t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

8 July 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.07.2026


திருக்குறள்: 

பால் :  பொருட்பால்          

 இயல் : அரசியல்   

அதிகாரம்:45    பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:445

குறள்: 

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.  

பொருள்:
 
தகுதியான வழிகளை ஆராய்ந்து சொல்பவரையே கண்ணாகக் கொண்டு உலகம் நடத்தலால், மன்னவன், அவரை ஆராய்ந்து தன் சுற்றமாக்கிக் கொள்ளல் வேண்டும்.

பழமொழி :
Art is long and life is short

கல்வி கரையில் கற்பவர் நாள் சில.

இரண்டொழுக்க பண்புகள் :.

1.போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால், எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

 2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.


பொன்மொழி : 

பொறுமை கசப்பானது; அதன் பலன் இனிமையானது.

Thought for the Day :

Dream big, work hard, stay humble.

பொது அறிவு : 

1. நோபல் பரிசு எப்போதும் எந்த நாளில் வழங்கப்படுகிறது? 

டிசம்பர் 10.  

2. சர்வதே மனித உரிமைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 

 டிசம்பர் 10.

English words :

Generate – Produce, உருவாக்கு.

Illustrate – Explain, விளக்கிக் காட்டு.

புவியியலும் சுற்றுசூழலும் :

உலகின் மிகப் பெரிய நாடு – ரஷ்யா. இது 11 நேர மண்டலங்களைக் கொண்டுள்ளது. 

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு – இந்தியா

NMMS :

MAT 

வேறுப்பட்டதை கண்டுபிடி.




விடை: (2)

ஜூலை 08

செளரவ் கங்குலி அவர்களின் பிறந்தநாள்

சௌரவ் சந்திதாஸ் கங்குலி (Sourav Chandidas Ganguly; ஒலிப்புⓘ; பிறப்பு: சூலை 8, 1972) தாதா என அன்பாக அழைக்கப்படுகிறார். அதற்கு வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்பது அர்த்தமாகும். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரும் அணித்தலைவரும் ஆவார். தற்போது இவர் வங்காளத் துடுப்பாட்ட அவையின் தலைவராக உள்ளார்.[1] சர்வதேச துடுப்பாட்ட அரங்கில் மிகச் சிறந்த அணித் தலைவராகவும் மட்டையாளராகவும் விளங்கினார்.வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர் எனவே இவர் காட் ஆஃப் தெ ஆஃப் சைட் (வலது புறத்தின் கடவுள்) என அழைக்கப்படுகிறார்.
நீதிக்கதை

"நல்ல வார்த்தையின் சக்தி"

ஒரு பரபரப்பான கடை வீதியில் ரவி என்ற இளைஞன் பழக்கடை வைத்திருந்தான். அவன் எப்போதும், "இன்று வியாபாரம் எப்படி நடக்குமோ?,சரியாக இருக்காது", "யாரும் வாங்க வருகிற மாதிரி தெரியலையே. இன்றைய பழம் எல்லாம் விற்காமல் அழுகி விடுமோ?" என்று எதிர்மறையாகப் பேசிக்கொண்டே இருப்பான்.

அதே வீதியில் மீனா என்ற பெண் பூக்கடை வைத்திருந்தாள். அவள் எப்போதும், "இன்று நல்ல நாள்!", "எல்லாம் நன்றாக நடக்கும்!", "வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் வருவார்கள்!" என்று நேர்மறையான வார்த்தைகளையே பேசுவாள்.

ஒருநாள் இருவரின் கடைக்கும் ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்கள் வந்தனர். ரவி முகம் சுளித்து, சற்று சலிப்புடன் , "என்ன வேண்டும்?" என்று கேட்டான். வாடிக்கையாளர்களும் விரைவாக வாங்கிவிட்டு சென்றனர்.

