t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

20 February 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.02.2026


திருக்குறள்: 

குறள் 341: 

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
அதனின் அதனின் அலன். 

விளக்க உரை: 

ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.

பழமொழி :
Borrowing is sorrowing. 

கடன் துன்பத்திற்கு வழிவகுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :


1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும்.

2. எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

பகை பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக உன்னிடமே திரும்பி வரும்.- சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு : 

01.நம் உடலில் உள்ள இரத்தம் ஒரு நாளைக்கு பயணம் செய்யும் தூரம் எவ்வளவு?

சுமார் 19,000 கிலோமீட்டர் -
Approximately 19,000 km

02 மழை நீரில் காணப்படும் வைட்டமின் எது?

வைட்டமின் B12 
Vitamin B12 

English words :

consequence –impact happens due to some incidents 

ஒரு செயலினால்‌ ஏற்படும் பின்விளைவுகள். 

contest –a competition to find out who is the best

யார் சிறந்தவர் என்று கண்டறியும் போட்டி

தமிழ் இலக்கணம்: 

 ஒருமை பன்மையில் வரக்கூடிய பிழைகளை எவ்வாறு கண்டறிந்து அதை சரி செய்வது? வாருங்கள் பார்ப்போம் 
ஒருமை சொற்கள் இறுதியில் து என முடியும்.
 
பன்மை சொற்கள் இறுதியில் ன என முடியும்.
இதை கண்டறிய எதை என்ற கேள்வி கேட்க வேண்டும். 
எ.கா 1. பசு‌ கன்றுகளை ஈன்றன.
எது? பசு.‌ பசு ஒருமை 
ஒருமை து வில் முடியும் 

 சரியான விடை –பசு‌ கன்றுகளை ஈன்றது.
2. கீரைகளில் இரும்பு சத்து உள்ளன.
எது? இரும்பு சத்து.‌ இரும்பு சத்து ஒருமை 

சரியான விடை 

கீரைகளில் இரும்பு சத்து உள்ளது.
3. வண்டிகள் வரிசையாக நிற்கின்றது
எது? வண்டிகள்.‌ இது பன்மை. 
 சரியான விடை 
வண்டிகள் வரிசையாக நிற்கின்றன.

அறிவியல் களஞ்சியம் :

இப்போது நமது பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம் / 86,400 வினாடிகள் ஆகும். அப்படித்தான் என எண்ணிக்கொண்டு இருக்கிறோம். ஒரு நாளின் நேரம் என்பதும் மாறக்கூடியதே என்ற தகவல் பெரும்பாலோருக்குத் தெரியாது.  இந்த நேரம் முற்றிலும் நிலையானது அல்ல. பூமி உருவான காலத்தில் இருந்து, பூமியின் சுழற்சி வேகம், பல காரணிகளைப் பொருத்து மாறிக்கொண்டே வந்திருக்கிறது

பிப்ரவரி 20

சமூக நீதிக்கான உலக நாள்


சமூக நீதிக்கான உலக நாள் அல்லது உலக நீதி நாள் (World Day of Social Justice) என்பது உலக நாடுகள் முழுவதும் ஆண்டுதோறும் பெப்ரவரி 20 ஆம் நாளன்று கடைப்பிடிக்கப்படும் நாளாகும். வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இந்நாள் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் இந்நாளில், ஐக்கிய நாடுகள் அவை, மற்றும் சர்வதேச தொழிலாளர் அலுவலகம் உட்பட, பல அமைப்புக்கள் மக்கள் சமூக நீதி முக்கியத்துவம் பற்றிய அறிக்கைகளை தயாரிக்க அமைக்கப் பெற்றுள்ளது.
நீதிக்கதை

 எதையும் நாமே நாடிப்போவது சரியா?

ஒரு நாள் நவீன் தன் அம்மாவுடன் கடைக்கு போனான். அந்த கடைக்காரர் பையன் அழகா இருக்கானே என்று சொல்லிவிட்டு, பாட்டிலில் இருந்து சாக்லேட்டை காட்டி, உனக்கு எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள் என்றார்.

ஆனால் நவீன் சாக்லேட்டை எடுக்கவே இல்லை. கடைக்காரர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் எடுக்கவில்லை. அதை பார்த்த அவன் அம்மா, சாக்லேட் பாட்டிலில் இருந்து எடுத்துக்கோ என்றார். அப்பவும் நவீன் சாக்லெட்டை எடுக்கவே இல்லை.

பிறகு அந்த கடைக்காரரே சாக்லேட்டை அள்ளி அவன் கைகளில் வைத்தார். அவன் ஆசையுடன் இரண்டு கைகளாலும் வாங்கிக் கொண்டான். வீட்டிற்கு போனவுடன் அவன் அம்மா ஏன் சாக்லேட்டை பாட்டிலில் இருந்து நீயே எடுத்து கொள்ளவில்லை என்று கேட்டார்.

