t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

9 March 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.03.2026


திருக்குறள்: 

அதிகாரம் 62 / CHAPTER 62 

 ஆள்வினை உடைமை 

குறள் 611: 

அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் 
பெருமை முயற்சி தரும்.

 விளக்க உரை: 

இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும்.  அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.

பழமொழி :
A good marksman may miss. 

ஆனைக்கும் அடி சறுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1.   திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

2.எனவே  ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.

பொன்மொழி : 

மனித வாழ்க்கை மற்றவைகளுக் கெல்லாம் மேலானது.மேலான செயல்களினால் மேன்மை அடைகிறது

-----------------பிளாட்டோ

Human life is above all others. It is exalted by superior actions. ----- PLATO

பொது அறிவு : 

01.சூரிய குடும்பத்தில் எந்த கிரகம் பின்னோக்கி சுழல்கிறது?

             வெள்ளி -Venus

02.உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பிரமிடுகளைக் கொண்ட நாடு எது?

           சூடான் -Sudan

English words :

Take off -remove or leave

Take on- accept responsibility

தமிழ் இலக்கணம்: 

 தவறான பேச்சு மொழியும் சரியான எழுத்து மொழியும்
1. கடிகாரம் வேகமாக ஓடியது (எங்கு ஓடும்?)
      கடிகாரம் வேகமாக இயங்கியது
2. மின்விசிறி வேகமாக சுற்றுகிறது ( தன்னைத் தானே சுற்றுவதால் சுழல்கிறது)
மின்விசிறி வேகமாக சுழல்கிறது
    தொடரும்...
அறிவியல் களஞ்சியம் :

நிலை: துருவங்கள் காந்தத்தின் இரு முனைகளில் மட்டுமே இருக்கும். காந்தப் புலம் காந்தத்தைச் சுற்றியுள்ள முழுவெளியிலும் பரவியிருக்கும்.

பரிமாணம்: துருவம் என்பது ஒரு குறிப்பிட்ட புள்ளி (point), காந்தப் புலம் என்பது ஒரு பகுதி (region/field).

தொடர்பு: காந்தப் புலக் கோடுகள் ஒரு துருவத்தில் தொடங்கி மற்றொரு துருவத்தில் நுழைகின்றன. 

துருவ காந்தம் என்பது காந்தப்புலத்தின் வலிமை குவியும் இடம்

மார்ச் 09

யூரி ககாரின் அவர்களின் பிறந்தநாள்

யூரி அலெக்சியேவிச் ககாரின் (Yuri Alekseyevich Gagarin,9 மார்ச் 1934 – 27 மார்ச் 1968) உருசிய விண்வெளி வீரர் ஆவார். விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.

சாகீர் உசைன் அவர்களின் பிறந்தநாள்





சாகீர் உசைன் (Zakir Hussain, இந்தி: ज़ाकिर हुसैन, 9 மார்ச்சு 1951 – 15 திசம்பர் 2024) இந்தியாவைச் சேர்ந்த தபேலா இசைக் கலைஞர் ஆவார். இவர் தபேலா இசைக் கலைஞர் அல்லா ரக்காவின் மகன்.[1] இவர் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் அறியப்படுகிறார். மும்பையில் பிறந்தார். தனது ஏழாவது வயதில் தபேலா வாசிக்கத் தொடங்கினார். 1970 ஆம் ஆண்டு இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்கா சென்றார். ஆண்டிற்கு 150 இசை நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தியுள்ளார்.

நீதிக்கதை

 நாவினால் சுட்ட வடு

ஒரு முன்கோபக்காரப் பையன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும். கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்த படி வயது வரம்பில்லாமல் எல்லோரையும் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.

நாளடைவில் அவனை சுற்று வட்டாரத்தில் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். பையனுக்குத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.

அவனுடைய அப்பா பொறுத்துப் பொறுத்து பார்த்து விட்டு ஒரு நாள் அவனிடம் ஒரு வாளி நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.