மீனா மட்டும் புன்னகையுடன், "வணக்கம்! உங்களுக்கு என்ன பூ வேண்டும்? இன்று உங்கள் நாள் இனிமையாக அமையட்டும்!" என்று அன்பாகப் பேசினாள். வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்து, மீண்டும் மீண்டும் அவள் கடைக்கே வரத் தொடங்கினர்.

சில நாட்களுக்குப் பிறகு ரவி, "என் கடைக்கு ஏன் வாடிக்கையாளர்கள் குறைகிறார்கள்?" என்று கேட்டான்.

மீனா புன்னகையுடன், "நாம் பேசும் நல்ல வார்த்தைகளும், நேர்மறை எண்ணங்களும் மக்களின் மனதில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் உருவாக்கும். அதுவே வெற்றிக்கான முதல் படி," என்றாள்.

அன்று முதல் ரவியும் நேர்மறையாகப் பேசத் தொடங்கினான். சிறிது காலத்தில் அவன் கடையிலும் வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர்.

நீதி: 

நேர்மறை கருத்துகளும் நல்ல வார்த்தைகளும் நம்பிக்கையை வளர்த்து, வெற்றிக்கான பாதையைத் திறக்கும்.

இன்றைய செய்திகள்

08.07.2026

🗒️ஹிட்டாச்சி ஒப்பந்தம்: 
ரூ.1,000 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஹிட்டாச்சி (Hitachi) நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

🗒️கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் மீனாட்சி பகுதியில்  ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்ததுடன், கோழிக்கோடு–வயநாடு இரட்டை சுரங்கப்பாதை திட்ட பணியாளர்களை தேடும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

🗒️பிரதமர் மோடிக்கு இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

 *விளையாட்டுச் செய்திகள்*

🏀2-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி.

🏀விராட் கோலியுடன் கிரிக்கெட் விளையாட ஆசை என விம்பிள்டன் சாம்பியன் நோவக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

Today's Headlines

🗒️ Hitachi Agreement:
The Tamil Nadu Government has signed a Memorandum of Understanding (MoU) with Hitachi to invest ₹1,000 crore, creating 1,000 employment opportunities.

🗒️ One person died in a sudden landslide in the Meenatchi area of ​​Kerala's Wayanad district, and intensive search and rescue operations are underway for workers involved in the Kozhikode-Wayanad twin tunnel project.

🗒️ Prime Minister Narendra Modi has been conferred Indonesia's highest civilian award.

Sports News

🏀 2nd ODI:
Sri Lanka defeated India in the second One Day International match.

🏀 Djokovic's Wish:
Novak Djokovic, the Wimbledon champion, said he would like to play cricket with Virat Kohli.


7 July 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.07.2026






திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:45 பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:444

குறள்:

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை

பொருள்:

அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்.

பழமொழி :
Appearance is deceitful.

உருவத்தை கண்டு ஏமாறாதே.

இரண்டொழுக்க பண்புகள் :.

1.போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால், எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

 2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.

பொன்மொழி : 

நம்பிக்கையுடன் தொடங்கும் ஒவ்வொரு செயலும் வெற்றியை நோக்கிச் செல்லும்.

Thought for the Day :

Discipline is the bridge between goals and achievement.

பொது அறிவு : 

1. தமிழ்நாடு மாநிலம் உருவாகும் போது எத்தனை மாவட்டங்கள் இருந்தன? 

13 மாவட்டங்கள்

2. மூளையை தூண்டி நினைவுத்தின் அதிகரிக்க வைக்கும் உணவு எது? 

வால்நட்.

English words :

Require – Need, தேவைப்படு.

Conclude – Finish, முடி

புவியியலும் சுற்றுசூழலும் :

உலகின் மிகப் பெரிய கண்டமாக – ஆசியா திகழ்கிறது.
உலகின் சிறிய கண்டம் மற்றும் நாடாக விளங்குவது – ஆஸ்திரேலியா ஆகும்

NMMS :

MAT 

பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி

 (1) PLAY. 

(2) WRITE. 

(3) THINK. 

(4) WALK.

