t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

13 February 2026

பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் விரிவான அறிவிக்கை வெளியீடு!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) தற்போது பணியிலுள்ள ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) 2026 குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1. முக்கியத் தேதிகள்
 * அறிவிப்பு வெளியான நாள்: 13.02.2026
 * ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 18.02.2026
 * விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.04.2026
 * விண்ணப்பத் திருத்தம் (Edit Option): 11.04.2026 முதல் 13.04.2026 வரை
 * தேர்வு தேதிகள் (உத்தேசமாக):
   * தாள் I (Paper I): 04.07.2026 (முற்பகல்)
   * தாள் II (Paper II): 05.07.2026 (முற்பகல்)
2. விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்
 * 01.09.2025 அன்றோ அல்லது அதற்கு முன்போ இடைநிலை ஆசிரியர் (SGT), பட்டதாரி ஆசிரியர் (BT Assistant) மற்றும் அதற்கு இணையான பதவிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.
 * அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இதற்குத் தகுதியானவர்கள்.
 * பணி உயர்வு (Promotion) பெற விரும்பும் தகுதியுள்ள ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்.
3. தேர்வுக் கட்டணம்
 * பொதுப் பிரிவினர்: ரூ. 600/-
 * SC, SCA, ST மற்றும் மாற்றுத்திறனாளிகள்: ரூ. 300/-
 * தாள்-1 மற்றும் தாள்-2 ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிப்பவர்கள் தனித்தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.
 * கட்டணத்தை ஆன்லைன் (Net banking / Credit Card / Debit Card) மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
4. தேர்வு முறை மற்றும் தகுதி மதிப்பெண்கள்
 * தேர்வு OMR முறையில், 150 கொள்குறி வகை வினாக்களைக் (MCQs) கொண்டிருக்கும்.
 * தேர்வுக்கான கால அளவு 3 மணி நேரம்.
 * தகுதி மதிப்பெண்கள்:
   * பொதுப் பிரிவினர்: 60% (90 மதிப்பெண்கள்).
   * BC, BCM, MBC/DNC மற்றும் மாற்றுத்திறனாளிகள்: 50% (75 மதிப்பெண்கள்).
   * SC, SCA மற்றும் ST பிரிவினர்: 40% (60 மதிப்பெண்கள்).
5. விண்ணப்பிக்கும் முறை
 * விண்ணப்பதாரர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
 * தேவையான ஆவணங்கள் (Upload செய்ய வேண்டியவை):
   * புகைப்படம் (40-60 KB) மற்றும் கையொப்பம் (20-40 KB).
   * பணிச் சான்றிதழ் (Service Certificate - Annexure-I) - இது மிக முக்கியமானது.
   * கல்விச் சான்றிதழ்கள் (10th, 12th, D.T.Ed/B.Ed, Degree marksheet).
   * சாதிச் சான்றிதழ் மற்றும் மாற்றுத்திறனாளி சான்றிதழ் (தேவையெனில்).
குறிப்பு: விண்ணப்பத்தில் தவறான தகவல்கள் அளிக்கப்பட்டாலோ அல்லது தேவையான சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்படாவிட்டாலோ விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

நிச்சயமாக. இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET 2026) குறித்த அறிவிப்பில் உள்ள மேலும் சில முக்கியக் குறிப்புகள் இதோ:
 * தாள்-II (Paper II): பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
 * பணிச் சான்றிதழ் (Service Certificate): விண்ணப்பதாரர்கள் 'Annexure-I' படிவத்தில் உள்ள பணிச் சான்றிதழைத் தவறாமல் பதிவேற்ற வேண்டும்.
 * தேர்வுத் தரம்: தாள்-II க்கான வினாக்கள் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்தாலும், அவற்றின் கடினத்தன்மை மற்றும் தொடர்பு மேல்நிலைக் கல்வி (Higher Secondary) தரம் வரை இருக்கும்.
 * தேர்வு கட்டமைப்பு: இதில் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை, மொழி-I, ஆங்கிலம் மற்றும் தங்களின் பாடப்பிரிவு (கணிதம் & அறிவியல் அல்லது சமூக அறிவியல்) என மொத்தம் 150 வினாக்கள் இடம்பெறும்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை இன்று வெளியான நிலையில் பிப்.18 முதல் விண்ணப்பம் செய்யலாம்

ஜூலை 4 & 5இல் ஆசிரியர் தகுதித் தேர்வு

* ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை இன்று வெளியான நிலையில் பிப்.18 முதல் விண்ணப்பம் செய்யலாம்

* ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏப்.10ஆம் தேதி இறுதி நாள்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

* ஜூலை 4 ஆம் தேதி முதல் தாள் தேர்வும், ஜூலை 5இல் 2ஆம் தாள் தேர்வும் நடைபெற வாய்ப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம்

* ஜூலை 4 மற்றும் 5ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என்று உத்தேச அட்டவணை வெளியீடு




பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.02.2026

திருக்குறள்: 

குறள் 442: 

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் 
பெற்றியார்ப் பேணிக் கொளல் 

விளக்க உரை: 

வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.

