. -->

Now Online

FLASH NEWS


Sunday 6 October 2019

பொது தேர்வு இந்த ஆண்டே நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்








5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு இந்த ஆண்டே நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள அனைவருக்கும் கல்வி என்ற முறையில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு இந்த ஆண்டே நடைபெறும். 3 ஆண்டுகள் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொது தேர்வு நடைபெறும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவார்கள்.

ஆசிரியர்கள் கற்றல் திறன் மாணவர்கள் மேம்பட வாய்ப்பாக அமையும். ஏழை எளிய மாணவர்கள் எதிர்காலத்தில் போட்டி தேர்வை சந்திக்கும் வாய்ப்பாக இது அமையும்.