. -->

Now Online

FLASH NEWS


Saturday 27 July 2024

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு 2024 ~ 2026

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு 2024 ~ 2026


▪️ உறுப்பினர் சான்றிதழ்
▪️ உறுதிமொழி 
▪️ கூட்ட அழைப்பிதழ் 
▪️ படிவங்கள் 
▪️ அட்டவணைகள் 
▪️ நிகழ்ச்சி நிரல் 
▪️ பார்வையாளர் படிவம்
▪️ வழிகாட்டி அரசாணைகள்
▪️ சுவரொட்டிகள் 
▪️ விழிப்புணர்வு கூட்ட வீடியோக்கள்

📌 தேவையான அனைத்தும் ஒரே Link ல் PDF , Word , Exel, PSD, Picture & Video File ஆக வழங்கப்பட்டுள்ளது.


Thanks To
பெ. அலெக்ஸ் பாண்டியன்,
BRTE, BRC - சேடபட்டி 

TNSED SCHOOLS APP NEW UPDATE

TNSED SCHOOLS APP NEW UPDATE

Version : 0.1.7 - Date 26 July 2024

Friday 26 July 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.07.2024


  

திருக்குறள்: 

பால் : பொருட்பால்

அதிகாரம் : அறிவு உடைமை

குறள் எண்:427

அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதுஅறி கல்லா தவர்.

பொருள் : அறிவுடையவர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார்; அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.

பழமொழி :
அடாது செய்பவர் படாது படுவர்

Do evil and look for like.

இரண்டொழுக்க பண்புகள் :

*மழை பெய்யும் போது மரம் மற்றும் மின்கம்பிகள் அருகில் நிற்க மாட்டேன். 

 *மழைக்காலங்களில் பாதுகாப்பு ஆடைகள், சூடான குடிநீர் பயன்படுத்துவேன்.

பொன்மொழி :

"வெற்றியாளர் ஒரு போதும் இழப்பதில்லை, ஒன்று வெல்கிறார்கள் அல்லது கற்கிறார்கள்" ----மகாத்மா காந்தி

பொது அறிவு : 

1.இருமுறை நோபல் பரிசு பெற்ற முதல் விஞ்ஞானி யார்?


விடை: மேரிகியூரி

2. 15 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர் யார்?

விடை: 14-ம் லூயி

English words & meanings :

 prohibit-தடை,

 resist-தடுப்பு
வேளாண்மையும் வாழ்வும் : 

பூங்கார் கைகுத்தல் அரிசி:
இது தமிழ்நாட்டின் பாரம்பரிய வகைகளில் ஒன்று, இதில் உள்ள அந்தோ சயினின் காரணமாக பார்ப்பதற்கு வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும்

ஜூலை 26

ஜார்ஜ் பெர்னாட் ஷா அவர்களின் பிறந்தநாள்

ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856 ஆம் ஆண்டு ஜூலை 26 - 1950 ஆம் ஆண்டு நவம்பர் 2 ) ஓர் அயர்லாந்து நாடக ஆசிரியராவார். இசை மற்றும் இலக்கிய விமர்சனமே அவரது முதல் இலாபத் தன்மை கொண்ட எழுத்துப் படைப்புகள் ஆகும். அதில் தனது திறனைக் கொண்டு மிக நேர்த்தியான பத்திரிகைப் படைப்புகள் பலவற்றை எழுதினார். அவரது பிரதான திறமை நாடகமே ஆகும். மேலும் அவர் 60-இக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட அவரது அனைத்து எழுத்துப் படைப்புகளும் சமூகத்தில் பெருவாரியாக நிலவிவரும் சிக்கல்களைப் பற்றியதாகவே இருக்கும். ஆனால் அவற்றின் மிக முக்கிய கருப்பொருள்களை மிகவும் மனதால் ஏற்றுக்கொள்ளும்படி மாற்றுவதற்கு அவற்றில் ஒரு நகைச்சுவை அம்சமும் இழையோடியபடி இருக்கும். கல்வி, திருமணம், மதம், அரசாங்கம், உடல்நலம் மற்றும் சாதிப்பாகுபாடு ஆகிய அனைத்தையும் பெர்னாட் ஷா ஆராய்ந்தார்.
நீதிக்கதை

 மனிதர்கள் பலவிதம்



ஒரு இளைஞன் விரக்தியுடன் குருவின் முன்னால் போய் நின்று "குருவே! இந்த உலகத்தை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று கூறினார்.

குரு "ஏன் என்ன ஆயிற்று?" என்று கேட்டார். 

"நான் எது செய்தாலும் அது மற்றவர்களுக்கு பிடிப்பதில்லை நான் நல்லதே செய்தாலும் மற்றவர்கள் என்னை வெறுத்து ஒதுக்கி விடுகிறார்கள்.

