. -->

Now Online

FLASH NEWS


Wednesday 11 September 2019

சனிக்கிழமைகள் எல்லாம் 'ஸ்கூல் பேக் இல்லாத நாள்



பள்ளிக்கூடம்- மாணவர்களின் மகிழ்ச்சிகரமான இடமாக இருக்க வேண்டும்!

ஸ்கூல் பேக் இல்லாத வாரநாள். என்று அறிவித்து, பள்ளிக்கூடம் என்பது மாணவ மணிகளுக்கு மகிழ்ச்சி நிறைந்த இடமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது மணிப்பூர் அரசு.

'நாங்கள் குழந்தைகளுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுக்க வேண்டும்': சனிக்கிழமைகள் எல்லாம் மணிப்பூரில் 'ஸ்கூல் பேக் இல்லாத நாள்' என்று அறிவித்தது.

அண்மையில், மணிப்பூர் அரசு ஒவ்வொரு சனிக்கிழமையும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் 'நோ ஸ்கூல்பேக் டே' என்று அறிவிக்க முடிவு செய்துள்ளது.

பாடப் புத்தகங்களைத் தவிர மற்ற திறன்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், கனமான பைகளை எடுத்துச் செல்வதால் ஏற்படும் உடல் மற்றும் மன விளைவுகளை மனதில் கொண்டு இந்த முயற்சி எடுக்கப்பட்டது.

பள்ளிகளுக்கு விளையாட்டுகள் மற்றும் விளையாட்டு, பொழுதுபோக்கு ஆகியவற்றில் மாணவர்கள் பங்கேற்பதை உறுதிசெய்யும் விதமாக, அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிக்கு ஸ்கூல் பேக் இல்லாத நாள் ஆக அறிவித்து, மாணவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான இடமாக மாற்ற உத்தரவிட்டது.

மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங், 'உலகம் மிக வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது, குழந்தைகளுக்கு நாம் கொஞ்சம் சுதந்திரம் கொடுக்க வேண்டும். சரியான பரிசீலனைக்குப் பிறகு, கல்வித் துறை இந்த முடிவை எடுத்தது. .. என்று கூறினார்.

மாநில அரசின் இந்த முயற்சி மாணவர்கள், பள்ளி அதிகாரிகள் மற்றும் பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது