. -->

Now Online

FLASH NEWS


Sunday 24 November 2019

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளராக பாவலர் மீனாட்சி சுந்தரம் தேர்வு..











புதுக்கோட்டை,நவ.25: சிதம்பரத்தில் நடந்த தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில நிர்வாகிகள் தேர்தலில்  மாநில  பொதுச் செயலாளராக பாவலர் மீனாட்சி சுந்தரம் தேர்வு செய்யப்பட்டார்.

சிதம்பரம் கீழரதவீதியில் உள்ள அட்சயா ஹோட்டலில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.தேர்தல் ஆணையாளர்களாக மாநில நிர்வாகிகள் இருந்து தேர்தலை நடத்தினர்.தேர்தலில் 500 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பங்கேற்றனர்.தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவிக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.பின்னர் ஒவ்வொரு பதவிக்கும் தேர்தல் நடைபெற்றது.


இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளராக பாவலர் மீனாட்சி சுந்தரம் தேர்வு செய்யப்பட்டார்.


அதே போல்  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில தலைவராக மன்றம் நா.சண்முகநாதன் தேர்வு செய்யப்பட்டார்.இவர் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில துணைச் செயலாளராக இருந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டார். இவரின் சீரிய பணியை பாராட்டி முன்னாள் முதல்வர் டாக்டர். கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் "மன்றம் விருது" வழங்கிப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில பொருளாளராக அம்பை ஆ.கணேசனும்,மாநில தீர்ப்புக்குழு உறுப்பினராக சி.கண்ணனும் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற மாநில பொதுச்செயலாளர் பாவலர் மீனாட்சி சுந்தரம்,மாநில தலைவர்  மன்றம் நா.சண்முகநாதன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளை அரசியல் பிரமுகர்கள்,கல்வி அதிகாரிகள்,அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள்,சமூக சேவகர்கள்,ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் க.சு.செல்வராஜ்,மாவட்டத் தலைவர் பெ.அழகப்பன்,மாவட்ட பொருளாளர் சு.அங்கப்பன்,மாநில பொதுக்குழு உறுப்பினர் ந.இரவிச்சந்திரன் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களின் ஆசிரியர் மன்ற நிர்வாகிகள்,அன்னவாசல் ஒன்றிய ஆசிரியர் கூட்டுறவு சங்க இயக்குநர்கள் ஜெயராஜ், ரெ.சண்முகநாதன்,ப.ஜோதிராஜன்,பா.ரமேஷ்குமார் ஆசிரியர் செ.ராஜ்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்...