் சார்பில் திருச்சிராப்பள்ளி எழில் நகர் குடியிருப்புக்கு அருகில் மயானம் மற்றும் குளம் உள்ள பகுதி அருகே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வள மீட்பு பூங்கா அமைவதை இடமாற்றக்கோரி திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் குறைதீர் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி வளர்ச்சி குழும தலைவர் வழக்கறிஞர் திலிப், செயலர் யோகா விஜயகுமார், துணைத் தலைவர் தங்கமணி, லிவிங்ஸ்டன் தாஸ், திருவரம்பூர் ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார், எழில் நகர் குடியிருப்போர் சங்கத் தலைவர் ஜெயராமன், பொதுச் செயலாளர் கயாஸ் அகமது, பொருளாளர் துரைராஜன், அமைப்புச்செயலாளர் மாறன், செயல் தலைவர்கள் அருள்ராஜ், கிரேசி துரைராஜன் உறுப்பினர்கள் ராஜ்குமார், ராஜவேலு, பத்மநாபன், துணைத் தலைவர்கள் மூர்த்தி, லூக்காஸ், துணை பொது செயலர்கள் பானுமதி, மோகன் தாஸ், அமைப்புச் செயலர்கள் சுமித்ரா, சுப்பிரமணியன், மாணிக்க விநாயகர், சலோமி, துரைராஜ் உட்பட எழில் நகர் ஆபிஸர் டவுன் பொதுமக்கள்,
மக்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தர பாதிப்பு கழிவுகளின்
துர்நாற்றம், சுகாதாரக் சீர்கேடு,
தொற்றக்கூடிய நோய்களின் பரவல் உள்ளிட்ட ஆபத்து காரணிகளை எடுத்துரைத்து இடம் மாற்ற கோரிக்கை விடுத்தனர்.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் - மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுட,ன் ஆய்வு கூட்டம் - ஆணையர் செயல் முறைகள்

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் - மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் 29.03.23, 30.03.23 அன்று நடை பெறுதல் சார்ந்து- பள்ளி கல்வி ஆணையர் செயல் முறைகள்


Sunday, 26 March 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.03.2023





திருக்குறள் :

பால்: அறத்துப்பால், 

அதிகாரம்: அழுக்காறாமை, 

இயல் : இல்லறவியல், 

குறள் எண் : 163. 

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.

விளக்கம்:
தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.

பழமொழி :
Anybody can make history.

எந்த மனிதனும் வரலாறு படைக்கலாம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. என் வாழ்வில் எப்போதும் நேர்மையான முறையில் காரியங்கள் செய்ய முயல்வேன்.

2. என் நண்பர்கள் நேர்மையற்ற காரியங்கள் செய்ய அழைத்தால் நிச்சயம் துணை போக மாட்டேன்

பொன்மொழி :

பதிலை கண்டறிவதை நோக்கி, முன்னோக்கி நகர்வதில் உங்கள் ஆற்றலை செலவிடுங்கள்.

பொது அறிவு :

1. தேனீக்களை மட்டும் தின்று உயிர் வாழும் பறவை எது? 

ராக்கட் பறவை . 

2.நுரையீரல் மூலம் சுவாசிக்கும் கடல் வாழ் உயிரினம் எது?

 திமிங்கலம்.

English words & meanings :

 kinswoman - female relative. noun. That lady doctor is my kinswoman. உறவுப் பெண்மணி. பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :

கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இதில் உள்ள நீர்ச்சத்து சருமத்தினை மென்மையாக வைத்துக் கொள்வதற்கும், நரம்புகளுக்கு வலுவூட்டவும் உதவுகிறது. மேலும் சளி ,இருமலை குறைக்கக் கூடிய மருந்தாக இந்த கத்தரிக்காய் உள்ளது. மேலும் உடலில் அதிகமாக சேரும் இரும்பு சக்தியினை சமப்படுத்தவும் இது உதவுகிறது. கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது. சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலன் காக்கப்படும். சுவாச கோளாறுகள், கல்லீரல் பிரச்சனைகள், மூலம், அனைத்தையும் சரி செய்ய உதவுகிறது.
கணினி யுகம்

Alt + A

Set focus to the first icon in the Suggested actions menu.