ஒவ்வொரு முறை ஆத்திரப் படும் போதும் சம்பந்தப் பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு வீட்டுக்குப் பின்னால் உள்ள மர வேலியில் ஒரு ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றி விடும் படி அறிவுரைத்தார்.

முதல் நாள் வேலியில் சுமார் 50 ஆணிகளை அறைந்து ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!

நாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வேலிப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது. சில நாட்களில் வேலியில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை.

அப்பாவிடம் போய் விபரத்தைச் சொன்னான்

அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும் கருவியைக் கொடுத்து வேலியில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க அவனுக்கு முழுதாக ஒரு நாள் பிடித்தது.

எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும் வேலியை பார்க்கப் போனார்கள். அப்பா வேலியில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக் காட்டி “கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான்.

ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம்” என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.

மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி ஊர் போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றான்.

இன்றைய செய்திகள்

09.03.2026

⭐கொடுமுடியில் கே.பி. சுந்தராம்பாள் முழு உருவ சிலையை முதலமைச்சர்  திறந்து வைத்தார்.

⭐தெஹ்ரானில் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு- அமில மழை எச்சரிக்கை விடுத்த  ஈரான்

⭐ ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது அமெரிக்கா இஸ்ரேல் படைகள் சரமாரி குண்டுவீச்சு.

🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀 ஐசிசி T20 உலககோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. 3வது முறையாக இந்திய  அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

🏀நியூசிலாந்து நாட்டில் நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் தென்ஆப்பிரிக்கா அணி பங்கேற்கிறது. வருகிற 15-ந்தேதி தொடங்கும் போட்டியை முன்னிட்டு 15 பேர் கொண்ட தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Today's Headlines

⭐ The Chief Minister inaugurated a full-size statue of K. B. Sundarambal at Kodumudi.

⭐ An oil storage facility caught fire in Tehran, and Iran has issued a warning about possible acid rain.

⭐ The oil depots in Iran were heavily bombed by the forces of United States and Israel.

🏀 Sports News


🏀  ICC T20 World cup: India recorded a tremendous  victory against  Newzealand by 96 runs and became the Champion for the 3rd time.

🏀 South Africa national cricket team will participate in a five-match international T20 series to be held in New Zealand.Ahead of the series starting on the 15th, a 15-member squad for South Africa has been announced.


7 March 2026

TNSED Schools App Update link New Version - 0.3.8

TNSED Schools App Update link

New Version - 0.3.8

Date - 05.03.2026

 What's New....
 No longer for Update data in Noon Meal Module, frozen on 05-03-2026 as per the  instructions of DSE and DEE.


6 March 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.03.2026



திருக்குறள்: 

குறள் 642: 

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற் 
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு 

விளக்க உரை: 

ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்.

பழமொழி :
Charity is a double blessing.   

 தருமம் தலை காக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது உணவானது விவசாயி போன்ற பலர் உழைப்பில் வருகிறது.

2. எனவே உணவை வீணாக்க மாட்டேன்.

பொன்மொழி : 

வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல. அது முன்னேற துடிக்கும் உழைப்பாளிகளுக்கும் தன்னம்பிக்கைக்குமே சொந்தம்.- அடால்ப் ஹிட்லர்

பொது அறிவு : 

01.மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

ஹிப்போகிரேட்டஸ் (Hippocrates) 

02. உலகின் கரும்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

 பிரேசில்-Brazil

English words :

Skirmish-: A small or short fight between small groups of soldiers, usually before a bigger battle.



Combat

: Fighting in a war or battle between armed forces.

அறிவியல் களஞ்சியம் :

காந்த துருவம் (Magnetic Pole): காந்தத்தின் வட அல்லது தென் முனைகள், காந்த வலிமை அதிகமுள்ள இடங்கள்.

