t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

2 July 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.07.2026

திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:45 பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:441

குறள்:

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.

பொருள்:

அறத்தின் தன்மைகளை அறிந்து முதிர்ந்த அறிவுடையவரது நட்பினை, கொள்ளும் திறன் அறிந்து ஆராய்ந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும்

பழமொழி :
A thief knows a thief.

பாம்பின் கால் பாம்பறியும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1) ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஆக்கமுடன் செய்வேன் . 

2) முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயற்சி செய்வேன்.

பொன்மொழி : 

தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் வெற்றியின் இரு சிறகுகள்.

Thought for the Day :

Excellence is a continuous process and not an accident.

பொது அறிவு : 

1. உடல் உறுப்பு தானத்தில் முதன்மையான மாநிலம் எது? 

தமிழ்நாடு. 

2. தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT) நிறுவப்பட்ட ஆண்டு எது? 

1971

English words :

Substantiate – Prove, நிரூபி.

Transform – Change completely, முழுமையாக மாற்று.

புவியியலும் சுற்றுசூழலும் :

"நமது அடிப்படை உரிமைகள் (Fundamental Rights)

சமத்துவ உரிமை

சுதந்திர உரிமை

மத சுதந்திரத்திற்கான உரிமை

கலாச்சார மற்றும் கல்வி உரிமை
அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை போன்றவை ஆகும்."

NMMS :

SAT - SOCIAL

சரியான இணையைத் தேர்ந்தெடு. 

(1) மன்சப்தாரி முறை - அக்பர் (

2) ஜப்தி முறை - ஔரங்கசீப் 

(3) துசுக் - இ - பாபரி - கட்டிடக் கலை (

4) இரண்டாம் பானிபட் போர் - 1526. 

விடை : (1) மன்சப்தாரி முறை - அக்பர்

ஜூலை 02

உலக விளையாட்டுத் துறை செய்தியாளர்கள் தினம்

சாதி, மதம், இனம், நாடு, மொழி எல்லாவற்றையம் கடந்து மக்களை விளையாட்டால் ஒன்று சேர்க்கும் பணியைச் செய்யும் விளையாட்டு பத்திரிகையாளர்களை கவுரவிக்கும் நாள் இன்று.
நீதிக்கதை

 "துளி துளியாக வந்த செல்வம்"


ஒரு சிறிய கிராமத்தில் இரண்டு விவசாயிகள் வாழ்ந்தனர். ஒருவரின் பெயர் சபரி, மற்றொருவரின் பெயர் கிரி. சபரி தனது வீட்டின் கூரையிலிருந்து வரும் மழைநீரை ஒரு பெரிய தொட்டியில் சேமித்தார். கிரி, "மழைநீர் எப்போதும் வரும், அதை ஏன் இவ்வளவு செலவு செய்து, தொட்டி கட்டி சேமிக்க வேண்டும் ?" என்று சிரித்தார். 

சில மாதங்களுக்குப் பிறகு கடும் வறட்சி ஏற்பட்டது. கிணறுகள் வற்றின. குடிநீருக்குக் கூட மக்கள் சிரமப்பட்டனர்.



அப்போது சபரி சேமித்திருந்த மழைநீரைத் தனது குடும்பத்திற்கும், அண்டை வீட்டாருக்கும், தனது பயிர்களுக்கும் பயன்படுத்தினார். கிரி வயலுக்கு தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடின. அப்போது கிரி தனது தவறை உணர்ந்து, "அடுத்த மழைக்காலம் முதல் நானும் மழைநீரைச் சேமிப்பேன்" என்று உறுதி எடுத்தார்.



நீதி:

"மழைநீரைச் சேமிப்போம்; நாளைய தண்ணீர் பற்றாக்குறையைத் தவிர்ப்போம்.”

இன்றைய செய்திகள்

02.07.2026

🗒️சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு; 4, 5-ம் தேதிகளில் நடைப்பெற உள்ள தேர்வுகளில் 2.29 லட்சம் ஆசிரியர்கள் எழுத உள்ளார்கள்.

🗒️ஜப்பான் பிரதமர் இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம்; வர்த்தகம், முதலீடு தொடர்பாக ஆலோசனை.