எனக்கு நேரமே சரியில்லை. என்ன செய்வதென்றே தெரிய வில்லை. எனக்கு எப்பொழுது தான் நல்ல நேரம் வரும் என்று பார்த்து சொல்லுங்கள் குருவே", என்று அவரை வணங்கி நின்றான்.

பக்கத்தில் இருந்த தன் சிஷ்யனை அழைத்தார் குரு.பின்பு அந்த இளைஞனை பார்த்து உனக்கு "பிடித்த பழம் எது? பிடிக்காத பழம் எது?" என்று கேட்டார்.

"எனக்கு பிடித்த பழம் மாம்பழம்.

 தினமும் சாப்பிட கொடுத்தாலும் சாப்பிடுவேன். எனக்கு பிடிக்காத பழம் வாழைப்பழம்.கோடி ரூபாய் கொடுத்தால் கூட ஒரு பழத்தை கூட என்னால் சாப்பிட இயலாது", என்று கூறினார்

குரு சிஷ்யனிடம் "உனக்கு பிடித்த பழம் எது? பிடிக்காத பழம் எது?" என்று கேட்டார். அதற்கு சிஷ்யன் "எனக்கு பிடித்த பழம் வாழைப்பழம் எனக்கு பிடிக்காத பழம் மாம்பழம்" என்று கூறினார்.

 குரு இளைஞரை பார்த்து "இதிலிருந்து ஏதாவது உனக்கு புரிகிறதா?" என்று கேட்டார். இளைஞனோ, "எனக்கு எதுவும் புரியவில்லை"என்று கூறினார். குரு சிஷ்யனை பார்த்து "உனக்கு புரிந்ததை கூறு" என்று கூறினார் 

சிஷ்யனும் குருவைப் பார்த்து, "எனக்கு பிடித்த பழம் அவருக்கு பிடிக்காது. அவருக்கு பிடித்த பழம் எனக்கு பிடிக்காது. அவர் என்னை மகிழ்விப்பதாக எண்ணிக் கொண்டு மாங்கனியை என்னிடம் கொடுத்தால் அது எனக்கு வெறுப்பாகவே தோன்றும்" என்று கூறினார்.

குரு இளைஞரை பார்த்து "இதுதான் உனது பிரச்சனை. உனக்குப் பிடித்த பொருளோ, முடிவோ,விஷயங்களோ மற்றவர்களுக்கு பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. விருப்பம் வெறுப்பும், நல்லதும் கெட்டதும் எல்லோருக்கும் ஒன்று போலவே இருப்பதில்லை".

"ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்துவமான குணங்கள் உண்டு. நமது பிறருக்கு நல்லது செய்வதாக எண்ணிக் கொண்டு அவர்களை தொந்தரவு செய்கிறோம் நீ எதையும் உனது கோணத்திலிருந்து பார்க்கும் அறிவை மட்டுமே பெற்று இருக்கிறாய்". 

"எப்போதும் மற்றவர் கோணத்தில் இருந்து பார்த்து அதன்படி நடந்து கொண்டால் மட்டுமே நம்மை யாரும் வெறுக்க மாட்டார்கள்" என்று அறிவுரை கூறி இளைஞரை அனுப்பி வைத்தார் குரு.

இன்றைய செய்திகள்

26.07.2024

🧩தமிழகத்தில் புதிதாக 2.80 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்: அடுத்த மாதம் விநியோகிக்க அரசு திட்டம்.

🧩தமிழகத்தில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்புகள் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

🧩புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

🧩மேகதாது திட்டத்துக்காக கர்நாடக அரசுக்கு எவ்வித அனுமதியும் இதுவரை வழங்கவில்லை என்று மத்திய ஜல்சக்தித் துறை தெரிவித்துள்ளது.

🧩கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

🧩பூமிக்கு அருகில் உள்ள புதன் கிரகத்தில் வைரம் அதிக அளவில்இருக்க வாய்ப்பு இருப்பதாக சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

🧩பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழா இன்று சென் நதியில் வித்தியாசமான முறையில் நடக்க உள்ளது.

🧩பாரீஸ் ஒலிம்பிக் கால்பந்து: வெற்றியுடன் தொடங்கிய ஸ்பெயின் அணி.

🧩டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை: ரோகித், பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிய ஹாரி புரூக்.

Today's Headlines

🧩New Smart ration cards are issued to 2.80 lakh people in Tamil Nadu: Govt planned to distribute them next month.

🧩 Public Welfare Minister M. Subramanian has said that no one has been affected by the Nipah virus in Tamil Nadu.

 🧩Sudhu coral beads have been found in the 2nd phase of excavation at Porpanaikottai in Pudukottai district.

 🧩The Central Department of Hydropower has said that no permission has been given to the Karnataka government for the Meghadatu project.

 🧩The Supreme Court has ruled that state governments have the power to levy taxes on mineral resources.

