t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

3 March 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.03.2026

திருக்குறள்: 

குறள் 591: 

உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார் 
உடைய துடையரோ மற்று.  
        
விளக்க உரை: 

ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.

பழமொழி :
As you sow, so you reap.   

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது உணவானது விவசாயி போன்ற பலர் உழைப்பில் வருகிறது.

2. எனவே உணவை வீணாக்க மாட்டேன்.

பொன்மொழி : 

நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலைப்படாதே.  நீ நடந்தால் அதுவே பாதை - அடால்ஃப் ஹிட்லர்

பொது அறிவு : 

01.இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?

            குஜராத்- Gujarat

02. சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யார்?

 நீதிபதி.மனிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா

Hon'ble Mr. Justice Manindra Mohan Shrivastava

English words :

Scrutinize - check closely   

 refrain - stop

தமிழ் இலக்கணம்: 

 சின்னக்கொடி
சின்ன கொடி 
எது சரி 
பிரித்து பார்ப்போம்
சின்னக்கொடி = சின்னம் + கொடி
இது சரி. கட்சியின் சின்னம் கொண்ட கொடி என்று பொருள் படும்.

சின்ன கொடி = சின்ன+கொடி
சிறிய கொடி என்று பொருள்.
இரண்டும் சரியே.
1. சின்னம் என்ற சொல் நாம் உபயோகப் படுத்தும் போது வல்லினம் மிகுந்து வரும்
2. எது சரியான சொல் என்ற சந்தேகம் இருந்தால் பிரித்து பார்த்தால் தெளிந்து விடும்

அறிவியல் களஞ்சியம் :

சர்வதேச பூமிச் சுழற்சி மற்றும் குறிப்பு முறைமைச் சேவை என்னும் நிறுவனம் அணுக்கடிகாரங்களைப் பயன்படுத்தி, மில்லி வினாடி துல்லியத்துடன் பூமியின் சுழற்சி நீளத்தைக் கண்காணித்து வருகிறது. 1972 முதல் இந்தப் பதிவுகள் வைக்கப்பட்டு வருகின்றன. பூமி அதன் உருவாக்கத்திலிருந்து பெற்ற சுழற்சி உந்தத்தின் காரணமாக சுழல்கிறது. சந்திரனின் ஈர்ப்பு விசை நீண்ட காலமாக அதன் வேகத்தைக் குறைத்து வருகிறது. சமீப காலங்களில், பூமியின் உள்ளகம், புவியின் மேலோடு, கடல் நீரோட்டங்கள், வளிமண்டல மாற்றங்கள் போன்ற சிக்கலான உள் காரணிகள் தினசரி சுழற்சி வேகத்தில் சிறிய ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகின்றன என கணிப்பு.

மார்ச் 03

உலகக் காட்டுயிர் நாள்

உலகக் காட்டுயிர் நாள் (World Wildlife Day) அருகிவரும் காட்டு விலங்குகள் மற்றும், தாவரயினங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாக, ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3 இல் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2013, டிசம்பர் 20 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 68 ஆவது அமர்வில் “காட்டு விலங்குகள், மற்றும் தாவரங்கள் அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக சாசனம்” (CITES) மூலம் இந்நாளை உலகக் காட்டுயிர் நாளாக தாய்லாந்தினால் முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இம்முயற்சியில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பொருட்டு திரைப்பட விழா, விழிப்புணர்வு கருதரங்கங்களை ஐ. நா நடத்திவருகிறது.
நீதிக்கதை

 திருந்திய மகன்



சிவாவின் தந்தை கல் உடைக்கும் கூலித் தொழிலாளி. வெயிலில் மாதம் முழுவதும் உழைத்தாலும் கூட அவருக்கு மாத வருமானம் மிகவும் குறைவுதான். அந்த வருமானத்திலேயே அவர் குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை, உணவு மற்றும் இதரச் செலவுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். தான் படும் கஷ்டங்களைப் போல் தன்மகன் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக சிவாவை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என எண்ணினார்.

சிவா ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். சிவா! கடமைக்காக பள்ளிக்கு சென்று வந்தானே தவிர, ஒழுங்காகப் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குச் சிறிது கூட இல்லை. பள்ளியில் சிறிதுநேரம் இருப்பான். பிறகு சில மாணவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டும் பொழுதை கழித்து வந்தான். தன் தந்தையிடம் செலவுக்குக் காசு வாங்கிக் கொள்வான்.

அவர், சிவா தனக்கு ஒரே மகன் என்பதாலும், படிக்கும் மாணவர்கள் ஏதாவது வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்றும் எண்ணி அவன் கேட்கும்பொழுதெல்லாம் பணம் கொடுப்பார். சிவா, தன் தந்தையார் கொடுத்த பணத்தை வாங்கிச் சாப்பிடாமல், தீய நண்பர்களுடன் சேர்ந்து சூதாட்டம் ஆடினான். மற்றவர்கள் அவன் கெட்டவன் என வெறுத்து ஒதுக்கும்படி அவனுடைய செயல்கள் இருந்தன.

அவனுடைய வகுப்பாசிரியர், அவனுடைய நடவடிக்கைகள் சரியில்லை என்று கண்டித்தார். பிறகு, அவனுடைய அப்பாவிடம் அவனைக் கண்டித்து வளர்க்குமாறும் சொன்னார். ஆனால், இவற்றால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. சிவாவின் தந்தையார் அவனுடைய செயல்களால் பெரிதும் மனம் வருந்தினார்.

ஒருநாள் காவல்துறையினர் 10 பேரை சாலையில் அடித்து உதைத்தபடி, இழுத்துச் சென்று கொண்டிருந்தனர். இதை பார்த்த சிவா கூடியிருந்தவர்களிடம், அவர்களை ஏன் காவல் துறையினர் அடிக்கிறார்கள்? என்று கேட்டான். அவர்கள் சூதாட்டம் ஆடிக் கொண்டிருந்தவர்கள், என்று கூறினர். பலநாட்களாக அவர்கள் அகப்படவில்லையென்றும், இன்று வகையாக அகப்பட்டுக் கொண்டார்கள் என்றும் அவர்கள் அவனிடம் கூறினர்.