காந்த புலம் (Magnetic Field): காந்தப் பொருள்கள் ஈர்க்கப்படும் அல்லது விலக்கப்படும் காந்தத்தைச் சுற்றியுள்ள பகுதி. 

மார்ச் 06

வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா அவர்களின் பிறந்தநாள்



வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா என்பவர் சோவியத் ஒன்றியத்தின் ஓய்வுபெற்ற விண்வெளி வீராங்கனையும் முதற்தடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண்ணும் ஆவார். இவர் வசுத்தோக்கு 6 விண்கலத்தில் 1963 சூன் 16 அன்று விண்வெளிக்குச் சென்று அங்கு மூன்று நாள்களுக்குச் சற்றுக் குறைவாகத் தங்கியிருந்து வெற்றிகரமாகத் திரும்பினார்.

1961ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த யூரி ககாரின் மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மாந்தர் என்ற பெருமையைப் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாகப் பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத்து ஒன்றியம் முடிவு செய்தது. இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. இறுதிக் கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர். மிகக்கடினமான பயிற்சிகளுக்குப் பிறகு 25 வயதான வலண்டீனா தெரெசுக்கோவா தெரிவு செய்யப்பட்டார்.

சூன் 19ஆம் நாள் விண்கலம் பூமிநோக்கிப் பாய்ந்து வந்தபோது, தரையிறங்கும் முன்பே பாராசூட்டில் இருந்து குதித்து, பாதுகாப்பாக இறங்கினார்‘சோவியத் ஒன்றியத்தின் வீராங்கனை’ என்ற பதக்கத்துடன் ‘இலெனின் விருது’என பல்வேறு விருதுகள் குவிந்தன.
நீதிக்கதை

 வெங்காயம்

ஒரு வீட்டில தக்காளி வெங்காயம் மற்றும் குச்சி ஐஸ் மூன்றும் நல்ல நண்பர்களா வாழ்ந்து வந்தது.

ஒரு நாள் தக்காளிக்கு வெளிஉலகை சுற்றிபார்க்க ஆசை வந்தது.தக்காளி இப்படிச் சொன்னதும் வெங்காயம் சொல்லுச்சு அய்யோ நாம இங்கிருந்து வெளியே போவது நமக்கு பாதுகாப்பு இல்லை..அதனால நம்ம வீட்டிலேயே இருந்திடலாம்.

வெங்காயம் சொன்னதை தக்காளி கேட்கவே இல்லை.தக்காளி குச்சி ஐஸ் கூட்டி கிட்டு வெளியே கிளம்பிச்சு. வெங்காயம் அவங்கள தனியா போக வேண்டாம்னு சொல்லிட்டு வெங்காயமும் கூடவே போச்சு.

அது டிசம்பர் மாசம் கொஞ்சம் குளிராக இருந்தது.எல்லாரும் ஜாலியா வெளிய போய் விளையாடினாங்க.

இரண்டுமாதங்கள் கழித்து வெயில் காலம் வந்தது.

தக்காளி வெங்காயம் குச்சி ஐஸ் மூன்றுபேரும் எப்பவும் போல விளையாட வெளியே போனாங்க அப்போ வெயில் அதிகமா இருந்தது.வெயிலின் காரணமாக குச்சி ஐஸ் உருகிடுச்சு.

இதைப் பார்த்த தக்காளியும் வெங்காயமும் ரொம்பவே வருத்தப்பட்டார்கள்.

நாம திருப்பி வீட்டுக்கு போயிடலாம் அப்படின்னு சொல்லி போய்க்கிட்டு இருக்கும் போது ஒரு சின்ன பையன் பந்தை வைத்து விளையாடிக் கொண்டு இருந்தான்.

அந்தப் பையன் பந்தை தூக்கி போட்டான் .அந்தப் பந்து தக்காளியை நோக்கி வந்தது. இதைப் பார்த்த வெங்காயம் பந்தை தடுத்து நிறுத்தி தட்டி விட்டது.