 🧩A study conducted by Chinese and Belgian scientists has revealed that there is a possibility of diamonds in the nearest planet Mercury.

 🧩The opening ceremony of the Paris Olympics will take place today on the river Seine in a different way.

🧩 PARIS OLYMPIC FOOTBALL: Spain starts it's game with a win.

 🧩Test batsmen rankings: Rohit and Babar Azam were pushed behind by Harry Brook.
 Prepared by

Covai women ICT_போதிமரம்


Wednesday 24 July 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.07.2024



திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம் :அறிவு உடைமை

குறள் எண் :426

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு.

பொருள் : உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.

பழமொழி :
ஐந்தில் அறியாதவன் ஐம்பதில் அறிவானா?

The child is father to the man.

இரண்டொழுக்க பண்புகள் :

*மழை பெய்யும் போது மரம் மற்றும் மின்கம்பிகள் அருகில் நிற்க மாட்டேன். 

 *மழைக்காலங்களில் பாதுகாப்பு ஆடைகள், சூடான குடிநீர் பயன்படுத்துவேன்.

பொன்மொழி :

"வேலையை வெறுத்துச் செய்பவன் அடிமை, வேலையை விரும்பிச் செய்பவன் அரசன். "-----ஓஷோ

பொது அறிவு : 

1.பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படும் கலவை


விடை: எத்தனால் + டை எத்தில் ஈத்தர்

2. பெட்ரோலின் கலோரி மதிப்பு ( K cal / kg ) ?

விடை: 11500

English words & meanings :

 with stand-தாங்கு,

  detain-தடு
வேளாண்மையும் வாழ்வும் : 

இதற்கு இப்பெயர் வரக் காரணம் பண்டையக் காலத்திலிருந்து இந்த அரிசியில் செய்த உணவினை புது மாப்பிள்ளை அல்லது மணமகனுக்கு அளிப்பார்கள், இந்த உணவை உட்கொண்ட சில நாட்களில் மணமகன், இளவட்ட கல்லினை தூக்கி காட்டவேண்டும். இந்த உணவு, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. இந்த ரக அரிசி கொண்டு இட்லி, தோசை, சாதம், பேன் கேக் செய்யலாம்.

ஜூலை 25

ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்தநாள்



புகழ்பெற்ற புலி வேட்டைக்காரரான ஜிம் கார்பெட் (ஜூலை 25, 1875- ஏப்ரல் 19, 1955) இமயமலைத் தொடரில் உள்ள குமாவுன் மலையில் அமைந்துள்ள கோடைவாழிடமான நைனித்தாலில் பிறந்தவர். ஆங்கில மரபினர். இயற்கையைப் பேணுவதில் ஆர்வம் மிகக்கொண்டிருந்தவர். புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் பற்றிய இவரது நூல்களுக்காகப் புகழ்பெற்றவர்.
நீதிக்கதை

 புதையல் ரகசியம்



ஒரு ஊரில் ராஜன் என்ற பணக்காரர் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார். முதுமை பருவத்தை அடைந்தார். அவருக்கு நான்கு மகன்கள் இருந்தனர். நான்கு பேரும் ஒற்றுமையாகவும், தந்தையிடம் பாசத்துடனும் இருந்தார்கள்.

 திடீரென்று ஒரு நாள் ராஜனுக்கு உடல்நிலை பாதித்தது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்தார்கள். இருப்பினும் அவரின் உடல்நிலை நாளுக்கு நாள் நலிந்து வந்தது. நான்கு மகன்களும் தந்தைக்கு அருகிலேயே இருந்து கவனித்துக் கொண்டனர்.

அவர்களிடம் ராஜன்,"என் அருமை மகன்களே! எனக்கும் வயதாகி விட்டது. உடல்நிலை மோசமாகி கொண்டே வருகிறது. நான் படுத்து இருக்கும் இந்த கட்டிலின் கால்களை பார்த்துக் கொள்ளுங்கள்.

முதலாவது கால் மூத்தவனுக்கு, இரண்டாவது கால் இரண்டாவது மகனுக்கு, மூன்றாவது கால் அடுத்த மகனுக்கும், நான்காவது நான்காவது கால் கடைசி மகனுக்கும் சொந்தமானது.

என்னுடைய மரணத்திற்கு பின்பு நான் கூறியபடி கட்டில் கால்களுக்கு கீழே இருக்கும் புதையலை எடுத்து நீங்கள் நான்கு பேரும் மகிழ்ச்சியுடன் வாழுங்கள் என்றார்.

சில தினங்களில் ராஜனும் மறைந்தார். தந்தையருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை நான்கு மகன்களும் செய்தனர். பின்னர் தந்தை கூறியபடி கட்டில் கால்களுக்கு கீழே புதையலை தோண்டினார்கள். தந்தையார் கூறியபடி ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்டபடி இருந்த பானைகளை எடுத்துக் கொண்டார்கள். 