அதைக் கேட்டதும் சிவாவிற்கு கை, கால்கள் உதறல் எடுத்தது. மற்றவர்கள் வெறுக்கும்படி நடந்தால் இப்படித்தான் உதைபட வேண்டும் போலிருக்கிறது என்று எண்ணி அன்றிலிருந்து திருந்திவிட்டான். அன்றிலிருந்து தீய நண்பர்களுடன் சேராமல், தந்தையிடம் பணம் வாங்காமல் பள்ளிக்கு ஒழுங்காக சென்று பாடங்களை நன்றாக படித்து வந்தான். தன் மகன் சிவா திருந்தியதைக் கண்ட அவன் தந்தை மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

இன்றைய செய்திகள்

03.03.2026

⭐இன்றைய செய்திகள்

⭐ இந்தாண்டின் மார்ச் முதல் மே வரையில், வட இந்தியாவில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

⭐ ஈரான் மீது அமெரிக்கா & இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் காரணமாக உலக அளவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் இந்தியாவில் சுமார் 850 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. 

⭐மத்திய கிழக்கில் போர் சூழல் இந்தியாவின் ரூ.6 ஆயிரம் கோடி அரிசி ஏற்றுமதி கடும் பாதிப்பு

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀T20 WC 2026:அரை இறுதியில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது தென் ஆப்பிரிக்கா!

🏀ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி: கர்நாடகாவை வீழ்த்தி வரலாறு படைத்த ஜம்மு காஷ்மீர்

Today's Headlines

⭐ The India meteorological department has said that North India will experience warmer then usual temperatures from March to May this year.                        

⭐ As global tensions rise due to the US and Israel's attack on Iran around 850 flights have been cancelled in India in the last 2 days.  

⭐ India's rupees 6000  crore rice exports hit hard by the war situation in the middle East.                                 

⭐Sports news :
 
⭐ T20 WC 2026 South Africa to face New Zealand in the Semi final.            

⭐ Ranji trophy final -Jammu and Kashmir creates history by defeating Karnataka


2 March 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.03.2026

திருக்குறள்: 

குறள் 581: 

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் 
தெற்றென்க மன்னவன் கண்.

 விளக்க உரை: 

ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.

பழமொழி :
As the fool things so the bell clinks. 

  பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். 

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது உணவானது விவசாயி போன்ற பலர் உழைப்பில் வருகிறது.

2. எனவே உணவை வீணாக்க மாட்டேன்.

பொன்மொழி : 

பயத்தை வெல்ல விரும்பினால் வீட்டில் உட்கார்ந்து அதைப்பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்தால் மட்டும் போதாது . வெளியில் வந்து செயலில் இறங்க வேண்டும்- டேல் கார்னகி

பொது அறிவு : 

01.உலகின் மிக நீளமான நீர்ப்பாசன கால்வாய் எது?

இந்திரா காந்தி கால்வாய் - இந்தியா 

 Indira Gandhi Canal - India 

02.தாவரங்களின் மிக நுண்ணிய  வளர்ச்சியைக் கண்டறியவும், அளவிடவும் உதவும் முக்கியக் கருவி  எது?

கிரெஸ்கோகிராஃப் -Crescograph

English words :

Passed out -became unconscious

Passed away-died

தமிழ் இலக்கணம்: 

 சின்னத்தம்பி
சின்னதம்பி
இந்த இரண்டில் எது சரி? வல்லினம் மிகுமா மிகாதா என்று காண்போம் வாருங்கள்.
பிரித்து பார்ப்போம்.
சின்னத்தம்பி = சின்னம்+ தம்பி 
இதன் பொருள் சின்னம் உடைய தம்பி. அப்படி ஒரு சொல் கிடையாது.
அடுத்த சொல்லைப் பார்ப்போம்
சின்னதம்பி = சின்ன+ தம்பி.
இதன் பொருள் சிறிய தம்பி எனவே
 *சின்னதம்பி* என்பதே சரியான சொல் ஆகும்.
 ......தொடரும்

அறிவியல் களஞ்சியம் :

 2020 ஆம் ஆண்டு முதல், பூமி அதன் சொந்த சுழற்சி வேக சாதனைகளை மீண்டும் மீண்டும் உடைத்து வருகிறது. 2024, ஜூலை 5, அன்று, பூமி வழக்கத்தைவிட 1.66 மில்லி வினாடிகள் வேகமாக சுழன்றது, இதுவே இதுவரை அளக்கப்பட்ட  எல்லா காலத்திற்குமான குறுகிய நாள். 2024 ஜூலை 9 அன்று 1.36 மில்லி வினாடிகள் குறைவான நேரத்திலும், ஜூலை 22 அன்று  1.34 மில்லி வினாடிகள் குறைவான நேரத்திலும் பூமி சுழன்றது என்று அறியப்பட்டது

மார்ச் 02

சரோஜினி நாயுடு அவர்களின் நினைவு நாள் 





சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் - மார்ச் 2,1949, லக்னோ) அவர் இந்தியாவின் நைட்டிங்கேல் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு அவர் யுனைட்டட் ப்ரொவின்சஸ் (தற்போது உத்தரப்பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது) ன் ஆளுநராக பதவியேற்றார். இதன் வழியாக இந்தியாவின் முதல் பெண் ஆளுநரானார். மார்ச் 2, 1949 அன்று மாரடைப்பால் அவர் மரணமடைந்தார்.
நீதிக்கதை

 அதி புத்திசாலிகள்!



முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழும் மக்கள், இந்த உலகத்திலேயே தாங்கள்தான் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சரியான முட்டாள்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. ஒருநாள் அவர்கள் மரத்தால் ஒரு பெரிய வீடு கட்டத் தீர்மானித்தனர். அதற்கான நல்ல மரத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக அவர்கள் காட்டுக்குப் போக முடிவு செய்தனர். அப்போது, அவர்களில் மிகவும் அதிபுத்திசாலியான ஒருவன் சொன்னான்.