அம்மா என் கையை பாருங்கள். எவ்வளவு சிறியதாக இருக்கிறது. நான் பாட்டிலில் இருந்து எடுத்து இருந்தால் எனக்கு கொஞ்சமாக தான் கிடைத்திருக்கும். இப்பொழுது பாருங்க.. அவர் எடுத்து கொடுத்ததால் எவ்வளவு அதிகமாக சாக்லேட் கிடைத்திருக்கிறது பாருங்கள் என்றான்.

எதையுமே நாம் விரும்பிக் கேட்டால் குறைவாகத்தான் கிடைக்கும். அதுவாக தேடி வந்தால் அதிகமாகக் கிடைக்கும் என்பதை நவீனின் அம்மா புரிந்து கொண்டார்.

இன்றைய செய்திகள்

20.02.2026

⭐தமிழகத்தில் தகுதியுள்ள பெண்களுக்கு இனி ஆண்டுதோறும் ரூ.2,000 கோடைகால சிறப்புத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

⭐நைஜீரியாவில் விஷவாயு கசிவால் வெடித்து சிதறிய சுரங்கம்: 38 தொழிலாளர்கள் பலி

⭐அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 8 பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக்கோப்பை: இத்தாலியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி.

Today's Headlines

⭐ Minister Geetha Jeevan has officially announced that eligible women in Tamil Nadu will henceforth receive ₹2,000 every year as a special summer assistance amount.

⭐ A mine exploded due to a toxic gas leak in Nigeria: 38 workers died.

⭐ Severe snowstorm in the United States: 8 skiers lost their lives.

🏀 Sports News

🏀 ICC Men's T20 World Cup: West Indies register a huge win by defeating Italy.


19 February 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.02.2026


திருக்குறள்: 

குறள் 519: 

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக 
நினைப்பானை நீங்குந் திரு 

விளக்க உரை: 

மேற்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.

பழமொழி :
An empty sack cannot stand upright 

வெறும் கையால் முழம் போட முடியாது

இரண்டொழுக்க பண்புகள் :


1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும்.

2. எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

வாழ்க்கையில் எந்த நெருக்கடி நிலையில் இருக்கும்பொழுதும் வாய்மையை கடைப்பிடிப்பது போல உறுதியான நிச்சயமான பாதுகாப்பு வேறு எதுவும் கிடையாது- கார்லஸ் டிக்கின்ஸ்

பொது அறிவு : 

01.2000 ரூபாய் நோட்டின் பின்புறத்தில்  இடம்பெற்றுள்ள சின்னம் எது?

    மங்கள்யான்- Mangalyaan

02.உலகின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான கடிகாரம்  எங்குள்ளது?

      மெக்கா-சவூதி அரேபியா

 Mecca-Saudi Arabia.

English words :

regret –to feel sorry that you did something or that you did not do something.

ஒன்றைச் செய்தமைக்காக/செய்யாமைக்காக வருத்த உணர்வு கொள்ளுதல்

remorse –a feeling of sadness because you have done something wrong.

தவறு செய்துள்ளமை காரணமாக மனத்தில் தோன்றும் வருத்த உணர்வு.

தமிழ் இலக்கணம்: 

 தன்/தம் பயன் படுத்தும் இடங்கள்
ஒருமை வரும்போது *தன்* உபயோகப் படுத்த வேண்டும்.
1. அருளன் *தன்* கையால் பரிசைப் பெற்றுக் கொண்டான்
2. சிறுமிகள் *தம்* கரங்களால் மலர் தூவினர் 
ஆனால் இதற்கு விலக்கும் உண்டு. மரியாதைக்குரியவர்களைக் குறிக்கும் போது ஒருமையில் இருந்தாலும் *தம்*  என்று தான் குறிக்க வேண்டும் 
சான்றோர் தம்மைத் தாம் புகழ மாட்டார்கள்

தலைவர் தம் பணத்தைக் கொடுத்து பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வாங்கிக் கொடுத்தார்.

அறிவியல் களஞ்சியம் :

நமது  பூமிப்பந்து சுற்றிக்கொண்டு இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், முழுமையான காரணம் பலருக்குத் தெரியாது. சூரியனின் ஈர்ப்பு விசையால் சுழல்வதாக எண்ணிக்கொண்டு இருக்கிறோம். பூமி சுழல்வதற்கான முக்கிய காரணம், அதன் உருவாக்கத்தின் தொடக்க காலத்தில் இருந்தே பெறப்பட்ட கோண உந்தம் (Angular Momentum) ஆகும். சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய மண்டலம், அதாவது சூரிய விண்மீன் ஒரு பெரும் சுழலும் வாயு மற்றும் தூசியின் மேகத்தில் இருந்து உருவானது. இந்த மேகம் சுழன்று கொண்டே இருந்தது. அப்போது உருவானதுதான் இந்த பூமி.  பூமி உள்ளிட்ட கோள்கள் உருவாகும்போது, இந்தப் பிரபஞ்ச அளவிலான சுழற்சியின் உந்தம் அனைத்துக்  கோள்களுக்கும் பரிமாறப்பட்டது. இந்த உந்தத்தை இழக்க எந்த புற விசையும் இல்லாததால், பூமி இன்றும் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கிறது.