பழமொழி :
Small steps build big journeys. 

சிறிய படிகளே பெரிய பயணத்தை உருவாக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :


1. உலகில் உயர்வானது அனைத்து உயிர்களிடமும் நாம் காட்டும் அன்பும் பரிவும் தான்.

2. எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம்.

பொன்மொழி : 

மோசமான தோல்வியை எதிர்கொள்ளும் தைரியம் உடையவர்களே வாழ்வில் மிகப் பெரிய வெற்றியைப் பெற முடியும் - கென்னடி

பொது அறிவு : 

1. Which Indian city became a UNESCO Creative City of Gastronomy? 

யுனெஸ்கோவின் கிரியேட்டிவ் சிட்டி ஆஃப் காஸ்ட்ரோனமியாக எந்த இந்திய நகரமாக  மாறி உள்ளது?

Mumbai - மும்பை

2. Who controls monetary policy in India? 

இந்தியாவில் பணவியல் கொள்கையை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? 


 Reserve Bank of India (RBI).  - இந்திய ரிசர்வ் வங்கி (RBI).

English words :

Monetary - பணவியல்

Mechanics - இயக்கவியல்

தமிழ் இலக்கணம்: 

 இன்று சும்மா என்ற சொல்லை குறித்து சற்று பார்ப்போம்.
சும்மா என்ற சொல்லை ஒரு நாளில் நாம் ஒரு முறையாவது உபயோகப் படுத்துவது உண்டு. ஆனால் இதற்கு அகராதியில் பொருள் இல்லை. ஏனென்றால் இது இடத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு பொருள் தரும். வாருங்கள் சில எடுத்துக் காட்டுகள் பார்ப்போம்
1. சும்மா கிடந்த சங்கை எடுத்து
பொருள் –பயன்படாமல் கிடந்த 
2. நான் சும்மா சொன்னேன்
பொருள் –நான் பொய் சொன்னேன்
3. இதை நீ சும்மா எடுத்துக்கோ
பொருள் – இலவசமாக எடுத்துக் கொள்
ஆக இந்த மூன்று வாக்கியங்களிலும் மூன்று சும்மாவும் மூன்று பொருள் தருகிறது அல்லவா.
  இன்னும் தொடரும்

அறிவியல் களஞ்சியம் :

அண்டார்டிகா என்றாலே நம் நினைவுக்கு வருவது மைல் கணக்கில் பரந்து விரிந்திருக்கும் வெண்மையான பனிப்பாறைகள் தான். ஆனால், அந்த உறைந்த அமைதிக்கு அடியில் "நெருப்பு உலகம்" ஒளிந்திருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? சீன விஞ்ஞானிகள் தலைமையிலான சர்வதேசக் குழு, அண்டார்டிகாவின் பனிக்கு அடியில் புதைந்து கிடக்கும் 207 ராட்சத எரிமலைகளை கண்டறிந்து உலகையே அதிரவைத்துள்ளது.

பிப்ரவரி 13

உலக வானொலி நாள்

உலக வானொலி நாள் (World Radio Day) என்பது ஆண்டு தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது. வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.


கவிக்குயில் சரோஜினி அவர்களின் பிறந்தநாள்


சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் - மார்ச் 2,1949, லக்னோ) அவர் பாரத்திய கோகிலா  (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுநரும் ஆவார்.அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.
நீதிக்கதை

 பசி



ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன். அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது. உடனே மனம் உடைந்து போனான்.

அப்போது வந்த அரசர், ஏன் சோகமாக இருக்கிறாய்? என கேட்டார். அதற்கு இளவரசன், இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாதபோது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே! என விவரித்தான் இளவரசன். மன்னர் சிரித்துவிட்டு எலியைக் கொள்ள வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே! என்றார். உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது.

அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது. மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். என்ன அரசே.. நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்? என்றார். அதற்கு அரசர் நடந்ததை கூறினார். நம் நாட்டு பூனைகள் எதற்கு உதவாது. ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம் என்றார் மந்திரி. அதேபோல் அந்நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.

ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது. எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும் என்றான். மன்னருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. என்ன.. அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா? என்றார்.

உடனே இளவரசர் மறித்து சரி... எடுத்து வா உனது பூனையை என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் லபக் என்று கவ்விச்சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். என்ன இது அதியசம்! ஜப்பான், பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்? என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார். அதற்குக் காவலாளி பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே...என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான் என்றான்.