நான் குதிரை வண்டியில் ஏறி முதலில் போகிறேன். நீங்களெல்லாம் பின்னால் வாருங்கள்! என்றான். எல்லாரும் அதை ஏற்றுக் கொண்டனர். அதிபுத்திசாலி குதிரை வண்டியில் ஏறி காட்டுக்குப் பாய்ந்து சென்றான். ஆனால், வழியில் அவன் குதிரைவண்டி ஒரு கல்லின் மீது ஏறியதால் கவிழ்ந்தது. அவன் கையிலிருந்த கோடாரி தூரத்தில் சென்று விழுந்தது. அவனும் ஆழமான ஒரு குழியில் விழுந்து விட்டான்.



குதிரை வண்டிக்குப் பின்னால் வந்த மற்ற அறிவாளிகள், அதிபுத்திசாலியின் கோடாரி வழியில் கிடப்பதைப் பார்த்தனர். அவர்களில் மிகச் சிறந்த அறிவாளி அவன்தான் என்பதால், அவன் கோடாரியை விட்டுச் சென்றதற்கு ஏதும் முக்கியமான காரணம் இருக்கும் என்று மற்றவர்கள் நினைத்தனர். அதனால், எல்லாரும் மரம் வெட்டுவற்காகத் தங்கள் கையில் எடுத்து வந்திருந்த கோடாரியை அப்படியே போட்டுவிட்டுத் தொடர்ந்து சென்றனர்.



காட்டுக்குச் சென்று வெட்டுவதற்கு ஏற்ற மரத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், யார் கையிலும் கோடாரி இல்லையே, பிறகு எப்படி மரம் வெட்டுவது? எல்லாரும் ஒன்றாக அமர்ந்து இதற்கு என்ன வழியென்று சிந்தித்தனர். அவர்களில் ஒரு அறிவாளி, இந்த மரத்தின் கிளையைப் பிடித்து தொங்குகிறேன். நீங்கள் அனைவரும் என்னுடைய காலைப் பிடித்து தொங்குங்கள். அப்படி தொங்கினால் மரக்கிளை வளைந்து ஒடிந்து விழும். நாம் அதை எடுத்துச் சென்று வீடு கட்டலாம் என்றான். எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டனர். அந்த அறிவாளி சொன்னது போலவே செய்தனர். மரக்கிளை ஒடிந்து கீழே விழும் நேரத்தில் முதலில் மரக்கிளையைப் பிடித்து தொங்கிய அறிவாளியின் கை வழுக்கியது. கை வழுக்கி அனைவரும் கீழே விழுந்தனர். மரக்கிளை முன்பு இருந்தது போலவே நீளாமாக ஆனது.



அவர்கள் அனைவரும் மீண்டும் கூடி அமர்ந்து சிந்தித்தனர். அவர்களில் ஒருவன் அப்போது நல்ல படியாகச் சிந்தித்தான். அவன் சொன்னான். நண்பர்களே, நாம் திரும்பிச் சென்று, வழியில் போட்டுவிட்டு வந்த கோடாரிகளை மீண்டும் எடுத்து வரலாம். அதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை! என்றான். அவ்வாறு அவர்கள் சென்று தங்கள் கோடாரிகளுடன் திரும்பி வந்தனர். தேவையான மரத்தை வெட்டி எடுத்துக்கொண்டு கிராமத்துக்குச் சென்றனர். தங்களது புத்திசாலித்தனத்தை நினைத்து தங்களை தாங்களே மிகவும் பாராட்டிக் கொண்டனர்.

இன்றைய செய்திகள்

02.03.2026

⭐ தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று துவங்குகிறது. தமிழ்நாட்டில் 8.07 லட்சம் மாணவர்கள் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர்.

⭐ வர்த்தகம், முதலீடு, கல்வி, உற்பத்தி, கலாச்சாரம், கடல்சார் பாரம்பரியம், விவசாயம் மற்றும் AI உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பு வழங்கும் வகையில் மொத்தம் 17 ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்களில் இந்தியாவும் இஸ்ரேலும் கையெழுத்திட்டுள்ளன.

⭐அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து அமெரிக்க ராணுவம் இஸ்ரேலியப் படைகளுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதலைத் ஆரம்பித்துள்ளது

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀சூப்பர் 8 சுற்று: கடைசி போட்டியில் ஜிம்பாப்வேவை எளிதாக வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா.

Today's Headlines

⭐ The 12th standard public examination in Tamilnadu begins today. 8.07 lakh students in Tamilnadu are going to write the 12th standard public examination.

⭐ India and Israel have signed a total of 17 agreements and documents to provide cooperation in several areas including trade, investment, education, manufacturing, culture, maritime heritage, agriculture and AI.

⭐The US military has launched an attack on Iran in conjunction with Israeli forces after talks between the US and Iran in Geneva failed 

 *SPORTS NEWS*

🏀Super 8 round: South Africa easily beat Zimbabwe in the final match.


1 March 2026

வருமான வரி தமிழக அரசு ஊழியர்கள் 13.03.2026 அன்று அல்லது அதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?

வருமான வரி தமிழக அரசு ஊழியர்கள் 13.03.2026 அன்று அல்லது அதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?
FY 2026-27 AY 2027-28!
Sir/Madam, As per the Income Tax Act, the "New Regime" is the default tax regime for FY 2026-27. If you wish to opt for the Old Regime, please do so on or before 13.03.2026 through the Kalanjiyam mobile app or website. Once exercised, the option will be final. - TN Treasury

வருமான வரிச் சட்டத்தின்படி, "புதிய வரி முறை" என்பது 2026-27 நிதியாண்டிற்கான இயல்புநிலை வரி முறையாகும்.
நீங்கள் பழைய வரி முறையைத் தேர்வுசெய்ய விரும்பினால், 13.03.2026 அன்று அல்லது அதற்கு முன் களஞ்சியம் மொபைல் செயலி அல்லது வலைத்தளம் மூலம் அவ்வாறு செய்யுங்கள்.

ஒருமுறை பயன்படுத்தினால், விருப்பமே இறுதியானதாக இருக்கும். - தமிழ்நாடு கருவூலம்
அரசு ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும்?