மூத்த மகனின் பானையில் முழுவதும் மண் இருந்தது. அடுத்த மகனின் பானையில் உமி இருந்தது.மூன்றாவது மகன் எடுத்த பானையில் பொன் துகள்கள் இருந்தன. கடைசி மகனின் பானையில் சாம்பல் நிரம்பி இருந்தது.

நான்கு பேருக்கும் ஒன்றும் புரியவில்லை. பானைக்குள் இந்த பொருள்களை வைத்தது ஏன்? இதை வைத்து என்ன செய்வது? என்று குழம்பிப் போனார்கள். 

எனவே தங்கள் ஊரில் இருந்த மரியாதை ராமனிடம் சென்று கேட்டார்கள். மரியாதை ராமனும் நான்கு பானைகளையும் உற்றுப் பார்த்தார். பின்பு யோசித்தார். தீர்வை கூறினார்.

நான்கு பேரையும் கூப்பிட்டார். "உங்கள் தந்தையார் புத்திசாலித்தனமாக தான் செய்திருக்கிறார். மண்ணைப் பெற்ற மூத்த மகன் தந்தையாரின் நிலங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். உமியைப் பெற்ற இரண்டாவது மகன் தானியங்களுக்கு சொந்தக்காரர். பொன் துகளை பெற்றவர் நகைகளை சொந்தமாக்கி கொள்ள வேண்டும். சாம்பலைப் பெற்றவர் ஆடு மாடுகளை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் இப்படி ஒரு திட்டத்தில் தான் உங்கள் தந்தையார் சொல்லியிருக்கிறார் அதன்படி பிரித்துக் கொண்டு ஒற்றுமையாக வாழுங்கள்" என்று கூறினார் மரியாதை ராமன்.

 நான்கு சகோதரர்களும் மரியாதை ராமனுக்கு நன்றி கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் சென்றார்கள்.

இன்றைய செய்திகள்

25.07.2024

🌐21-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, கடந்த 20 ஆண்டுகளில் 12.30 லட்சம் வழக்குகளை விசாரித்து சாதனை படைத்துள்ளது.

🌐தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

🌐நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடகாவில் தீர்மானம்: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.

🌐இளநிலை ‘நீட்’ தேர்வு முடிவை ரத்து செய்ய முடியாது: 20 லட்சம் மாணவர்களை பாதிக்கும் என உச்ச நீதிமன்றம் கருத்து.

🌐உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யக்கூடிய தகுதியை பெற்றுள்ள இந்தியா, இந்த தரவரிசையில் 82-வது இடம் பிடித்துள்ளது.

🌐இந்திய ஆக்கி அணியின் முன்னணி கோல் கீப்பரான ஸ்ரீஜேஷ் பாரீஸ் ஒலிம்பிக்குடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு.

🌐மகளிர் ஆசிய கோப்பை: மலேசிய அணியை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி.

🌐டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் மதுரையை வீழ்த்தி கோவை அணி 5-வது வெற்றியோடு அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.

Today's Headlines

🌐Entering into its 21st year, the Madurai Bench of the High Court has set a record of hearing 12.30 lakh cases in the last 20 years.

 🌐Chance of rain with thunder and lightning in Tamil Nadu today: Chennai Meteorological Department.

🌐 Karnataka resolution against NEET exam with Cabinet's approval 

 🌐Junior 'NEET' result cannot be annulled: Supreme Court says that it will affect 20 lakh students.

 🌐Singapore has topped the world's most powerful passport rankings. With visa-free travel to 58 countries, India is ranked 82nd in this ranking.

🌐 India's leading goalkeeper Sreejesh retired from international competition with the Paris Olympics.

 🌐Women's Asia Cup: Bangladesh beat Malaysia to win
 Prepared by

Covai women ICT_போதிமரம்

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொழில் வரி‌ உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

தொழில் வரி வசூல் அரசாணை எண் : 8 ( ஊவதுறை ) நாள் : 10.01.2000 ன்படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊராட்சி தீர்மானம் இயற்றி மாற்றம் செய்யப்பட வேண்டும் . அதன் அடிப்படையில் 01.04.2024 தேதி முதல் மாற்றம் செய்ய வேண்டும் . அதன்படி தற்போது தொழில்வரி 1250 இல் இருந்து 1565 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.




பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.07.2024



திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: அறிவு உடைமை

குறள் எண்:425
உலகம் தழீஇயது ஒட்பம்; மலர்தலும்

கூம்பலும் இல்லது அறிவு.

பொருள்: உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக் கொள்வது சிறந்த அறிவு; முன்னே மகிழ்ந்து
விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாதது அறிவு.

பழமொழி :
ஐந்தில் ல் வளையாதது ஐம்பதில் வளையுமா?