உடனே இளவரசருக்கு சுரீர் என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவென்று தெரிய வாய்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்? ஆக எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்

இன்றைய செய்திகள்

13.02.2026

⭐தொழில் வளர்ச்சியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

⭐AI தொழில்நுட்பத்தின் தாக்கத்தால்இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி

⭐வருகிற 15-ந்தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

⭐ எகிப்து நாட்டில் மன்னர்களின் கல்லறைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்-பிராமி கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு.

⭐9801 பேருக்கு பணி நியமன ஆணைகள் - முதலமைச்சர் இன்று வழங்குகிறார்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀சேப்பாக்கம் மைதானத்தில் 3-வது லீக் ஆட்டம்: நெதர்லாந்து-அமெரிக்கா இன்று மோதல்

Today's Headlines

⭐ Chief Minister M.K. Stalin said that Tamil Nadu is leading in industrial development.

⭐ Shares of India's leading IT companies have fallen sharply due to the impact of AI technologies

⭐The Meteorological Department has announced that there is a possibility of moderate rain in Tamil Nadu due to a new low-pressure area forming on February 15th onwards.

⭐ 2000-year-old Tamil-Brahmi inscriptions discovered during a survey conducted in the tombs of kings in Egypt. 

⭐ Appointment orders for 9801 people - The Chief Minister to provide today.

 SPORTS NEWS 

🏀3rd league match at Chepauk Stadium: Netherlands-USA clash today


12 February 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.02.2026




திருக்குறள்: 

குறள் 303: 

மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய 
பிறத்தல் அதனான் வரும்.     

விளக்க உரை: 

யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.

பழமொழி :
Time respect those who value it.        

நேரத்தை மதிப்பவர்களை நேரமும் மதிக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :


1. உலகில் உயர்வானது அனைத்து உயிர்களிடமும் நாம் காட்டும் அன்பும் பரிவும் தான்.

2. எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம்.

பொன்மொழி : 

கடுமையான உழைப்பைத் தவிர வெற்றிக்கு இரகசியம் வேறு இல்லை -  டர்னர்

பொது அறிவு : 

01. தலையில் இதயம் கொண்ட விலங்கு எது?

           இறால் -Shrimp

02. உலகின் மிக நீளமான கடற்கரையாக கருதப்படுகிறது,

  பிரயா டோ காசினோ-பிரேசில்

  Praia do Cassino-Brazil

English words :

surge –a  sudden strong movement of people or things in a particular direction.

பெரும் எண்ணிக்கையிலான ஆட்களின் அல்லது பொருள்களின் குறிப்பிட்ட திசையிலான இயக்கம்

தமிழ் இலக்கணம்: 

 நாம் எழுதும்போது கமா, முற்றுப் புள்ளி, கால் புள்ளி, அரைப் புள்ளி போன்றவற்றை அவ்வப்போது பயன்படுத்துவது உண்டு. இதை நிறுத்தக்குறிகள் / நிறுத்தற்குறிகள் என்று நாம் அழைப்பது உண்டு. இன்று  
நிறுத்தக்குறிகள் / நிறுத்தற்குறிகள்
இவற்றில் எது சரி ? என்று 
பார்ப்போம் வாருங்கள்

நிறுத்தக்குறிகள் = நிறுத்தம் + குறிகள்
என்று பிரிக்கலாம். நிறுத்தம் என்றால் சென்று கொண்டிருக்கும் ஒன்றை நிறுத்துவது ஆகும்

நிறுத்தற்குறிகள் = நிறுத்தல் + குறிகள் என்று பிரிக்கலாம்
நிறுத்தல் என்றால் ஒரு பொருளை நிறுப்பது என்று பொருள் படும். 
எனவே நிறுத்தக்குறிகள் என்பதே சரியானது.

அறிவியல் களஞ்சியம் :

பார்சனின் நோய் (Parkinson's disease) பரவலில் குடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களின் பங்கு முக்கியமானது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பல் எனாமலை மீண்டும் உருவாக்கும் புதிய ஜெல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 12

டார்வின் நாள் - darwin day

டார்வின் நாள் (Darwin Day) என்பது ஒவ்வோர் ஆண்டும் பெப்ரவரி 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 1809 ஆம் ஆண்டில் பரிணாமத் தத்துவத்தை உலகுக்கு அளித்த சார்ல்ஸ் டார்வின் பிறந்தார். அறிவியலையும் அறிவியலை மேம்படுத்தவும் உதவிய டார்வினின் பணிகளை இந்நாளில் நினைவு கூaருகிறார்கள்.
நீதிக்கதை

 ஓநாயும் ஆட்டுக்குட்டியும்



ஒரு நாள் ஓநாய் ஒன்று அதிகமான தாகத்துடனும், பசியுடனும் தவித்துக் கொண்டு இருந்தது. அதனால் அது தண்ணீர் குடிக்க ஒரு ஓடைக்குச் சென்றது. சிறிது தூரத்தில் ஒரு ஆட்டுக்குட்டி தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அதனை கண்டு ஓநாய்க்கு கோபம் வந்தது. அது ஆட்டுக் குட்டியைப் பார்த்து டேய் முட்டாள்! நான் தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கவில்லையா! ஓடையைக் கலக்குகிறாயே என்றது. ஆட்டுக்குட்டி மிகுந்த பயத்துடன் நான் உங்களுக்குக் கீழ்ப் பாகத்தில் உள்ள தண்ணீர்ரைக் குடிக்கிறேன். நீங்களோ மேல் பாகத்தில் உள்ள தண்ணீர்ரைக் குடிக்கிறீர்கள். அப்படியிருக்க தண்ணீர் எப்படி கலங்கும் என்றது. 

ஆறு மாதத்திற்கு முன்னால் உன் தந்தை இப்படித்தான் என்னிடம் வாயாடினார். வாயாடியதற்காக அவருடைய தோல் அன்று உரிக்கப்பட்டது. அது போல் உன் தோலையும் உரித்தால் தான் நீ வாயாடுவதை நிறுத்துவாய் என்று கோபமாகச் சொல்லியது ஓநாய். ஆட்டுக்குட்டியோ மிகவும் பயந்தது. ஐயா! நான் சொல்வதை நம்புங்கள். நான் பிறந்து இன்னும் ஆறு மாதம் கூட ஆகவில்லை என்று மிகப் பணிவாகச் சொல்லியது. 

ஓநாய் கோபமாகப் பற்களைக் கடித்துக் கொண்டு எங்கள் இனத்தாரிடம் விரோதம் காட்டுவதே உங்கள் இனத்தாருக்கு வழக்கமாகி விட்டது. இப்போது நீ உன் முன்னோர்கள் செய்த கொடுமைகளுக்கு எல்லாம் சேர்த்து தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்று சொல்லிக் கொண்டே ஆட்டுக் குட்டியின் மீது பாய்ந்து ஆட்டுக்குட்டியைக் கொன்றுத் தின்றது ஓநாய். 



நீதி :

கெட்டவர்களிடம் பேசாமல் இருப்பது தான் நல்லது.

இன்றைய செய்திகள்

12.02.2026

⭐ஊழலை ஒழிப்பதில் பிற நாடுகளை விட இந்தியா மிக பின்தங்கியுள்ளதாக குளோபல் டிரான்ஸ்பரன்சி வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

⭐பிப்ரவரி 22 ல் TNPSC குரூப்-  2 க்கான ஹால் டிக்கெட் தகவல் வெளியிடப்படும்.

⭐ஈரானில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கும் மக்களுக்கும் இடையே கடும் மோதல் நிலவுகிறது

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்  24 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது.

🏀இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வெளியிட்ட 2025-26ஆம் ஆண்டிற்கான வீரர்களின் வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலில், முகமது ஷமி மற்றும் இஷான் கிஷன் உள்ளிட்ட 5 முக்கிய வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

Today's Headlines

⭐A report released by Global Transparency has revealed that India lags far behind other countries in eradicating corruption.

⭐Hall ticket information for TNPSC Group-2 will be released on February 22.

⭐In Iran, there is a sharp conflict between the government and the people due to rising prices and economic crisis.

 *SPORTS NEWS*

🏀The 10th T20 World Cup series is being played in India and Sri Lanka starting from the 7th. Chasing a target of 24 runs, Afghanistan lost by just 18 runs.

🏀In the annual contract list of players for 2025-26 released by the Board of Control for Cricket in India (BCCI), 5 key players, including Mohammed Shami and Ishan Kishan, have been abruptly removed.


11 February 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.02.2026


திருக்குறள்: 

குறள் : 503

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு. 

விளக்கம்:

அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.

பழமொழி :
Affection lives where kindness stays.         

கனிவு இருக்கும் இடத்தில் பாசம் வாழ்கிறது.

இரண்டொழுக்க பண்புகள் :


1. உலகில் உயர்வானது அனைத்து உயிர்களிடமும் நாம் காட்டும் அன்பும் பரிவும் தான்.

2. எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம்.

பொன்மொழி : 

கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் மனிதனை வீணாக்கி விடும் - முகம்மது நபி

பொது அறிவு : 

01.சீனப் பெருஞ்சுவரை முதன்முதலில் இணைத்து கட்ட உத்தரவிட்டவர் யார்?

சின் வம்சத்தின் முதல் பேரரசர் சின் சி ஹுவாங் - Qin Shi Huang

02.தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைச் சமவெளி எப்பெயரால் குறிப்பிடப்படுகிறது? 

சோழமண்டலக் கடற்கரை 

Coromandel Coast

English words :

concordance -to collect all the words used in a book or a writer's work into a book or list in alphabetical order, with information about where the words can be found and in which sentences:

தமிழ் இலக்கணம்: 

 சுற்றுமா? சுழலுமா?
வாருங்கள் பார்ப்போம்
1. பம்பரம் சுழல்கிறது
2. பூமி சூரியனை சுற்றிகிறது.
ஏன் முதல் வாக்கியத்தில் சுழல்கிறது இரண்டாம் வாக்கியத்தில் சுற்றுகிறது?
ஒரு பொருள் தன்னைத் தானே சுற்றும் போது சுழல்கிறது என்று சொல்ல வேண்டும் 
வேறு பொருளை சுற்றும் போது சுற்றுகிறது என்று சொல்ல வேண்டும் 
இன்னும் சில எடுத்துக் காட்டுகள் பார்ப்போம்

1. மின்விசிறி சுழல்கிறது
2. பூமி தன் அச்சில் சுழல்கிறது
3. மாலா பூந்தோட்டத்தை சுற்றி வந்தாள் 
4. முகமது தன் வீட்டைச் சுற்றி சுற்றி விளையாடினான்.
அறிவியல் களஞ்சியம் :

500 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிமங்களில் உள்ள கலவை பூமியின் கார்பன் சுழற்சி குறித்த புதிய பார்வையை வழங்குகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பு மரபணுக்களை முடக்க, புதிய CRISPR கருவி பாக்டீரியாக்கள் முழுவதும் பரவுகிறது.

பிப்ரவரி 11

தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் பிறந்தநாள்

தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison, பெப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். 

நீதிக்கதை

தங்கமா? வெள்ளியா?

ஒரு நா‌ட்டி‌ல் பொருளாதார ‌நிபுண‌ர் ஒருவ‌ர் இரு‌ந்தா‌ர். அ‌ந்த நா‌ட்டு ம‌ன்ன‌ர் எந்த ஒரு முக்கியமான காரியத்தை செய்வதாக இரு‌ந்தாலு‌ம், அ‌ந்த ‌நிபுணரை அழை‌த்து ஆலோசனை‌க் கே‌ட்ட ‌பிறகே செ‌ய்வா‌ர். அவரின் புகழ் மற்ற நாடுகளுக்கும் பரவியது. 

ஒரு நா‌ள் பொருளாதார ‌நிபுணரை, அ‌வ‌ர் வ‌சி‌க்கு‌ம் ஊ‌ரி‌ன் தலைவ‌ர் அழை‌த்து‌, நீ நா‌ட்டு‌க்கே பொருளாதார ‌‌விஷய‌ங்க‌ளி‌ல் ஆலோசனை வழ‌‌ங்கு‌கிறா‌ய். ஆனா‌‌ல் உ‌ன் மகனை கவ‌னி‌க்காம‌ல் ‌வி‌ட்டு‌வி‌ட்டாயே. அவனு‌க்கு உலோக‌த்‌தி‌ல் ‌அ‌திக ‌விலை ம‌தி‌ப்பானது த‌ங்கமா? அ‌ல்லது வெ‌ள்‌ளியா எ‌ன்று கூட தெ‌ரிய‌வி‌ல்லையே. நா‌ட்டு ‌விஷய‌ங்களை கவ‌னி‌த்தது போது‌ம், ‌வீ‌ட்டையு‌ம் கொ‌ஞ்ச‌ம் கவ‌னி எ‌ன்று கூ‌றினார். 

வீ‌ட்டி‌ற்கு வ‌ந்த ‌நிபுண‌ர், தனது மகனை அழை‌த்து, மகனே.. உலோக‌த்‌தி‌ல் ‌விலை ம‌தி‌ப்பானது த‌ங்கமா? வெ‌ள்‌ளியா? எ‌ன்று கே‌ட்டா‌ர். அத‌ற்கு அ‌ந்த மக‌ன் த‌ங்க‌ம் எ‌ன்று ப‌தில‌ளி‌த்தா‌ன். உடனே, த‌‌ந்தை ‌பிறகு ஏ‌ன் இ‌ந்த ஊ‌ர் பெ‌ரியவ‌ர்க‌ள் உ‌ன்னை‌ப் ப‌ற்‌றி எ‌ன்‌னிட‌ம் புகா‌ர் கூ‌றினா‌ர்க‌ள். உ‌ன்னை நா‌ன் ச‌ரியாக வள‌ர்‌க்க‌வி‌ல்லை எ‌ன்று‌ம், த‌ங்க‌த்‌தி‌ற்கு‌ம், ‌வெ‌ள்‌ளி‌க்கு‌ம் உ‌ள்ள ‌வி‌த்‌தியாச‌த்தை‌க் கூட‌ அவ‌ன் அ‌றி‌ந்‌திரு‌க்க‌வி‌ல்லை எ‌ன்று எ‌ன்‌னிட‌‌ம் சொன்னார்கள் எ‌ன்று ச‌ந்தேக‌த்துட‌ன் கே‌ட்டா‌ர்.