பின்பு வீட்டை விட்டு வெளியே வந்தாலே நிறைய ஆபத்துகள் உள்ளன என்று எண்ணி இரண்டும் வீட்டிற்கு விரைந்து சென்று கொண்டு இருந்தது. சாலையை கடக்க தக்காளியும் வெங்காயமும் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு லாரி அங்கு வேகமாக வந்து கொண்டு இருந்தது.

இதை கவனிக்காத தக்காளி சாலையை கடக்கும் பொழுது லாரி தக்காளியின் மேல் ஏறியது..லாரி தக்காளியின் மேல் ஏறியதும் தக்காளி நசுங்கி செத்துப்போச்சு.

தன் நண்பனை காப்பாற்ற முடியலியே அப்படின்னு மிகவும் வருத்தத்தில் வெங்காயம் வீட்டிற்கு வந்தது..வீட்டிற்கு வந்த வெங்காயம் வருத்தத்தில் மிகவும் அழுதது.

அப்போ வெங்காயம் கடவுள் கிட்ட கேட்டு ஓ கடவுளே! என்னோட பிரெண்ட்ஸ்காக நான் அழுதேன்.நான் இல்லாம போனா எனக்காக வருத்தப்பட்டு அழுவதற்கு யாரு இருக்கா?.

அப்போ கடவுள் வெங்காயத்தின் முன்பு தோன்றி வெங்காயமே நீ வருத்தப்படாத.வெங்காயமே உனக்கு ஏதாவது ஆகிடுச்சுனா உன்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அழுவார்கள்.அதற்கான ஒரு வரத்தை நான் உனக்கு அளிக்கிறேன் என்று கடவுள் கூறினார்.

அதுக்குவெங்காயம்நான் இப்போ தனியாதானே இருக்கிறேன்.அதனால என்னோட ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் எனக்கு திருப்பி கொடுங்க.அப்படின்னு சொல்லுச்சு.

உடனே கடவுள் நான் உனக்கு ஒரு புது நண்பனை கொடுக்கிறேன்.அவன் பெயர் மிளகாய்.மக்கள் உங்கள் இரண்டு பேரையும் எப்பொழுதும் சேர்த்துதான் சமையலுக்கு எடுப்பார்கள் என்றுகூறினார்.

தன்னோட புது நண்பனோட வெங்காயம் சந்தோஷமா இருந்துச்சு.

இன்றைய செய்திகள்

06.03.2026

⭐சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமனம்!

⭐போர் சூழல் எதிரொலி: ரஷியாவிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா திட்டம்

⭐கடலில் வலம் வரும் ஈரானின் போர்க்கப்பல்களை அமெரிக்க படைகள் சுட்டு வீழ்த்தி கடலில் மூழ்கடித்து வருகி ன்றன.தற்போது வரை 17 ஈரானிய போர்க்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀2026 டி20 உலகக் கோப்பை தொடர் ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
சூப்பர் 8 போட்டி முடிவடைந்த நிலையில், இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

🏀மும்பை: ஐசிசி டி20 தரவரிசையில், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் பேட்டிங் பிரிவில் 25 இடங்களில் முன்னேறியுள்ளார்.

Today's Headlines


⭐ Madras High Court (Chennai High Court) has appointed Sushrut Arvind Dharmadhikari as the Chief Justice.

⭐ Due to the war situation, India is planning to purchase additional crude oil from Russia.

⭐ United States forces are shooting down Iran warships that are moving in the sea and sinking them. So far, 17 Iranian warships have reportedly been sunk.


🏀 Sports News

🏀 The ICC Men's T20 World Cup 2026 tournament has reached an exciting stage.
After the Super 8 round, India national cricket team, England cricket team, South Africa national cricket team, and New Zealand national cricket team have qualified for the semi-finals.