A young twig is easier twisted than an old tree

இரண்டொழுக்க பண்புகள் :

*மழை பெய்யும் போது மரம் மற்றும் மின்கம்பிகள் அருகில் நிற்க மாட்டேன். 

 *மழைக்காலங்களில் பாதுகாப்பு ஆடைகள், சூடான குடிநீர் பயன்படுத்துவேன்.

பொன்மொழி :

தயங்குபவர் கை தட்டுகிறார், துணிந்தவர் கை தட்டல் பெறுகிறார்.----பிடல் காஸ்ட்ரோ

பொது அறிவு : 

1. மிகப்பெரிய வால் நட்சத்திரம் எது?


விடை: ஹோம்ஸ்

2. நமது மூளையானது எத்தனை லட்சம் செல்களால் ஆனது?

விடை: ஏறக்குறைய 60 லட்சம் 

English words & meanings :

 Thorough-முழுமையான,

  perfect-சரியான
வேளாண்மையும் வாழ்வும் : 

மாப்பிள்ளை சம்பா
இது தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில்ஒன்றாகும், இதில் மினரல்ஸ் (தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள்) உயிர்ச்சத்து, புரதச்சத்து அதிக அளவில் உள்ளது

நீதிக்கதை

 பொறுமை



ஒருமுறை தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் வெஸ்டர்ன் யூனியன் நிறுவனத்திற்கு ஒரு இயந்திரம் வடிவமைத்து கொடுத்தார். அவருக்கு அந்த இயந்திரத்திற்கு என்ன விலை நிர்ணயம் செய்வது என்று ஒரே குழப்பமாக இருந்தது.

அவரும்,அவரது மனைவியும் அந்த விலை நிர்ணயத்தை பற்றி விவாதித்தார்கள்.

எடிசனின் மனைவி " 20000 டாலர் கேளுங்கள்" என்றார்.எடிசன் "இந்த தொகை அதிகமாக இருந்தால் நமது இயந்திரத்தை வேண்டாம் என்று சொல்லி விட்டால் என்ன செய்வது" என்று யோசித்தார்.

பணத்தை தருவதற்காக, மூத்த அதிகாரி ஒருவரை வெஸ்டன் யூனியன் நிறுவனம் அனுப்பி இருந்தது. அதிகாரி எடிசனிடம், "இயந்திரம் என்ன விலை"? என்று கேட்டார்.

எடிசன் ஒன்றும் பேசாமல் சில நிமிடங்கள் மௌனமாகவே இருந்தார். பொறுமை இழந்த அதிகாரி," எடிசன் சார், இதோ உங்களது இயந்திரத்திற்கான விலை நூறாயிரம் டாலர்கள் இதோ உங்கள் இயந்திரத்திற்கான முதல் தவணை தொகை இது" என்று காசோலையை எடிசனிடம், கொடுத்துவிட்டு இயந்திரத்தை எடுத்துக்கொண்டு சென்றார்.

அவசரப்படாமல் பொறுமை காத்த எடிசனுக்கு நான்கு மடங்கு லாபம் ஏற்பட்டது. அவசரம் நமக்கு சிப்பிகளை தரலாம்.ஆனால் பொறுமையே நமக்கு முத்துக்களை தரும். பொறுமை அனுபவத்தின் வெளிப்பாடு அதுவே நம் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைத் துடைக்கும் துடுப்பாய் பயன்படும்.

இன்றைய செய்திகள்

24.07.2024

🔖கற்பித்தல், பள்ளி நிர்வாகம் தவிர்த்து வேறு பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு.

🔖ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 77 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: அனைத்து அருவிகளும் முழுமையாக மூழ்கின.

🔖வங்கதேசத்தில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் 131 பேர் பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

🔖மத்திய பட்ஜெட் 2024 எதிரொலி: தங்கம், வெள்ளி, செல்போன், காலணி விலை குறைகிறது.

🔖அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராகிறார் கமலா ஹாரிஸ்: 7 மணி நேரத்தில் ரூ.391 கோடி நன்கொடை குவிந்தது.

🔖மகளிர் ஆசிய கோப்பை வரலாற்றில் சதம் அடித்த முதல் வீராங்கனையாக வரலாற்று சாதனை படைத்த இலங்கை வீராங்கனை சமாரி அத்தபத்து.

🔖மகளிர் ஆசிய கோப்பை: யு.ஏ.இ. அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி.

🔖ஒலிம்பிக் தொடருடன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு - ஆண்டி முர்ரே அறிவிப்பு.

Today's Headlines

🔖Teachers should not be engaged in other work except teaching, school administration: High Court Madurai branch ordered.

🔖 Water flow into Okanagal Cauvery River is increased to 77,000 cubic feet : All waterfalls completely submerged.

 🔖131 Tamil Nadu students who were stranded in Bangladesh have been safely brought to Chennai.