 * புதிய வருமான வரியை தேர்ந்தெடுப்பவர்கள் தாங்கள் எதுவுமே செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
 * பழைய வருமான முறையை தேர்ந்தெடுக்கப் பட்டால் தாங்கள் தங்களுடைய கைபேசி வாயிலாக களஞ்சியம் செயலியை பயன்படுத்தி பழைய முறைக்கு மாற்றலாம்.
 * பழைய வருமான முறை மாற்றப்பட்டால் 2026-27 நிதி ஆண்டிற்கு புதிய வருமான வரி கணக்கீடு மூலம் வரி பிடிப்பதை தமிழக அரசுக்கான சம்பள பட்டியல் தயாரிக்கும் இணையதள மென்பொருளில் மாற்றம் செய்ய இயலாது.
எனவே தாங்கள் புதிய வருமான வரி முறை வேண்டும் என்றால் தாங்கள் எதுவுமே செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
அது தானாகவே புதிய வருமான வரிமுறையை கொண்டு வரும்.
தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் தாங்கள் எதுவுமே செய்யாமல் இருந்தால் அது புதிய வருமான முறையை தானாகவே ஏற்றுக்கொள்ளும் புதிய வருமான முறையில் வரும்.


28 February 2026

School Calendar - March 2026 - பள்ளி நாள்காட்டி



மார்ச் -7 சனி - ஆசிரியர் குறை தீர் நாள்.

மார்ச் -2 - திங்கள் - +2 தேர்வு ஆரம்பம்

மார்ச் -11 - புதன் - 10 தேர்வு ஆரம்பம்

மார்ச் -26 - வியாழன் - +2 தேர்வு முடிவு.

ஏப்ரல் - 6 -திங்கள் - 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு.

💥அரசு விடுமுறை நாள்கள்..

மார்ச் -19  - வியாழன் - தெலுங்கு வருடப்பிறப்பு

மார்ச் -21 - சனி -  ரம்ஜான்

மார்ச் -31 - செவ்வாய் - மகாவீரர் ஜெயந்தி

RL & RH  news

02.03.2026 -- திங்கள்--மாசிமகம்

04.03.2026 --  புதன் பகவான் வைகுண்டசாமி அவதாரதினம்

16-03-2026  - திங்கள் ஷபேகாதர்

27 February 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.02.2026



திருக்குறள்: 

குறள் 568: 

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் 
சீறிற் சிறுகுந் திரு.          

விளக்க உரை: 

அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.

பழமொழி :
Grasp all lose all. 

பேராசை பெருநஷ்டம்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்.

 2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

பொன்மொழி : 

நீ வெற்றிக்காக போராடும் பொழுது வீண் முயற்சி என்று சொல்பவர்கள், நீ வெற்றி பெற்ற பின் விடாமுயற்சி என்று சொல்வார்கள் - கண்ணதாசன்

பொது அறிவு : 

01.இந்தியாவின் முதன்மையான வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

டேராடூன் -  உத்தராகண்ட்

  Dehradun, Uttarakhand

02.இந்தியாவில் எந்த உயிரியல் பூங்காவில் வெள்ளை புலிகள் அதிகம் உள்ளன?

நந்தன்கானன் உயிரியல் பூங்கா -ஓடிசா 

Nandankanan Zoological Park - Odisha

English words :

Preening-cleaning

Bifurcated-splitted

தமிழ் இலக்கணம்: 

 இறந்த காலம் –எதிர்காலம்

 *நேற்று* என்னிடம் *பேசும் போது* அம்மா கூறினார்.
நேற்று என்பது இறந்த காலம்

பேசும் போது என்பது எதிர் காலம்

இறந்த காலத்தில் பேசும் போது எதிர்காலம் உபயோகப் படுத்த கூடாது. சரியான சொற்றொடர் என்னவென்றால்

நேற்று என்னிடம் பேசுகிற போது அம்மா கூறினார்.

எங்கள் கிராமத்தை சுற்றி *வரும்போது* ஒரு பாழடைந்த மண்டபத்தை *பார்த்தேன்* 

வரும்போது எதிர்காலம் 

பார்த்தேன் இறந்த காலம் 

சரியான சொற்றொடர்

எங்கள் கிராமத்தை சுற்றி *வந்தபோது* ஒரு பாழடைந்த மண்டபத்தை *பார்த்தேன்*

அறிவியல் களஞ்சியம் :

பல நூற்றாண்டுகளாக பூமியின் சுழற்சி மெதுவாக ஆவதற்கு சந்திரனின் ஈர்ப்பு விசை முக்கிய காரணம் ஆனது.  இந்த நிகழ்வு ""ஓதத் தடை"" (Tidal Braking) என்பதனால் ஏற்படுகிறது. சந்திரனின் ஈர்ப்பு என்பது பூமியின் நீர்ப்பரப்புகளை (மற்றும் ஓரளவு திடப்பரப்புகளையும்) இழுத்து, பூமி சந்திரனை நோக்கி சிறிது புடைப்பு ஏற்படுத்துகிறது. இந்த உராய்வு, ஆற்றல் பரிமாற்றம் காரணமாக  பூமியின் சுழற்சி உந்தம் குறைக்கப்படுகிறது. இதில் சந்திரன் ஒரு கைத் தடை (Handbrake) போலவே செயல்படுகிறது.

பிப்ரவரி 27

பன்னாட்டு அரசு சார்பற்ற அமைப்புகளின் நாள்
நீதிக்கதை

 காவல்காரன்



மகத நாட்டின் மன்னர், தான் புதிதாக அமைத்த அழகிய தென்னந்தோப்பைக் காவல் காக்க, பொறுப்பான ஆள் தேவை. அந்த வேலையை யாரிடம் ஒப்படைக்கலாம் என யோசனை செய்தார். அப்போது அவருக்கு ராமனின் நினைவு வந்தது. அரசவையில் கோமாளியைப் போல் ஒரு வேலையும் செய்யாமல் சுற்றி வருகிறான். ஆகையால் அவனுக்கு இந்த வேலையை கொடுப்பது என்று முடிவு செய்தார். இந்த நிலத்தில் தென்னங்கன்றுகள் நடப் போகிறோம். இவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பு உன்னுடையது. இந்தக் கன்றுகளை இரவிலும், பகலிலும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். கவனமாக நடந்து கொள் என்றார்.



அரசே! நீங்கள் கூறியது போலவே நடந்து கொள்வேன் என்றான் ராமன். அங்கே தென்னங்கன்றுகள் நடப்பட்டன. அவற்றிற்கு காவல் இருக்கத் தொடங்கினான் ராமன். பகல் வேளையில், அவற்றைப் பார்த்துக் கொள்வது அவனுக்கு எரிச்சலாக இருந்தது. இரவு வந்தது. வீடு செல்ல வேண்டும். தென்னங்கன்றுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். என்ன செய்வது என்று சிந்தித்தான். நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது. தென்னங்கன்றுகளை எல்லாம் பிடுங்கி, ஒன்றாகக் கட்டினான். அவற்றைத் தூக்கி கொண்டு, தன் வீட்டிற்கு வந்தான். தன் கண் பார்வையிலேயே அவற்றை வைத்திருந்தான். பொழுது விடிந்தது. அந்தக் கன்றுகளைத் தூக்கிக் கொண்டு நிலத்திற்கு வந்தான். முன்பு இருந்தது போலவே அவற்றை நட்டு வைத்தான். பொழுது சாய்ந்ததும் அவற்றைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு, தன் வீட்டிற்குச் சென்றான். இப்படியே தொடர்ந்து நடந்து வந்தது. ஒரு வாரம் சென்றது. தென்னங்கன்றுகள் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக அரசர் அங்கு வந்தார்.



தென்னங்கன்றுகள் அனைத்தும் வாடிக் கிடப்பதைப் பார்த்தார். கோபம் கொண்ட அவர், நீ பொறுப்பாகத் தென்னந்தோப்பைக் காவல் காப்பாய் என்று உன் பொறுப்பில் விட்டேன். எல்லா கன்றுகளும் வாடிக் கிடக்கின்றன. என்ன செய்தாய்? என்று கோபமாகக் கேட்டார். அரசே! நீங்கள்தான் இவற்றைப் பகலிலும், இரவிலும் நான் காவல் காக்க வேண்டும் என்றீர்கள். இரவில் நான் இவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று பாதுகாத்தேன். பகலில் மீண்டும் இவற்றை இங்கே நட்டேன். நீங்கள் சொன்னது போலவே நடந்து கொண்டேன். இவை ஏன் வாடி விட்டன! என்று எனக்கும் தெரியவில்லை, என்றான். இதைக் கேட்ட அரசர், இவனிடம் போய் இந்த வேலையை கொடுத்தோமே என்று தலையில் அடித்துக் கொண்டார். அப்பாடா! தப்பித்தோம்! என்று நினைத்து பெருமூச்சு விட்டான் ராமன்.

இன்றைய செய்திகள்

27.02.2026


⭐நாடு முழுவதும் சுமார் 150 ஷோரூம்களை மூட முடிவு செய்துள்ளது ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்.‌ 700 ஷோரூம்கள் இருந்த நிலையில் 550 ஆக குறைத்து செயல்பாட்டு திறனை மேம்படுத்த இம்முடிவு என தெரிவிப்பு.

⭐ இந்தியாவில் வருடத்துக்கு 2 லட்சத்து 80,000 பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் உயிரிழந்து வருகின்றனர்.

⭐ தமிழக சிறைகளில் நீண்ட காலமாக தண்டனை அனுபவித்து வரும்  நன்னடத்தை கொண்ட கைதிகள் ஆண்டுக்கு 120 நாட்கள் வரை  குடும்பத்தினருடன் இருக்கும் வகையில் தமிழக அரசு சிறை விடுப்பு விதிகளில் திருத்தம் செய்துள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியுடன்  மோதுகிறது.

Today's Headlines

⭐Ola Electric has decided to close around 150 showrooms across the country. The company stated that this decision was taken to improve operational efficiency by reducing the total number of showrooms from 700 to 550.

⭐ In India, around 2,80,000 women die every year due to cervical cancer.

⭐ The Tamil Nadu government has amended prison leave rules, allowing well-behaved inmates who have been serving long-term sentences in Tamil Nadu prisons to stay with their families for up to 120 days a year.

🏀 Sports News

🏀 In the Super 8 round of the ICC T20 World Cup, the defending champions India are set to face Zimbabwe in their second match.


26 February 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.02.2026



திருக்குறள்: 

குறள் 565: 

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் 
பேஎய்கண் டன்ன துடைத்து. 

விளக்க உரை: 

எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.

பழமொழி :
Anything valued where it belongs. 

எதுவும் இருக்கிற இடத்திலே இருந்தால் தான் மதிப்பு.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்.

 2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

பொன்மொழி : 

நாம் துன்பப்படுவது நமது செயல்களின் காரணமாகத்தான் . அதற்கு கடவுள் பொறுப்பல்ல - சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு : 

01.இந்தியாவில் முழுமையாக குளிர்சாதன வசதி செய்யப்பட்ட முதல் ரயில் எது?


ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் 
Howrah Rajdhani Express

02.தமிழ்நாட்டின் மிக உயரமான மலை சிகரம் எது,?
 
தொட்டபெட்டா -Doddabetta
English words :

rapple -struggle

Contronymn - a word with opposite meaning

தமிழ் இலக்கணம்: 

 "இரண்டு மூன்று நாளில் எல்லாம் சரியாகி விடும்" 

மருத்துவமனையில் இருப்பவரை பார்க்க செல்லும் போது இப்படி சொல்வது உண்டு. இது சரியானதா?

இரண்டு மூன்று என்று ஏறு வரிசையில் சொல்லும் போது இன்னும் நிறைய நாட்கள் ஆகலாம் என்று பொருள் வந்து விடும்.

பிறகு எது சரியான சொற்றொடர்?

 இரண்டொரு நாளில் சரியாகி விடும்.

