அவர் விரைவில் நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார். இதன் மூலம், நாட்டின் மிக இளம் வயது நீதிபதி என்ற பெருமை, மயங்க் பிரதாப் சிங்குக்கு கிடைக்கவுள்ளது. நீதித்துறை சேவைகளுக்கான தேர்வை எழுதுவதற்கான குறைந்தபட்ச வயது 23 ஆக இருந்த நிலையில், ராஜஸ்தான் அரசாங்கம் இந்த ஆண்டுதான் வயது வரம்பை 21 ஆக குறைத்தது குறிப்பிடத்தக்கது. குறைந்த வயதில் நீதிபதியாக தேர்வான மயங்க் பிரதாப் சிங், வரும் ஏப்ரல் மாதம் பொறுப்பேற்க உள்ள நிலையில், அவரை அம்மாநில மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Source: Dinakaran