🗒️ஐரோப்​பிய நாடு​களான போலந்​து, ஜெர்​மனி, சுவிட்​சர்​லாந்​து, பிரான்​ஸ், டென்​மார்க் நாடு​களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. அனல் காற்று வீசுவ​தால் கடந்த 21-ம் தேதி முதல் தற்​போது வரை 1,300 பேர் உயி​ரிழந்​துள்​ளனர் என உலக சுகா​தார அமைப்பு தெரி​வித்​துள்​ளது.

 விளையாட்டுச் செய்திகள் 

🏀இந்திய ஜூனியர் ஆக்கி அணியில் கோவில்பட்டி வீரர்
இது தமிழக ஆக்கி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

🏀விம்பிள்டன் டென்னிஸ்: அரினா சபலென்கா வெற்றி.

Today's Headlines

🗒️ All arrangements have been completed for the Special Teacher Eligibility Test. The examination will be held on the 4th and 5th, with 229,000 teachers expected to appear.

🗒️ The Prime Minister of Japan has begun a three-day visit to India to hold discussions on trade and investment.

🗒️ A severe heatwave continues across the European countries of Poland, Germany, Switzerland, France, and Denmark. According to the World Health Organization (WHO), 1,300 people have died since the 21st due to extreme heat and hot winds.

🏀 Sports News

🏀 A player from Kovilpatti has been selected for the Indian Junior Hockey Team. This has brought great joy to hockey fans across Tamil Nadu.

🏀 Wimbledon Tennis: Aryna Sabalenka secured a victory.


2026-2027ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி, பயிற்சி நாட்காட்டி, கால அட்டவணை வெளியீடு

2026-2027ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி, பயிற்சி நாட்காட்டி, கால அட்டவணை, உயர் தொழில்நுட்ப ஆய்வக வகுப்பு, தொழில்நுட்ப ஆய்வக ஸ்மார்ட் போர்டு வகுப்பு, உயர் கல்வி வழிகாட்டி வகுப்பு, விளையாட்டுப் போட்டி செயல்திட்ட அட்டவணை மற்றும் செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு!


1 July 2026

ஜீலை(2026) மாத நாட்காட்டி



2026 ஜூலை மாதம்
"ஆசிரியர் டைரி"

01.07.2026 முதல் 16.07.2026 வரை
தொடக்க கல்வித்துறை
பொதுமாறுதல் கலந்தாய்வு

04.07.2026 - சனிக்கிழமை
 ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
BEO அலுவலகம்
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு -1

05.07.2026 - ஞாயிற்றுக்கிழமை
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு -2

10.07.2026 - வெள்ளிக்கிழமை
பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

மகிழ் முற்றம்
(30 ஜூன்-10 ஜூலை)
செயல்பாடு-பதவி ஏற்பு விழா & செயற்குழு கூட்டம்

11.07.2026 - சனிக்கிழமை
ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
DEO அலுவலகம்

15.07.2026 - புதன்கிழமை
காமராஜர் பிறந்தநாள்
கல்வி வளர்ச்சி நாள்

18.07.2026 - சனிக்கிழமை
பள்ளி முழு வேலை நாள்

குறிப்பு:
இம்மாதம் RL மற்றும் அரசு விடுமுறை நாட்கள் எதுவுமில்லை

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.07.2026


திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:44 குற்றங்கூறாமை

குறள் எண்:440

குறள்:
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.

பொருள்:

தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும் .

பழமொழி :
A little string will tie a little bird

சிறு துரும்பும் பல் குத்த உதவும்


இரண்டொழுக்க பண்புகள் :.

1) ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஆக்கமுடன் செய்வேன் . 

2) முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயற்சி செய்வேன்.

பொன்மொழி : 

வெற்றி பெறுவதற்கு முன் தோல்வியை சந்திக்கத் தயார் ஆகுங்கள்.

Thought for the Day :

If you want to shine like the sun, first burn like the sun.

பொது அறிவு : 

1. தமிழ்நாட்டில் அதிகமாக மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம் எது? 

கடலூர். 

2. தமிழ்நாடு எத்தனை கி.மீ கடற்கரை பகுதியைக் கொண்டிருக்கிறது? 

1076 கி.மீ.

English words :

Implement – Execute, செயல்படுத்து.