 விடை: (3) THINK

ஜூலை 07

மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni), சுருக்கமாக எம் எஸ் தோனி என்று (பிறப்பு: சூலை 7, 1981) அறியப்படும் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சர்வதேசத் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வரையிட்ட நிறைவுப் போட்டிகளுக்கும், 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக இருந்தார். இவரின் தலைமையில் 2007 ஐசிசி உலக இருபது20 2007-08 பொதுநலவய போட்டித் தொடர், 2010 மற்றும் 2016 ஆசியக் கோப்பை, 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை மற்றும் 2013 ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணம் ஆகிய கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. நடுவரிசை மட்டையாளரும் இலக்குக் கவனிப்பாளருமான இவர் ஒநாப போட்டிகளில் 10,000க்கும் மேற்பட்ட ஓட்டங்களை எடுத்துள்ளார். இவர் ஒரு நாள் பன்னாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆட்டத்தினை முடித்துவைக்கும் திறன் கொண்டவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.மேலும் அவர் சிறந்த அணித்தலைவராகவும் கருதப்படுகிறார்.
நீதிக்கதை

 நீதிக்கதை: 

"ஆரோக்கியமே உண்மையான செல்வம்"


ஒரு ஊரில் கார்த்திக், பிரியா மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் சஞ்ஜய், வந்தனா ஆகியோர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.


சஞ்ஜய்க்கு தினமும் பள்ளி முடிந்து வரும்போது பர்கர், சிப்ஸ், குளிர்பானம் போன்ற ஜங்க் ஃபுட் சாப்பிடும் பழக்கம் இருந்தது. அம்மா வீட்டில் சத்தான உணவு செய்து வைத்தாலும், "எனக்கு இதுதான் பிடிக்கும்!" என்று கூறி ஜங்க் ஃபுட்டையே விரும்பி சாப்பிடுவான்.


சில நாட்களில் சஞ்ஜய்க்கு அடிக்கடி வயிற்றுவலி, சோர்வு, பல் வலி ஆகியவை ஏற்பட ஆரம்பித்தன. விளையாடவும் முடியவில்லை. மருத்துவரிடம் சென்றபோது, "அதிகமாக ஜங்க் ஃபுட் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கவில்லை. இனிமேல் வீட்டில் சமைக்கும் ஆரோக்கியமான உணவைச் சாப்பிட வேண்டும்," என்று அறிவுரை கூறினார்.


அந்த நாளிலிருந்து சஞ்ஜயும்  குடும்பத்தினரும் சேர்ந்து தினமும் சத்தான உணவுகளை சாப்பிடத் தொடங்கினர். பழங்கள், காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை உணவில் சேர்த்தனர்.


 சில வாரங்களிலேயே சஞ்ஜயின் உடல்நலம் நன்றாகி, மீண்டும் உற்சாகமாக பள்ளிக்கும் விளையாட்டிற்கும் செல்ல ஆரம்பித்தான்.


அப்போது சஞ்ஜய் தனது தங்கையிடம், "சுவைக்காக மட்டும் ஜங்க் ஃபுட் சாப்பிடக் கூடாது. ஆரோக்கியமான உணவுதான் நம்மை வலிமையாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும்," என்று கூறினான்.


நீதி: ஜங்க் ஃபுட்டை அதிகமாகச் சாப்பிடாமல், சத்தான உணவை உண்பதே நல்ல ஆரோக்கியத்திற்கான வழி.


இன்றைய செய்திகள்

07.07.2026

🗒️உணவு பாதுகாப்புச் சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்.

🗒️இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயண திட்டத்தில் முன்னேற்றம் - ‘ககன்யான்’ சோதனை வெற்றி,முன்னதாக
இஸ்ரோ 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சோதனைகள்..
🗒️கோடைக்கால வெப்ப அலை மற்றும் காலநிலை மாற்றத்தின் எதிரொலியாக, தெற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயினால்  30 ஆயிரம் ஏக்கர் மரங்கள் கருகின.

