. -->

Now Online

FLASH NEWS


Wednesday 2 October 2019

காந்தியடிகள் பற்றிய 80 வினா விடைகள்





1. காந்தியின் முழுமையான பெயர் என்ன?
➯ மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி
2. காந்தியடிகளின் தந்தை பெயர் என்ன?
➯  கரம் சந்த் காந்தி
3. காந்தியடிகளின் தாயார் பெயர் என்ன?
➯ புத்திலிபாய்
4. காந்தியடிகள் எப்போது பிறந்தார்?
➯  02-10-1869
5. காந்தியடிகளின்  எத்தனையாவது பிறந்தநாளை 02-10-2019 அன்று நாம் கொண்டாடுகிறோம்?
➯ 150 வது பிறந்தநாள்
6. காந்தியடிகள் எங்கு பிறந்தார்?
➯ குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தர்
7. காந்தியடிகளுக்கு உண்மையின் மீது பிடிப்பு ஏற்படுத்திய நாடகம் எது?
➯ அரிச்சந்திரன் நாடகம்
8. காந்தியடிகள் எங்கு தனது பள்ளிக்கல்வியை முடித்தார்?
➯ சமல்தாஸ் கல்லூரியில் மெட்ரிகுலேசன் முடித்தார்
9. காந்தியடிகள் எப்பொழுது திருமணம் செய்துகொண்டார்?
➯ மே 1883
10. காந்தியடிகளுக்கு திருமணம் நடந்தபோது அவருக்கு வயது என்ன?
➯ 13க்கும் 14க்கும் இடையில்
11. காந்தியடிகளின் துணைவியார் பெயர் என்ன?
➯ கஸ்தூரிபாய்
12. காந்தியடிகள் லண்டன் செல்லும் முன்பு தனது தாயாருக்கு செய்து கொடுத்த மூன்று சத்தியங்கள் என்னென்ன?
➯ மது, மாது, மாமிசம் தவிர்ப்பேன்
13. காந்தியடிகள் பாரிஸ்டர் பட்டம் பெற லண்டனுக்கு எந்த ஆண்டு சென்றார்?
➯ 1888
14. காந்தியடிகள் தன்னுடைய எத்தனையாவது வயதில் தென்னாப்பிரிக்கா சென்றார்?
➯ 24ம் வயதில்
15. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
➯ 21 ஆண்டுகள் (1893-1914)
16. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எத்தகைய கொடுமைக்கு ஆளானார்?
➯ நிறவெறி கொடுமைக்கு
17. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எந்த இடத்தில் இரயிலில் பயணம் செய்யும் போது அவமதிக்கப்பட்டு இரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டார்?
➯ பீட்டா்மெரிட்ஸ்பர்க்
18. காந்தியடிகள் எப்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்?
➯  09-01-1915
19. காந்தியடிகள்  தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நாளை நாம் எவ்வாறு கொண்டாடுகிறோம்?
➯ வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (09-01-1915)
20. காந்தியடிகளின் இந்திய அரசியல் குரு யார்?
➯ கோபால கிருட்டின கோகலே
21. காந்தியடிகள் இந்திய விடுதலை போராட்டத்தில் எத்தகைய கொள்கையை பின்பற்றினார்?
➯ மிதவாதகொள்கை
22. காந்தியடிகள் எந்த விடுதலைப்போராட்ட  கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்?
➯ இந்திய தேசிய காங்கிரஸ்
23. காந்தியடிகள் 1917ல் மேற்கொண்ட  முதல் சத்தியாக்கிரக போராட்டத்தின் பெயர் என்ன?
➯ சாம்பரான் சத்தியாகிரகம் (பீகாரில் தொடங்கப்பட்டது)
24. காந்தியடிகளின் 1918ல் குஜராத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பெயர் என்ன?
➯ கேதா ஆர்ப்பாட்டம்
25. காந்தியடிகள் 1918ல் அகமதாபாத்தில் நடத்திய போராட்டம் எது?
➯ அகமதாபாத் மில் வேலை நிறுத்தப் போராட்டம்
26. காந்தியடிகள்1919ல் நடத்திய அகில இந்திய போராட்டம் எது?
➯ ரௌலட் சட்டத்திற்கு எதிரானது சத்தியாகிரகப் போராட்டம்
27. காந்தியடிகள் 1920ல் நடத்திய போராட்டம் எது?
