. -->

Now Online

FLASH NEWS


Thursday 25 April 2019

நீட் தேர்வு மையம் அமைப்பில் எந்த குளறுபடியும் இல்லை; அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்


தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் அமைப்பதில் எந்த குளறுபடியும் இல்லை. மாணவர்களுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்*





*மருத்துவப் படிப்பில் சேர உள்ள மாணவ -மாணவியர் நீட் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள விதியின் அடிப்படையில் தமிழகத்தில் இந்த ஆண்டும் நீட் தேர்வு மே மாதம் நடக்கிறது*





*இதற்காக தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் விண்ணப்பித்துள்ள மாணவ- மாணவியருக்கு தேர்வு மையங்கள் ஒதுக்குவதிலும், தேர்வு மைய குறியீட்டு எண்களை ஒதுக்கியுள்ளதில் பல குளறுபடி நடந்துள்ளது என்றும் பலருக்கு வேறு மாவட்டங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டினர்*





*இது பல்வேறு ஊடகங்களில் வெளியானது*





*இதையடுத்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது*





*தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் தொடர்பாக  எந்த குளறுபடியும் இல்லை. நீட் தேர்வு தொடர்பாக எந்த சந்தேகம் இருந்தாலும் மாணவர்கள் கல்வி அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்*





*தமிழக அரசும் மாணவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது. பெரும்பாலான மாணவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையங்களே ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் ஒதுக்கப்பட்டுள்ளது*





*அதில் ஏதாவது பிரச்னை இருந்தால் கல்வி அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்