 விளையாட்டுச் செய்திகள்

🏀விம்பிள்டனில் ஜானிக் சின்னர் அசத்தல்... தொடர்ந்து 5-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறி சாதனை.

Today's Headlines

🗒️ Chief Minister Joseph Vijay has written to the Prime Minister urging a reconsideration of the proposed amendments to the Food Safety Act.

🗒️ India's first human spaceflight mission has achieved another milestone as the Gaganyaan test was successful. Earlier, ISRO had conducted more than 8,000 tests for the mission.

🗒️ As a result of summer heatwaves and climate change, 30,000 acres of trees were scorched by severe wildfires in Southern European countries.

Sports News

🏀 At Wimbledon, Jannik Sinner continued his impressive run by reaching the quarterfinals for the fifth consecutive time, setting a remarkable record.


வழக்கமான டெட்டை விட கடினமான வினாக்கள்சிறப்பு தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி

ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழக அரசு மீது ஆசிரியர்கள் குற்றச்சாட்டு தொலைக்காட்சி செய்தி

 ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழக அரசு மீது ஆசிரியர்கள் குற்றச்சாட்டு  தொலைக்காட்சி  செய்தி 



6 July 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.07.2026



திருக்குறள்: 

பால் :  பொருட்பால்          

 இயல் : அரசியல்   

அதிகாரம்:45    பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:443

குறள்: 

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.  

பொருள்:

  பெரியோரையே விரும்பித் தமக்குரிய சுற்றத்தினராகப் பெற்றுக் கொள்ளுதல், பெறுதற்கரிய பேறுகளுள் எல்லாம் அரிதான பெரும்பேறு ஆகும்.

பழமொழி :
After a dinner sleep a while

உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு

இரண்டொழுக்க பண்புகள் :.

1.போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால், எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

 2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.


பொன்மொழி : 

வீழ்வது தோல்வியல்ல; வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி.

Thought for the Day :

Success is not final; failure is not fatal. It is the courage to continue that counts.

பொது அறிவு : 

1. சிவகாசி நகரத்தை ""குட்டி ஜப்பான்"" என அழைத்தவர் யார்? 

ஜவஹர்லால் நேரு. 

2. தமிழ்நாட்டில் வற்றாத ஜீவ நதி என்றழைக்கப்படும் ஆறு எது? 

தாமிரபரணி.

English words :

 Construct – Build, கட்டமை

Examine – Inspect, ஆராய்

புவியியலும் சுற்றுசூழலும் :

பூமியில் 7 கண்டங்களும் 5 பெருங்கடல்களும் உள்ளன.உலகின் மிகக் குளிரான கண்டம் – அண்டார்டிகா.

NMMS :

MAT 

பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி. 

 (1) (7,13)

 (2) (13,23)

 (3) (31,37) 

 (4) (81,83) 

 விடை: (4) (81,83)

நீதிக்கதை

நீதி கதை: "திருமண விழாவில் கிடைத்த பாடம்"

ஒரு கிராமத்தில் இம்ரான் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள், அவன் தனது குடும்பத்துடன் உறவினர் திருமணத்திற்கு சென்றான்.

திருமண மண்டபத்தில் வயதான தாத்தா, பாட்டிகள் பலர் நின்றுகொண்டிருந்தனர். ஆனால், இம்ரான் அவர்களைக் கவனிக்காமல், காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்து கைப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த அவனுடைய அக்கா ஹஸ்னா, "இம்ரான், பெரியவர்கள் நிற்கிறார்கள். நாம் எழுந்து அவர்களுக்கு இடம் கொடுப்பது மரியாதை," என்று கூறினாள்.

உடனே இம்ரான் எழுந்து தனது இருக்கையை ஒரு தாத்தாவுக்கு கொடுத்தான். தாத்தா புன்னகையுடன், "நல்ல பழக்கம்தான் மனிதனை உயர்த்தும். நீ நல்ல பிள்ளையாக வளர்வாய்," என்று ஆசீர்வதித்தார்.