பிப்ரவரி 19


நீதிக்கதை

 அன்பை வெளிப்படுத்தும் விதம்

ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியை மாணவர்களிடம், அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று கூறி நான்கு மாணவிகளை அனுப்பினார். திரும்பி வந்த மாணவிகளில் ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது. மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது. 

நான்கு மாணவிகளில் முதலில் கிளம்பிப்போன மாணவி கடைசியில் வெறும் கையுடன் திரும்பி வந்தாள். ஆசிரியை அந்த மாணவியிடம் நீ ஏன் எதையும் கொண்டு வரவில்லை என்று கேட்டார்.

அதற்கு அந்த மாணவி, நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன். குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன் என்று பதில் கூறினாள். 

மாணவி கூறிய பதிலைக் கேட்டவுடன் ஆசிரியை அந்த மாணவியை அணைத்துக் கொண்டார். அன்பு என்றால் இது தான். ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும் என்றார்.

இன்றைய செய்திகள்

19.02.2026

⭐ தமிழகத்தில் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் முதியோர், மாற் றுத்திறனாளிகள் & ஆதரவற்ற விதவைகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியங்கள் மூலம் சுமார் 35.33 லட்சம் நபர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

⭐உலகின் சர்க்கரை கிண்ணம் என அழைக்கப்படும் கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு நாளுக்கு நாள் மோசமான நிலையை அடைந்துவருகிறது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரமும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையையும் முடங்கியுள்ளது.

⭐’ரஷ்யாவிடம் இருந்து 2000 குழந்தைகள் மீட்பு' - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை:
நமீபியாவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது பாகிஸ்தான்.

Today's Headlines

⭐ Under the social security schemes in Tamil Nadu, about 3.533 million (35.33 lakh) people are benefiting from pensions provided to senior citizens, persons with disabilities, and destitute widows.

⭐ In Cuba, which is known as the “Sugar Bowl of the World,” the fuel shortage is worsening day by day. As a result, the country’s economy and the normal life of the people have been severely affected.

⭐ ‘2,000 children rescued from Russia’ – Ukrainian President Zelenskyy

🏀 Sports News

🏀 T20 World Cup:
Pakistan advanced to the Super 8 round after defeating Namibia.

Covai women ICT_போதிமரம்
 


ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பிக்கும் முறைகள் சார்ந்த வழிமுறைகள்

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பிக்கும் முறைகள் சார்ந்த வழிமுறைகள்

TNTET – WORKING TEACHERS 2026
Notification No.01/2026 | Date: 13.02.2026

━━━━━━━━━━━━━━━━━━━

1. விண்ணப்பிக்க தகுதி
   (Para 2 – Page 2, Para 3 – Page 2 & 3)
   ━━━━━━━━━━━━━━━━━━━

01.09.2025 அல்லது அதற்கு முன் SGT / BT Assistant / இணையான பணியிடங்களில் நியமிக்கப்பட்டு தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் மட்டுமே தகுதி.
அரசு / அரசு உதவி / அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Time Scale / Consolidated / Part-Time ஆசிரியர்கள் தகுதி உடையவர்கள்.
பதவி உயர்வு விரும்பும் தகுதி பெற்ற பணியாளர்களும் விண்ணப்பிக்க வேண்டும் (Para 3.4 – Page 3).

━━━━━━━━━━━━━━━━━━━
2. முக்கிய தேதிகள்
(Page 2 – Important Dates Table)
━━━━━━━━━━━━━━━━━━━

விண்ணப்ப தொடக்கம் – 18.02.2026
கடைசி தேதி – 10.04.2026
Edit Option – 11.04.2026 முதல் 13.04.2026 வரை
Paper I – 04.07.2026 (FN)
Paper II – 05.07.2026 (FN)

━━━━━━━━━━━━━━━━━━━
3. தேர்வு அமைப்பு
(Para 4 – Page 3, 4, 5 & Para 6 – Page 6)
━━━━━━━━━━━━━━━━━━━

150 Multiple Choice Questions
மொத்தம் 150 மதிப்பெண்கள்
3 மணி நேரம்
OMR முறை

குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்
(Page 6 – Scheme of Examination Table)

General – 60% (90 மதிப்பெண்கள்)
BC / BCM / MBC / DNC / PWD – 50% (75 மதிப்பெண்கள்)
SC / SCA / ST – 40% (60 மதிப்பெண்கள்)

━━━━━━━━━━━━━━━━━━━
4. தேர்வு கட்டணம்
(Para 5 – Page 5)
━━━━━━━━━━━━━━━━━━━

பொதுப்பிரிவு – ரூ.600
SC / SCA / ST / மாற்றுத் திறனாளிகள் – ரூ.300

Paper I மற்றும் Paper II தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் கட்டணம் மட்டும் ஏற்கப்படும்.
கட்டணம் திருப்பி வழங்கப்படாது.