அ‌த‌ற்கு அ‌ந்த மக‌ன், த‌ந்தையே, ‌தினமு‌ம் நா‌ன் ப‌ள்‌ளி‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் போது, உ‌ங்க‌ளிட‌ம் என்னைப் பற்றி சொல்லிய பெ‌ரியவ‌ர்க‌ள், எ‌ன்னை அழை‌த்து ஒரு கை‌யி‌ல் வெ‌ள்‌ளி நாணய‌ங்களையு‌ம், ஒரு கை‌யி‌ல் த‌ங்க நாணய‌த்தையு‌ம் வை‌த்து‌க் கொ‌ண்டு, இ‌தி‌ல் எது பெ‌ரியதோ அதை ‌நீ எடு‌த்து‌க் கொ‌ள் எ‌ன்று கூறுவா‌ர்க‌ள்.

நா‌ன் உடனே வெ‌ள்‌ளி நாணய‌ங்களை எடு‌த்து‌க் கொ‌‌‌ள்வே‌ன். அவ‌ர்க‌ள் கலகலவெ‌ன்று ‌சி‌ரி‌ப்பா‌ர்க‌ள். நா‌ன் வெ‌ள்‌ளி நாணய‌த்தை எடு‌த்து‌க் கொ‌ண்டு ப‌ள்‌ளி‌க்கு‌ச் செ‌ன்று ‌விடுவே‌ன் எ‌ன்றா‌ன். இ‌தை‌க் கே‌ட்டு அ‌தி‌ர்‌ந்த ‌நிபுண‌ர், வெ‌ள்‌ளியை ‌விட த‌ங்க‌ம்தா‌ன் ‌விலை உய‌ர்‌ந்தது எ‌ன்று உன‌க்கு‌த் த‌ெ‌ரி‌ந்‌திரு‌ந்து‌ம் ஏ‌ன் வெ‌ள்‌ளியை எடு‌த்து‌க் கொ‌ள்‌கிறா‌ய் எ‌ன்று கே‌ட்டா‌ர். 

அத‌ற்கு அ‌ந்த மக‌ன், த‌ந்தையை தனது அறை‌க்கு அழை‌த்து‌ச் செ‌ன்று, ஒரு பெ‌ட்டியை‌த் ‌திற‌ந்து கா‌ண்‌பி‌த்தா‌ன். அ‌ந்த பெ‌ட்டி ‌நிறைய வெ‌ள்‌ளி நாணய‌ங்க‌ள் இரு‌ந்தன. அ‌ப்போது மக‌ன் சொ‌ன்னா‌‌ன், த‌ந்தையே, ஒ‌வ்வொரு முறையு‌ம் அவ‌ர்க‌ள் எ‌ன்‌னிட‌ம் த‌ங்க, வெ‌‌ள்‌ளி நாணய‌ங்களை கா‌‌ண்‌பி‌க்கு‌ம் போது‌ம் நா‌ன் வெ‌ள்‌ளி நாணய‌ங்களையே எடு‌த்து‌க் கொ‌ள்வே‌ன். அதனா‌ல்தா‌ன் எ‌ன்‌னிட‌ம் இ‌வ்வளவு வெ‌ள்‌ளி நாணய‌ங்க‌ள் இரு‌க்‌கி‌ன்றன. நா‌ன் எப்போது த‌ங்க நாணய‌த்தை தே‌ர்வு செ‌ய்‌கிறேனோ அ‌ன்றுட‌ன் ‌இ‌ந்த ஆ‌ட்ட‌ம் ‌நி‌ன்று போகு‌ம். அவ‌ர்களை ஆ‌ட்ட‌த்‌தி‌ல் வெ‌ற்‌றி பெற ‌வி‌ட்டு ‌வி‌ட்டு, நா‌ன் ‌‌‌‌நிஜ‌த்‌தி‌ல் ஜெ‌யி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறே‌ன் எ‌ன்று கூ‌றினா‌ன். இ‌ந்த ப‌திலை‌க் கே‌ட்டது‌ம் ஆன‌ந்த‌ம் அடை‌ந்தா‌ர் த‌ந்தை.

நீதி :

புத்திசாலிகளுக்கு என்றுமே வெற்றிதான். 

