. -->

Now Online

FLASH NEWS


Tuesday 7 May 2019

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி!


வறுமையின் காரணமாக மேற்படிப்பை தொடர இயலாத பின்தங்கிய மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.





12 ஆம் வகுப்புக்கு பிறகு உயர்கல்வியை தொடர விரும்பும் ஏழை மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி திட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகம் சில வருடங்களாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் இம் மூன்று மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டும் இளநிலை பட்டப்படிப்பை இலவசமாக படிக்க முடியும். அதற்கான முழு செலவையும் சென்னை பல்கலைக்கழகமே ஏற்கும்.





இலவச உயர்கல்வி திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயில விரும்பும் வசதியில்லாத மாணவர்கள், பிளஸ்-டூ தேர்வு முடிவு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.