🏀 In International Cricket Council (ICC) T20 rankings, wicketkeeper Sanju Samson has moved up 25 places in the batting rankings


5 March 2026

கனமழை காரணமாக பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று ( 04.12.2025 ) விடுமுறை விடப்படும் மாவட்டங்கள்

கனமழை காரணமாக பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று ( 04.12.2025 ) விடுமுறை விடப்படும் மாவட்டங்கள்




திருவள்ளூர் (பள்ளி)

சென்னை (பள்ளிகள்)

Kalanjiyam App-ல் கார்த்திகை தீபம் வரையறுக்கப்பட்ட விடுப்பு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது

Kalanjiyam App-ல் கார்த்திகை தீபம் வரையறுக்கப்பட்ட விடுப்பு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.03.2026

திருக்குறள்: 

குறள் 606: 
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் 
மாண்பயன் எய்தல் அரிது.            

விளக்க உரை: 

நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.

பழமொழி :
Take time by the forelock.  

 காலத்தே கடமையைச் செய்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது உணவானது விவசாயி போன்ற பலர் உழைப்பில் வருகிறது.

2. எனவே உணவை வீணாக்க மாட்டேன்.

பொன்மொழி : 

உங்களை மேம்படுத்த நினைப்பவர்களுடன் மட்டுமே பழகுவது, உங்களுடைய சிறப்பு திறமைகளை வெளியே கொண்டு வருகிறது. - எபிக் டெட்டஸ்

பொது அறிவு : 

01.ஜப்பானிய தேசிய உடையின் பெயர் என்ன?

         கிமோனோ-Kimono

02.உலகின் மிக நீளமான குகை எது?

மாமத் குகை-Mammoth cave

அமெரிக்கா -America 

English words :

hostilities-acts of fighting or war between enemies.

conflagration-very large and destructive fire.

தமிழ் இலக்கணம்: 

 இன்று சில வாகனங்களின் தமிழ் பெயர்களைக் காண்போம்
பஸ் - பேருந்து
கார் - மகிழுந்து
ட்ரெயின் - தொடர் வண்டி
சைக்கிள் - மிதி வண்டி
இவைகள் நாம் அறிந்த தமிழ் பெயர்கள் தான்.
ஆனால் ரிக்க்ஷா, ஆட்டோ, பைக், லாரி, ஹெலிகாப்டர், வான் இவைகளின் பெயர் தெரியுமா? நாம் இதை உபயோகப் படுத்துவது இல்லை. எனவே தெரியாது. இன்று தெரிந்து கொள்வோம்
ரிக்க்ஷா –மிதியிழுவை
ஆட்டோ –தானி
பைக் –விசையுந்து
வேன் –மூடுந்து
லாரி – சரக்குந்து
ஹெலிகாப்டர் –உலங்கூர்தி
ஒரு வேளை இதை பயன்படுத்தா விட்டாலும் தெரிந்து வைத்திருப்பது நம் கடமை.
அறிவியல் களஞ்சியம் :

துருவ காந்தம் (Magnetic Pole) மற்றும் காந்தப் புலம் (Magnetic Field) இரண்டும் ஒன்றல்ல. ஆனால் அவை நெருங்கிய தொடர்புடையவை. காந்தத்தின் வட/தென் முனைகள் துருவங்கள் எனப்படும் காந்தப் புலம் என்பது காந்தத்தைச் சுற்றியுள்ள கண்ணுக்குத் தெரியாத காந்த விசைப்பகுதி ஆகும். காந்தப்புலம் துருவங்களில் வலிமையாக இருக்கும். 

மார்ச் 05


நீதிக்கதை

 அம்மா சொல் கேள்!

செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான்.

புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருற்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது.

வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது.

வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, “உனக்கு என்னவேண்டும்?” என்று கேட்டது.

ஓநாயும் “நண்பா, நண்பா…இங்கே இளசான புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதைத் தின்று, ஜில்லென்று தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது! எனக்கு அது கிடைக்கவில்லை…..” என்று வருத்தத்துடன் கூறியது.