Negotiate – Discuss to reach agreement, பேச்சுவார்த்தை நடத்து.

புவியியலும் சுற்றுசூழலும் :

நாடுகள் (Countries)
ஒரு நாடு என்பது தனித்த அரசாங்கம் கொண்ட அரசியல் பிரதேசம்.
உலகில் தற்போது சுமார் 195 நாடுகள் உள்ளன (193 ஐ.நா. உறுப்பினர் நாடுகள் + 2 பார்வையாளர் நாடுகள்).
ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்த கொடி, தலைநகர், மொழி மற்றும் கலாச்சாரம் உள்ளது.

NMMS :

SAT - SOCIAL SCIENCE

பாண்டிய அரசர்களின் படைத்தளபதிகளின் பட்டங்கள் 

(1) மாறன் - எயினன் 

(2) மாறன் - ஆதித்தன் 

(3) சாத்தன் - கணபதி 

(4) மூர்த்தி - எயினன் 

விடை: மாறன் - ஆதித்தன்

ஜூலை 01

தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day) 


பிதான் சந்திர ராய்


இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடுகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.சமூகம் மற்றும் தனிமனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதே தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day) ஆகும்.



கல்பனா சாவ்லா அவர்களின் பிறந்தநாள்

விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பனா சாவ்லா இந்த நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பெரிய உதாரணமாக உள்ளவர். ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை நினைவாக்கி பலருக்கும் எடுத்துகாட்டாக இருந்து வாழ்ந்துக் காட்டியவர்.
சாதனைகள்:
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தினால் அவரது சிறப்புமிகு சேவைக்காக நினைவுப் பதக்கம் வழங்கப்பட்டது.
இந்திய மாணவர்கள் சங்கத்தால் அவரின் பெயரில் “கல்பனா சாவ்லா மெமோரியல் ஸ்காலர்சிப்பும்” வழங்கப்படுகின்றது.
அவரின் புகழின் உச்சகட்டமாக 2001-ம் ஆண்டு விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோளிற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
விண்வெளிப் பயணம்:
விமானம் மற்றும் கிளைடர்களை 1988-ல் மற்றவர்களுக்கு பயணிக்க கற்று கொடுப்பதற்கான சான்றிதழ் மற்றும் அவர் பயணிப்பதற்கான உரிமத்தை பெற்றார் விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் 1995-ல் நாசா சென்றார்.
கல்பனாவின் முதல் விண்வெளிப் பயணம் 1997-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி நடைபெற்றது. பூமியை சுமார் 252 முறை சுற்றி விண்கலத்தில் 10 மில்லியன் தொலைவு பயணம் செய்தார்.
இவரின் இரண்டாவது விண்வெளிப் பயணம் 2003-ம் ஆண்டு நிகழ்ந்தது. கொலம்பியா விண்கலம் கல்பனா சாவ்லாவுடன் ஏழு பேர் பயணித்தனர். விண்வெளியில் தனது ஆராய்ச்சிகளை முடிப்பதற்கு பதினாறு நாட்கள் ஆனது.
விண்வெளியில் பயணம் செய்த முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.
நீதிக்கதை

ஒரு நாள் காலையில் சேவலானது மரத்தின் மீது அமர்ந்து பலமுறைக் கூவிக் கொண்டே இருந்தது. சேவல் கூவும் சத்தத்தைக் கேட்ட நரி சேவல் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது. நரியோ மிகுந்தப் பசியுடன் இருந்ததால் அந்த சேவலை பிடித்து சாப்பிட ஆசை ஏற்பட்டது. ஆனால் சேவலோ மரத்தின் மீது இருந்ததால் நரியால் மரத்தில் ஏறிப்பிடிக்க முடியவில்லை. 

சேவலைப் பார்த்து, சகோதரனே!, வணக்கம். உனக்கு ஒரு நல்ல செய்தி. இனி பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. நீ கொஞ்சம் கீழே வந்தால் இதை பற்றித் தெளிவாக பேசுவோம் என்றது. நரியின் தந்திரப் பேச்சைச் சேவல் புரிந்து கொண்டு தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது. 