 🔖Union Budget 2024: Gold, Silver, Cellphone, Footwear Prices Drop.

🔖 Kamala Harris is becoming the Democratic Party candidate in the US presidential election: 391 crores of donations were accumulated just in 7 hours.

 🔖Sri Lankan player Samari Athapatthu made history by becoming the first female player to score a century in the history of Women's Asia Cup.

 🔖Women's Asia Cup: A huge victory for Pakistan by defeating the UAE team.

 🔖Andy Murray Announced his Tennis Retirement after Olympic Series.
 Prepared by

Covai women ICT_போதிமரம்


Income Tax in BUDGET 2024-25 : வரி விதிப்பை எளிமைப்படுத்தல் எனும் ஏமாற்று வேலை! ✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

Income Tax in BUDGET 2024-25 : வரி விதிப்பை எளிமைப்படுத்தல் எனும் ஏமாற்று வேலை!

✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

"வரி விதிப்பை எளிமைப்படுத்துவதே எங்களது முயற்சியாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் Corporate மற்றும் தனிநபர் வருமான வரிக்கு exemptions & deductions இல்லாமல் எளிமைப்படுத்தப்பட்ட வரி நடைமுறைகளை அறிமுகப்படுத்துவது உட்பட பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இது வரி செலுத்துவோரால் பாராட்டப்பட்டுள்ளது. கார்ப்பரேட் வரியில் 58% 2022-23 நிதியாண்டில் எளிமைப்படுத்தப்பட்ட வரி விதிப்பிலிருந்து வந்தது. இதேபோல் இதுவரை கிடைத்த தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் New Regime முறையைப் பயன்படுத்தியுள்ளனர்." இது இந்திய நிதியமைச்சரின் 2024-25க்கான நிதிநிலை அறிக்கை தொடர்பான உரையின் சாரம்.

அதென்ன வரி விதிப்பை எளிமைப்படுத்தல்? மெய்யாகவே அதைப் பாராட்டுமளவிற்கு வரி செலுத்துவோர் பயனடைந்துள்ளனரா? வருமான வரியில் 2024-25ன் மாற்றங்கள் என்னென்ன?

நாட்டிற்காக மற்ற எவரையும்விட, வருமான வரியாக மட்டுமே தனது ஒரு மாத ஊதியத்தை ஆண்டுதோறும் செலுத்திவரும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தனியார் நிறுவன ஊழியர்களும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். வாருங்கள் பார்ப்போம்.

தனிநபர் வருமான வரிக்கென முதலில் ஒரேயொரு வரிவிதிப்பு (Old Regime) முறையே இருந்தது. ஆனால், வரி விதிப்பை எளிமைப்படுத்துகிறேன் என்ற பெயரில் New Regime முறை கொண்டுவரப்பட்டது.

இதன்படி,

1. வீட்டுக்கடனிற்கான வட்டிக்கு வரி விலக்கு இல்லை.

2. தொழில் வரிக்கு வரி விலக்கு இல்லை.

3. மழைவாழிடம் & குளிர்ப் பிரதேச படிகள் உட்பட வேலையின் தன்மைக்காக வழங்கப்படும் அனைத்துவித படிகளுக்கும் வரி விலக்கு இல்லை.

4. ஆயுள் காப்பீடு, சேமிப்புகள், முதலீடுகள், ஓய்வூதியத் திட்ட முதலீடுகள் என எதற்குமே வரி விலக்கு இல்லை.

5. மாற்றுத்திறனாளிகளுக்கோ, மாற்றுத்திறனாளிகளைப் பராமரிப்பதற்கோ வரி விலக்கு இல்லை.

6. மருத்துவக் காப்பீடுகளுக்கோ, மூத்த குடிமக்களின் மருத்துவச் சிகிச்சைச் செலவினங்களுக்கோ வரி விலக்கு இல்லை.

7. பிள்ளைகளின் கல்விக் கட்டணத்திற்கோ, கல்விக் கடனுக்கான வட்டித் தொகைக்கோ வரி விலக்கு இல்லை.

8. அரசுக்கோ, அறிவியல் நிறுவனங்களுக்கோ, அரசியல் கட்சிகளுக்கோ & அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கோ அளிக்கும் நிதியளிப்புகளுக்கு (Donation) வரி விலக்கு இல்லை.

9. மின்சார வாகனக் கடனுக்கான வட்டிக்கு வரி விலக்கு இல்லை.

மொத்தத்தில் ஒருவர் தான் பெறும் ஊதியத்திற்கு 100% வருமானவரி செலுத்தியாக வேண்டும். அவர் வீடுகட்டுவதைப் பற்றியோ, பிள்ளைகளைப் படிக்க வைப்பது பற்றியோ, உயிருக்குக் காப்பீடு செய்வது பற்றியோ, மூத்தோர் & மாற்றுத்திறனாளிகளைப் பராமரிப்பது பற்றியோ, இயற்கைப் பேரிடரின் போது அரசுக்கு நிதியுதவி செய்வது பற்றியோ எந்தவித அக்கறையும் பொறுப்புணர்வும் அரசிற்கு இல்லை என்கிறது இந்த New Regime.