➯ ஒத்துழையாமை இயக்கம்
28. காந்தியடிகள் 1930ல் நடத்திய போராட்டம் எது?
➯ சட்டமறுப்பு இயக்கம்
29. காந்தியடிகள் 1942ல் நடத்திய போராட்டம் எது?
➯ வெள்ளையனே வெளியேறு இயக்கம்
30. காந்தியடிகளுக்கு 1920ல் தென்னாப்பிரிக்காவில் வழங்கப்பட்ட கெய்சர் ஜ ஹிந்த்  என்ற பட்டத்தை எந்த போராட்டத்தின் போது துறந்தார்?
➯ ஒத்துழையாமை இயக்கம்
31. காந்தியடிகள் 12 மார்ச் 1930ல் என்ன போராட்டத்தை மேற்கொண்டார்?
➯ உப்புசத்தியாகிரகம்
32. காந்தியடிகள் மேற்கொண்ட உப்புச்சத்தியாகிரகம் எங்கு தொடங்கப்பட்டது?
➯ அகமதாபாத்தில் தொடங்கி தண்டியில் முடிவடைந்தது
33. காந்தியடிகள் மேற்கொண்ட உப்புச்சத்தியாகிரகம் (தண்டி யாத்திரை) எவ்வளவு நாள் நடந்தது?
➯  12-03-1930 முதல் 06-04-1930 வரை தூரம் 388 கிலோமீட்டர்
34. காந்தியடிகள் மேற்கொண்ட  தண்டியாத்திரையை அவர் எவ்வாறு பயணம் செய்தார்?
➯ 388 கிலோ மீட்டரும் பாதயாத்திரையாக
35. காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு (1942) இயக்கத்தின் போது எவ்வாறு முழங்கினார்?
➯ செய் அல்லது செத்துமடி (do or die)
36. காந்தியடிகள் சுதந்திரத்திற்காக மட்டுமல்லாது வேறு எதற்காக போராடினார்?
➯ குழந்தைகள் திருமணம்,  திண்டாமை ஒழிப்பு,  விதவைகளுக்கு எதிரான கொடுமைகள்
37. காந்தியடிகள் தாழ்த்தப்பட்ட மக்களை எவ்வாறு அழைத்தார்?
➯ ஹரிஜன் (கடவுளின் குழந்தைகள்)
38. காந்தியடிகள் நாதுராம் கோட்சே என்று சுட்டுக் கொன்றார்?
➯  30-01-1948
39. காந்தியடிகள் இறந்ததினத்தை இந்தியாவில் எவ்வாறு கொண்டாடுகிறோம்?
➯ தியாகிகள் தினம்
40. காந்தியடிகள் இறந்த தினத்தை ஐ.நா.சபை எவ்வாறு அறிவித்துள்ளது?
➯ சர்வதேச அகிம்சை தினமாக (International day of Non–violence )
41. காந்தியடிகள் தன்சுயசரிதையை எந்த இதழில் எழுதினார்?
➯ நவஜீவன்
42. காந்தியடிகள் தன் சுயசரிதையை எந்த மொழியில் எழுதினார்?
➯ குஜராத்தி மொழியில்
43. காந்தியடிகள் தன் சுயசரிதையை என்ன பெயரில் எழுதினார்?
➯ சத்தியசோதனை
44. காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தவர் யார்?
➯ மன்மோகன் தேசாய்
45. காந்தியடிகளின் வரலாற்றை குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட பின்னர் அந்த நூலுக்கு வைக்கப்பட்ட பெயர் என்ன?
➯ My Experiments with Truth.
46. காந்தியடிகள் இந்தியாவில் நடத்திய ஆங்கில இதழ் எது?
➯ யங் இந்தியா
47. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் நடத்திய ஆங்கில இதழில் பெயர் என்ன?
➯ இந்தியன் ஒப்பீனியன்
48. காந்தியடிகளை முதன்முதலில் “ மகாத்மா ”  என்று அழைத்தவர் யார்?
➯ இரவீந்திரநாத் தாகூர்
49. காந்தியடிகளை முதன்முதலில்  “தேசப்பிதா ” என்று அழைத்தவர் யார்?
➯ நேதாஜி சுபாசு சந்திரபோஸ்
50. காந்திஜீ யை தமிழில் காந்தியடிகள்  என்று எழுதும் வழக்கத்தை முதன்முதலில் ஏற்படுத்தியவர் யார்?
➯ திரு.வி.க
51. காந்தியடிகள் தன் வாழ்நாளில் மொத்தம் எவ்வளவு நாட்கள் சிறையில் கழித்தார்?
➯  2338 நாட்கள்
52.  காந்தியடிகள் அதிக நாட்கள் இருந்த சிறை எது?
➯ எரவாடா சிறை (பூனா)
53. காந்தியடிகள் மரணமடைந்த போது அவருக்கு வயது என்ன?
➯ 78 வயது
54. தில்லி செங்கோட்டை அரியணையோடு மீண்டும் தொடர்பு படுத்தப்படும் பெயர்
➯ காந்தி