அந்த ஆசீர்வாதத்தைக் கேட்ட இம்ரான் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அன்று முதல் எங்கு சென்றாலும் பெரியவர்களை மரியாதையுடன் நடத்தவும், அவர்களுக்கு முதலில் இடம் கொடுக்கவும் பழகினான்.

நீதி:

"பெரியவர்களை மரியாதையுடன் நடத்தினால், அவர்களின் ஆசீர்வாதம் நம் வாழ்க்கையை வளமாக்கும்." 

இன்றைய செய்திகள்

06.07.2026

*_தலைப்புச் செய்திகள்_*

🗒️மின்சார அளவீடு  கணக்கு  எடுக்கும் ஊழியர்களுக்கு செல்போன் வாங்க ரூ.10ஆயிரம் வழங்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு.

🗒️கீழடியை தொடர்ந்து கரிவலம்வந்தநல்லூரில் பூமிக்கு அடியில் கிடைத்த பழந்தமிழர் நகரம்
சுமார் 13 அடி நீளம் 13 அடி அகலம் கொண்ட சதுர வடிவ கிணற்று சுவரை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

🗒️எல்நினோ எச்சரிக்கை: பெங்களூருவில் குடிநீர் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிப்பு.

 *விளையாட்டுச் செய்திகள்*

🏀விம்பிள்டன் டென்னிஸ்: மேடிசன் கீஸ் வெற்றி
அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, சக நாட்டு வீராங்கனையான மேடிசன் கீஸ் உடன் மோதினார் .

Today's Headlines


🗒️ Tamil Nadu Government announces ₹10,000 for electricity meter readers to purchase mobile phones.

🗒️ Ancient Tamil settlement discovered at Karivalamvanthanallur after Keezhadi. Researchers have unearthed a square-shaped well structure measuring approximately 13 feet in length and 13 feet in width, indicating the presence of an ancient Tamil urban settlement beneath the ground.

🗒️ El Niño alert: Restrictions imposed on drinking water usage in Bengaluru.

Sports News

🏀 Wimbledon Tennis: Madison Keys wins. America's Amanda Anisimova faced fellow American Madison Keys, with Madison Keys emerging victorious.


4 July 2026

3 July 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.07.2026


திருக்குறள்: 

 பால் :  பொருட்பால்          

 இயல் : அரசியல்   

அதிகாரம்:45    பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:442

குறள்: 

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.  

பொருள்:

வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்  

பழமொழி :
A young calf knows no fear.

இளங்கன்று பயமறியாது.

இரண்டொழுக்க பண்புகள் :.

1) ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஆக்கமுடன் செய்வேன் . 

2) முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயற்சி செய்வேன்.

பொன்மொழி : 

அறிவே மனிதனின் மிகப்பெரிய சக்தி.

Thought for the Day :

Small aim is a crime; have great aim.

பொது அறிவு : 

1. மூன்றாம் பாலின நல வாரியத்தை நிறுவிய முதல் மாநிலம் எது?

தமிழ்நாடு

2. வட்டப்பாறை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாவட்டம் எது? 

கன்னியாகுமரி. 

English words :

1. Enhance – Improve, மேம்படுத்து.

2. Reduce – Decrease, குறைத்தல்

புவியியலும் சுற்றுசூழலும் :

நம் ஒவ்வொருவரின் அடிப்படை கடமைகள் (Fundamental Duties)

* தேசியக் கொடியை மதித்தல்

* சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்

* பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல் ஆகும்.

NMMS :

SAT - Social science



ஷாகு என்றால் _____________ என்று பொருள்.                      