━━━━━━━━━━━━━━━━━━━
5. Upload செய்ய வேண்டிய சான்றிதழ்கள்
(Para 11 – Page 7, 8, 9)
━━━━━━━━━━━━━━━━━━━

10ஆம் வகுப்பு / 12ஆம் வகுப்பு
D.T.Ed / D.El.Ed
UG Degree (அனைத்து Semester Mark Sheets ஒரே PDF + Degree Certificate)
B.Ed / Special B.Ed
Community Certificate
Differently Abled Certificate (தேவைப்பட்டால்)
Service Certificate (Annexure–I)

IFHRMS குறிப்பு
(Annexure – I – Page 13)

“IFHRMS Employee ID No. (for Time Scale Teachers Only)”
Time Scale ஆசிரியர்கள் மட்டும் Service Certificate-ல் IFHRMS Employee ID குறிப்பிட வேண்டும்.

━━━━━━━━━━━━━━━━━━━
6. சரியான ஆன்லைன் விண்ணப்ப லிங்க்
━━━━━━━━━━━━━━━━━━━

விண்ணப்பப் பதிவு செய்ய:
[https://trb1.ucanapply.com]

அதிகாரப்பூர்வ ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளம்:
[https://trb.tn.gov.in](https://trb.tn.gov.in)

━━━━━━━━━━━━━━━━━━━
7. விண்ணப்பிக்கும் முன் தயாராக வைத்திருக்க வேண்டியவை
(Para 11 – Page 7–9 & Annexure I – Page 13 அடிப்படையில்)
━━━━━━━━━━━━━━━━━━━

1. சரியான மொபைல் எண் மற்றும் Email ID
2. 10ஆம் வகுப்பு சான்றிதழ்
3. 12ஆம் வகுப்பு சான்றிதழ்
4. D.T.Ed / D.El.Ed சான்றிதழ்
5. UG Degree – அனைத்து Semester Mark Sheets ஒரே PDF
6. B.Ed / Special B.Ed சான்றிதழ்
7. Community Certificate
8. Differently Abled Certificate (தேவைப்பட்டால்)
9. Service Certificate (Annexure–I) முறையாக நிரப்பி கையொப்பம் மற்றும் முத்திரையுடன்
10. Time Scale ஆசிரியர்கள் – IFHRMS Employee ID
11. EMIS ID விவரம்
12. புகைப்படம் (40–60 KB)
13. கையொப்பம் (20–40 KB)
14. Online Payment வசதி (Debit Card / Credit Card / Net Banking)

━━━━━━━━━━━━━━━━━━━
8. விண்ணப்பிக்கும் போது பொதுவாக நடைபெறும் தவறுகள்
━━━━━━━━━━━━━━━━━━━

1. தகுதி சரிபார்க்காமல் விண்ணப்பித்தல்
2. Paper I / Paper II தவறாக தேர்வு செய்தல்
3. பெயர் / பிறந்த தேதி விவரங்களில் வேறுபாடு
4. சமூக பிரிவு தவறாக பதிவு செய்தல்
5. Service Certificate முழுமையில்லாமல் Upload செய்தல்
6. IFHRMS ID தவறாக பதிவு செய்தல்
7. Semester Mark Sheets ஒரே PDF ஆக இணைக்காமல் Upload செய்தல்
8. Photo / Signature அளவு விதிமுறைக்கு உட்படாமல் Upload செய்தல்
9. தவறான Mobile Number / Email பதிவு செய்தல்
10. Payment confirmation உறுதி செய்யாமல் வெளியேறுதல்
11. Edit window பயன்படுத்தாமல் தவறுகளை திருத்தாமல் விடுதல்
12. கடைசி நாளில் விண்ணப்பிக்க முயற்சித்தல்
13. தெளிவில்லாத அல்லது வெட்டப்பட்ட Scan Upload செய்தல்

மேற்கண்டவற்றை கவனத்தில் கொண்டு விண்ணப்பிக்கவும்.

18 February 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.02.2026


திருக்குறள்: 

குறள் 513: 

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் 
நன்குடையான் கட்டே தெளிவு 

விளக்க உரை: 

அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.

பழமொழி :
Hard work writes your destiny.         

கடின உழைப்பே உங்கள் விதியை எழுதும்.

இரண்டொழுக்க பண்புகள் :


1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும்.

2. எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

வணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிப்போம் - கோல்ட்ரிட்ஜ்

பொது அறிவு : 

01.இந்திய மக்களவையின் முதல் பெண் சபாநாயகர் யார்?


மீரா குமார்-Meira Kumar

02.இந்திய நாணயத்தின் (ரூபாய்) சின்னத்தை (₹) வடிவமைத்தவர் யார்?

 டி. உதய குமார்-தமிழ்நாடு
 D. Udaya Kumar - Tamilnadu
English words :

Famished-starving

Slugishly-slowly

தமிழ் இலக்கணம்: 

 வாக்கிய பிழை பாகம் 2
மாறன் சிறந்த இசை வல்லுனராக ஆக விரும்பினான்
வல்லுனராக –இதிலே ஆக என்று இருப்பதால் தனியாக ஒரு ஆக தேவையில்லை
2. பத்தே பத்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன.
பத்தே, மட்டும் இரண்டுமே அழுத்தம் கொடுக்கும் சொல். எனவே 
அ. பத்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன.

ஆ. பத்தே பத்து  கடைகள்  திறந்து இருந்தன.

என்று எழுத வேண்டும் 
நாளை மற்றும் ஒரு குறிப்பு பார்ப்போம்

அறிவியல் களஞ்சியம் :

பூஞ்சைகள் பிளாஸ்டிக்கை உடைக்கும் சரியான செயல்முறை இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. இருப்பினும், பூஞ்சைகள் பிளாஸ்டிக்கை எளிய மூலக்கூறுகளாக சிதைக்கின்றன, பின்னர் அவை உறிஞ்சி அல்லது வெளியேற்றும் என்று நம்பப்படுகிறது.

பிப்ரவரி 18

மார்ட்டின் லூதர்  அவர்களின் நினைவுநாள்

மார்ட்டின் லூதர் (Martin Luther, நவம்பர் 10, 1483–பெப்ரவரி 18, 1546) ஒரு கிறித்தவத் துறவியும் செருமனிய மதகுருவும், இறையியலாளரும், பல்கலைக்கழகப் பேராசிரியரும், புரட்டஸ்தாந்தத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவரது கருத்துக்கள் புரட்டஸ்தாந்தச் சீர்திருத்தத்தில் செல்வாக்குச் செலுத்தி மேனாட்டு நாகரிகத்தின் போக்கையே மாற்றியது. 

மைக்கலாஞ்சலோ அவர்களின் நினைவுநாள்


மைக்கலாஞ்சலோ



மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி (Michelangelo di Lodovico Buonarroti Simoni, மார்ச் 6, 1475 - பெப்ரவரி 18, 1564) ஒரு இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும்,கட்டிடக்கலைஞருமாவார். இவர் மைக்கலாஞ்சலோ எனப் பொதுவாக அறியப்படுகிறார். இவரது கலைசார்ந்த பல்துறைத் திறமையின் உயர்ந்த தரம் காரணமாகச் சமகாலத்தவரான லியொனார்டோ டா வின்சியுடன் சேர்த்து இவரும் மறுமலர்ச்சிக் காலத் தந்தையெனக் கணிக்கப்படுகின்றார்.

மைக்கலாஞ்சலோவின் நீண்ட கால வாழ்க்கையில், அவர் படைத்தவைகள் அனைத்தும் அவரது அதிசயிக்கத்தக்க திறமைக்குச் சான்றாக அமைகின்றன. கடிதத் தொடர்புகள், வரைபடங்கள், நினைவுக் குறிப்புகள் என இவர் எழுதிக் குவித்தவை ஏராளம். இவைகளையும் சேர்த்தால், 16 ஆம் நூற்றாண்டில் அதிகமாக ஆவணப்படுத்தப்பட்ட கலைஞர் இவரே எனலாம்.
நீதிக்கதை

 நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்

ஒரு வயதான விவசாயி தன் வயலில் பாடுபட்டு உழைத்து அதில் வரும் சொற்பமான வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒரு நாள் அவர் வளர்த்து வந்த குதிரை காணாமல் போய்விட்டது. தகவலைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் என்ன ஒரு துரதிர்ஷட நிலை? என்று பரிதாபமாக விசாரித்தனர். அவர்களின் ஆறுதலுக்கு விவசாயி மௌனமாக இருக்கலாம் என்று பதிலளித்தார்.

அடுத்த நாள் தொலைந்துப்போன அவருடைய குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை அழைத்து வந்தது. இதை ஆச்சர்யமாக பார்த்த அக்கம் பக்கத்தினர், நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி, இப்பொழுது நான்கு குதிரை உனக்கு கிடைச்சிடுச்சு என்றனர். தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மறுபடியும் இருக்கலாம் என்று கூறினார் விவசாயி. 