என்பதே சரி. இதில் இறங்கு வரிசையில் சொல்வதால் விரைவில் குணமாகி விடும் என்று பொருள் படும்.
அறிவியல் களஞ்சியம் :

சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருந்ததால், அதன் தாக்கத்தால், பூமியிலிருந்து கோண உந்தத்தை மாற்றி, அதன் சுழற்சியை மெதுவாக்கும் வலுவான அலைகளை ஏற்படுத்தியது. தற்போதைய 24 மணி நேர நாள் என்பது பூமியின் 4.5 பில்லியன் ஆண்டு வரலாற்றில் ஒப்பீட்டளவில் சமீபத்திய வளர்ச்சியாகும்.

நீதிக்கதை

 நொண்டி குதிரை

காட்டில் அடர்ந்த புல்வெளியில் ஏராளமான குதிரைகள் வசித்து வந்தன. அந்தக் குதிரைகளின் கூட்டத்தில் நொண்டிக் குதிரை ஒன்றும் இருந்தது. மற்றக் குதிரைகள் எல்லாம் அந்த நொண்டிக் குதிரையை மட்டமாகவே நினைத்தன. எல்லாக் குதிரைகளும் அந்தப் புல்வெளியில் ஓடியாடி விளையாடுகின்ற நேரத்தில் அந்த நொண்டிக் குதிரையானது அமைதியுடன் ஒரிடத்தில் படுத்திருக்கும். அதனால், மற்ற குதிரைகள் எல்லாம் அதனை சோம்பேறி என்று கேலி செய்தன. 

நண்பர்கள் எல்லாம் தன்னைக் கேலி செய்கிறார்களே என்று நொண்டிக் குதிரைக்கு சற்று வருத்தமாகயிருந்தது. நண்பர்கள் எல்லாம் அறியாமையின் காரணமாக இப்படிக் கேலி செய்கின்றனர். அதனால் நாம் அவர்களின் மீது கோபப்படுவது நல்லதல்ல... என்று முடிவு செய்தது அந்த நொண்டிக் குதிரை. ஒருநாள் சிங்கம் ஒன்று அந்தப் புல்தரையில் பக்கமாக வந்தது. அந்த இடத்தில் ஏராளமான குதிரைகள் புற்களை மேய்ந்தபடி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தது. 

புல்தரையின் ஓர் ஓரத்தில் படுத்திருந்த நொண்டிக் குதிரை, சிங்கத்தை கவனித்து விட்டது. இந்தச் சிங்கம் நம்மையும், நம் நண்பர்களையும் கவனித்து விட்டது. நிச்சயமாக இதனால் நமக்கு ஆபத்து நேரிடும். உடனடியாக இதனைப்பற்றி நம் நண்பர்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று நினைத்தது அந்தக் குதிரை. 

நண்பர்களே, சற்று நேரத்திற்கு முன்னர் சிங்கராஜா மறைந்திருந்து நம்மையெல்லாம் கவனித்துச் சென்றுவிட்டார். இன்னும் ஓரிரு நாட்களில் அவரால் நமக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள, உடனடியாக இந்த புல்வெளியினை விட்டு வேறு இடத்திற்குச் சென்றுவிட வேண்டும், என்றது. 

நொண்டிக் குதிரையின் பேச்சைக்கேட்ட மற்ற குதிரைகள் எல்லாம் சிரித்தன. நொண்டிக் குதிரையின் வார்த்தைகளை மற்ற குதிரைகள் சிறிதும் பொருட்படுத்தவில்லை. சிங்க ராஜாவின் பிடியில் இருந்து எப்படியாவது நண்பர்களை காப்பாற்ற வேண்டும். எப்படி காப்பாற்றுவது என்று யோசித்தது. திடீரென அதன் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. அதன்படி அந்தக் குதிரையானது சிங்கத்தைத் தேடிச் சென்றது. தன் எதிரே தைரியத்துடன் ஒரு குதிரை நொண்டியபடி வருவதை, வியப்போடு பார்த்தது சிங்கம். 

சிங்க ராஜாவே, வணக்கம். என் வருகை உங்களுக்கு வியப்பினை ஏற்படுத்தலாம். இருந்தாலும் உங்களுக்கு சந்தோஷமான செய்தி சொல்லவே வந்துள்ளேன். என்னை நம்புங்கள், என்று பணிவோடு கூறியது குதிரை. சிங்க ராஜா! குதிரையைப் பார்த்து, என்னை எதற்காக சந்திக்க வந்திருக்கிறாய் என்று கேட்டது? அதற்கு நொண்டிக் குதிரை, சிங்க ராஜாவே, ஒருநாள் நானும் என் நண்பர்களும் புல்தரையில் நின்றபோது மறைந்திருந்து நீங்கள் எங்களை கவனித்து விட்டீர்கள். தங்கள் மூலம் என் நண்பர்களுக்கு ஆபத்து ஏற்படப் போகிறது என்பதை உணர்ந்தேன். அதனால் தான் அதனைத் தடுக்க வேண்டி ஓடோடி வந்தேன். 

சிங்க ராஜாவே! நான் என் நண்பர்களை, என் உயிரை விட மேலாக மதித்து வருகிறேன். ஆகையால் என் நண்பர்களை காப்பாற்ற நானே என் உயிரைக் கொடுத்து உங்களுக்கு விருந்தாக வந்துள்ளேன். நீங்கள் என்னைச் சாப்பிடுங்கள். என் நண்பர்களை விட்டு விடுங்கள் என்று கெஞ்சிக் கேட்டது நொண்டிக் குதிரை. தன் நண்பர்களுக்காக இந்த அளவுக்கு கெஞ்சும் நொண்டிக் குதிரையைக் கண்டு சிங்கத்தின் மனம் மேலும் இளகியது. உன்னுடைய உயர்ந்த குணத்தைப் பற்றி அவர்களுக்கு எடுத்துரைக்கிறேன் என்று கூறி குதிரையை தன்னுடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டது சிங்கம். 

நொண்டிக் குதிரை சிங்கத்தோடு வருவதைக் கண்டதும் எல்லாக் குதிரைகளும் திடுக்கிட்டன. உடனே சிங்கம், நீங்கள் யாரும் என்னைக் கண்டு பயப்பட வேண்டாம். நான் உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன். நான் உங்களின் நண்பனான நொண்டிக் குதிரையை நீங்கள் இவ்வளவு நாட்களாக உங்களில் ஒருவனாக எண்ணாமல் அதன் மனத்தை புண்படுத்தி வந்தீர்கள். 