இன்றைய செய்திகள்

11.02.2026

⭐தமிழகத்தில் வருகிற 16-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

⭐வங்கதேசம் தயாரிக்கும் ஆடை, ஜவுளிப் பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க அமெரிக்க அரசு முடிவு

⭐கேரளாவின்  மாற்றுதிறனாளி சிவில் நீதிபதி என்ற பெருமையை 24 வயதான தன்யா நாதன் பெற்றுள்ளார்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து 10-வது டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தி வருகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - அயர்லாந்து அணிகள் மோதவுள்ளனர்.

Today's Headlines

⭐The Meteorological Department has informed that dry weather is likely to prevail in Tamil Nadu till the 16th. 

⭐The US government has decided to provide full duty exemption on garments and textile products manufactured in Bangladesh

⭐24-year-old Tanya Nathan has been named Kerala's most physically challenged civil judge. 

 *SPORTS NEWS*

🏀 India and Sri Lanka are jointly hosting the 10th T20 World Cup. Australia and Ireland will face each other in the 14th league match of the series today.


10 February 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.02.2026


திருக்குறள்: 

குறள் 502: 
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் 
நாணுடையான் கட்டே தெளிவு.                         
விளக்க உரை: 

நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.

பழமொழி :
Knowledge is the real wealth.         

அறிவே உண்மையான செல்வம்.

இரண்டொழுக்க பண்புகள் :


1. உலகில் உயர்வானது அனைத்து உயிர்களிடமும் நாம் காட்டும் அன்பும் பரிவும் தான்.

2. எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம்.

பொன்மொழி : 

செல்வத்தை உண்டாக்குவது உழைப்பு. உலகத்தை இயக்குவதும் உழைப்பே - வெப்ஸ்டர் 

பொது அறிவு : 

01.இந்திய தத்துவம்"" (Indian Philosophy) என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவர் யார்?

டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் 

 Dr. S. Radhakrishnan 

02. உலைகள் மற்றும் உருகிய உலோகங்களில் உள்ள  அதிக வெப்பநிலையை அளவிடப்  பயன்படுவது எது?

       பைரோமீட்டர் 

Pyrometer 

English words :

gaze-look with administration

peek-look secretly

தமிழ் இலக்கணம்: 

 தோப்பா‌ தோட்டமா? 
எந்த எந்த மரம் செடி கொடிகளுக்குப் பின்னால் தோப்பு என்ற சொல் வரும் அல்லது தோட்டம் என்ற சொல் வரும். இன்று காண்போம்.
மிக நீண்ட நாட்கள் இருந்து பயன் தரும் மரம் செடிகள் கூட்டம் தோப்பு என்று அழைக்கப்படும் குறுகிய கால மரம் செடிகள் கூட்டம் தோட்டம் என்று அழைக்கப் படும்
எ. கா : தென்னந் தோப்பு –நீண்ட கால பயன் தரும் மரம்
வாழைத் தோட்டம் குறுகிய கால பயன் தரும் மரம்.
மாந்தோப்பு 
பூந்தோட்டம்
சவுக்குத் தோப்பு
மல்லிகைத் தோட்டம்
அறிவியல் களஞ்சியம் :

நாசாவின் ஆர்டெமிஸ் II (Artemis II) நிலவு ராக்கெட் ஏவுதளத்திற்கு வந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில், பெர்செவரன்ஸ் ரோவர் முதன்முதலில் AI மூலம் திட்டமிடப்பட்ட பயணத்தை (AI-Planned Drive) மேற்கொண்டுள்ளது.

நீதிக்கதை

வாழ்க்கைக்கு வழிகாட்டிய பறவை

ஒரு கிராமத்தில் ராமு என்று ஒருவன் இருந்தான். அவனுக்குப் போதுமான அளவு செல்வம் இருந்தது!  அவன் மிகவும் சோம்பேறி. கிராமத்தில் உள்ளவர்கள் வேலைக்குச் செல்லும்போது இவன் மட்டும் உறங்கிக்கொண்டிருப்பான். 

ஒருநாள் மாலை அவன்   ஒரு சிறிய அழகான பறவையைப் பார்த்து தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். அதனுடன் விளையாடிப் பொழுதைக் கழிக்கலாம் என்று நினைத்து பறவைக்குச் சிறிது உணவு அளித்தான். அது உணவு உண்ணும் அழகைக் கண்டு ரசித்தான். சற்று நேரத்தில் இருட்டிவிட்டது! வழக்கம் போல் தூங்கி விட்டான். 

பொழுது விடிந்தது. கண்விழித்துப் பார்த்த அவன் அதிர்ந்து போனான்! அவன் உணவளித்த பறவை சுமார் மூன்றடி உயரம் வளர்ந்திருந்தது!

நான் சிறிய பறவையைத்தானே எடுத்து வந்தேன்! நீ எடுத்து வந்த பறவைதான் நான்! வளர்ந்துவிட்டேன். எனக்குப் பசிக்கிறது, ஏதாவது சாப்பிடக்கொடு என்றது பறவை. அதற்கு சிறிது தானியங்களைப் போட்டான். பறவை அதைத் தின்றுவிட்டு மீண்டும் பசிக்கிறது என்றது. 