அடிப்படையில் மேலே கூறப்பட்ட வரி விலக்குப் பிரிவுகள் அனைத்துமே 100% தனிமனித சேமிப்பையும், பாதுகாப்பையும், கல்வியையும், அதன் மூலமாக நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு அவற்றின் தேவை கருதியே கொண்டுவரப்பட்டன. மேலும், இதனால் வரி விலக்கு கிடைக்கும் என்பதற்காகவே தனிநபர் சேமிப்பும், LIC காப்பீடுகளும், வங்கியில் கடன் பெற்று வீடு கட்டுவதுமான நாட்டின் வளர்ச்சிக்கான மறைமுக முதலீடுகள் கோடிகோடியாகப் பெருகியது. இறுதியாக வந்த உலகப் பொருளாதார பெருமந்தத்தில் இந்தியா மட்டும் பேரிழப்பைச் சந்திக்காது இருந்ததற்கு இந்தியர்களின் தனிமனத சேமிப்புகளே காரணம் என்கிறது உலக பொருளாதார நிலை ஆய்வறிக்கை.

ஆனால், வரி விதிப்பை எளிமையாக்குகிறேன் என்ற பெயரில் NEW REGIME மூலம் தனிநபருக்கும், அவரது குடும்ப நல்வாழ்விற்கும், LIC உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அதன் மூலமாக நாட்டிற்கும் 100% பாதிப்பு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆம். இனி வரும் காலங்களில் தனிநபர் சேமிப்பு, LIC உள்ளிட்ட ஆயுள் காப்பீடு உட்பட முன்னர் வரிவிலக்கு பெற்ற அனைத்தின் மீதான ஈர்ப்பும் மாத ஊதியம் பெருவோரிடையே முழுமையாகக் குறைந்துவிடும். இதன் தாக்கம் 100% நாட்டின் பொருளாதாரத்தில் எதிரொலிக்கும்.

அப்படியெல்லாம் இல்லை NEW REGIMEல் தான் எனக்கு வரி குறைவாக வருகிறது என்று நினைப்போர் ஒன்றை மட்டும் நினைவில் ஏற்றிக்கொள்ளுங்கள், NEW REGIMEல் தொடர்ந்து 3 ஆண்டுகளாக வரிவிதிப்பில் சிறிசிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன; ஆனால் OLD REGIMEல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வரிவிதிப்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவே இல்லை. நல்லா ஓடுற Bikeஐ OFF பண்ணீட்டு பார்த்தா Bicycle வேகமா ஓடுறமாதிதான் தெரியும்.

மொத்தத்தில் வரிவிதிப்பை எளிமையாக்குகிறேன் என்ற பெயரில் வரி செலுத்துவோரும் - மற்றவர்களும் - ஒட்டுமொத்த நாடும் ஏமாற்றப்பட்டுள்ளது. இங்கு நான் குறிப்பிட்டுள்ள பாதிப்புகள் குறைவானவையே. முழுமையான இதன் விபரீத விளைவுகளை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நம் கண்களால் காண்போம். இனி இப்பதிவில் 2024-25 Budgetன் Income Tax மாற்றங்கள் என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.

வருமான வரி தொடர்பாக New Regime முறைக்கு மட்டும் வரி சதவீதம் மற்றும் Standard Deductionல் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி,

நிகர வருமானம் ரூ.3,00,000 வரை வரி இல்லை.
3,00,001 - 7,00,000 - 5%
7,00,001 - 10,00,000 - 10%
10,00,001 - 12,00,000 - 15%
12,00,001 - 15,00,000 - 20%
15,00,000க்கு மேல் - 30%
என்று வரி விதிக்கப்படும். அதாவது 6,00,001 - 10,00,000 வரையிலான 4,00,000 ரூபாய்க்கான வரியானது கடந்த ஆண்டைவிட 5% குறைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, Standard Deduction 25,000 அதிகரித்து 75,000ஆக மாற்றப்பட்டுள்ளது. இதனால், 7,50,000-க்குப் பதில் வரும் ஆண்டில் ரூ.7,75,000 வரை ஆண்டு மொத்த வருமானம் (Gross Income) உள்ளோருக்கு வருமானவரி இல்லை. அதாவது,

Gross Income. = 7,75,000 -
Standard Deduction= 75,000
                                  --------
Net Taxable Income= 7,00,000
                                        --------
என்று கழிவிற்குப் பிந்தைய நிகர வருமானம் ரூ.7,00,000 வரை வந்தால் வரி இல்லை. 