ஒரு வாரத்துக்குப் பிறகு, விவசாயியின் மகன் குதிரையை வேகமாக ஓட்டிச்சென்று தவறுதலாக கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டான். இப்பொழுது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், விவசாயிடம், உனக்கு ஒரு நல்லது நடந்தால், அடுத்து ஒரு கெட்டது நடக்குதே. உன் பையன் எழுந்து நடக்க பத்து மாதத்திற்கும்மேல் ஆகும் போல இருக்கிறதே, ரொம்ப கஷ்டமான நிலைமை என்று கூறி ஆதங்கப்பட்டனர். அப்போழுதும் அந்த விவசாயி பெரிதாக வருந்தாமல் இருக்கலாம் என்று அதே பதிலைக் கூறினார்.

ஒரே வாரத்தில் அந்த நாட்டில் போர் வந்துவிட்டது. வீட்டில் இருக்கும் எல்லா இளைஞர்களும் கட்டாயம் போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வீடு வீடாக ராணுவத்தினர் புகுந்து இளைஞர்களை அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த ஏழை விவசாயியின் மகனுக்குக் கால் உடைந்து இருந்ததால் அவனை மட்டும் அழைத்துச் செல்லவில்லை. இதைக் கண்டு ஊர் மக்கள் அந்த விவசாயியின் அதிர்ஷ்டத்தைக் கண்டு புகழ்ந்தனர். இப்போதும் அந்த விவசாயி இருக்கலாம் என்று கூறினார்.

அந்த விவசாயி ஒவ்வொருமுறையும் கூறும் பதிலைக் கேட்டுக் கொண்டிருந்த அவருடைய நண்பர், அந்த விவசாயியைப் பார்த்து, உனக்கு நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் இருக்கலாம் இருக்கலாம் என்றே சொல்கிறாயே ஏன்? என்று கேட்டார்.

அதற்கு அந்த விவசாயி நல்லது, கெட்டது இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள். யாருக்கும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சுகம், துக்கம் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பதை உணர்ந்தாலே போதுமானது என்றார்.

இன்றைய செய்திகள்

18.02.2026

⭐ 2030க்குள் 33% மின் பேருந்துகள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

⭐இடைக்கால பட்ஜெட்டில் வேளாண்மைத்துறைக்கு ரூ.47,248 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 ⭐இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை 2026: கனடாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து.

Today's Headlines

⭐ In Tamil Nadu, 33% Electric Buses by 2030: Chief Minister M. K. Stalin announced.

⭐ In the interim budget, ₹47,248 crore has been allocated to the agriculture sector.

⭐ In the interim budget, ₹48,534 crore has been allocated to the School Education Department, said Minister Thangam Thennarasu.

🏀 Sports News

🏀 In the ICC Men's T20 World Cup 2026, New Zealand defeated Canada by 8 wickets.


17 February 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.02.2026



திருக்குறள்: 

அதிகாரம் 52

 தெரிந்து வினையாடல் 

குறள் 511: 

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த 
தன்மையான் ஆளப் படும்.

விளக்க உரை: 

நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.

பழமொழி :
Delay is dangerous.

தாமதம் தாழ்வுக்கு வழி வகுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :


1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும்.

2. எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

எழுவதற்கே வீழ்ச்சி; வெல்வதற்கே தோல்வி ;விழிப்பதற்கே தூக்கம் - பிரௌனிங்

பொது அறிவு : 

01.ஆசியாவில் விளையாட்டுக்கு பிரபலமான மற்றும் முதன்மையான நாடாக கருதப்படும் நாடு எது?


சீனா -China


02.இந்திய கரன்சி நோட்டுகளில் கையெழுத்திட்ட ஒரே இந்திய பிரதமர் யார்?

டாக்டர் மன்மோகன் சிங் 
Dr. Manmohan singh
English words :

Educate-to teach someone to gain knowledge 

Aberrant-unusual

தமிழ் இலக்கணம்: 

 இன்று நாம் அறியாமலே செய்யும் சில வாக்கிய பிழைகளைப் பார்ப்போம்
1. சில மீன்கள் இறந்து கடற்கரை ஓரத்தில் கிடந்தன
தவறு – கடற்கரை என்றாலே கடல் ஓரம் தான். எனவே கடற்கரை ஓரம் என்று எழுதாமல்
 சில மீன்கள் இறந்து கடற்கரையில் கிடந்தன  என்று எழுத வேண்டும் 
2. நான் பிரதி வெள்ளிதோறும் நூலகம் செல்வேன். 
இங்கு பிரதி வெள்ளி , வெள்ளிதோறும் இரண்டும் ஒரே பொருளைத்தான் தருகின்றன. ஒவ்வொரு வெள்ளியும் என்று பொருள்
எனவே 
நான்  வெள்ளிதோறும் நூலகம் செல்வேன். அல்லது 
நான் பிரதி வெள்ளி  நூலகம் செல்வேன். என்று எழுத வேண்டும் 
தொடரும்....
அறிவியல் களஞ்சியம் :

பிளாஸ்டிக் கழிவுகளை சுத்திகரிக்கும் நடைமுறை உயிரியல் வழிகளை உருவாக்குவதில் ஒரு முக்கியமான படியாகும். பிளாஸ்டிக் கழிவுகளை உடைக்க பூஞ்சைகளைப் பயன்படுத்தும் முறையானது பிளாஸ்டிக் கழிவு நெருக்கடியைக் கையாளுவதில் ஒரு நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகுந்த அணுகுமுறையாக அமையும். குப்பைத் தொட்டிகள் அல்லது எரியூட்டிகளில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவைக் குறைக்க இது ஒரு வழியாகும்.