ராமு தனக்காக இருந்த உணவையும் பறவைக்கு அளித்து விட்டான்.  வீட்டைவிட்டு வெளியே சென்றான். பகல் முழுதும் வெளியில் இருந்து விட்டு இரவு வீடு வந்து பார்த்தான். அந்தப் பறவை மிகப் பெரியதாக வளர்ந்து வீடு முழுவதையும் அடைத்துக் கொண்டிருந்தது! அவனால் வீட்டிற்கு உள்ளே செல்ல முடியவில்லை! 

ராமுவுக்கு பயமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. வெளியே, குளிரில் படுத்து உறங்கினான். விடிந்தது! ராமு பசியாக இருந்தான். அப்போது அவ்வழியே மூட்டையைச் சுமந்து கொண்டு வந்த ஒரு வண்டியிலிருந்து இறங்கிய பெரியவர் ராமுவைப் பார்த்து, தம்பீ, மூட்டையை சற்று இறக்கித்தா. நான் உனக்குப் பணம் தருகிறேன் என்றார். 

எனக்கு உணவு கிடைக்குமா? வாங்கித் தருகிறேன் என்றார் பெரியவர். பசியோடு இருந்தவனுக்கு அவர் வாங்கித்தந்த உணவு அமிர்தமாக இருந்தது. சாப்பிட்டபின் வீட்டுக்குச் சென்றான். 

 பறவை சற்று சிறிதாக மாறியிருந்தது! எப்படி இது என்றான் ராமு. உன் சோம்பல் சற்று குறைந்துவிட்டது அல்லவா? அதனால்தான் என்றது. 

மறுநாள் கூலி வேலைக்குச் சென்றான். கிடைத்த கூலியில் வயிறார உண்டான். உணவை பறவைக்கும் வாங்கிக் கொண்டான். அவனுக்கு சந்தோஷமாக இருந்தது! இனி உழைத்து உண்ண வேண்டும் என்று தீர்மானித்து வீட்டுக்குச் சென்றான். 

பறவை முதலில் இருந்தது போலவே மிகவும் சிறியதாக இருந்ததைக் கண்டான்! இது எப்படி? என்று பறவையைக் கேட்டான். உன் சோம்பேறித்தனத்தை மாற்றவே நான் அப்படி செய்தேன். நான் வந்த வேலை முடிந்தது என்றது பறவை. 

எனக்கு மிகவும் மகிழ்ச்சி! இந்த உணவைச் சாப்பிடு என்றான் ராமு. என் மீது நீ கொண்ட அன்பிற்கு நன்றி! எனக்கு உணவு வேண்டாம். உன் சோம்பல் நீங்கியதே அதுதான் எனக்கு நிம்மதி! என் உணவை நான் தேடிக்கொள்ளுவேன் என்று கூறிவிட்டு வானை நோக்கிப் பறந்தது. 

அது வானில் ஓரு புள்ளியாய் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்த ராமுவிற்கு அழுகை வந்தது. இது உலகிற்கு ஞானத்தை ஊட்ட நினைக்கும் பறவை போலிருக்கிறது என்று கண்களைத் துடைத்துக்கொண்டார். 

நீதி :

உழைத்து சாப்பிட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கும்.

இன்றைய செய்திகள்

10.02.2026

⭐சந்திரயான்-4 லேண்டர் தரை இறங்குவதற்கான இடம் கண்டறியப்பட்டுள்ளது- இஸ்ரோ தகவல்

⭐டிஎன்பிஎஸ்சி சார்பில், ஒத்திவைக்கப்பட்டிருந்த குரூப் 2,2ஏ தேர்வுகள் மார்ச் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

⭐மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு ₹7,611 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை: ஓமனை எளிதாக வீழ்த்தியது ஜிம்பாப்வே.
முதலில் பேட்டிங் செய்த ஓமன் 103 ரன்னில் சுருண்டது.
ஜிம்பாப்வே 13.3 ஓவரில் சேஸிங் செய்தது.

Today's Headlines

⭐ISRO has Informed that the Landing Site for   Chandrayaan-4 Lander   has been found.

⭐TNPSC has announced that the postponed Group 2, 2A exams will be held on March 15th.

⭐Central government has allocated ₹7,611 crore  for Tamilnadu rail projects in the budget.

 *SPORTS NEWS* 

🏀T20 World Cup: Zimbabwe beat Oman easily. Batting first, Oman were bowled out for 103. Zimbabwe chased down the target in 13.3 overs.


TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் உண்மைத் தன்மை பெற TRB தெளிவுரை கடிதம்


JOIN KALVICHUDAR CHANNEL