“அப்படியா! நீ புல்லா சாப்பிடுவாய்? நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே?” என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி. “சேச்சே…அதெலாம் சுத்தப் பொய்!” என்றது ஓநாய்.

“அப்படியென்றால் இரு. நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். நாம் இரண்டு பேரும் போய், அதைச் சாப்பிட்டுவிட்டு, ஃப்ரெண்ட்ஸாக ஜாலியாகச் சுற்றலாம்!” என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்து, ஓநாயின் பக்கம் போயிற்று.

“உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.

அந்த ஆட்டுக் குட்டிக்குத் அது போகட்டும், பரவாயில்லை… என்று தானாகத் தெரியவில்லை. அனுபவம் நிறைந்த அம்மா, அப்பா பேச்சை கேட்டிருந்தால், மதிப்பு வாய்ந்த, தன் உயிரை இழந்திருக்காது அல்லவா?

இன்றைய செய்திகள்

05.03.2026

⭐ரயில்வே சட்டத்தின்படி, தண்டவாளங்கள் அருகே பட்டம் விடுபவர்களுக்கு 6 மாதம் தண்டனையோ விதிக்கப்படும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

⭐வளைகுடாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்கு வசிக்கும் சுமார் 1 கோடி இந்தியர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கையை துவங்கியுள்ளது.

⭐ ஈரானின் மினாப் நகரில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 165 பள்ளி மாணவிகள் உயிரிழந்து உள்ளனர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 மும்பையில் உள்ள வான்கடே
மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள 2026 டி20 உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.

Today's Headlines

⭐ According to the Railway Act, those who fly kites near railway tracks may face up to 6 months of imprisonment, it has been announced.

⭐ As tension continues in the Gulf region, the Indian government has begun measures to evacuate nearly 10 million Indians living there.

⭐ In the city of Minab, Iran, 165 schoolgirls have reportedly been killed in an attack carried out by the U.S. military.

🏀 Sports News

🏀 In the second semi-final of the 2026 T20 World Cup to be held today at the Wankhede Stadium in Mumbai, the Indian team will face England.


4 March 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.03.2026


திருக்குறள்: 

குறள் 605: 

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்.  
              
விளக்க உரை: 

காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.

பழமொழி :
Even a pin is good for something. 

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது உணவானது விவசாயி போன்ற பலர் உழைப்பில் வருகிறது.

2. எனவே உணவை வீணாக்க மாட்டேன்.

பொன்மொழி : 

இருக்கும் இடத்திலிருந்து தொடங்குங்கள். இருப்பதைப் பயன்படுத்துங்கள். முடிந்ததைச்  செய்யுங்கள் -ஆர்தர் ஆஷ்

பொது அறிவு : 

01. தென்னாட்டு தாகூர் என்று அழைக்கப்படுபவர் கவிஞர் யார்?

      கவிஞர்.வாணிதாசன்

 Thiru.Vanidasan

02. உலகின் நெல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

          இந்தியா-India

English words :

benevolent –kind, friendly and helpful to others.

நட்பிணக்கமும் உதவி மனப்பான்மையும் கொண்ட.

banter –friendly comments and jokes.

நட்பு முறையிலான குறிப்புரையும் கேலிப்பேச்சும்.

தமிழ் இலக்கணம்: 

 விலை விவரப் பட்டியல்/ விலை விபரப் பட்டியல் 
எது சரி?
இந்த சந்தேகம் எழும் போது அதன் 
 *வினைச்சொல்* 
*வேர்ச்சொல்*
இரண்டையும் பார்க்க வேண்டும்.