(1) போர் முறை              

 (2) நேர்மையானவர்                            

(3) வரி முறை                              

 (4) அஷ்டபிரதான்                                      

விடை:  (2) நேர்மையானவர்

ஜூலை 03

சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்

2008 ஆம் ஆண்டில், இத்தாலியில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளின் குழு, ரெஸெரோவின் தலைமையில், பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், உலகளாவிய பிரச்சாரத்தைத் தொடங்கவும் முடிவு செய்தது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான வலுவான வழக்கறிஞரான, புகழ்பெற்ற பாதுகாவலர் சர் டேவிட் அட்டன்பரோவின் பிறந்தநாளை ஒட்டி, ஜூலை 3-ஆம் தேதி, முதல் சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வு வெற்றிகரமாக இருந்தது, முதன்மையாக இத்தாலியில் பிளாஸ்டிக் பைகள் இல்லாத மாற்றுகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தியது.
நீதிக்கதை

ராகுல் மற்றும் கோகுல்

ஒரு பள்ளியில்  ராகுல் மற்றும் கோகுல் என்ற இரட்டையர்கள் படித்துக் கொண்டிருந்தனர்.

பள்ளி முடிந்ததும், ராகுல் தினமும் மைதானத்தில் ஓடி விளையாடுவான். கபடி, ஓட்டப்பந்தயம், கயிறு தாண்டுதல் போன்ற விளையாட்டுகளில் ஆர்வமாக பங்கேற்பான்.

ஆனால் கோகுல், பள்ளி முடிந்ததும் வீட்டுக்குச் சென்று கைப்பேசியில் விளையாடிக் கொண்டே இருப்பான். வெளியே சென்று விளையாட அவனுக்கு விருப்பம் இல்லை.

சில மாதங்கள் கழித்து பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. ராகுல் எல்லாப் போட்டிகளிலும் உற்சாகமாக கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றான். அவன் எப்போதும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தான்.

கோகுல் மட்டும் சிறிது நேரம் ஓடியவுடன் சோர்வடைந்தான். அப்போது உடற்கல்வி ஆசிரியர், "தினமும் சிறிது நேரம் விளையாடினால் உடல் வலிமையும், நல்ல ஆரோக்கியமும், மன உற்சாகமும் கிடைக்கும்," என்று கூறினார்.

அந்த நாளிலிருந்து கோகுலும் தினமும் நண்பர்களுடன் வெளியில் சென்று விளையாடத் தொடங்கினான். சில வாரங்களிலேயே அவனும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் மாறினான்.

நீதி: தினமும் விளையாடுவது உடலுக்கு ஆரோக்கியத்தையும், மனதுக்கு மகிழ்ச்சியையும் தரும்.

இன்றைய செய்திகள்

03.07.2026

🗒️துணை மருத்துவ படிப்புகளுக்கான கட்டண விவரம் வெளியீடு
டிப்ளமோ பார்மசி அரசு ஒதுக்கீட்டிற்கு ரூ.25 ஆயிரமும், நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ரூ.50 ஆயிரமும் கட்டணம் நிர்ணயிக்கப்
பட்டுள்ளது.

🗒️ஓமன், குவைத் நாடுகளுக்கு ஏர் இந்தியா விமான சேவை மீண்டும் தொடக்கம்.

🗒️ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.5 ஆக பதிவு
இந்திய நேரப்படி இரவு 11:27 மணிக்கு, 173 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

 *விளையாட்டுச் செய்திகள்* 

🏀  சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 100 சிக்சர்களை பூர்த்தி செய்த 5-வது இந்தியர் அபிஷேக் சர்மா ஆவார்.

🏀கிரிக்கெட்
இலங்கையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது இந்திய அணி.

Today's Headlines

🗒️ Fee details released for Allied Health Courses. The fee has been fixed at ₹25,000 for Diploma in Pharmacy under the Government Quota and ₹50,000 under the Management Quota.

🗒️ Air India resumes flight services to Oman and Kuwait.

🗒️ Earthquake strikes Afghanistan; magnitude 5.5 recorded
The earthquake occurred at 11:27 PM (IST) at a depth of 173 km.

🏀 Sports News

🏀 Cricket: Abhishek Sharma has become the 5th Indian cricketer to complete 100 sixes in T20 International cricket.

🏀 Cricket: The Indian team is in Sri Lanka to participate in a two-match Test series.


JOIN KALVICHUDAR CHANNEL