. -->

Now Online

FLASH NEWS


Wednesday 6 November 2019

8ஆம் வகுப்புக்கு ஒரே பாட புத்தகம் - முப்பருவப் பாடத்திட்டம் ரத்து - விரிவான செய்திகளுடன் அரசாணை இணைப்பு

8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், முப்பருவப் பாடத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 

கடந்த 2012ம் ஆண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை முப்பருவ பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்புக் கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், முப்பருவ பாடத்திட்டம் ரத்து செய்யப்பட்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். 

அதன்படி, முதற்கட்டமாக 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் முப்பருவ பாடத்திட்டம் ரத்து செய்யப்பட்டு ஒரே பாடத்திட்டமாக செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 
8-ம் வகுப்புக்கான பாடத்திட்டத்தை ஒரே பாடத்திட்டமாக வடிவமைக்குமாறும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.-