ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் 2012 ஆம் ஆண்டு முதல் நியமனம் பெற்று பள்ளிக் கல்வித் துறையில் சுமார் 20000 பேரும், தொடக்கக் கல்வித் துறையில் சுமார் 15000 பேரும் பணியாற்றி வருகிறார்கள்.
அதில் பெரும்பாலானோர் வெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே பணிக்கு வந்தவர்கள். நியமனத் தேர்வு எழுதவில்லை.
2012 ஆம் ஆண்டுக்கு முன்பாக ஏற்கனவே நியமனம் செய்யப்பட்ட மூத்த ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறையில் சுமார் 40000 பேரும், தொடக்கக் கல்வித் துறையில் சுமார் 100000 பேரும் என பணியாற்றி வருகின்றனர்.
2022 ஆம் ஆண்டுக்குப் பின்பு ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வுக்குக் கட்டாயம் என்ற வழக்கு நடைபெற்றதால் இரு துறைகளிலும் எந்த பதவி உயர்வும் வழங்கப்படவில்லை.
உயர்நீதிமன்றம் 2023 ஆம் ஆண்டும் உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 2025 லும் ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வுக்கும் பணியில் தொடர்வதற்கும் கட்டாயம் எனத் தீர்ப்பளித்தன.
அரசு தரப்பில் கட்டாயமில்லை என்ற முடிவில் 2010 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டதாலும் எழுத வேண்டும் என அறிவுறுத்தப்படாததாலும் மூத்த ஆசிரியர்கள் யாரும் ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதவில்லை.
பதினான்கு ஆண்டுகள் கழித்து எழுதித் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்படனர்.
அதனைத் தொடர்ந்து சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையில் ஏதேனும் விலக்களிக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அந்த இடைவெளியில் 2025 நவம்பரில் பொதுவாக நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் பங்கேற்ற மூத்த ஆசிரியர்கள் தேர்வெழுதி ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சியும் பெற்றனர்.
எஞ்சிய ஆசிரியர்கள் அரசு அறிவித்தபடி சிறப்பு தகுதித் தேர்வு நடத்தவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி விரைவாக நடத்துமாறு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி தீர்ப்பையும் பெற்றனர்.
அதனடிப்படையில் வரும் ஜூலை 2026ல் தேர்வு நடத்தப்படும் என அரசு தரப்பில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, அனைவரும் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தேர்வெழுதவும் தயாராகி வருகின்றனர். இன்னும் ஒரு வாய்ப்பு கூட மூத்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்பதை உறுதி செய்யப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டன.
எனவே 100% ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதும் மன நிலைக்கு மூத்த ஆசிரியர்கள் வந்து, தயாராக உள்ளனர்.
இவ்வாறான வழக்குகளால் நான்காண்டு காலம் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை மூத்த ஆசிரியர்களுக்காகக் காத்திராமல், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி , பத்தாண்டுகளுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட இளைய ஆசிரியர்கள் தங்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, பரிசீலனை செய்யுமாறு உத்தரவு பெற்றனர்.
அரசு தரப்பில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் பரிசீலிக்க இயலாது என்று பதில் கடிதம் தரப்பட்டது.
*அதையும் தாண்டி, 150000 க்கும் மேற்பட்ட மூத்த ஆசிரியர்களைப் புறந்தள்ளி காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆண்டு வாரியாகக் கணக்கிட்டு தமக்கே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று மென்மேலும் வழக்குகளை இளைய ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடுத்து பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தத் தடையாணை பெற முயற்சிப்பதாகத் தெரிய வருகிறது.
அரசியலில் மட்டும்தான் பதவிக்காக பாவம் புண்ணியம் எதுவும் பார்க்கப்படாது என்பது நடக்கும்!
*ஆனால், படித்த ஆசிரியர்களும் பதவிக்காக அண்ணனாவது! தம்பியாவது!
*வாய்ப்பினை எந்த வகையிலும் பெற்று முட்டி மோதி அடைய வேண்டும் என்றுதான் இருப்பார்கள் என்பது நிரூபணமாகிறது!
*அரசு என்ன செய்யப்போகிறது?
*பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
வாட்ஸ் அப் பகிர்வு