நீதிக்கதை

 நாம் எவ்வழியோ மக்களும் அவ்வழி

ஒரு அழகான நகரத்தின் நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான பெரியவர் அந்நியர்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் காவல் காத்துக்கொண்டிருப்பார். ஒரு நாள் வாலிபன் ஒருவன் நகரத்தின் வாயிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தான். 

அப்போது அங்கிருந்த வயதான காவலாளியிடம் ஐயா பெரியவரே, இந்த ஊர் மக்கள் எப்படி? என்று கேட்டான். அதற்கு அந்த வயதான காவலாளி ஏன் கேட்கிறாய் தம்பி? இந்த ஊரில் வந்து தங்கப் போகிறாயா? என்று சந்தேகத்துடன் கேட்டார்.

ஆமாம் பெரியவரே. நான் முன்பு இருந்த ஊர் மிகவும் மோசம். எதற்கெடுத்தாலும் சண்டையிட்டு கொள்வார்கள். ஒருவரைப் பற்றி ஒருவர் தவறாக பேசிக் கொண்டும், திட்டிக் கொண்டும் இருப்பார்கள். அதனால் எனக்கு எப்பொழுது அந்த ஊரைவிட்டு வருவோம் என்று இருந்தது. அதனால்தான் இந்த ஊர் எப்படி? என்று கேட்டேன் என்றான்.

தம்பி, இந்த ஊர் உன்னுடைய ஊரைவிட மிகவும் மோசம். போட்டி, பொறாமை, ஜாதிச் சண்டை, கலவரம்ன்னு ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துக்கிட்டே இருக்கும். நீயே நிம்மதியைத் தேடி வர, உனக்கு இந்த ஊர் ஏற்றதாக இருக்காது தம்பி என்று கூறி, அந்த வாலிபனை வெளியே வழியனுப்பி வைத்தார்.

சிறிது நேரம் கழித்து, அவ்வழியாக வந்த வேறொரு ஆள் காவலாளியிடம் அதே கேள்வியைக் கேட்டான். ஐயா, இந்த ஊரில் தங்கி வியாபாரம் செய்யலாம் என்று இருக்கேன். இந்த ஊர் மக்கள் எப்படி? என்று கேட்டான். 

பெரியவர் சிரித்துக்கொண்டே, ஏன் தம்பி, உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா? என்று கேட்டார். ஐயா! எனக்கு மூன்று குழந்தைகளே இருக்கின்றார்கள் என்றான். அப்புறம் ஏன்? இந்த ஊருக்கு வந்திருக்கிறாய்? உங்க ஊரிலேயே வியாபாரம் செய்யலாமே? என்றார் காவலர்.

எங்க ஊர் ரொம்ப நல்ல ஊர். எங்க ஊர் மக்கள் அனைவரும் பாசமாக பழகக்கூடியவர்கள். என் குடும்பம் இப்போழுது மிகுந்த வறுமையில் இருக்கின்றது. நான் இந்த ஊருக்கு என் குடும்பத்தின் வறுமையைப் போக்க வியாபாரம் செய்து சம்பாதிப்பதற்காகத்தான் வந்தேன் என்றான். நான் நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டு மீண்டும் எங்க ஊருக்கு சென்று விடுவேன் என்று கண் கலங்கியபடியே கூறினான்.

அழாதே தம்பி, இந்த ஊர் மக்களும் நல்லவர்கள்தான். தைரியமாக நீ இந்த ஊரில் வியாபாரம் செய்யலாம் என்று கூறி கதவுகளைத் திறந்து உள்ளே அனுப்பி வைத்தார்.

காவலாளியின் அருகில் இருந்த ஒருவர், பெரியவரின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே அவரிடம் முதலில் வந்தவரிடம், இந்த ஊர் மிகவும் மோசமானது என்று சொன்னீர்கள். இவரிடம் மட்டும் நல்ல ஊர் என்று சொல்கிறீர்களே ஏன்? என்று சந்தேகத்துடன் கேட்டார்.

அதற்குப் பெரியவர் இந்த உலகம் கண்ணாடி மாதிரி. நாம் எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் கண்ணாடி நம்மைக் காட்டும் என்றார்.