Alt + F8

Show your password on the sign-in screen.


மார்ச் 27

உலக நாடக அரங்க நாள்  
உலக நாடக அரங்க நாள் (World Theatre Day) ஆண்டுதோறும் மார்ச் 27 ஆம் நாளன்று பன்னாட்டு அரங்க நிறுவனத்தினால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலக நாடக அரங்க நாள் உலக நாடக அரங்க நிறுவனத்தினால் 1961 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு இந்நிறுவனத்தின் மையங்களிலும், பன்னாட்டு நாடக அரங்க சமூகங்களினாலும் கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வை ஒட்டி பல்வேறு தேசிய, பன்னாட்டு நாடக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்நாளின் முக்கிய நிகழ்வாக, உலக மட்டத்தில் புகழ் பெற்ற ஒரு நாடகக் கலைஞர் ஒருவர் இந்நாளின் முக்கியத்துவம் குறித்த தனது பிரதிபலிப்புகளையும், உலக கலாச்சார அமைதி பற்றியும் செய்தி ஒன்றை விடுப்பார். இவ்வாறான முதலாவது செய்தியை 1962 ஆம் ஆண்டில் பிரான்சிய எழுத்தாளரும், நாடகக் கலைஞருமான சான் காக்டோ விடுத்தார்.



யூரி அலெக்சியேவிச் ககாரின் 








யூரி அலெக்சியேவிச் ககாரின் (Yuri Alekseyevich Gagarin, உருசியம்: Ю́рий Алексе́евич Гага́рин; 9 மார்ச் 1934 – 27 மார்ச் 1968) உருசிய விண்வெளி வீரர் ஆவார். விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.


நீதிக்கதை

கதை :
ஒரு தோப்பில் ஒரு மயில் வசித்து வந்தது. அந்த மயிலுக்கு தன் அழகை எண்ணி அதிக பெருமை. ஒரு நாள் அந்த தோப்புக்கு எங்கிருந்தோ வந்து சேர்ந்தது குரங்கு ஒன்று. அந்த குரங்கிடம் தன் தோகையை காட்டி பெருமைப்பட்டு கொண்டது மயில். அதற்கு குரங்கோ, மயிலே இந்த தோகையையும் அதை விரித்து நீ ஆடுவதையும் பார்க்க மனிதர்கள் உன்னை தேடி வர வேண்டும். 

ஆனால் அந்த குயிலை பார். தினமும் பறந்து மனிதர்கள் இருக்கும் பகுதிக்கு செல்கிறது. அழகாக பாடி மனிதர்களை சந்தோசப்படுத்துகிறது. மனிதர்கள் தங்கள் வீட்டுக்குள் இருந்தே அதன் அழகிய குரலை கேட்டு மகிழ்கின்றனர். அவர்களை சந்தோசப்படுத்தி விட்டு மீண்டும் மாலையில் தன் கூட்டுக்கு வந்து விடுகிறது. உன்னை விட அந்த குயிலே இறைவனின் அற்புத படைப்பு என்றது. 

இதை கேட்டு ஆத்திரமடைந்த மயில் மறுநாள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு சென்று கத்த தொடங்கியது. அதன் கர்ண கொடூர சத்தம் பொறுக்க முடியாமல் மனிதர்கள் அந்த மயிலை அடித்து தோப்புக்குள் விரட்டினார்கள். 

நீதி :
தனக்கு தெரிந்ததை வைத்து மற்றவர்களை துன்புறுத்தக் கூடாது.
இன்றைய செய்திகள்

27.03. 2023

* தமிழ்நாட்டில் H3N2 என்கிற இன்ஃபுளுயன்சா வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் முற்றிலும் இல்லாத நிலை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

* வெம்பக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வுக்காக நிலத்தை அளவிடும் பணி தொடக்கம்.

* சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற ஜி-20 நிதி கட்டமைப்பு மாநாட்டில் பணவீக்கம், காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

* இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவனத்துக்கு சொந்தமான 36 செயற்கைக் கோள்கள், ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

* அமெரிக்க நாட்டின் மிசிசிப்பி மற்றும் அலபாமா மாகாணத்தில் அதிசக்திவாய்ந்த டொர்னாடோ சூறாவளி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 23 பேர் இதுவரை இந்த இயற்கை சீற்றத்தால் உயிரிழந்துள்ளதாக தகவல்.

* உலக மகளிர் குத்துச்சண்டை: இந்தியாவின் நிகாத் ஜரீன் தங்கம் வென்று சாதனை.

* சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் போட்டியில் பட்டம் வென்ற இந்திய வீரர்கள்.

* ஐரோப்பிய கால்பந்து தகுதி சுற்று: எம்பாப்பே தலைமையில் முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வெற்றி.

Today's Headlines

* Health and People's Welfare Minister M. Subramanian has said that the incidence of the H3N2 influenza virus in Tamil Nadu is on the verge of becoming completely non-existent.

 * Commencement of land surveying for phase 2 excavation at Vembakkottai.

 * Various issues including inflation, climate change, and energy were discussed in detail at the G-20 Financial Framework Conference held in Chennai for about two days. 

 * 36 satellites belonging to UK's OneWeb were successfully launched from Sriharikota by GSLV Mark-3 rocket.

* A powerful tornado caused severe damage in Mississippi and Alabama. It was reported that around 23 people died due to this natural disaster.

 * World Women's Boxing: India's Nikath Zareen bags the gold

* Indian players who won the Swiss Open Badminton Men's Doubles.

* European football qualifier round: France won the first game under the head of Mbappe
 Prepared by

Covai women ICT_போதிமரம்

தினம் ஒரு குட்டிக்கதை.

பால. ரமேஷ்.





ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின்
மூக்கு கண்ணாடியை தவறுதலாக
கீழே போட்டு உடைத்து விட்டது.அவள்
அப்பா அந்த குழந்தையை கடுமையாக
திட்டி விட்டார்....

அன்று இரவு முழுவதும் அந்த பெண்
தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார்
செய்து, அடுத்த நாள் தன் தந்தையிடம்
கொடுத்தாள்.அதை பிரித்து பார்த்த அவர்
அதில் ஒன்றும்
இல்லாததை பார்த்து மீண்டும்
கோபமுற்றார்.

யாருக்காவது பரிசு கொடுக்கணும்னா அதில்
எதாவது பொருள்
வைத்து கொடுக்கனும்மா நீ வெறும் பெட்டியை கொடுப்பது தவறு என்று கண்டித்தார்.

அந்த குழந்தை அழுது கொண்டே சொன்னது நான் இரவு முழுவதும் 1000 முத்தங்களை அந்த பெட்டிக்குள்ள
கொடுத்து, மூடி தான் உங்களிடம் தந்தேன்
என்றாள்.

அதைக் கேட்ட அவரது தந்தை அந்த குழந்தையை இறுக்கி அணைத்து மன்னிச்சிக்கோமா
உன் அன்பு புரியாமல்
உன்னை திட்டிட்டேன் என்றார்.

அவர் தன் தலையனை அடியில் அந்த
பெட்டியை வைத்து கொண்டார்.எப்போது எல்லாம் அவர் மனம்
வருத்தமடைகிறதோ அப்போது எல்லாம்
தன் மகளின் அன்பு முத்தத்தை அந்த
பெட்டியை திறந்து எடுத்து கொண்டார்.

பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு.

TOP 5 NEWS AT LAST WEEK