அதைக் கண்ட நரி, என்ன சகோதரா!, எதையோ அடிக்கடி எட்டிப் பார்க்கிறாயே. அங்கே என்ன இருக்கிறது? என்று கேட்டது. அதற்குச் சேவல், அங்கே சில வேட்டை நாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள் தானா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றது. வேட்டை நாய்கள் என்றதும் நரி வேகவேகமாக சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன் என்று கூறி கிளம்பியது. 

சேவல், அருமை சகோதரா, போகாதே, நான் இப்பொழுதே கீழே இறங்கி வருகிறேன். ஏன் நாய்களைக் கண்டு பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய், எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று கேட்டது சேவல். அதற்கு நரி அந்த ஒப்பந்தத்தைப் பற்றி நிறைய பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஒருவேளை அந்த நாய்களுக்குத் தெரியாமல் இருந்தால், என் நிலைமை என்னவாகும்? அதனால் நான் போகிறேன் என்று சொல்லிவிட்டு நரி ஒரே ஓட்டமாக ஓடி காட்டுக்குள் மறைந்தது. சேவல் யாரை ஏமாற்றப் பார்த்தாய், உன்னுடைய கெட்டிக்காரத் தனமானப் பொய்கள் என்னிடம் பலிக்காது என்று கூறி சிரித்தது. 



நீதி :

அடுத்தவரை ஏமாற்ற நினைத்தால் நாம்தான் ஏமாறுவோம்.

இன்றைய செய்திகள்

01.07.2026

🗒️ சிறப்பாக பணியாற்றிய கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கியனார் முதல் அமைச்சர் ஜோசப் விஜய்.

🗒️ஜூலை 1 முதல் ஆதாரில் மின்னஞ்சல் முகவரியை இலவசமாக புதுப்பிக்கலாம். பொதுமக்களின் டிஜிட்டல் தேவைகளை எளிதாக்கும் வகையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

🗒️ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார் தீரஜ் சேத்.

🗒️பரதநாட்டியத்தில் ராபா உலக சாதனை புத்தகத்தில்  இடம்பிடித்த  6 வயது சிறுமி ரஜீவன் கம்சத்வனி.

 விளையாட்டுச் செய்திகள் 

🏀ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு. ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடைபெற உள்ளது.

Today's Headlines

🗒️ Chief Minister Joseph Vijay presented awards to Collectors and Police officers for their outstanding service.

🗒️ From July 1, Aadhaar holders can update their email address free of cost. The Unique Identification Authority of India (UIDAI) has announced this initiative to make digital services more convenient for the public.

🗒️ Dheeraj Seth has assumed charge as the new Chief of the Army.

🗒️ Six-year-old Rajeevan Kamsathvani has secured a place in the RABA World Records for excellence in Bharatanatyam.

Sports News

🏀 Asian Games: The Indian Women's Cricket Team has been announced for the upcoming Asian Games, which will be held in Japan.


30 June 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.06.2026

திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:44 குற்றங்கூறாமை

குறள் எண்:439

குறள்:

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.

பொருள்:

எப்போதும் தன்னையே வியந்து பேசுதல் கூடாது; நன்மை பயவாத செயல்களை ஒருபோதும் செய்ய விரும்புதலும் கூடாது.

பழமொழி :
A little learning is a dangerous thing.

அரை குறை படிப்பு ஆபத்தானது.

இரண்டொழுக்க பண்புகள் :.

1) ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஆக்கமுடன் செய்வேன் . 

2) முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயற்சி செய்வேன்.

பொன்மொழி : 

சிறிய இலக்கு ஒரு குற்றம். பெரிய இலக்கை நோக்கிச் செல்லுங்கள்.”

Thought for the Day :

Dream, dream, dream. Dreams transform into thoughts, and thoughts result in action."

பொது அறிவு : 

1. ஆந்தை தனது கழுத்தை எத்தனை டிகிரி கோணத்தில் திருப்பும்? 

270 டிகிரி வரை.

 2. மனித உடலில் வலியை உணராத உறுப்பு எது? 

மூளை.

English words :

Eliminate – Remove, நீக்கு.

Facilitate – Make easier, எளிதாக்கு

புவியியலும் சுற்றுசூழலும் :

ஆஸ்திரேலியா – ஒரு நாடாகவும் ஒரு கண்டமாகவும் இருக்கும் உலகின் ஒரே கண்டம்.

NMMS :

SAT - Social Science

பாண்டியர்களின் துறைமுகங்களில் மிகவும் விறுவிறுப்பாக வணிகம் நடைபெற்ற துறைமுகம் _______________ .

 (1) காயல்பட்டினம் 

(2) கொற்கை 

(3) காவிரிப்பூம்பட்டினம் 

(4) உறையூர் 

விடை: (1) காயல்பட்டினம்

ஜூன் 30

மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ்  அவர்களின் பிறந்த நாள்

மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ் II (மைக்கல் பிரெட் பெல்ப்சு II) (Michael Fred Phelps II, பி ஜூன் 30, 1985, பால்ட்டிமோர், மேரிலன்ட்) பல நீச்சல் வகைகளில் உலக சாதனைகளைப் படைத்த அமெரிக்க நீச்சல் வீரர் ஆவார். 28 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்ற ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிக தங்கப் பதக்கம் பெற்றவர் ஆவார்.
நீதிக்கதை

 "உழைப்பால் உயர்ந்த முருகன்"

 

ஒரு சிறிய கிராமத்தில் சதீஷ் என்ற கூலித் தொழிலாளி வாழ்ந்து வந்தான். தினமும் அதிகாலையில் எழுந்து கட்டிட வேலைக்குச் செல்வான். கிடைத்த கூலியில் குடும்பத்தை நடத்தி, சிறிது பணத்தைச் சேமிப்பான்.

பலர், "இவ்வளவு உழைத்தும் என்ன பயன்?" என்று கேலி செய்தார்கள். ஆனால் சதீஷ் மனம் தளரவில்லை. "உழைப்பு ஒருநாளும் வீண் போகாது," என்று நம்பினான்.

பல ஆண்டுகள் கடினமாக உழைத்து, சேமித்த பணத்தில் சிறிய கட்டுமான ஒப்பந்த வேலைகளைத் தொடங்கினான். நேர்மையாகவும், தரமாகவும் வேலை செய்ததால் மக்கள் அவனை நம்பத் தொடங்கினர்.

சில ஆண்டுகளில் அவன் பலருக்கு வேலை கொடுக்கும் பெரிய ஒப்பந்ததாரராக உயர்ந்தான். ஒருகாலத்தில் கூலித் தொழிலாளியாக இருந்த சதீஷ், இன்று பல குடும்பங்களின் வாழ்வாதாரமாக மாறினான்.

ஒருநாள் அந்த ஊர் பள்ளியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடம் அவன் கூறினான்:

"என்னை உயர்த்தியது அதிர்ஷ்டம் அல்ல; தினமும் செய்த நேர்மையான உழைப்புதான்." இதனைக் கேட்டு மாணவர்களும் உள்ளூர் மக்களும் பலமாக கைத்தட்டி பாராட்டினர்.

நீதி: உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால், சாதாரண மனிதனும் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.

இன்றைய செய்திகள்

30.06.2026

🗒️ மாணவர்கள் சிறார்கள் பாதுகாப்பில் முக்கிய பங்கு அளிக்க வேண்டும், முதல்வர் ஜோசப் விஜய் அறிவுறுத்தல்

🗒️ புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழு மங்கல்யான் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்  தலைமையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

🗒️ஆந்திர பிரதேசத்தில் உள்ள 2 பல்கலைக்
கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களில் இன்று ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்க உள்ளார்.

 விளையாட்டுச் செய்திகள்

🏀9 தங்கம் உள்பட 26 பதக்கங்கள்... தேசிய சீனியர் தடகளத்தில் தமிழக அணி சாம்பியன். 109 புள்ளிகளுடன் தமிழக அணி முதலிடம் பிடித்துள்ளது.

🏀புரோ ஆக்கி லீக்: ஷூட்-அவுட்டில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா. லண்டனில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தியது.

Today's Headlines

🗒️ Chief Minister Joseph Vijay has urged students to play an important role in ensuring the safety and protection of children.

🗒️ The New Curriculum Design Committee has been reconstituted under the chairmanship of Mylswamy Annadurai, the renowned Mangalyaan scientist.

🗒️ President Droupadi Murmu will attend the convocation ceremonies of two universities in Andhra Pradesh on June 30 and July 1.