ஆனால், உங்கள் நண்பனான இவனோ, என்னால் உங்களுக்கு வரப்போகின்ற ஆபத்தைத் தடுத்து, உங்களுக்காக எனக்கு விருந்தாக உணவளிக்க வந்தது. இவ்வளவு நல்ல குணங்களைக் கொண்ட இந்த குதிரையின் மனதை இவ்வளவு நாட்களாகப் புண்படுத்தி வந்துள்ளீர்கள். இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் என்றது சிங்கம். சிங்கத்தின் பேச்சைக் கேட்டதும் எல்லா குதிரைகளும் தலை குனிந்தன. அன்போடு அந்த நொண்டிக் குதிரையினை சூழ்ந்து கொண்டன. அதனைக் கண்டு சிங்கமும் மகிழ்ச்சியடைந்தது. 

நண்பா, உனக்கு கால்தான் ஊனம். ஆனால், எங்களுக்கோ மனமே ஊனமாகி விட்டது. உன் நல்ல குணத்தைப் புரிந்து கொண்டோம். குதிரைகள் அனைத்தும் நொண்டி குதிரையிடம் எங்களை மன்னித்து விடு என்று மன்னிப்பு கேட்டன. குதிரைகள் அனைத்தும் நொண்டிக் குதிரையை புரிந்து கொண்டதைப் பார்த்து சிங்கம் மிகவும் மகிழ்ச்சியடைந்தது.

இன்றைய செய்திகள்

26.02.2026

⭐ தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடியாக உள்ளது.SIR ல் விடுபட்ட சுமார் 29 லட்சம் பேர் தங்களது பெயரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளனர்.

⭐ கன்னியாகுமரியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா - முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

⭐தமிழக போலீஸ் துறையில் புதிய மென்பொருள் - முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.

⭐இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்; அவருக்கு வயது 101. தோழர் நல்லக்கண்ணுவின் உடல் அவரது விருப்பப்படியே  மாணவர்களின் கல்விக்காக சென்னை மருத்துவ கல்லூரிக்கு தானமாக ஒப்படைக்கப்படுகிறது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்தத் தொடரின் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இந்த நிலையில், இன்று (பிப். 26) நடைபெறும் சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.

Today's Headlines

⭐ Tamil Nadu's total voters are 5.67 crore. About 29 lakh people who were left out of the SIR have re-registered their names.

⭐ Mini Tidal Park in Kanyakumari at an estimated cost of Rs. 30 crore - Chief Minister laid the foundation stone.

⭐ New software in the Tamil Nadu Police Department - Chief Minister to launch today.

⭐ Senior leader of the Communist Party of India, Nallakannu, passes away; He was 101 years old. Comrade Nallakannu's body is being donated to the Chennai Medical College for the education of students as per his wishes.

🏀 Sports News

🏀 The T20 World Cup cricket series is being held in India and Sri Lanka. The Super 8 round matches of this series have reached a thrilling stage. In this situation, the Indian team will face the Zimbabwe team in a Super 8 round match today (Feb. 26).


25 February 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.02.2026


திருக்குறள்: 

அதிகாரம் 57 – வெருவந்த செய்யாமை 

குறள் 561: 

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் 
ஒத்தாங் கொறுப்பது வேந்து. 

விளக்க உரை: 

செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.

பழமொழி :
Laughter is the best medicine. 

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்.

 2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

பொன்மொழி : 

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இந்த மூன்று நற்குணங்களுடன் அன்பும் சேர்ந்து விட்டால் உலகமே சொர்க்கமயமாகிவிடும்        

விவேகானந்தர்

பொது அறிவு : 

01.ரவீந்திரநாத் தாகூரின் முதல் கவிதை நூல்  எது?


சந்தியா சங்கீத்' (Sandhya Sangit - மாலைக்கால கவிதைகள்)

02."சிலம்புச் செல்வர்"என்று அழைக்கப்படும் தமிழறிஞர் யார்?

 ம.பொ. சிவஞானம் (மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்)
Mylai Ponnuswamy Sivagnanam.
English words :

Terminate –to end, முடிவுறுதல், முடிவுறச் செய்தல்

culminate –to reach a final result.

இறுதி முடிவை எட்டுதல்

தமிழ் இலக்கணம்: 

 நர்/ னர் 
எந்த விகுதி எந்த வார்த்தையின் பின் வரும் என்பதை இன்று பார்க்கப் போகிறோம்.
கட்டளை சொல்லின் பின்னால் 
 நர் வரும். மற்ற சொற்களின் பின்னால் னர் வரும் 
* அனுப்பு (கட்டளை) = அனுப்புநர்
* பெறு (கட்டளை) = பெறுநர்
* அளித்த (கட்டளை இல்லை) = அளித்தனர்
* பேசி (கட்டளை இல்லை) = பேசினர்

அறிவியல் களஞ்சியம் :

துவக்கத்தில் பூமியின் விரைவான சுழற்சியால் ஒரு நாள் = 6 மணி நேரம் இருப்பினும் சில மதிப்பீடுகள் சந்திரனை உருவாக்கிய மாபெரும் மோதலுக்குப் பிறகு உடனடியாக 4 மணி நேரம் வரை குறுகியதாக இருந்தது. ஒரு நாளின் நீளம் காலப்போக்கில் அதிகரித்து, சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் என்பது, சுமார் 12 மணி நேரத்தையும், சுமார் 1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு 19 மணி நேரத்தையும் எட்டியது.