55. காந்திஜியின் மனைவி பெயர் என்ன?
➯ கஸ்தூரிபாய்
56. காந்திஜிக்கும் கஸ்தூரிபாவிற்கும் பிறந்த மகன்கள் யார் யார்?
➯ ஹரிலால், மணிலால், ராமதாஸ், தேவதாஸ்
57. எந்த அரியணைக் கனவோடும் வளர்க்கப்படாதவர்கள் யார்?
➯ காந்திஜியின் பிள்ளைகள்
58. தென் ஆப்பிரிக்காவில் காந்தி நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட காந்திஜியின் மகன் யார்?
➯ ஹரிலால்
59. தென் ஆப்பிரிக்காவில் கைகளில் விலங்குபூட்டி தெருக்களில் கைதியாக அடித்து இழுத்துச் செல்லப்பட்டவர் யார்?
➯ ஹரிலால்
60. தன் புதல்வர்களையும், தன் பேரப்பிள்ளைகளையும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்தியவர் யார்?
➯ காந்திஜி
61. 388 மைல்கள் நடந்த தண்டி யாத்திரையில் தன் பேரப்பிள்ளையான சிறுவனை (ஹரிலால் மகன்) நடக்க வைத்து அழைத்துச் சென்றவர்?
➯ காந்திஜி
62. தனது உண்ணாவிரதப் போராட்டத்தில் தன் குடும்பத்தை ஈடுபடுத்தியவர் யார்?
➯ காந்திஜி
63. தன் பிள்ளைகள் என்பதற்காக ஒரு சிறு பலன் கூட அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என்ற உறுதியாக இருந்தவர் யார்?
➯ காந்திஜி
64. லண்டனில் ஹரிலாலைப் படிக்க வைக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தும் அவரை அனுப்ப மறுத்தவர்
➯ காந்திஜி
65. தான் சிறையில் இருந்தபோது சந்தையில் முள்ளங்கி வியாபாரம் செய்து ஆசிரமவாசிகளுக்கு உணவுதர வேண்டிய பொறுப்பை மகன் மணிலாலிடம் ஒப்படைத்தவர்
➯ காந்திஜி
66. மிகுந்த வறுமையில் வாடிய காந்திஜியின் மகன்
➯ ஹரிலால்
67. மணிலாலை தன்னுடைய மகன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளாமலே ஒரு வருடத்துக்கு நீ உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்று சென்னைக்கு தன் மகனை அனுப்பியவர்
➯ காந்திஜி
68. சென்னையில் மூட்டைகள் தூக்கியும் நடைபாதையில் படுத்தும் உறங்கிய காந்திஜியின் மகன்
➯ மணிலால்
69. காந்திஜியைவிட அதிக ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டவர்
➯ மணிலால்
70. உப்பு சத்தியாக்கிரகத்தில் தலையில் எலும்புமுறிவு தாக்குதலுக்கு ஆளான காந்தியின் மகன்
➯ மணிலால்
71. மண்டை உடைக்கப்பட்டு மூளையில் காயத்துடன் சுயநினைவின்றி சிறைக் கைதியாக வாழ்நதவர்
➯ மணிலால்
72. 25 முறை மொத்தம் சுமார் 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர்
➯ மணிலால்
73. தெருப்பிச்சைக்காரனாக இருந்த காந்தியின் மகன்
➯ ஹரிலால்
74. காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாயின் இறுதி வாழ்க்கை  நடந்த இடம்
➯ சிறைச்சாலை
75. காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாயின் இறுதிச் சடங்குகள் நடந்த இடம்
➯ சிறைச் சாலை வளாகம்
76. 6 முறை - சுமார் 2 ஆண்டுகள் சிறைக் கைதியாக வாழ்ந்தவர்
➯ கஸ்தூரிபாய்
77. தமது 69வது வயதில் இருண்ட அறையில் தனிமைச் சிறையில் இருந்தவர்.
➯ கஸ்தூரிபாய்
78. இந்திய விடுதலைக்குப் பிறகு ஒரு பியுன் வேலையைக் கூட தன் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வதை விரும்பாதவர்
➯ காந்திஜி
79. வன்முறை தவிர்த்து விடுதலைக்குப் போராடியவர்
➯ காந்திஜி
80. விடுதலைக்கான போராட்டத்தில் நீ சிறையில் மரணம் அடைந்தால் உன்னை தெய்வமாக வழிபடுவேன் என்று கஸ்தூரிபாயிடம் கூறியவர்
➯ காந்திஜி.