Sports News

🏀 Tamil Nadu emerged as the champions at the National Senior Athletics Championships, securing 26 medals, including 9 gold medals. The team finished first with 109 points.

🏀 Pro Hockey League: India defeated England in a shoot-out during the match played in London yesterday.


29 June 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.06.2026


திருக்குறள்: 

பால் : பொருட்பால்          

 இயல் : அரசியல்   

அதிகாரம்:44 குற்றங்கூறாமை

குறள் எண்:438

குறள்: 

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.  

பொருள்:

எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வதுதான் .

பழமொழி :
A hungry man is an angry man

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1) ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஆக்கமுடன் செய்வேன் . 

2) முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயற்சி செய்வேன்.

பொன்மொழி : 

கல்வியே மனிதனின் மிகப் பெரிய செல்வம். - காமராஜர்

Thought for the Day :

Education is the most powerful weapon which you can use to change the world - Nelson Mandela.

பொது அறிவு : 

1. ஒட்டகசிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் இருக்கும்?

ஏழு.

2. முன்னோக்கி மட்டுமே நடக்கக் கூடிய விலங்கு எது? 

கங்காரு.

English words :

Conceal – Hide, மறை.

Diminish – Reduce, குறை.

புவியியலும் சுற்றுசூழலும் :

அண்டார்டிகா – உலகின் மிகவும் குளிரான கண்டம்; நிரந்தர குடியிருப்புகள் இல்லை.

NMMS :

SAT - Social Science

இஇவற்றில் எது முதன்மைச் சான்று அல்ல???                         

(1) பொறிப்புகள்                      

(2) நினைவுச் சின்னங்கள்                   

(3) நாணயங்கள்                    

(4) இலக்கியங்கள்                  

விடை: (4) இலக்கியங்கள்

ஜூன் 29

2007 – ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஐபோனை (iPhone) வெளியிட்டது. ஐபோன் ஸ்மார்ட்போன் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியதுடன், ஒரு காலகட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்தை உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாகவும் மாற்றியது.

நீதிக்கதை

 "அரண்மனையின் காணாமல் போன கிரீடம்"

ஒரு பெரிய நாட்டை நீதிமான் அரசர் ஒருவர் ஆட்சி செய்து வந்தார். அவரது அரண்மனையில் அனைவரும் நேர்மையாக வாழ வேண்டும் என்பது முக்கியமான விதியாக இருந்தது.

ஒருநாள், இளவரசரின் வெள்ளி கிரீடம் காணாமல் போனது. அரண்மனைமுழுவதும் தேடியும் கிடைக்கவில்லை . அரசர் யாரையும் உடனே குற்றம்சாட்டவில்லை .

சிறிது நேரத்தில், புதிய வேலைக்காரச் சிறுவன் ஒருவன் நடுங்கியபடி அரசரிடம் வந்து, "அரசே , அந்த கிரீடம் மிகவும் அழகாக இருந்ததால் சிறிது நே ரம் அணிந்து பார்க்க வேண்டும் என்று எடுத்தேன். பிறகு பயந்து மறைத்துவைத்துவிட்டே ன்.

என்னை மன்னித்துவிடுங்கள்," என்றான்.

அரசர் கோபப்படாமல், "தவறை ஒப்புக்க கொண்டது நல்லது. ஆனால் பிறருடைய பொருளை அனுமதி இல்லாமல் எடுப்பதே திருட்டு. அது நம்பிக்கை யை உடைத்துவிடும். இனி இப்படிச் செய்யாதே ," என்று அறிவுரை கூறினார்.

சிறுவன் தனது தவறை உணர்ந்து, இனி வாழ்நாள் முழுவதும் நேர்மையாக இருப்பதாக உறுதியளித்தான்.

நீதி: பிறருடைய பொருளை அனுமதி இல்லாமல் எடுப்பது தவறு. நேர்மையே மனிதனின் மிகப் பெரிய செல்வம்.

இன்றைய செய்திகள்

29.06.2026

🗒️மேகாலயாவின் 'வாழும் வேர் பாலங்களை' (Living Root Bridges) யுனெஸ்கோ (UNESCO) உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்க்க இந்தியா விண்ணப்பித்துள்ளது.