ஆனால் இதை Nil Tax என்று நேரடியாகக் குறிப்பிடவில்லை. மாறாக ரூ.7,00,000 வரையிலான நிகரத் தொகைக்கு U/S 87Aல் special Rebate அளித்து வரி சுழியமாக்கப்படும். இது வழக்கமான நடைமுறையே.

அதாவது, ரூ.7,00,000க்கான தற்போதைய வரி,

Upto 3,00,000 = 0
3,00,001 - 7,00,000 = 4,00,000 x 5%
                                      = ரூ.20,000

இந்த ரூ.20,000 Rebateஆக அனுமதிக்கப்பட்டு கழிக்கப்பட, வரி சுழியமாகும். இது நிகர வருமானம் ரூ.7,00,000/- வரை இருந்தால் மட்டுமே பொருந்தும்.

அதைவிடக் கூடுதலானால் முதல் 3 இலட்சத்தைத் தவிர்த்து மற்ற தொகை முழுமைக்கும் வரி விதிப்பு % படி வரி கட்டியாக வேண்டும். உதாரணமாக, ரூ.7,00,010க்கான வரி,

Upto 3,00,000 = 0
3,00,001 - 7,00,000 = 4,00,000 x 5%
7,00,001 - 7,00,010 = 10 × 10%
                                      = 0 + 20,000 +1
                                      = ரூ.20,001

என்னடா இது டேக்ஸ் மார்ஜினைவிட 10 ரூவா வருமானம் கூடுனதுக்கு 20,000 வரியா? என்று ஷாக் ஆகாதீங்க.

இது தான் வழக்கமான கணக்கீடு என்றாலும், இந்த அதிர்ச்சியைக் குறைக்க Marginal Relief என்ற முறை கடந்த ஆண்டு முதலே New Regimeல் மட்டும் நடைமுறையில் உள்ளது. U/S 87Aல் இந்த Marginal Relief கணக்கீடு மேற்கொள்ளப்படும். நிகர வருமானத்தைப் பொறுத்து ரூ.19,991 முதல் ரூ.2 வரை Rebate அளித்து வரி கழித்துக் கணக்கிடப்படும்.

இதனால், நடப்பு ஆண்டிற்கு 7,00,000 முதல் 7,22,220 வரையிலான நிகர வருமானத்திற்கு ரூ.7 இலட்சத்தைவிடக் கூடுதலாக வரும் வருமானத்தை மட்டும் வரியாகச் செலுத்தினால் போதுமானது. ஆதாவது, 7,00,010க்கு வரி = ரூ.10 என்று தொடங்கி 7,22,220க்கு வரி = ரூ.22,220 என்பது வரை வருமான வரியாக வரும். 

7,22,220க்கும் மேலான நிகர வருமானத்திற்கு Marginal Relief தேவைப்படாது. ஏனென்றால் அதற்கு மேல். . . . . ஷாக் ஆக்காத வழக்கமான வரிக் கணக்கீட்டுத் தொகையே வந்துவிடும். 

இவ்வளவுதான் தனிநபர் வருமான வரி தொடர்பான நடப்பு ஆண்டின் தற்போதைய மாற்றங்கள். அடுத்த கூட்டத்தொடரில் எழுப்பப்படும் கேள்விகளையும் அதற்கு அளிக்கப்படும் மதிப்பையும் பொறுத்து மாற்றங்கள் வரலாம். வராமலும் போகலாம்.

இறுதியாக, இந்த 5% வரிக் குறைப்பு, Standard Deduction 75,000 மற்றும் Marginal Relief என்பதையெல்லாம் பார்த்து NEW REGIME தான் Best Tax Method என்ற முடிவிற்கு வந்துவிடாதீர்கள். அப்படிப்பட்ட எண்ணத்தை நம் மனதுள் வளர்த்து இதுதான் எளிமையானது என்று நம்மை நம்ப வைக்கவே மேற்கண்ட மாற்றம் எனும் ஆசையைத் தூண்டிவிட்டுள்ளனர்.

இதன் முக்கிய நோக்கமே, நாமும் நாடும் பயன்படும் OLD REGIMEஐ முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே. 5 ஆண்டுகளுக்கும் மேலாக OLD REGIMEன் வரிவிதிப்பில் பெரிய அளவிலான எந்தவித மாற்றமும் செய்யாது, அதை நாமே தவிர்க்கும்படியான சூழலை திட்டமிட்டே உருவாக்கியுள்ளனர்.

இனி இதில் மாற்றம் நிகழுமா என்பது தெரியாது. எனினும், "வரியை எளிமைப்படுத்தினோம்!" எனும் பேரில் நாமும் நாடும் எவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதைத் தெளிவிக்கவே இப்பதிவு. பெருமொத்தத் தெளிவால் எதிர்காலத்தில் மாற்றம் நிகழ்ந்தால் மகிழ்ச்சியே!

✍🏼செல்வ.ரஞ்சித் குமார்