1. முல்லைத் திணை பற்றி *விவரி* .
2. இவர் ஒரு *விவரமான* ஆள்.
3. இவர் திட்டத்தை தெளிவாக *விவரித்தார்* 
மேற்கண்ட சொற்றொடர்களைப் பாருங்கள். விவரி, விவரித்து, விவரித்தல் 
போன்ற சொற்களைத்தான் பயன்படுத்துகிறோம். 
எனவே விவரம் என்பதே சரியான சொல்.
அறிவியல் களஞ்சியம் :

பூமியின் காந்த துருவங்கள் என்பது கோளின் காந்தப்புலக் கோடுகள் செங்குத்தாக இருக்கும் புள்ளிகள், மையத்தில் இருக்கும் இரும்பு நிக்கலின் திரவ இயக்கம் காரணமாக தொடர்ந்து மாறுகின்றன. வட காந்த துருவம் தற்போது கனடாவிலிருந்து சைபீரியாவை நோக்கி அலைந்து திரிந்து வேகத்தில் முடுக்கிவிடப்படுகிறது. அதே நேரத்தில் தெற்கு காந்த துருவம் அண்டார்டிகாவிலிருந்து தொலைவில் உள்ளது. இதனால் திசைகாட்டிகள் இந்தப் பகுதிகளுக்கு அருகில் நம்பகத்தன்மை குறைவாக உள்ளது. இந்தக் கம்பங்கள் நிலையானவை அல்ல; அவை புவியியல் காலத்தில் அலைந்து திரிந்து துருவ முனைப்பை மாற்றியமைக்கின்றன. பாறைகளில் பதிவுகளை விட்டுச் செல்கின்றன. ஆனால் மையத்தின் உருகிய இரும்பு மற்றும் நிக்கல், இந்த மாறும் புலத்தின் பின்னால் உள்ள இயந்திரமாகும்.  இது விண்வெளி கதிர்வீச்சுக்கு எதிரான ஒரு முக்கியமான கவசமாகும்.

மார்ச் 04

தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்


தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் என்ற பெயரில் இந்தியாவில் தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் மார்ச் 4ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.தேசிய அளவிலான பாதுகாப்புக்குழு அமைப்பு 1966இல் தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டது.

பிறகு 1971ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது. மும்பையை தலைமையகமாகக் கொண்டு அனைத்து மாநிலத்திலும் இதன் பிரிவுகள் செயல்படுகின்றன.

தொழிலாளர்கள் விபத்துகளின்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே அனைத்து தொழிற்சாலைகளிலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

நீதிக்கதை

ஏமாந்த சிறுத்தை

ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது.

அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.

அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.

சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. ‘எதைத் துரத்தலாம்’ என்று தயங்கி நின்றது. பிறகு, ‘சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்’ என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.

உடனே சிறுத்தை “அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி… புள்ளி மானைப் பிடிக்கலாம்” என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.


முக்கியமான நேரத்தில் முக்கியமான முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

04.03.2026
⭐மத்திய - மாநில உறவு: தமிழ்நாடு அரசுக்கு ஆதரவளித்த கர்நாடகா... நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

⭐ஈரானின் 131 நகரங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 555 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

⭐ ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதலால் இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு உள்ளதாக மாநில அரசுகளுக்கு இந்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை:2-வது அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் நாளை மோதுகிறது.

🏀உலகின் உயரிய விளையாட்டு விருதுக்கு இந்திய மகளிர் அணி பரிந்துரை. இந்தப் பிரிவில் இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணி உள்பட 5 அணிகள் இந்தியாவுடன் போட்டியிடுகின்றன.

Today's Headlines


⭐ Centre–State Relations: Tamil Nadu has received support from Karnataka. Chief Minister M. K. Stalin expressed his gratitude.

⭐ In the attacks targeting 131 cities in Iran, 555 people have been killed so far.

⭐ Due to the conflict between Iran, United States, and Israel, India’s Ministry of Home Affairs has warned state governments that there is a possibility of violence breaking out in India.

🏀 Sports News

🏀 T20 World Cup: In the second semi-final, India cricket team will face England cricket team tomorrow.

🏀 The India women's national team has been nominated for the world’s highest sports award. In this category, five teams — including the England women's national football team — are competing against India.


JOIN KALVICHUDAR CHANNEL