. -->

Now Online

FLASH NEWS


Wednesday 26 June 2019

ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திரும்பப் பெற வலியுறுத்தல்- அமைச்சர் செங்கோட்டையன் உடன் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சந்திப்பு.


சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உடன், ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சந்திப்பு.

வேலைநிறுத்த போராட்டத்தின்போது ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திரும்பப் பெற வலியுறுத்தல்.

மாறுதல் பெற விண்ணப்பிக்க மூன்று ஆண்டு பணிக்காலம் வேண்டும் என்ற நிபந்தனையை நீக்க வலியுறுத்தல்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகளில் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச பணிக்காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து ஓர் ஆண்டாகக் குறைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மேலும், அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்களைப் பணியமர்த்துவதில் பல்வேறு மாறுபட்ட நடைமுறைகளைப் பின்பற்றியுள்ளது பற்றியும், 20 - 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ள மூத்த ஆசிரியர்களும் இதில் பாதிப்படைந்துள்ளது பற்றியும் எடுத்துக் கூறி இதனைச் சரி செய்திட வேண்டுகோள் விடுக்கப்பட்டது.



கல்வித்துறை செயலர் அயல்நாடு சென்று நாளை திரும்பி வந்தவுடன் இது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுத்து அறிவிப்பதாகவும் ஜாக்டோ ஜியோ போராட்டம் கால நடவடிக்கைகள் குறித்து முதல்வர் அறிவிப்பார் என்று நம்பிக்கை தரும் விதத்தில் கல்வி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.