இன்றைய செய்திகள்

17.02.2026

⭐தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான இறுதி வாக்காளர் பட்டியல் 23.02.2026 அன்று வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா தெரிவித்துள்ளார்.

⭐அரசு மருத்துவக் கல்லூரிகளில் MBBS படிப்புக்கு 5,023 இடங்கள் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு 5,000 இடங்கள் என கூடுதலாக 10,023 இடங்களை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

⭐சி.பி.எஸ்.இ., 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஐ.சி.சி. நடத்திய உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் இந்தியா தொடர்ச்சியாக 16 வெற்றிகளை பெற்றுள்ளது.

🏀டி20 உலகக் கோப்பை 2026:ஐக்கிய அரபு எமிரேட்ஸ்  அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்.

Today's Headlines

⭐Tamil Nadu Chief Electoral Officer Archana Patnaik has said that the final voter list related to the special radical revision carried out in Tamil Nadu will be published on 23.02.2026.

⭐The central government has approved an additional 10,023 seats in government medical colleges, including 5,023 seats for MBBS and 5,000 seats for postgraduate medical courses.

⭐The CBSE  public examinations for Classes 10 and 12 will begin tomorrow.

 SPORTS NEWS

🏀 ICC -  India has won 16 consecutive matches in the World Cup and Champions Trophy. 

🏀T20 World Cup 2026: Afghanistan beat the United Arab Emirates by 5 wickets.


பொதுத் தோ்வுக்கான புதிய நடைமுறைகள் வெளியீடு



தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 தோ்வை பள்ளி மாணவா்கள் 7 லட்சத்து 99 ஆயிரத்து 692, தனித்தோ்வா்கள் 27 ஆயிரத்து 783 என 8 லட்சத்து 27,475 போ் எழுதவுள்ளனா். பிளஸ் 1 அரியா் தோ்வை பள்ளி மாணவா்கள் 19,107, தனித்தோ்வா்கள் 5,944 என 25,051 போ் எழுதுகின்றனா். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை பள்ளி மாணவா்கள் 8 லட்சத்து 82,806, தனித்தோ்வா்கள் 26,196 என 9 லட்சத்து 9,002 போ் எழுதவுள்ளனா். ஒட்டுமொத்தமாக 17 லட்சத்து 61,528 மாணவா்கள் பொதுத்தோ்வுகளை எழுதவுள்ளனா். நிகழாண்டில் பிளஸ் 2 தோ்வெழுத 281 சிறைவாசிகளும், பத்தாம் வகுப்பு தோ்வெழுத 395 சிறைவாசிகளும் பதிவு செய்துள்ளனா்.
பொதுத் தோ்வுக்கான புதிய நடைமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளுக்கான புதிய நடைமுறைகளை தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

மேல்நிலைத் தோ்வில் இயற்பியல், வேதியியல், கணிதம், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடங்களில் தோ்வெழுதும் தோ்வா்களுக்கு, பெரிய எழுத்துக்களில் ஏ4" அளவிலான மடக்கைப் புத்தகங்கள் (லாகரிதம்) 20 ஆயிரம் எண்ணிக்கையில் வழங்கப்படவுள்ளன.

இவ்வாண்டு முதல் கணக்குப் பதிவியல் பாடத்துக்கு தோ்வா்கள் நிரலாக்க வசதியற்ற சாதாரண கால்குலேட்டா் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது

தோ்வுக்கு வருகைபுரிந்த மாணாக்கா்களுக்கு வினாத்தாள்கள் வழங்கிய பின்னா், ஒவ்வொரு தோ்வறையிலும் மீதமுள்ள வினாத்தாள்களைத் தோ்வறைக் கண்காணிப்பாளா்களே மாணவா்கள் முன்னிலையில் உறையிலிட்டு சீலிடும் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வினாத்தாள்களின் ரகசியத்தன்மை மேலும் பலப்படுத்தப்படுகிறது.

'சொல்வதை எழுதுபவா்' (ஸ்கிரைப்) சலுகையை பயன்படுத்தும் மாற்றுத் திறனாளித் தோ்வா்களுக்கு வழங்குவதற்கென 5 வினாத்தாள்கள் கொண்ட தனி வினாத்தாள் உறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

இவ்வாண்டு நேரடி தனித் தோ்வா்கள் இருப்பிட முகவரியை உறுதி செய்யவும், சாா்ந்த மாவட்டங்களில் விண்ணப்பித்தலை உறுதி செய்யவும் ஆதாா் அட்டை சரிபாா்க்கப்பட்டு விவரங்கள் பதிவேற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 February 2026

9th Maths Answer key III Mid Term Test 2026

III Mid Term Test 2026
9th Maths Answer key 

A K Rajadhurai 


Krishna Kumar 

JOIN KALVICHUDAR CHANNEL