🗒️தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உலகின் முதல் ஹைட்ரஜன் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

🗒️பிரான்சில் வெப்ப அலை தீவிரம்; கடந்த ஆண்டை விட பலி எண்ணிக்கை அதிகரிக்கும் - அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 *விளையாட்டுச் செய்திகள்* 

🏀தேசிய தடகள சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற தமிழக வீராங்கனை.

🏀நீளம் தாண்டுதல் போட்டி - 22 ஆண்டுகால சாதனையை தகர்த்த கேரள வீராங்கனை

🏀சர்வதேச பாரா பேட்மிண்டன்: 6 பதக்கங்களை வென்று இந்திய அளவில் சாதனை படைத்த தமிழக வீராங்கனை துளசிமதி!


Today's Headlines

🗒️ India has nominated Meghalaya's Living Root Bridges for inclusion on the UNESCO World Heritage List.

🗒️ The world's first hydrogen production plant has been inaugurated at the Indira Gandhi Centre for Atomic Research in Kalpakkam, Tamil Nadu.

🗒️ Heatwave intensifies in France: Reports indicate that the death toll is expected to be higher than last year.

Sports News

🏀 National Athletics Championships: A Tamil Nadu athlete won the gold medal.

🏀 Long Jump: A Kerala athlete broke a 22-year-old record in the event.

🏀 International Para-Badminton: Thulasimathi, a player from Tamil Nadu, sets a national record by winning 6 medals!


25 June 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.06.2026

திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:44 குற்றங்கூறாமை

குறள் எண்:437

குறள்:

செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.   


பொருள்:

செல்வம் பெற்ற போது அதனாலே செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாமல் தவறியவனுடைய செல்வமானது, நிலைக்கும் தன்மையற்று, அழியும் .

பழமொழி :
A guilty conscience needs no Accuser

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. என் தாய் தந்தை சொல்படி கேட்டு நடப்பேன். அவர்கள் தான் என் மீது முதலில் அக்கறை கொண்டவர்கள் என்பதை நான் நன்கு அறிவேன் .

 2. பிறர் என்னிடம் நட்பு பாராட்டுவதைப் பற்றி என் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்வேன்.

பொன்மொழி : 

எழுந்திருங்கள், விழித்திருங்கள், இலக்கை அடையும் வரை நிறுத்தாதீர்கள்." - சுவாமி விவேகானந்தர்

Thought for the Day :

Arise, awake, and stop not till the goal is reached."

பொது அறிவு : 

1. இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் 2026 ஆம் ஆண்டுக்கான சிறந்த அலங்கார ஊர்திக்கான முதல் பரிசு பெற்ற மாநிலம் எது? 

மகாராஷ்டிரம். 

2. குதிக்க முடியாத விலங்கு எது? 

யானை.

English words :

Accelerate – Speed up, வேகப்படுத்து.

Allocate – Assign, ஒதுக்கு.

புவியியலும் சுற்றுசூழலும் :

டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பின் தந்தை என அழைக்கப்படுகிறார்.இந்தியாவில் மூன்று வகை ஆட்சித் துறைகள் உள்ளன:

சட்டமன்றம் (Legislature)

நிர்வாகம் (Executive)

நீதித்துறை (Judiciary)

NMMS :

எஎரியும் மெழுகுவர்த்தி ஒன்று வெளியிடும் ஒளியின் அளவு தோராயமாக _______________ க்குச் சமமாகும்.

 (1) ஒரு ரேடியன் 

(2) ஒரு லுமென் 

(3) ஒரு கேண்டிலா 

(4) ஒரு ஸ்ட்ரேடியன் 

விடை: (3) ஒரு கேண்டிலா

ஜூன் 25

வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாள்

விஸ்வநாத் பிரதாப் சிங் (சூன் 25 1931 - நவம்பர் 27, 2008) இந்தியக் குடியரசின் 7 ஆவது இந்திய பிரதமர் ஆவார். இவர் வி. பி. சிங் என அறியப்படுபவர். டிசம்பர் 2, 1989 லிருந்து நவம்பர் 10 1990 வரை இவர் இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்தார்.

2023-இல் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங்குக்கு முழு உருவச் சிலை அமைக்கும் அறிவிப்பை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டார்.

