பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகள் மற்றும் 38 ஆயிரம் தனித் தேர்வர்கள் எழுதினர்.
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் 95.2% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.3%, மாணவிகள் 97% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
*பாடவாரியான தேர்ச்சி விகிதம் வருமாறு:
தமிழ்- 96.12 %
ஆங்கிலம்- 97.35 %
கணிதம்- 96.46%
அறிவியல்- 98.56%
சமூக அறிவியல்- 97.07%