நீதிக்கதை

 தேவதை கொடுத்த பரிசு

ஒரு கிராமத்தில் இரண்டு மீனவர்கள் நண்பர்களாக இருந்தனர். ஒரு நண்பரின் பெயர் மதன். மற்றவன் பெயர் குணா. இருவரும் தினமும் காலை நேரத்தில் கட்டு மரத்தில் ஏறி, மீன் பிடிக்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஒருநாள் காலை நேரத்தில் இருவரும் வழக்கம் போல் மீன் பிடிக்கச் சென்றனர். அன்றைய தினம் மாலை நேரம் ஆகியும் கூட இருவர் வலையிலும் போதுமான மீன்கள் சிக்கவில்லை. மிகக் குறைந்த அளவிலேயே மீன்கள் மாட்டின. கரையை அடைந்த இருவரும் தங்களுக்குக் கிடைத்த மீனைப் பங்கிட்டுப் பார்த்தனர்.

நண்பனே! இந்த மீன்களை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் நம் இருவர் குடும்பத்திற்கும் போதிய உணவுப்பொருட்களை வாங்கிச் சமைப்பது கடினம். அதனால், மீன் விற்றுக் கிடைக்கும் பணத்தினை நம்மில் ஒருவரே எடுத்துக் கொள்ளலாம் என்றான் குணா.

அப்படியானால் நீயே எடுத்துக்கொள். நீதான் மனைவி, மக்களோடு இருக்கிறாய். உன் குடும்பத்தை வறுமையில் வாடவிடாதே. நீயே எடுத்துக்கொள் என்றான் மதன். இல்லை நண்பனே. உன் குடும்பத்தில் இரண்டு நபர்கள் அதிகமாக இருக்கின்றனர். அதனால் நீதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றான் குணா.

இல்லை நண்பனே, இல்லை கண்டிப்பாக நீதான் எடுத்துக் கொள்ள வேண்டும். உன் குடும்பத்தை வறுமையில் தவிக்க நான் என்றுமே விடமாட்டேன், என்று அழுத்தமாகக் கூறினான் மதன். ஒருவரையொருவர் இவ்வாறு விட்டுக்கொடுக்காமல், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் திடீரென சத்தம் கேட்டது. இருவரும் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தனர். அங்கே கடற்கரையில் ஓர் அழகிய பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள். 

அந்தப் பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் இருவரும் திகைப்புடன் வாயடைத்துப் போயினர். அந்தப் பெண் தேவதை போன்று காட்சி தந்தாள். அந்தப் பெண்ணின் முகத்தை இருவரும் உற்றுப் பார்த்தனர். மீனவர்களே, என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்! நான்தான் இந்தக் கடலில் வசிக்கிற கடல் தேவதை. நீங்கள் இருவரும் ஏதோ வழக்கு நடத்திக் கொண்டிருப்பது போன்று தெரிகிறது. அது என்னவென்று அறிந்துகொள்ள வேண்டியே உங்கள் அருகில் வந்தேன், என்றாள் கடல் தேவதை.

தேவதையே! உன்னை சந்தித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இருவரும் பிடிக்கிற மீன்களை பங்கு போட்டுக் கொள்வோம். இப்போது எங்களுக்குக் குறைந்த அளவே மீன்கள் கிடைத்துள்ளன. என் குடும்பம் வறுமையில் வாடும், அதனால் மீன்களை எடுத்துக்கொள் என்கிறான் என் நண்பன்.

என் குடும்பத்தைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், அவன் குடும்பம் வறுமையில் வாடக்கூடாது என்பதற்காகத்தான் எல்லா மீன்களையும் விற்று கிடைக்கிற பணத்தை என் நண்பன் எடுத்துக்கொள்ளட்டும் என்று சொல்கிறேன். என் நண்பனோ, அதனை மறுத்து என்னை எடுத்துக்கொள்ளும்படியாகச் சொல்கிறான். நீயே அவனுக்கு எடுத்துக் கூறி அவன் குடும்பத்தை வறுமையில் இருந்து காப்பாற்று! என்றான் குணா.

கடல் தேவதையோ சிரித்தபடியே இருவரையும் நோக்கியது. நீங்கள் இருவரும் ஒற்றுமையுடன் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் உங்கள் குடும்ப நலன் கருதியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் குடும்பத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பும், உங்கள் நல்லெண்ணமும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அதனால் உங்கள் இருவருக்கும் உதவி புரியவே வந்துள்ளேன் என்றது கடல் தேவதை.

பிறகு, மதன் முன்பும், குணா முன்பும் இரண்டு மூட்டைகள் தோன்றின. கடல் தேவதையும் அங்கிருந்து மறைந்தாள். இருவரும் அந்த மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அந்த மூட்டைகளில் நிறையப் பொற்காசுகள் காணப்பட்டன. இருவருமே அதனை தங்கள் ஒற்றுமைக்குக் கிடைத்த பரிசாகவே நினைத்துக் கொண்டனர். அதைக் கொண்டு பெரிய பணக்காரர்கள் ஆனார்கள்.

இன்றைய செய்திகள்

25.02.2026

⭐திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

⭐இனி கேரளா அல்ல 'கேரளம்'... பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

⭐தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

⭐தமிழ்நாட்டில் சுட்டெரிக்க தொடங்கிய வெயில்-அதிகபட்சமாக ஈரோட்டில் 100 டிகிரி பதிவு

⭐உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், மாஸ்கோவின் 4 விமான நிலையங்களையும் மூடுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக்கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக  இந்திய அணி தோல்வியடைந்தபோதும் இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை படைத்திருக்கிறார்.இவர் ஐ.சி.சி. பந்து வீச்சுக்கான தர வரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்து உள்ளார்.

Today's Headlines

⭐ The Chief Minister inaugurated the silver jubilee entrance gate of the Thiruvalluvar statue.

⭐ No longer “Kerala” but “Keralam”… The Union Cabinet has approved the name change of Kerala!

⭐ The Election Commission of India has released the final electoral roll for Tamil Nadu.

⭐ The heat has started scorching in Tamil Nadu – the highest temperature of 100 degrees was recorded in Erode.

⭐ Due to the war between Ukraine and Russia intensifying again, Russia has announced the closure of four airports in Moscow.

🏀 Sports News

🏀 Although the Indian national cricket team lost to the South African national cricket team in the T20 World Cup match, Indian player Varun Chakravarthy has created a record. He has secured the number one position in the ICC bowlers' ranking. 


JOIN KALVICHUDAR CHANNEL