வி. பி. சிங்கை "இந்தியத் தலைமை அமைச்சர்களிலேயே மிகவும் அரிதான தலைமை அமைச்சராக இருந்தவர்" எனப் புகழ்ந்தார் தமிழறிஞர் கி. குணத்தொகையன்
நீதிக்கதை

 🌿 மன்னிக்கும் மனம்

ஒரு கிராமத்தில் அருண் மற்றும் வருண் என்ற இரண்டு நண்பர்கள் வாழ்ந்தனர். இருவரும் ஒரே பள்ளியில் படித்தனர்.

ஒருநாள் பள்ளியில் ஆசிரியர் கொடுத்த அழகான ஓவியத்தை அருண் மிகவும் கவனமாக வரைந்து கொண்டிருந்தான். அப்போது விளையாட்டாக ஓடிவந்த வருண் தவறுதலாக அருணின் ஓவியத்தின் மேல் தண்ணீரைக் கொட்டிவிட்டான்.

அருணின் ஓவியம் முழுவதும் கெட்டுப்போயிற்று.

வருண் மிகவும் வருந்தினான்.

"அருண், என்னை மன்னித்துவிடு. நான் வேண்டுமென்று செய்யவில்லை," என்று கண்ணீர் மல்கக் கூறினான்.

அருணுக்கு முதலில் கோபம் வந்தது. ஆனால் சிறிது நேரம் யோசித்தான்.

"தவறு எல்லோரிடமும் நடக்கலாம். நீ உண்மையாக வருந்துகிறாய். நான் உன்னை மன்னிக்கிறேன்," என்றான்.

அந்த வார்த்தையைக் கேட்ட வருண் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். இருவரும் மீண்டும் நல்ல நண்பர்களாக இருந்தனர்.

அடுத்த நாள் ஆசிரியர் இந்த நிகழ்வைப் பற்றி அறிந்து கொண்டு கூறினார்:

"கோபத்தை வைத்துக்கொள்வதை விட மன்னிப்பது பெரிய குணம். மன்னிக்கும் இதயம் உள்ளவர்களே உண்மையான வெற்றியாளர்கள்."

 நீதிக்கருத்து

"மன்னிப்பு பலவீனம் அல்ல; அது பெரிய மனதின் அடையாளம்."

"பிறரின் தவறுகளை மன்னிக்கக் கற்றுக்கொண்டால், நம் நட்பும் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்

இன்றைய செய்திகள்

25.06.2026

🗒️வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு.

🗒️ எத்தனால் கலந்த பெட்ரோல் ஆல்  வாகன காப்பீடு பாதிக்கப்படாது - மத்திய அரசு உத்தரவாதம்

🗒️ நிதித்துறை தொழில்நுட்பம் இரு கட்டமைப்புகளில்  இந்தியா முன்னேற்றம் - நெதர்லாந்து ராணி மாக்‌ஷிமா  பாராட்டு

 விளையாட்டுச் செய்திகள்

🏀புரோ ஆக்கி லீக்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி. இந்திய அணி, அடுத்த லீக் ஆட்டத்தில் நாளை இங்கிலாந்தை சந்திக்க உள்ளது.

🏀ஐசிசி ஒருநாள் தரவரிசை: கோலியை முந்திய சுப்மன் கில் 
ஐசிசி ஒருநாள் போட்டிகளில் 2-வது இடத்தைப்  பிடித்துள்ளார்.

Today's Headlines

🗒️ Velachery Road to be renamed after Major Mukund Varadarajan: Chief Minister Vijay has issued orders to name the road after Major Mukund Varadarajan.

🗒️ Vehicle insurance will not be affected by ethanol-blended petrol: The Central Government has assured that the use of ethanol-mixed petrol will not impact vehicle insurance coverage.

🗒️ India praised for progress in financial technology and digital infrastructure: Queen Máxima of the Netherlands has commended India's achievements in these two sectors.

Sports News

🏀 Pro Hockey League: India secured a thrilling victory over Pakistan. The Indian team will face England tomorrow in its next league match.

🏀 ICC ODI Rankings: Shubman Gill has overtaken Virat Kohli and moved up to the 2nd position in the ICC One Day International rankings.

.

JOIN KALVICHUDAR CHANNEL